ஐங்கரனை ஒத்த மனம்(Aingaranai) | Thiruppugazh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
  • தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
    தந்ததன தத்ததன ...... தனதான
    ......... பாடல் .........
    ஐங்கரனை யொத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
    அந்திபகல் அற்றநினை ...... வருள்வாயே
    அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வழுத்தியுனை
    அன்பொடு துதிக்கமனம்...... அருள்வாயே
    தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முத்திபெற
    சந்திர வெளிக்குவழி ...... யருள்வாயே
    தண்டிகை கனப்பவுசு எண்டிசை மதிக்கவளர்
    சம்ப்ரம விதத்துடனெ ...... யருள்வாயே
    மங்கையர் சுகத்தைவெகு இங்கிதம் எனுற்றமனம்
    உன்றனை நினைத்தமைய ...... அருள்வாயே
    மண்டலி கரப்பகலும் வந்த சுபரட்சைபுரி
    வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே
    கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள்
    கொண்டுஉடல் உற்றபொருள்..... அருள்வாயே
    குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றிபெறு
    கொங்கண கிரிக்குள்வளர் ...... பெருமாளே.
  • บันเทิง

ความคิดเห็น •