திருப்புகழ் - 13 | ஏறுமயில் ஏறி | Eru Mayil Eri | Jayadharani | அருணகிரிநாதர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே...
    ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான்.
    ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே...
    சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம் தான்.
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே...
    உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்து வைப்பது உன் ஒரு முகம் தான்.
    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே...
    தாரகன் என்னும் மாய அரக்கனின் மலையைப் பொடியாக்கி, வேல் பிடித்து நிற்கும் ஒரு முகமும்
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே...
    உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம் தான்.
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே...
    வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம் தான்.
    ஆறு முகமான பொருள் நீ அருளல் வேண்டும்...
    ஆறுமுகம் ஆன பொருள் நீ தான்! ஆறுமுகம் ஆன பொருளான உன் தத்துவத்தை நீ உபதேசித்து அருள வேண்டும். இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின் திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து இகபர செளபாக்கியத்தை அருளும். இவ்வாறு இறைவனது ஆறு திருமுகங்களும் எனக்கு கருணை புரியட்டும்.
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே...
    அருணாசலம் என்னும் தொன்மை வாய்ந்த திருவண்ணாமலையில் கோயிலில் வீற்றிருக்கும் கம்பத்து இளையனாரே!

ความคิดเห็น • 3

  • @geethajayasankar6977
    @geethajayasankar6977 2 หลายเดือนก่อน

  • @sundarisaravanan2265
    @sundarisaravanan2265 2 หลายเดือนก่อน

    Seriously mesmerized by ur voice ...such a divine bliss...can u sing the whole vel maaral ..kandha guru kavasam in ur voice please....waiting to hear it everyday