சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா? ‘ச’வில் தமிழ்ச் சொற்கள் தொடங்காதா? | payitru | mannar mannan | tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ม.ค. 2021
- #payitru #Tamil #mannarmannan
எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
• பயிற்று படைப்பகம் - ஒர...
பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
முகநூலில் இணைந்திருக்க: / payitru
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.
நீண்டகால சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி நண்பா😊🙏
நன்றி சகோ...
வாய்ப்பு இருந்தால் நண்பர்களுக்குப் பகிருங்கள் சகோ. நன்றி!.
இரண்டு தமிழ் கொடைகளின் சங்கமம் என்றாலும் அது மிகையாகாது. தொடரட்டும் உங்களுடைய தமிழ் தொண்டு.
Super
Hi bro
நானும் தமிழ் இலக்கண,இலக்கியம் பயின்றவன். நினைவூட்டலுக்கு நன்றி.தொடர்ந்து வழங்கவும்
சிறப்பு ஐயா,உங்களின் தமிழ் புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது,தொடருங்கள் தமிழ்ப்பணியை.வாழ்த்துகள்
மிக்க நன்றி.
ஆசான்.திரு. மன்னர் மன்னன் அவர்களின் தமிழ்த்தொண்டு இப்படியே சிறப்புடன் பல்லாண்டு தொடரட்டும்.
மிக்க நன்றி!.
தொல்காப்பியத்தில் கூறப்படும் அறிவியல் சிந்தனைகள் பற்றிய பதிவுகள் நம் மரபின் இளைஞர் கூட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... அதை பற்றிய பதிவுகளை படையுங்கள் தோழரே..!!
தமிழ் மொழி மீது எத்தனை மற்ற மொழிகள் படை எடுத்தாளும் தமிழ் தனது பன்முகத்தன்மையை தன்மையை பரை சாற்றி கொண்டே இருக்கும்
தமிழன் இறந்த பின்பும் தமிழின் தொ ன்மை யை அதன் தனித்துவத்தை சொல்லி கொண்டு இருக்கிறான் சாட்சி கீழடி .ஆதிச்சநல்லூர் முது மக்கள் தாழி
உங்கள் அறிவு செம்மையான. அதன் வெளிச்சம் பரவ வேண்டும். உங்கள் தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்.
இயற்கையோடு அதன் போக்கில் வளர்ச்சி பெற்று உருவான மொழிதான் தமிழ். அப்படி வடிவம் பெற்ற மொழி அதன்படியே கால ஓட்டத்தில் மாற்றம் பெறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதை இலக்கணமாக நமக்கு படைத்தளித்திருக்கிறார்கள். தமிழ் மொழியின் இலக்கணத்தை அறிந்துகொண்டு பின்பற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரது தலையாய கடமையாகும். நாம் தமிழர்.
அதை பின்பற்றுவதோடு மட்டும் நம் கடமை முடிந்து விடாது தொல்காப்பிய இலக்கணத்தையே பள்ளிகளில் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கற்பிக்கப்படும் இலக்கணத்தில் தொல்காப்பிய விதிகள் மீறப்பட்டுள்ளன அதைக் களைந்து தொல்காப்பியர் வழி தூய தமிழை கற்பிக்க வைப்பதுவே நம் கடமை
வணக்கம் நண்பரே உங்கள் தமிழ் தொண்டு தொடர வாழ்த்துகள்
நாம் 'ச' என்ற வல்லின எழுத்தை 'ஸ' என ஒலிப்பது தவறில்லையா?
நாம் 'க' 'ச' என்ற வல்லின எழுத்துகளுக்கு மாற்றாக 'ga' 'ஸ' என ஒலிப்பது தவறில்லையா? ஒரு சொல்லின் இடையில் வரும்போது ஒலித்தாலும் தவறில்லை என்று அரைமனதாக ஒத்துக் கொள்ளலாம். ஆனால் சொல்லின் முதலிலே வரும்போது அதை மெல்லினமாக அல்லது வடவெழுத்து போல் ஒலிப்பது தவறல்லவா?
நண்பரே... இது போன்ற வரலாறுகளை மேலும் அதிகமாக பதிவிடுங்கள்..!!... மிகச்சிறந்த பதிவு இது 🙏
மன்னர் மன்னன் அவர்களே வணக்கம் தங்களுடைய முயற்சி வரவேற்கத்தக்கது உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் மேலும் மேலும் தமிழுக்கு தொடர்ந்து தொண்டர்கள் இந்த தமிழ் அனைத்தையும் இந்த தமிழையும் உங்களைப் போன்றவர்கள் தான் காப்பாற்ற இயலும் அதனால் நீங்கள் நோய்நொடியின்றி பல்லாண்டு இனிதாக வாழ்ந்து இந்த சமுதாயத்தை நம் முன்னோர்கள் எப்படி ஆண்டார்கள் அப்படியே கொண்டுவர தாங்கள் நினைக்கும் முயற்சி வெற்றியடைய தொடர்ந்து பாடுபடுங்கள் உங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
வணக்கம் நண்பரே உங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தங்களின் தமிழ்த்தொண்டு மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்.
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
Ithu Enna padal sago😍
@@thousandnights1734 it's a style of blessing copied from our Tamil ancestors...
இது போன்ற சந்தேகங்களை களைவதற்கு இப்பொழுது இலக்கியக் கூட்டங்கள் நடக்கும்
இடம் தேடி செல்ல இயலுவதில்லை
அது போன்ற கூட்டங்கள்
நடத்தப்படுவதும் மிக மிக
குறைந்துவிட்டது. எனவே தற்போதைய சூழலில்
தங்களின் பணி மிக மிக
அவசியமானது. மகத்தானதும்
ஆகும். தங்களின் பணி தொடர
மிக மிக பணிந்து வேண்டுகிறேன். நன்றி வணக்கம்
தயவுகூர்ந்து இது போன்ற நிறைய பதிவுகளை பதிவிடுமாறு வேண்டுகிறேன்🙏🙏
நல்ல முயற்சி அருமையான விளக்கம். நன்றி.
இப்படியான காணோளிகளை வரவேற்பு இல்லை என்று தவிர்க்க வேண்டாம், இவை தமிழுக்கு செய்யும் சேவையா இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
அருமையான முயற்சி இது சிறக்க இறைவன் துணை செய்வாராக தமிழனையும் துணையிருப்பாள்
போக்குவரத்து (இலக்கியங்கள்)
தொடர்ந்த பின் ஏற்பட்ட
சிக்கல்கள் தான் போக்குவரத்து
விதிகளை(இலக்கணம்)
ஏற்பட்டு இருக்கும்
சொற்கள் தோன்றிய பின்னர்
தான், அந்த சொற்களை
சீர்படுத்த இலக்கணம்
ஏற்பட்டு இருக்க வேண்டும்
கண்டிப்பாக தொடருங்கள்...
We will support you bro.. 👍🏻
அருமையான விளக்கம். மொழி ஞாயிறு தேவநேய பாவனார் , அவர்களுடைய விளக்கம் ஏற்புடையதாக உள்ளது. நன்றி. இது போன்ற விழியங்களை பதிவிட வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
'ச' என்ற எழுத்திற்கு நீண்ட தெளிவுரை கொடுத்துள்ளீர்கள். அதிலும் பாவாணர் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். சிறப்பு !!! மிக சிறப்பு.!!!! நன்றி. உங்கள் தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள்.
நான் ஒரு தமிழன் ஒரு தமிழனுக்கு இலக்கணம் இலக்கியம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் அதை இப்போது சொல்லி விட்டீர்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு அதாவது திருவள்ளுவர் செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று சொல்கிறார் அதை இன்று புரிந்து கொண்டேன் நீங்கள் பல கோடி வருடங்கள் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
மொழிஞாயிறு ❤️🔥
சனி கோள் வடக்கா 😂😂😂😂😂
அருமையான கருத்து சகோதரரே. தங்களது ஆய்வுகள் வரவேற்கத்தக்கது. மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
மிகவும் அற்புதமான வரவேற்க வேண்டிய பதிவு. இத்தகு அருமையான பதிவுகளை தொடர்ந்து வெளியிடவும். இன்பத்தமிழ் நம் உயிருக்கு நேர்!
இந்த காணொளி பயங்கர ஆழம் நிறைந்தது. விளையாட்டாக சொல்லவேண்டுமானால் நாடி நரம்பு, ரத்தம், சதை எல்லாம் தமிழ் நிறைந்த ஒருவனால் மட்டுமே இப்படி பேச முடியும். மிக்க மகிழ்ச்சி, நிறைய தெரிந்துகொண்டேன்...🙏🙏
தங்கள் தாய் தமிழ் தொண்டு செழிகட்டும்.
அருமையானத் தொடக்கம் தொடருங்கள். வாழ்த்துகள்
மிகவும் சிறப்பு வாய்ந்த கருத்து. தேவநேயப் பாவாணர் எழுதிய கருத்து அவர் சொந்த கருத்தாக இருந்தாலும் அது தமிழின் தொன்மையை காக்கவே என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்
சகோ தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பற்றிய வரலாற்றை பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
அண்ணா நான் உங்களது நேர்காணல்கள் அனைத்தும் பார்ப்பேன்.. பார்த்து கொண்டும் உள்ளேன்... ஆனால் நீங்கள் வலையொளி வைத்து இருப்பது எனக்கு தெரியாது... இன்று தான் நான் பார்த்தேன்.. இது போன்ற காணொளிகளை நான் அதிகமாக எதிர் பார்க்கிறேன்... நன்றி..
சங்கு என்பது தமிழ்சொல் தான். சங்கொலி எழுப்பி புலவர்கள் கூடினர்என்றும், பரைஒலி எழுப்பி,செய்தியை பரப்பினர், என்றும்,முரசொலி எழுப்பி போர் செய்தனர் என்றும், சங்கு என்பது சங்கம் என்பதின் வேர் சொல், அதிலிருந்தே சங்கம் என்னும் சொல்வந்தது என்று, பேரறிஞர் ம. சொ. விக்டர் ஐயா விளக்கம் தந்துள்ளார்.
நன்றி தொடரட்டும் உங்கள் பணி
மிகவும் அருமையாக எடுத்துச் சொன்னீர்கள் நண்பரே. மிக்க நன்றி
சிறந்த பதிவு. நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது. நன்றி சகோ. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
உங்கள் தமிழ் தொண்டு தொடர வாழ்த்துகள்
இலக்கியத்தின் மூலம் இலக்கணத்தை மீட்பது அருமை....
தொடருங்கள்...
தொல்காப்பியர் காலத்திலேயே
தமிழிலில் எதிர்ப்பும்
இடைசொறுகள் உன்டென தெரிய வருகிறது
நன்றி
பிற்கால ஊடுருவல் . ஆதியில் அல்ல.
இந்த பதிவு மிகவும் முக்கியமானதும் அதிகம் பயனுள்ளதாகவும் உள்ளது.
நிறைய பேர் இது தமிழ் வார்த்தை இல்லை அது தமிழ் வார்த்தை இல்லை என்று கூறக்கேட்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது.
இப்போது தெளிவடைந்து விட்டேன். மிகவும் நன்றி.
திருக்குறள் உலக பொதுமுறை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தோழர் மன்னர் மன்னன் வாழ்க வரளர்க வெல்க :- நாம்ஸ் முருகேசன் சான் ஆன்டனியோ டெக்ஸஸ் யு எஸ் 01-05-2021
சிறப்பான முறையில் விளக்கம் தந்த ஆய்வாளரே! உமது பணி சிறக்க வாழ்த்துகிறேன்!
தமிழன்னைக்குத் தாங்கள் புரியும் அளப்பரிய சேவையைக் கண்டு மெய்சிலிர்க்கிறது. எனது தமிழ்ச்சுடரிலும் தங்களின் இந்தக் காணொளியை இணைத்துள்ளேன். தமிழ் வாழ்க!
மிகச்சிறப்பான பதிவு அண்ணா மிக்க நன்றி......!👍👍
மிகவும் அருமை... தொடர்ந்து பதிவிடுங்கள்
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய வார்த்தைகளும் உங்களுடைய கருத்துக்களும் மிக ஆழமாக பதிகின்றது மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்
அருமை, அருமை ஜயா! என்ன தெளிவு. நீங்கள் ஒரு தெய்வீகப் பிறவி! நீடூழி வாழ்க!
குறை சொல்வதற்கு தங்கள் போன் நம்பர் தேவை நிறை சொல்வதற்கு இந்த இடம் தேவை
அருமை சகோ. நீங்கள் பேசுவிதமே மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. உங்களை போல் உள்ளவர்கள் தான் தமிழ் ஆசிரியராக வரவேண்டும் அப்போதுதான் தமிழ் மென்மேலும் வளரும். வாழ்க தமிழ்.
அருமை சகோ ெதாடரட்டும உங்கள் தமிழ் பணி எதிர்பார்ப்புடன்
வாழ்த்துகள்
வணக்கம்! இதுவரையில் கிடைக்கப்பெற்ற, அறிந்த வகையில் தொன்மையான தரவுகளை அணுகும் வரைவிலக்கணமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். அருமையான விளக்கம். மிக்க நன்றி!
உன்மையில் எனக்கு நல்ல பயனாக இருந்தது அருமையான விளக்கம் நன்கு புரிந்தது நன்றி சகோதரா
அருமை! அருமை! வாழ்க வளமுடன்!
அருமையான அறியப்பெறாத தகவல்.உங்கள் சேவை தொடரட்டும்.
விளக்கம் மிகமிக அழகாக இருந்தது.
பெருமதிப்பிற்குரிய மன்னர்மன்னன் அவர்களுக்கு வணக்கம்.
மிகமிகத் தெளிவாக காரண காரியங்களுடன் விளக்கமளித்துள்ளீர்கள்.
இப்பதிவு பள்ளி மாணவர்களுக்கு மாற்றங்கள் இன்றி இலக்கணப் பாடத்தில் இணைக்க வேண்டும்.
வாழ்க தமிழ் !
வளர்க உம் தொண்டு !!
என்ன அருமையான பதிவு. தமிழ் இலக்கணத்தை படிக்கிற ஆர்வத்தை தூண்டுது. நன்றி நண்பா
நல்ல காணொளில்... தொடர்நது எதிர்பாக்கிறேன் அண்ணா... ரத்தம்(இரத்தம்), போன்ற பல சொற்கள் தமிழ் இல்லை என்று சொல்கிறார்கள், அதை பற்றி எதிர்பார்க்கிறேன் அண்ணா
ரத்தம் தமிழ்ச் சொல்தான். தமிழ் திரிந்த சொல். அரக்கு என்னும் சொல், சிவப்பு என்னும் பொருள்படும். இரத்தமும் சிவப்பாக இருப்பதால், அதை அரத்தம் என்றனர். அரக்கு+அம் --> அரத்து + அம் = அரத்தம். காலப்போக்கில், அரத்தம் என்பது ரத்தம் ஆகி ர முதல் எழுத்தாக வராது என்பதால், இ சேர்த்து இரத்தம் ஆக்கி விட்டனர்.
@@velusamy5524 அறிவேன், ஆனால் அது நேரடி தமிழ் சொல்லா? இல்லை தேசம் போன்று வேர் மட்டும் தமிழா? திரிபா!!? அல்ல தூய தமிழ் சொல்ல என்று, அண்ணன் மன்னர் மன்னர் சொன்னால் நன்றாக இருக்கும்
அருமையான பதிவு சகோ.. உங்களது முன்னெடுப்பு க்கு நாங்கள் வலு சேர்ப்போம்..
நல்ல பயனுள்ள ஒரு தளத்தில்
ஆய்வு மற்றும் தரவை வழங்குவதற்கு நன்றி.
உங்கள் பணி மிக உயர்ந்த பணி எவ்வளவு பாராட்டினாலும் தகும் வாழ்க! வளமுடன்
அருமையான உரை.நல்ல தொடக்கம்!
சேவை தொடர வாழ்த்துக்கள்
மிகவும் அருமை தாமிழி..பிராமி இவைகளின் வித்தியாசம் பற்றி பதிவு இடுங்கள் நன்றி
நல்ல முறையில் புரிந்து கொள்ளும்படி இருந்தது நன்றி தோழரே.தொடர்ந்து தொடருங்கள்..
மிக எளிமையான பணிவன்புடனான அனுகுமுறை மிக நன்று!தர்க்க பூர்வமாக,அறிவியல் பூர்வமாக நிறுவி விளக்கம் தந்தீர்கள்!உங்கள் செயற்கரிய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
தொடருங்கள். வாழ்த்துகள்!
என்ன ஒரு அற்புதமான பதிவு! அருமையான விளக்கம் 👌 மிக்க நன்றி
பலநாள் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது நன்றி
நண்பரே , மிகவும் சிறப்பு , சும்மா சொல்லக்கூடாது, இங்கே இருந்து இங்கிலாந்து வரைக்கும் போகிறீங்க , வாழ்த்துக்கள் , உங்கள் முயற்சியில் வெற்றிபெற உடன் இருக்கிறோம்
தமிழ் இலக்கண விளக்கம் மிக அருமை 🙏
தமிழின் சொத்து சகோதரா நீ.
தமிழ் மொழி ஆராய்ச்சி மற்றும் உங்கள் உழைப்பை நினைத்து பிரமிப்பு அடைகிறேன், ஒவ்வொரு தலைப்பையும் அருமையாக வளக்குகிரீர்கள்… உங்கள் ஒவ்வொரு காணொளியையும் எங்கள் பிள்ளைகளுக்கு காண்பிக்கிறேன்…
நன்றி….
அருமை.
வாழ்க. வளர்க
கடலோரத்தில் செழித்து வளர்ந்த வரலாறு கொண்டது பழந்தமிழர் நாகரீகம். சங்கு அவர்களின் சுகதுக்கஙகளில் கலந்த ஒன்று.
சஙகினை ஊதி புலவர் பெருமக்கள் குழுமியதால் சங்கம் எனறாயிருக்கவேண்டும்
மொழயில் உள்ளதை விவரிப்பது இலக்கணம்.
காணொளி நன்று.
சொளந்ரராசன் என்பது வடசொல்தானே அய்யா விளக்கம் கொடுங்கள் தர்மலிங்கம்
வாழ்க தமிழ்💐
வளர்க தமிழர்👌
மன்னார் மன்னன் உங்களோட தேடல் மற்றும் தமிழ் ஆய்வு எனக்கு ரொம்ப பிடிக்கும், இருந்தபோதும் சில தகாதவ தமிழிர்களால் வருத்தம் அதற்காக சொல்கிறேன் நீங்கள் வருத்தபட வேண்டாம் ச எழுத்தில் தமிழ் தொடங்கவில்லை என்று இனி தமிழன் ச வில் தமிழ் தொடங்க ஆணையிட்டுள்ளேன், இந்த சா தாரன ஓரடி மன்னன் உங்கள் தேடல் எனக்கு தேவை உங்கள் தேடல் தொடரும் தமிழனோட தேடுவோம்
சிறப்பு ஐயா! மனம் மகிழும் ஒரு காணொளி.. விழியதுக்கு மிக்க நன்றி! தமிழின் வலிமையை நல்ல தமிழர்கள் எப்படி ஆராய்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது.
தற்போதைய நிலையில் தமிழ் பள்ளியில் கூட படிபிக்கப்படவில்லை. இதில் தாங்கள் கூறும் இந்த கருத்துக்கள் மகத்தானது. இலக்கியம் இலக்கணம் பற்றி புரிந்து கொள்ள பயன்படும். மேலும் பல கருத்துக்களை பகிரவும். மிக்க நன்றி.
ச வில் மற்றும் யவில் தொடங்கும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் திரிந்து வந்தவையே. எடுத்துக்காட்டாக, அமர் என்ற சொல் சமர் ஆனது. அது போல, அங்கம் சங்கமானது. அமையல் சமையல் ஆனது. அமணம் சமணமானது. அங்கு சங்கு ஆனது. அமம் சமமானது. அட்டி சட்டி ஆனது. அமுனை யமுனை யானது.
இதற்க்கு ஏதாவது எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் இருந்தால் ஐயம் தீர நிறுவலாம்.
புதிதாக உணர்கிறேன்...
@@dharmasdr2917 காலத்தால் பின்னோக்கிப் பயணித்துச் சென்று பார்த்தால் புதுமையாகத் தோன்றுவது புதிதல்ல.
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்🙏🙏🙏
அழகு, அற்புதம் .....அமிழ்தே....அது தமிழே ....!!!
அருமையான பதிவு நன்றி சகோதரரே
அருமை!
தொடர்க!
தமிழ் வளர்க்க!
நல்ல பதிவு.தமிழின் பெருமை சொல்லில் அடங்காது 👍
முதல்தமிழ் சங்கம் இரண்டாம் தமிழ் சங்கம் ஆக சிவன் முருகனோடு தொடர்புடையது
இராஜ இராஜ சோழனை பற்றிய தகவல்கள் சிறப்பு.... அது போலவே இராவணன் பற்றிய குறிப்புகள் இருந்தால் வெளியிடவும்..
இராவணன் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்கிறேன். இராவணனின் உண்மையான பெயர் அறவணன் என்பது. அவன் தமிழ் மன்னன் ஆவான். அவனும் இராசராச சோழன்போல் வடநாடு வரை வென்று புகழ் பெற்றவன். இராசராச சோழன் போலவே சிறந்த சிவபக்தன். சிவனுக்கு சிறந்த கோவில் கட்டுவித்தான். அவன் புகழைக் கண்டு பொறுக்க மாட்டாதவர்கள் (தமிழை வெறுப்பவர் இன்று இராசராசனின் சிலர் தூற்றுவது போல) அவனை அரக்கன் என்று வருணித்து இராமாயணக் கதையில் இணைத்து அழகு பார்த்தார்கள். இன்றைக்கு ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு.5000) வாழ்ந்தவன். மாபாரதப் போர் ஏறத்தாழ 5100 ஆண்டுக்களுக்கு முன்பு (கி.மு.3100 முன்பு) தாமிரபரணி ஆற்றங்கரையில் திருநெல்வேலிக்கு அருகே நடைபெற்றது. அதனை ஒட்டித் தோன்றியதே கலி ஆண்டு. இந்தப் போரைப் பற்றி பெருந்தேவனார் என்ற கடைச்சங்கப் புலவர் பாடியுள்ளார். ஆனால், அந்த நூலானது நமக்குக் கிடைக்கப் பெறவில்லை.
அருமையான பதிவு . உங்களது முன்னெடுப்பு க்கு நாங்கள் வலு சேர்ப்போம்
நண்பா!
தயவுசெய்து இப்படியான பயன் தரும் காணொளிகளை பதிவுசெய்யும்கள். உங்கள் முயற்சி பலருக்கு உதவும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.
நான் தமிழ் முதுகலை முடித்து விட்டேன். தற்போது B.ed முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். உங்களுடைய தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்.
மிகவும் அருமையான தெளிவான விளக்கம்.தங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
நண்பரே பதிவு அருமை, ஆனா இதை தொடரா போடும் போதும் 5 இல்லை 10 நிமிடம் காணொளியா போடுங்க.
கண்டிப்பாக தாங்கள் தொடர வேண்டும் சகோதரரே...
சிறப்பு நண்பா!
Definitely a high quality content video. You are doing a great contribution to Tamil and Tamil people. Please continue your efforts. You are in right direction.
இங்கேயாவது தமிழிலெழுதுங்கள்!
பாவாணர் அருமையாக தீர்வளித்துள்ளார். எடுத்துக் கூறிய தங்களுக்கும் நன்றிகள்.
நன்றி மகிழ்ச்சி.பாராட்டுகள்.செ ப பன்னீர்செல்வம்
அருமையான பதிவு. நன்றி சகோ.
தொல்காப்பியம் பற்றிய அறிய முற்படு போருக்கான ஒரு பதிவை செய்யுங்கள்
சூப்பர் நண்பா
இன்னைக்கு இதை தான் என் அக்காவிடம் விவாதம் பண்ணினேன்
எனது சந்தேகம் இன்னைக்கு தீர்ந்து விட்டது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மிக மிக எளிய முறையில் விளக்கம் அருமை கோடி நன்றி
நன்றி வாழ்த்துக்கள்👍👍👍💪
தமிழில் எழுதும் பொது ல ழ ள மற்றும் ண ன இனம் கண்டு எழுதுவதர்க்கு தயக்கம் ஏற்படுகிறது . இதற்க்கான தீர்வு காணொளி தயவு கூர்ந்து பதிவெற்றவும். நன்றி.
மிக அருமைமான தெளிவான விளக்கம் சகோ... வாழ்தமிழ் வளர்க மெம்மேலும்👍
மிகச்சிறந்த படைப்பு மன்னாதி மன்னருக்கு நன்றி பல
Wow, very good information. Today after watching this video I now understand how tamil has developed. Keep it up brother.👍😇👏👏👏
இங்கேயாவது தமிழிலெழுதுங்கள்!