பிரதோஷ சிவன் பாடல் கோளறு பதிகம்- Pradosham Sivan Song | Kolaru Pathigam with Lyrics | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • Kolaru Thirupathigam with lyrics in Tamil | Shivan Song
    Song : Veyuru tholi pangan
    Bestowed : Thirugnanasambandhar
    Music & Singer : Sivapuranam D V Ramani
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #pradosha#sivan#sivansongs
    #tamildevotionalsongs#vijaymusicals
    கோளறு பதிகம் தமிழ் பாடல்வரிகள்
    பாடல் : வேயுறு தோளி பங்கன்
    அருளியவர் : திருஞானசம்பந்தர்
    இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
    மிக நல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே
    னுளமே புகுந்தவதனால்
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
    வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
    ஆசறு ( ம் ) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    எண்பொடு கொம்பொடாமை யிவை
    மார்பி லங்க எருதேறி யேழையுடனே
    பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே
    னுளமே புகுந்த வதனால்
    ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு
    முடனா யநாள்க ளவைதாம்
    அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து
    உமையோடும் வெள்ளை விடைமேல்
    முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ
    னுளமே புகுந்த வதனால்
    திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
    திசை தெய்வமான பலவும்
    அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
    மறையோ துமெங்கள் பரமன்
    நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே
    னுளமே புகுந்த வதனால்
    கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
    கொடுநோய் களான பலவும்
    அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்
    விடையேறு நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே
    னுளமே புகுந்த வதனால்
    வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு
    மிகையான பூத மவையும்
    அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர்
    மடவா டனோடு முடனாய்
    நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ
    னுளமே புகுந்த வதனால்
    கோளரியுழு வையோடு கொலையானை கேழல்
    கொடுநாக மோடு கரடி
    ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக
    விடையேறு செல்வனடைவார்
    ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே
    னுளமே புகுந்த வதனால்
    வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும்
    வினையான வந்து நலியா
    அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து
    மடவாள் தனோடு முடனாய்
    வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ
    னுளமே புகுந்த வதனால்
    ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு
    மிடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    பலபல வேடமாகும் பரனாரி பாகன்
    பசுவேறு மெங்கள் பரமன்
    சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ
    னுளமே புகுந்த வதனால்
    மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்
    வரு காலமான பலவும்
    அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்
    அடியாரவர்க்கு மிகவே
    கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
    குணமாய வேட விகிர்தன்
    மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ
    னுளமே புகுந்த வதனால்
    புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல்
    திருநீரு செம்மை திடமே
    அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் - துன்னி
    வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
    நான்முக னாதியாய பிரமாபுரத்து
    மறை ஞான ஞான முனிவன்
    தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரை செய்
    ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில்
    அரசாள் வராணை நமதே

ความคิดเห็น • 36