ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
கறுப்பு-கருப்பு எது சரி? | பிழையுடன் பயன்படுத்தும் சொற்கள் | Commonly misspelled tamil words
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ก.ย. 2020
- நாம் தமிழில் பேசும்பொழுது சில சொற்களை அறியாமல் அல்லது பாமர வழக்கு என்று எண்ணி பிழையுடன்/திரித்து எழுதி, பேசி வருகிறோம்.
அவற்றில் சிலவற்றை இங்கு நான் விளக்கியுள்ளேன்.
Stay connected with amilthil iniyathadi papa!
அருமை அருமை அன்புச் சகோதரி.வயதோ குறைவு.புலமையோ மிகப் பெரிது.பேரும் புகழும் பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
என்ன அருமையான பாடம். உங்களால் நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நன்றி.
அருமை அக்கா தமிழ் வாழ்க உங்கள் முயற்சிக்கு நன்றி ..
04-Jun-2016
மேடம், நீங்கள் கரும்பலகையில் எழுதும் எழுத்து சரியாக தெரியவில்லை.நான் ஏற்கெனவே ஒரு தடவை comments _ இல் உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தும் இன்னும் அது பழைய நிலையிலேயே உள்ளது.
ஆச்சரியமாக இருக்கிறது ஒரு அழகான ஆசிரியர் எப்படி இந்த உலகத்தில் எப்டி ஒரு ஆசிரியர் எல்லோரும் உங்கள் தமிழைப் புரிந்து கொள்ள முடியும் என்பதே உண்மை, ஏனென்றால் நீங்கள் மிக மெதுவாகவும் புரிந்துகொள்ளும் விதமாகவும் கற்பிக்கிறீர்கள் ரொம்ப நன்றி சித்தி ❤️❤️🙏
🥰
ஒன்னும் புரியல
அருமையான விளக்கம். இந்த விளக்கம் 20 ஆண்டுக்கு முன்னர் தமிழ் வழியில் பயின்றவர்கள் பலருக்கு தெரிவதில்லை. காரணம் தமிழ் நூல்களை படிப்பது குறைவதால் தமிழ் வார்த்தைகள் மறந்துவிடுகிறது. உங்களுக்கு எனது நன்றிகள்
மிக அருமையான விளக்கம். என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
தமிழாசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி...
`மோப்பக் குழையும் விருந்து` .
மிகச்சரியான எடுத்துக்காட்டு!
மேற்கொண்டு, எக்காலமும் ´முகர்ந்து` என்று பயன்படுத்த மாட்டேன். நன்றி தமிழ் மகளே!
மிக அருமை. வாழ்த்துக்கள். மிகப் பயனுள்ள பதிவு
நீங்க ரொம்ப அழகா சொல்லி குடுகுறிங்க ....எல்லாம் நல்லா இருக்கு ...நன்றி அக்கா
உங்கள் தமிழ்த் தொண்டு மிகச்சிறப்பு
அருமை.. கறுப்பு, கருப்பு என்பவற்றிற்கு சரியான இலக்கணம் வேண்டும்
பள்ளி கல்லூரியில் படிக்கும் போது தனித்தமிழில் பேசும் வழக்கம் எனக்கு உண்டு அதற்கு காரணம் தனித்தமிழ் ஆர்வம் கொண்ட தமிழாசிரியர்கள் இருந்தார்கள்
சகோதரி உங்களைப்போல் ஒரு சிலர் இருக்கையில். நம் தமிழ் பெருமூச்சு விடுகின்றது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஏதாவது பிழை இருந்தால் என் தமிழ் என்னை மன்னிக்கட்டும்.
Yen teacher vaanam parthen engira sollai alutthi sollumpothu vaanamai paartthen endu eluthamal pesamal VAANATTHAI paartthen endu varuhuthu
AIE urufumattum thane seranum pls oru vilakka kaanoali podunge teacher
மிகவும் அருமை சகோதரி.நன்றி
சொன்ன விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
"உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி"
பாரதியின் பாடலில்
'முகர்ந்தால்' வருகிறதே!
அருமை சகோதரியே மிகவும் பயனுடையதாக உள்ளது
உங்கள் பணியில் மெய்சிலிர்த்த போனேன் என் தமிழ் ஆர்வம் இன்னும் அதிகமாகிறது பெரிய நன்றி
அன்பு சகோதரி விஷ்ணு பிரியா உங்களுக்கு சிங்காரம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களின் தமிழ் பிழை இல்லாமல் யூடியூப் சேனலில் நான் கற்றுக்கொண்டேன் இருக்கேன் நீங்கள் சொல்லும் தமிழை நான் தினமும் பிழையில்லாமல் படிப்பதற்கு உங்களுடன் உதவியை நான் அறிந்து கொண்டு கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்னும் நிறைய பாட இம் கற்க எனக்கு ஆர்வம் உங்களில் நானும் ஒரு மாணவன்
அருமை சகோதரி.வாழ்த்துகள்.
தங்கள் விளக்கத்திற்கு நன்றி 🙏
சில்லறை--எடுத்துக்காட்டு அருமை
Supper அக்கா good ya nice speech ya thank you so much அக்கா
miga arumai, thirunelveli pakkam innum monthu enra sollae payanpadutha padukirathu.
அருமை அருமை அருமை மதுரை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது
Tamil people from Jaffna Srilanka , they speak pure Tamil .
மிக அருமையான விளக்கம் அம்மா. உமது சேவைக்கு மிக்க நன்றி.
அருமை
தொடா்ந்து உங்கள் தமிழ்க் கல்வி
கற்பிக்கும் நிகழ்ச்சி வகுப்புக்களை நடாத்த(நடத்த)
தயவுடன் வேண்டுகிறேன்.
உங்கள் பணி தொடர
வாழத்துகிறேன்.
வாழ்க வளமுடன்.(நலமுடன்)
Nice carrion congratulations l
நன்று
வாழ்க வளத்துடன் சகோதரி உங்கள் சேவை தமிழுக்கு தேவை
நன்றி அம்மா
அருமை...அருமை.
வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி
கணக்கு கொள்ள வேண்டும் கித்தி 😀😀🤵🖐️🙏
Thanks madem I learnt from you today the right from my mistakes.
மிகவும் அருமை வாழ்த்துகள் சகோதரி
அருமை அருமை.
மிக்க நன்றி மகள்.
அன்புச் சகோதரி ,இனிய காலை வணக்கம்.நீங்கள் ஆற்றி வரும் சிறந்த தமிழ்த் தொண்டுக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.கருப்பு_கறுப்பு வேறுபாடு அறிவோம். கருமை என்பது நிறப் பண்பு.அதிலிருந்து வந்த சொல்தான் கருப்பு.கறுப்பு என்பதற்கு சினம்.என்பது பொருள்.ஆகவே கருப்புக் கோட்டு என்பதே சரி.கறுப்புக் கோட்டு என்பது தவறு.வாய்ப்புக்கு நன்றி.
Good lesson.Thanks.
Amma, I have a small suggestion. Please try to convey the meaning also. I know you're videos are intended solely for Tamil audience,who will be familiar with the meanings. Someone like me, have to google each time . Keep up your good work.
வாழ்த்துகள் அக்கா அருமை
நன்றி சகோதரி
நன்றி வாழ்த்து
Raja.👍👌👌
கறுப்பா கருப்பா?சந்தேகம் தீர்ந்தது.நன்றி😊
I love you priya chithi
Good luck 3000 subscribers
And I am a great fan of cute venila
Love you too da♥️ Thank you🙂
Dear Madam. I am following your lessons with great interest. This lesson today is confusing for me, mam. I was taught at school that a Tamil word never begins with ண and ன. One always begins with ந. Example நான் , நண்பர் நட்பு நடிகர் etc
Super Chithi superaaa solegodukireenga. Neenga super teacher
Thank you daa 🥰
@@AmizhthilIniyathadiPapa மக்கள் பதிவிடும் கருத்துகளுக்கு நீங்கள் தமிழில் பதிவிட்டால் நன்றாக இருக்கும். தங்லிஷை தவிர்க்கவும்.
நன்றி
Super mam
Super
என்னை தமிழ் ஆர்வலர்
❤️
சவுண்டு தெளிவாக இருந்தால்,
இன்னுஞ் சிறப்பாக இருக்கும்.
நன்றி.
The way u r express is fine ma
கருப்பு என்பது நிறத்தை தான் குறிக்கிறது ஆனால் க றுப்பு என்பது வறட்சியான வசதியற்ற இயலாமை மிகுந்த கஷ்ட வாழ்க்கையை குறிக்கும்
சிறப்பு
Hello அக்கா good evening
✌️👌👍👏
👌👌👌👌👏👏👏👏👏
Koncham zoom panniyathu nalla irukku ana direction pazhasu tha better shadow board le veezhama irukkirathukku. Any way thank you dear👏
Thank you! Next video la sari pannidalam🙂👍
@@AmizhthilIniyathadiPapa sari sari 🕵😉
Tamil language is the first language of the world.
Un must declare the Tamil language as the International language.
Yes very true
ம றவாய் / என்ற்சொல் என்ன பொருள் படும்? ம றக்காதே என்ற ம றந்து விடு என்ற? சரியான விளக்கம் தேவை
விளக்கம் தாருங்கள் சகோதரி
* மங்கலம்-மங்களம், *வாழ்த்துகள்-வாழ்த்துக்கள்,
*கோயில்-கோவில்,
*விவரம்-விபரம்.
தமிழ்ச் சொற்கள்.
விளக்கு ஏத்துதல். , விளக்குஏற்றுதல் ...இந்த இரண்டில் எது சரியானது என்று சொல்லுங்க pls
வார்த்தை X
சொல் ✅
'சொற்கள்' என்று சொல்லுங்கள்...
அம்மா! வணக்கம். கருப்பு தான் சரி என " தமிழ்நதி " சானலில் ஒரு காணொளி உள்ளது. கருப்பு - கறுப்பு இதில் எது சரி என்பது குழப்பமாக உள்ளது. தயவுசெய்து அதைப்பாருங்கள் அதன் பின்பு விளக்கம் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் மேல் பற்று உடைய அடியேனுக்கு உள்ள வினா என்னவெனில் தமிழ் வருடங்கள் பெயர்கள் அறுபதும் தமிழ் மொழியில் இல்லையே. விளக்கம் தேவை சகோதரி.
எட்ரியானா இந்த பெயர் சரியா என்பதை குறிப்பிடவும்
ஒருவர் இறந்த பின் மூன்றாம் நாள் கருப்பு என்று சொல்கிறோம் அதற்கு எந்த ரா போடுவது
தேர்ச்சி தவறு தேர்சி சரி
தேர்ச்சி சரிதான்.
தங்கள் கருத்துக்களை மறுப்பதாக எண்ண வேண்டாம்.
உச்சி தனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி..
என்று பாரதியார் எழுதியிருக்கிறாரே சகோ...
புள்ளத்தாச்சி இதை எழுத்தில் பிள்ளைத்தாழ்ச்சி என்று எழுதலாமா?
கறுத்த கருணை 👤
ஒரு சந்தேகம்..
கருப்பண்.. இப்படி எழுதுவது சரியா? அல்லது கறுப்பன் என்பது சரியா?
கருப்பு - பஞ்சம்
கறுப்பு - நிறம்
எருமை /எறுமை திருமணம் / திறு மணம் இவற்றில் எது சரி
எருமை, திருமணம்
New video upload pannugappa , vfx ellam thevaillai naa summa sonnathu😂😂😂. Waiting for new videos🤗😇🤗😇
🤣
கருங்கல் விளக்கம் கொடுங்கள்
காசுக்கு சில்லறை என்பதையும் சிறுமைத்தனத்துக்கு சில்லரை என்பதையும் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக சில்லரை ப் பயல் ... சில்லரை விற்பனை (சிறிய அளவில் விற்பது). இது சரியானதா?
சிவப்பு/சிகப்பு???
சிவப்பு
வீடியோ பெரிய எழுத்து மூலம் விளக்கம் சொல்லுங்க
வார்த்தை, தமிழ்ச்சொல்லா?
தவறான விளக்கங்களை அளிக்கின்றீர்கள். கழகத் தமிழ் அகராதியை எடுத்துப் பாருங்கள் கறுப்பு என்பதற்கு விளக்கம் கருப்பு என்றுதான் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு சொல்லை தவறு என்றும் பிழை என்றும் குறிப்பிடும்போது கவனம் தேவை. முகர்ந்து என்பது சரியானதே. முகர்தல் என்பதற்குச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியைப் (ஏழாம் மடலம். இரண்டாம் பாகம். ப.119) பாருங்கள். தயவு செய்து தமிழை வளர்க்காமல் போனாலும் சரி. ஒழித்துவிட வேண்டாம்.
மேடம் சில்லரை... சில்லறை...எது சரி என விளக்கவும்.
கரும்பலகை சரியா?
சரியே..
கருமை+பலகை = கரும்பலகை அல்லவா?
கருமை என்பது சரி, ஆனால் கறுப்பு என்ற சொல்லில் 'ர' கரம் வராது.
@@AmizhthilIniyathadiPapa நன்றி
விஷ்ணு ப்ரியா உங்கள் பெயரை தமிழில் "மால்சினேகி" என அழைப்பது சரியா ? ....
அழகான பரிந்துரை 🙂👍 ஆனால் சிநேகம் என்பதும் வடமொழிச் சொல்தான்😁
@@AmizhthilIniyathadiPapa தமிழறிஞர் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.... தொல்காப்பியர் நன்னூல் இலக்கணப்படி..... சூரிய நாராயண சாஸ்திரி என்றவர் தமிழில் தன்பெயரை பரிதிமாற் கலைஞர் பரிதி + மால் + கலைஞர் என்று வைத்துக் கொண்டதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறேன்....
மாலன்பி சரியா?
விட்டினர் / விட்டினன் என்பது திருமாலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். இதுவே வடமொழியில் விஷ்ணு என்றானது.
அதேபோல் கிட்டினர்/கிட்டினன் என்பவை கிருஷ்ணரைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.
சகோதரி பெயரை மாற்றுங்கள் விஷ்ணு வேண்டாம்
கைபேசி அல்ல - அலைபேசி for mobile phone
சிங்கப்பூரில் கைபேசி என்றுதான் சொல்வார்கள். Handphone.
அலைபேசி - Wifi / wireless phones
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி என்றுதானே பாரதியார் பாடியிருக்கிறார்?
சரியாகச்சொன்னீர்.smelling salt என்பதை முகரும் உப்பு என்றுதான் கூறமுடியும்.
@@raghupathycv1130 முகரும் என்றால் வாங்கும் என்று பொருள்.
@@raghupathycv1130 Smell என்றால் தமிழில் நாற்றம் என்று பொருள். Smelling salt - நாறும் உப்பு என்று வரும்.
உச்சிதனை மோந்தால் என்று தான் பாரதியார் பாடியுள்ளார்.
பேசி என்பதை வைத்து உருவாக்கப்படும் வார்த்தைகள்
தொலைபேசி Telephone
கைபேசி Button phone / cell
திறன்பேசி Smartphone
வலைபேசி IP phone ❓
அலைபேசி CDMA phone(MTS)❓
திரைபேசி Video phone/call ❓
குழுபேசி Conference phone❓
"❓" எனக் குறிப்பிட்டவை சரியா, எனத் தெரியவில்லை.
ஒலிபேசி Audio phone❓
ஒளிபேசி Video phone ❓
இவை தேவையா, எனத் தெரியவில்லை. இருந்தாலும் வேர்ச்சொல் ( Rootwords) பற்றி தமிழில் அதிகமாக பயன்படுத்தும் வகையில் எழுதியுள்ளேன்
நீங்கள் சொல்லும் இலக்கண விதி ஓட்டுநருக்கு சரியாகப் பொருந்தவில்லை.
Can you please advise the below name which is correct as per Tamil Grammar standard
தாரினி
தாரிணி
தாரிணி தான் சரி..
@@AmizhthilIniyathadiPapa Thank you so much
@@AmizhthilIniyathadiPapa
தாரினி என்று எழுதினால் முற்றும் பிழையா இருக்குமா
முகத்தின் அருகில் மூக்கில் வைத்து பார்ப்பதால் முகர்ந்து
முகத்தின் அருகில் மூக்கில் வைத்துப் பார்க்கும் செய்கைக்குப் பெயர் மோப்பம் பிடித்தல். உ+ம்: மோப்ப நாய்.
Show the board more closer
Sure will do 👍
முகர்ந்து தமிழ் சொல்லா? வேறு மொழி சொல்லா? கோர்வை என்பதன் பொருள் என்ன?
அக்கா.. கருப்புதுரை சரியா...
கருப்புத்துரை சரியா...விளக்கம் கொடுங்கள்..
காத்து கருப்பு என்பது சரியா ?
தர்மம், அறம் இவை இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களா? சகோதரி
இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்கள் தான் , ஆனால் தர்மம் என்பது தமிழ் சொல் அல்ல . ஏனென்றால் குறில் எழுத்துக்கு பின் இடையின ரகர மெய் வரக்கூடாது. எடுத்துக்காட்டாக அர்த்தம் , கர்னன் , வர்ணம் , அர்ச்சனை , போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்கள் அல்ல .
@@poopaulselvaraj3155 மிக்க நன்றி சகோதரி.