வணக்கம். என்னுடைய இந்த நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த வலையொளியில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழச்சி. உங்களுடைய இந்த ஒருமை பன்மை விளக்கவுரை உண்மையில் மிகவும் எல்லோருக்கும் பயன் மிக்கது. வாழ்த்துகள். நன்றி🙏
வணக்கம் சகோதரி.இன்றுதான் உங்களின் காணொளியை இந்த வளையொளி மூலம் பார்த்தேன். மிக அருமை. என்பள்ளிப்பருவகால நினைவுகலை திருப்ப வரச்செய்துள்ளீர்கள்.நான் இப்போதுதான் தொடக்கப்பள்ளியிலும்;நடுநிலைப்பள்ளியிலும் கல்வி கற்றுக்கொண்டிருப்பதாக உணர்கிறேன்.அருமையான நல்ல தெளிவான விளக்கங்களுடன் கூறுகிறீர்கள்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நான் தெரிவித்த இந்த கருத்தில் கூட எழுத்துப்பிழைகள் இருந்தால் குறிப்பிடவும். குறிப்பு:- பள்ளிக்கூடம் என்பது சரியான தமிழ்சொற்கள் இல்லை.பாடசாலை அல்லது கல்விச்சாலை என்பதுதான் சரி.உண்மைதானே?.
அம்மா, உங்கள் விளக்கங்கள் அருமை. ஒரு சந்தேகம். ஒரு சினிமா பாடல் வரியில் பிழை இருப்பதாக கருதுகிறேன் விளக்கவும். ' ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே'. இதில் இலக்கண பிழை உள்ளதா?. விளக்கவும்.
அம்மா, இந்த விதியை வைத்து பார்க்கும் பொழுது, ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்ற பாடலில் பிழை இருப்பது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு பூவும் சொல்கிறதே என்றல்லவா அமைய வேண்டும். விளக்கம் தாருங்கள்.
சகோதாி, சிறு விளக்கமளிக்க வேண்டுகிறேன். "இராஜ" என்னும் சொல்லை எழுதும்போது "ரா" க்கு முன் "இ" சோ்ப்பதனால், ஒரு சொற்றொடாில் "இராஜ" என்னும் சொல்லுக்கு முன் ஓா், ஒரு இவ்விரண்டில் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது? உதாரணமாக, "இ:.து ஓா் இராஜகிரகம்" என்று எழுதுவது சாியா, "இ:.து ஒரு இராஜகிரகம்" என்று எழுதுவதா?
எனக்கு இரு சிறு ஐயங்கள். ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். ஓர் ஊரில் திருடன் ஒருவன் இருந்தான். இவ்விரு தொடர்களில் எது சரி? அதுபோல செய்திகள் வாசிப்பவர் பாண்டியனார். செய்திகள் வாசிப்பவர் பாண்டியன். இவற்றுள் எது சரி?
தாங்கள் கூறியுள்ள நான்கு தொடர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவே! இருந்தும் மிகச்சரியான தொடர்கள், ஓர் ஊரில் திருடன் ஒருவன் இருந்தான். செய்திகள் வாசிப்பவர் பாண்டியனார். தங்கள் கணிப்பு சரியே. எனினும், “செய்திகள் வாசிப்பது பாண்டியன்” என்பதே சரி என்போரும் உளர்🙂
விளக்கங்கள் அருமை, சகோதாி. "மற்றும்" என்னும் சொல்லை "and" என்னும் பொருளில் பயன்படுத்துவது சாியா? "மற்றும்" என்னும் சொல்லுக்குண்டான பொருளையும், அதன் பயன்பாட்டையும், அ:.து "இன்னும்" என்னும் பொருளைத் தருகிறதா என்பதையும் விளக்க வேண்டுகிறேன்.
ஆம், மற்றும் என்ற சொல்லை ஆங்கிலத்தின் ‘and’ போல அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. இவற்றின் வேறுபாடு குறித்து இன்னும் ஆராய்ந்து விரைவில் ஒரு சிறு காணொளி பதிவிட முயல்கிறேன்👍🏼
முன்னர், அவர், அறிஞர், ஆசிரியர், மாணாக்கர் இவை அனைத்துமே பன்மையைக் குறிப்பனவாக இருந்தன. பின்னர், மரியாதைப் பன்மை என்ற பெயரில் ஆசிரியன் என்ற ஒருமை மதிப்பற்றதாகவும், ஆசிரியர் என்பது மதிப்புடன் அழைப்பதாகவும் கொள்ளப்பட்டது. இக்காரணத்தினால், பன்மையைக் குறிக்க, தேவையற்ற ‘கள்’ விகுதியைச் சேர்த்து அவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் என்று வழங்கத் தொடங்கினர். இப்போது முடிவு தங்கள் கைகளில்…
நான் பார்த்தது அதுவன்று ❌
நான் பார்த்தது அஃதன்று ✅
இதை நீங்களே சென்ற காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள்
அருமை… என் தவற்றைத் திருத்தியமைக்கு நன்றி. கவனக் குறைவைப் பொறுத்தருள்க🙏🏼
இருக்கட்டும் தவறுகள் மனித இயல்பு. உங்கள் சேவை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்
@@AmizhthilIniyathadiPapa 😍Nice
வணக்கம். என்னுடைய இந்த நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த வலையொளியில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழச்சி. உங்களுடைய இந்த ஒருமை பன்மை விளக்கவுரை உண்மையில் மிகவும் எல்லோருக்கும் பயன் மிக்கது. வாழ்த்துகள். நன்றி🙏
Great Madam
A refreshing reminder for all who aspire to learn and to write flawlessly
Thanks Mam
Tamilchelvan R
Kuwait City
அருமை அம்மா இது போலவே வலிமிகும் கு போட்ட உபயோகமா இருக்கும்
காணொளி அருமை; பயனுள்ளது.
This is a very important lesson 🙏
உங்கள் குரல்வளமும் மிக அருமை சகோதரி
மிக பயனுள்ள பாடம் 👌👌
மிகப் பயனுள்ள பாடம் !
Thank you so much amma.. ..nala purinjuthu
Nandri sagothari
நூலகத்திற்குப் புத்தகங்கள் வந்து சேர்ந்தன.
நீங்க பயன் படுத்தும் chalk piece வண்ணத்தை மாற்றினால் படிப்பது எளிதாக இருக்க வாய்ப்புண்டு.
மேலும் வளர வாழ்த்துக்கள்
Printing technology
உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. வாழ்த்துகள்.
புத்தகங்களெல்லாம் என்பது ஒருமையா ? பன்மையா?
அருமை!👌
மேகங்கள் சூழ்ந்து கொண்டது இதற்க்கு விடை அக்கா இது Exam வத்தஉற்க்கஉ
Kindly make video on punarchi vidhi
வணக்கம் சகோதரி.இன்றுதான் உங்களின் காணொளியை இந்த வளையொளி மூலம் பார்த்தேன். மிக அருமை. என்பள்ளிப்பருவகால நினைவுகலை திருப்ப வரச்செய்துள்ளீர்கள்.நான் இப்போதுதான் தொடக்கப்பள்ளியிலும்;நடுநிலைப்பள்ளியிலும் கல்வி கற்றுக்கொண்டிருப்பதாக உணர்கிறேன்.அருமையான நல்ல தெளிவான விளக்கங்களுடன் கூறுகிறீர்கள்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நான் தெரிவித்த இந்த கருத்தில் கூட எழுத்துப்பிழைகள் இருந்தால் குறிப்பிடவும்.
குறிப்பு:- பள்ளிக்கூடம் என்பது சரியான தமிழ்சொற்கள் இல்லை.பாடசாலை அல்லது கல்விச்சாலை என்பதுதான் சரி.உண்மைதானே?.
வளையொளி? இருக்கட்டும் தவறுகள் மனித இயல்பு. ;-)
Nice voice
அம்மா, உங்கள் விளக்கங்கள் அருமை. ஒரு சந்தேகம். ஒரு சினிமா பாடல் வரியில் பிழை இருப்பதாக கருதுகிறேன் விளக்கவும்.
' ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே'.
இதில் இலக்கண பிழை உள்ளதா?. விளக்கவும்.
நன்றி🙏
ஒரு சிறிய சந்தேகம்
"இவர்கள் என்னுடைய நண்பர்கள்"
"இவர் என்னுடைய தந்தை"
இந்த வாக்கியங்கள் சரியா?
36
இஃது எனது புத்தகம் ..........
🙂🙏
அம்மா, இந்த விதியை வைத்து பார்க்கும் பொழுது,
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்ற பாடலில் பிழை இருப்பது போல் தோன்றுகிறது.
ஒவ்வொரு பூவும் சொல்கிறதே என்றல்லவா அமைய வேண்டும்.
விளக்கம் தாருங்கள்.
ஒடு ஓடு விடுதல் ஆகி விட்டன.
🙏
Great mam
நன்றிகள்
❤
3 பிழை
"தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம்" - இஃது சரியா சகோதரி?
Complete punarchi vidhi
Next to the “வலி மிகுதல்” series , I will do this ma .
வணக்கம் சகோதரி, மதிப்புப் பன்மைக்கு நூற்பா உண்டா?
ellam k.but 36 matum purila.en apadi kerathum orumai thana.yan thana punmai
நன்றி
sim 😎👍
Super madam
Supper
நேற்று தென்றல் காற்று அடித்தது pls crt ans
சகோதாி, சிறு விளக்கமளிக்க வேண்டுகிறேன். "இராஜ" என்னும் சொல்லை எழுதும்போது "ரா" க்கு முன் "இ" சோ்ப்பதனால், ஒரு சொற்றொடாில் "இராஜ" என்னும் சொல்லுக்கு முன் ஓா், ஒரு இவ்விரண்டில் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது? உதாரணமாக, "இ:.து ஓா் இராஜகிரகம்" என்று எழுதுவது சாியா, "இ:.து ஒரு இராஜகிரகம்" என்று எழுதுவதா?
Super
வீரர்கள் சிலர் காயமடைந்தார்கள் "கள்" இது சரியானதுதனே?
Make video on peyaracham
கொரித்தது ❌
கொறித்தது ✅
37 வது வாக்கியத்தை 'என்னுடைய' என்றும் சொல்லலாம் தானே?
மாணவன்- ஒருமை
மாணவர் --- பன்மை
அரசன் -- ஒருமை
அரசர் --- பன்மை
பின் ஏன் பலர் தங்கள் புனைப்பெயருக்குபின் ர் சேர்த்து எழுதிக் கொள்கிறார்கள். இது முறையா?
24: நான் எம் தோழியைச் சந்தித்தேன் - சரியாக அமையும் சந்தர்ப்பம் உண்டல்லவா? சொல்பவருக்கும் கேட்பவருக்கும் ஒருவர் தோழியாக இருக்கலாம் அல்லவா?
பானையை உடைத்தது கண்ணன் __________
a.அல்ல b.அன்று c.அல்லள் d.அல்லன்
Answer enna mam varum pls reply pannunga..🙏
அல்லன்.
எதிர்காலத்தில் செய்யும் என்பதை பலவின்பாலில் எவ்வாறு குறிப்பிடுவது?
இஃது எனக்கு நெடுநாள் ஐயம் இதை விளக்குங்கள்.
பலவின்பால் எதிர்கால வினைமுற்றுகள்,
‘அ’, ‘வ’ ஈறுகளைக் கொண்டிருக்கும்.
எ.கா.
ஆடுகள் வருவ.
மான்கள் ஓடுவ, தாவுவ.
@@AmizhthilIniyathadiPapa என் நெடுநாள் ஐயத்தைத் தீர்த்தமைக்கு மிக்க நன்றி.
40 school book iruga..akka
Punarchi vidhi. Pls make video on this
Adikadi ad varuthu remove pannuga ugga chennal la eruthu
எனக்கு இரு சிறு ஐயங்கள்.
ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான்.
ஓர் ஊரில் திருடன் ஒருவன் இருந்தான்.
இவ்விரு தொடர்களில் எது சரி?
அதுபோல
செய்திகள் வாசிப்பவர் பாண்டியனார்.
செய்திகள் வாசிப்பவர் பாண்டியன்.
இவற்றுள் எது சரி?
தாங்கள் கூறியுள்ள நான்கு தொடர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவே!
இருந்தும் மிகச்சரியான தொடர்கள்,
ஓர் ஊரில் திருடன் ஒருவன் இருந்தான்.
செய்திகள் வாசிப்பவர் பாண்டியனார்.
தங்கள் கணிப்பு சரியே.
எனினும்,
“செய்திகள் வாசிப்பது பாண்டியன்” என்பதே சரி என்போரும் உளர்🙂
@@AmizhthilIniyathadiPapa நான் என்னுடைய வேறு சில ஐயங்களையும் பதிவிட்டுள்ளேன் அவற்றிற்கும் விடை அளியுங்கள்.
விளக்கங்கள் அருமை, சகோதாி. "மற்றும்" என்னும் சொல்லை "and" என்னும் பொருளில் பயன்படுத்துவது சாியா? "மற்றும்" என்னும் சொல்லுக்குண்டான பொருளையும், அதன் பயன்பாட்டையும், அ:.து "இன்னும்" என்னும் பொருளைத் தருகிறதா என்பதையும் விளக்க வேண்டுகிறேன்.
ஆம், மற்றும் என்ற சொல்லை ஆங்கிலத்தின் ‘and’ போல அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
இவற்றின் வேறுபாடு குறித்து இன்னும் ஆராய்ந்து விரைவில் ஒரு சிறு காணொளி பதிவிட முயல்கிறேன்👍🏼
Konjam slowa va answer katunga.... Takutaku nu matha thinga
அறிஞர்கள் (பன்மை)
அறிஞர் (ஒருமை)
ஆனால் 34வது எடுத்துக்காட்டில் நீங்கள் அறிஞர் பலர் என்று பயன்படுத்தியுள்ளீர்கள்.
இவ்விடத்தில் அறிஞர் என்ற சொல்லிற்குப் பின் பலர் என்ற சொல் வருவதால் இவ்விடத்தில் ‘அர்’ விகுதி பன்மையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
@@AmizhthilIniyathadiPapa இரண்டுமே சரியா
முன்னர்,
அவர், அறிஞர், ஆசிரியர், மாணாக்கர் இவை அனைத்துமே பன்மையைக் குறிப்பனவாக இருந்தன.
பின்னர், மரியாதைப் பன்மை என்ற பெயரில் ஆசிரியன் என்ற ஒருமை மதிப்பற்றதாகவும், ஆசிரியர் என்பது மதிப்புடன் அழைப்பதாகவும் கொள்ளப்பட்டது.
இக்காரணத்தினால், பன்மையைக் குறிக்க, தேவையற்ற ‘கள்’ விகுதியைச் சேர்த்து அவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் என்று வழங்கத் தொடங்கினர்.
இப்போது முடிவு தங்கள் கைகளில்…
@@AmizhthilIniyathadiPapa என் ஐயத்தைத் தீர்த்தமைக்கு மிக்க நன்றி.
அறிஞர் பன்மை. அறிஞன் ஒருமை ஐயா