சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகங்கள் & செல்ல வேண்டிய கோயில்கள் | Worship to get own house
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகங்கள்
பதிகம் 1:
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
Padhigam to get Own House
Andarpadhi kudiyera mandasurar urumara
andar mana magizh meera ...... arulale
Anthariyo dudanadu sankaranu magizh kura
aingkaranum umaiyalu ...... magizhvaga
Mandalamu munivorum endhisaiyil ula peru
manjinanum ayanarum ...... edhirkana
Mangai udan arithanum inbamura magizh kura
maindhu mayiludan adi ...... varavenum
Pundarika vizhiyala andar magal manavala
pundhi nirai arivala ...... uyarthola
Pongu kadaluda nagam vinduvarai igalsadu
pon paravu kadhir veesu ...... vadivela
Thandarala mani marba sempon ezhil seri rupa
thandamizhin migu neya ...... murugesa
Santhathamum adiyargal chinthaiyadhu kudiyana
than siruvai thanil mevu ...... perumale.
பதிகம் 2:
பண்டு செய்த
பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங்
களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச்
செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி
யாய்துயர் தீரவே. 1
நச்சி நாளும்
நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை
நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு
கார்செறி தீம்பொழிற்
கச்சி யேகம்ப
மேகை தொழுமினே. 2
ஊனி லாவி
இயங்கி உலகெலாம்
தானு லாவிய
தன்மைய ராகிலும்
வானு லாவிய
பாணி பிறங்கவெங்
கானி லாடுவர்
கச்சியே கம்பரே. 3
இமையா முக்கணர்
என்னெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி
வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த
இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்மவ
னைத்தொழு மின்களே. 4
மருந்தி னோடுநற்
சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக்
காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி
னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி
ஏகம்பத் தெந்தையே. 5
பொருளி னோடுநற்
சுற்றமும் பற்றிலர்க்
கருளும் நன்மைதந்
தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை
யான்கச்சி யேகம்பம்
இருள்கெடச் சென்று
கைதொழு தேத்துமே. 6
மூக்கு வாய்செவி
கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம்
ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை
நோய்வினை வாராமே
காக்கும் நாயகன்
கச்சி யேகம்பனே. 7
பண்ணில் ஓசை
பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று
பேசற் கரியவன்
வண்ண மில்லி
வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி
கச்சி யேகம்பனே. 8
திருவின் நாயகன்
செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட
விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர்
வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன்
கச்சி யேகம்பனே. 9
இடுகு நுண்ணிடை
ஏந்திள மென்முலை
வடிவின் மாதர்
திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன்
பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை
அருந்துயர் தீர்ப்பரே. 10
இலங்கை வேந்தன்
இராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக்
கவ்விர லூன்றலுங்
கலங்கிக் கச்சியே
கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித்
தானெங்கள் நாதனே. 11
ஆத்ம ஞான மையம்
உண்மை உண்மை உண்மை..... அண்டர்பதி பாடல் வேண்டி நான் புதிய வீட்டில் குடியேறினேன்.....🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் முன்பு கூறிய முருகன் வழிபாடு செய்து சிறுவாபுரி கோயிலுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் நெய் விளக்கு ஏற்றி அண்டர்பதி திருப்புகழ் பாடி இப்போது வீடு கட்டும் பணி நடக்கிறது மிக்க மகிழ்ச்சி அரோகரா
Kovil entha ooril irukku
அம்மா உங்களிடம் நிறைய அதிகமா இந்த பதிவை பத்தி நான் பேசணும் நிறைய நான் இரண்டு வருடத்துக்கு முன்பே உங்களுடைய பதிவு பார்த்தேன் சிறுவாபுரி பதிகத்தை எழுதி வைத்து படித்தேன் சிறுவாபுரி முருகனை உள்ளன்போடு மனம் உருகி வேண்டிக் கொண்டேன். திடீரென ஒரு நாள் எனக்கு கோவிலுக்கு போக வாய்ப்பு கிடைத்தது. கோவிலுக்கு போகும் வாய்ப்பு கிடைக்கும் வரை ஒவ்வொரு நாளும் துடித்தேன் கோவிலுக்கு போக வேண்டும் என்று கோவிலுக்கு போகும் வாய்ப்பு கிடைக்கும் வரை ஒவ்வொரு நாளும் துடிப்பின் கோவிலுக்கு போக வேண்டும் என்று. என்னால் கோவிலுக்கு போக முடியும் என்று நம்பினேன் முழுமையாக நம்பினேன். நான் அப்பொழுது கோவிலுக்கு சென்றேன் ஒரு செவ்வாய்க்கிழமையில் சென்றேன். அங்கே முழுமையாக மனம் உருகி அழுது விட்டுக்கு வந்தேன் எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்று. ஒரே மாதத்தில் சொந்த வீடு கட்டிய வீடு சொந்தமாக வாங்கினேன். என்னோட சக்திக்கு மீறின விஷயம் யாரும் நம்ப முடியாத விஷயம் என் வாழ்க்கையில முருகர் நடத்தி அதிசயம். போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும். போகும் வரை சிறுவாபுரி பதிகத்தை படியுங்கள் தினமும் படியுங்கள். நல்லதே நடக்கும் நீங்களும் கூடிய சீக்கிரமே சொந்த வீடு வாங்கிடுவீங்க அதுக்கு நான் சாட்சி.👍👍👍🙏🙏🙏🙏
Super sister, nanum weekly patikran, enaku amaiya villai,40 week murugan kovilku poit irukan, oodu veedu vangra amaipu than vanthuchu athanal vendam solitom, muruga engalk arul puriya vendum muruga
Sis daily epdi padichinga sis konjam sollunga anngalum try pandrom
சிறுவாபுரி முருகன் கோவில் எங்கு உள்ளது
சென்னை redhills அருகில் உள்ளது.
Chennai
முருகா முருகா முருகா எல்லோருக்கும் சொந்த வீடு அமைய வேண்டிய வருமானத்தை பெருக அருள வேண்டுகிறேன் தொழிலில் அதிக லாபம் பெற முருகா அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
❤
இந்த பதக்கத்தை தினமும் நம்பிக்கையுடன் ஒருவருடம் மனம் தளராமல் படித்ததன் பலனாக எனக்கும் சொந்த வீட்டில் வாழும் பாக்கியத்தை முருகப்பெருமான் கொடுத்திருக்கிறார்,நன்றி முருகா,முருகா,சரணம்.
Nijamava
நன்றி சகோதரி நானும் திடமும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு அழகிய சிறிய வீடு கட்ட வேண்டும் நானும் இந்த பாடல் படித்த கொண்டு இருக்கிறேன் நன்றி எனக்கு அழகிய வீடு. வேண்டும் என்று பல வருடங்களாக கனவு
நாங்க எவ்வளவோ முயற்சி செய்கிறோம் எங்களால முடியல அம்மா நீங்கள் சொன்ன இந்தப் பதிகங்கள் படித்து முயற்சி செய்கிறேன் அம்மா வெற்றியை காண முருகன் அருளால் அனைவருக்கும் கிடைக்கட்டும் ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் நாங்களும் இந்த கோவிலுக்கு 2011 டிசம்பரில் சென்று பிரார்த்தனை செய்து வந்தோம் 2012 அக்டோபர் மாதத்தில் வீடு வாங்கினோம். நன்றிகள் பல கோடி முருகா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறுவாபுரி முருகனே எனக்கு ஒரு சொந்த வீடு யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை முருகா முருகா நீதான் வழி காட்ட வேண்டும்
அம்மா வணக்கம் எங்களுக்கு தேவையான நேரத்தில் தேவை யான பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.
பொள்ளாச்சி மாசாணி தாயேஅம்மன் தரிசனம் செய்யும் நன்றி 🙏
அம்மா சிறுவபுரி முருகனின் திருவருளால் எங்கள் சொந்த ஊரில் பல வருடங்களாக முயன்று கட்ட முடியாமல் இருந்த வீட்டை ஆறு வாரங்கள் தொடர்ந்து சென்று வேண்டி என் அப்பன் முருகனின் கருணையினால் புதிய வீடு கட்டினோம் முருகன் கருணை கடவுள் 🙏🙏🙏
'அண்டர்பதி குடியேற ' திருப்புகழை 'சம்பந்தம் குருக்கள்' சேனலில் மிக அழகாக பாடப்பட்டுள்ளது. இந்த பாடலை கேட்க கேட்க எளிதாக மனப்பாடமாகிவிடும். இனிய இசையுடன் கேட்கும் போது பாட எளிதாகிறது. கேட்டு பயன் பெறவும் . திருப்புகழ் பாடல்கள் மிக அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவாபுரி முருகனருளுடன் இனிய இல்லம் பெற வாழ்த்துகள்.
Thanks for sharing
🙏
அம்மா படித்துவிட்டு வேலை கிடைக்காமல் தினம் தினம் மனம் நொந்து அவமானத்தை சந்தித்து வருகிறேன் 😢மனதிற்கு பிடித்த படித்ததற்கு உரிய வேலை அமைய ஒரு பதிவு கொடுங்கள் 🙏இறைவன் கருணை அப்படியாவது என்னைப்போன்று உள்ளவர்கள் மீது பட்டு வாழ்க்கை வளமுடன் அமையட்டும் 😢🙏
Bro kandipa ungaluku nalla vaelai amaum god is 👍great ungaluku puducha vaelai amaum.
@@Raman87 tnq so much brother...!!🙏and I'm sister..🙂
பெருக்கச்சஞ் சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின்
பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம்
பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே
புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே
தருக்கிக்கண் களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங்
குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே
சலிப்புற்றங் குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்
சிரத்தைச்சென் றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண்
டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே
சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
திருச்சிற்றம் பலத்தத்தன்
செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே
Pls read the above thirupugazh u will get a job soon
@@Ramya_Shanmugamthank you sis... im read this thirupugal within four weeks i got job
சரியான நேரத்தில் கொடுத்த பதிகம் நன்றி அம்மா.
வணக்கம் சகோதரி போன வருடம் உங்களிடம் காலண்டர் வாங்கினேன் அதில் சிறுவாபுரி முருகன் படம் உள்ளது தினந்தோறும் தீபம் காட்டி வழிபடுகிறோம் எங்களுக்கும் வீடு அமையை வேண்டும் சகோதரி 🙏🙏🙏🙏
நாங்க இந்த முருகன் கோவில் போய் வந்து. 6 மாதம் வீடு' வாங்கப்பட்டது. அடுத்து 2 முறை முருகன் கோவில் போய் வந்தோம். நீங்க சொல்றது. உண்மை. அம்மா..... முருகனுக்கு அரோகரா.
100% unmai amma...nanum 3 yrs ah Vadaga veetil irunthen...pona varudam may matham siruvapuri murugan kita venditu vanthom intha thai matham sontha vdu katrom...Muruga in arule arul tha... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
.வணக்கம் அம்மா. நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை. உங்களை மாதிரி தான் நானும் 10 வருடங்களுக்கு முன் வீடு கட்ட வேண்டும் என்று சிருவார்புரிக்கு சென்றேன். போகும் போது நீங்கள் சொன்ன மாதிரியே பயங்கர மழை, காற்று. என்ன ஆனாலும் போகவேண்டும் என்று மழையில் நனைந்து கொண்டே இருசக்கர வண்டியில் சென்றோம். அடுத்த மாதமே வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம். முருகா என்று மனமுருகி அழைத்தால் உடனே ஓடி வரும் கண் கண்ட தெய்வம்.
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
Na daily itha padikire now i got registered 3 cent now .. om muruga.. really great
தாயே ரொம்ப நன்றி எனக்கு வாடகை கொடுக்க கூட வசதியில்லை... கடன் சொல்லி கடன் சொல்லி கொடுத்து வருகிறேன்.... ஆனாலும் நான் இன்றிலிருந்து படிக்க போகிறேன் எனக்கு நம்பிக்கை இருக்கு சொந்த வீடு கட்டுவேன்.. கட்டுவேன்.. கட்டுவேன்.... என்னுடைய வாடகை வீட்டு உரிமையாளருக்கு நான் நன்றி சொல்கிறேன்.... ஒரு இரண்டு மாதம் முழு வாடகை தருவேன்... அப்புறம் எதாவது பிரச்சினை வந்து பாதி தருவேன் பாதி அடுத்த மாதம் சேர்ந்து போய்விடும்... அப்ப பாதி தருவேன் திரும்ப திரும்ப கடனுக்கு குடியிருக்கும் நிலைமை.... மனிதர் முழு வாடகை என்னிடம் பெ முடியவில்லை என்று வருந்த ஆவார்.. கோபிப்பார்... திட்டு வார்டு அப்புறம் சகஜமாகப் விடுவார்.... அவரிடம் நான் மன்னிப்பும், நன்றியும் கேட்டு க் கொள்கிறேன்.... இத்தனைக்கும் நான் ரியல் எஸ்டேட் பணி புரிகிறான் முழு முயற்சி எடுப்பேன் கஸ்டமர் கள் நிறைய எடுப்பேன் ஆனால் விற்பனை மட்டும் நடக்காது கிட்ட வரும் தட்டி போய்விடும்..... என்னுடைய எல்லா முயற்சி வேண்டாம் ஒரு சிலது வெற்றி யடைந்தாலே என்றோ நான் சொந்த வீடு கட்டியிருப்பேன்... எனக்கு ஒரு நல்ல வழி சொல்லியிருக்கிறீர்கள்..... என் வியாபாரத்திற்காகவும் வேண்டிக் கொள்ளலாம் தானே அம்மா சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏
நானும் அந்த முருகன் கோவில் போய் வீடு கட்டினேன் நன்றி முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Its true ..enaku possible anathu..intha pathigam padicha 3 rd day enaku veedu kidaika porathu confirm anathu..1 yr la na nincha Mathiri veedu katti vanthachi..iam so happy murugan arul kidaka vali kattiya managai yar karasi amma ungaluku nandri..🙏🙏
True. I daily recited this thirupugal and had the wonderful opportunity to built a sannithanam in a small mariamman temple near my house. I gave only little amount for this... But I can truly say without His grace nothing would have happened. I love this thirupugal and I daily recite this.
Amma inaiku morning 7 clk dhan nanga familyoda siruvaapuri koiluki poitu vadhom ipo indha padhigam pakumbodhu romba pull arikudhu Amma edhirpakavay illa neenga inda vedio poduveenganu romba positive ah eruku amma
முருகா எனக்கு சொந்த வீடு வேனும் முருகா சுகமே சூழ்க ஓம் சரவணபவ
அம்மா இந்த பதிகம் படித்து வீடு கட்டி முடித்துவிட்டேன்
மிக்க நன்றி அம்மா
நீங்கள் பாடிய விநாயகர் கோளறு பதிகம் தினமும் பாராயணம் பாராயணம் காலபைரவர் அஷ்டகம் காலபைரவர் உங்கள் குரலில் பாடவம்
கோடான கோடி நன்றி அம்மா அம்மா அடியேன் ஒரு சிறு வேண்டுகோள் அனுதினமும் பதிவு போடுங்கள் அம்மா முருகனைப் பற்றி இன்னும் கொஞ்சம் நிறைய சொல்லுங்கம்மா கந்தபுராணமும் சொல்லுங்கம்மா நன்றி அம்மா
I'm from Bangalore my sweet daughter I'm telling this padhigam morning & evening past 3yrs onwards wn muruga will bless me I don't know bt still I hv hope on muruga a day definitely muruga will give own house.
அம்மா,
விநாயகரும் ஆஞ்சநேயரும் சேர்ந்த ஆத்யந்த பிரபு பற்றி கூறுங்கள் அம்மா.
அவ்வாறு தோன்றியதன் வரலாறு மற்றும் பிண்ணனி என்ன??
அவரை வீட்டில் வைத்து வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன??
ஆத்யந்த பிரபு அமைந்த சன்னதிகள் எங்கெங்கு உள்ளன??
அம்மா,
சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
எங்களின் நீண்ட கால கனவு அம்மா சீக்கிரம் நிறைவேற வேண்டும். சிறுவாபுரி அடுத்து வேறு எங்கு செல்லலாம் என்று சொல்லுங்கள் அம்மா🙏🙏
சகோதரி உங்களை நேரில் பார்க்க ஆசை நான் சென்னை யில் தான் இருக்கிறேன்
🎉🎉 அருமையான பதிவு அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉
நாங்கள் நிறைய சொத்துகளை இழந்து இருக்கிறோம் அம்மா நாங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் அதற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டுகிறேன்...உங்களிடம் வெகு காலம் ஆக கேட்டு கொண்டே இருக்கிறேன் அம்மா தயவு செய்து எங்களுக்கு நல்ல வழி சொல்லுங்கள்
ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ 🌷🌷🌷🌷🌷🙏🙏
காலை வணக்கம் குருமாதா🌹🙏🙏
எனக்கும் சொந்தவீடு இல்லை வீடு கட்டுவோமா தெரியலை முருகன் அருளால் சீக்கரம் வீடு கட்ட வேண்டி கொள்கிறேன் நீங்கள் சொன்ன இரண்டு பதிகம் படிக்கிறேன் குருமாதா🌹🙏😔
சகோதரி... பலன் தரும் பதிகங்களில்.... பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை குறித்தும் அருளினால் மகிழ்ச்சி... வேகு வருட கோரிக்கை. நன்றி
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
உடல் ஆரோக்யத்திற்கு உதவும் பதிகம் சொல்லுங்க amma
வாடகை கொடுக்க வேண்டிய கிழமை எது செல்லுக அம்மா செவ்வாய் கிழமை கொடுக்க வேண்டும் என்று செல்லுராங்க கொடுக்கலாமா அம்மா
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
🙏கல்வியில் உச்சம் தோட கலைகளில் சிறக்க ஸ்லோகம் சொல்லுங்க அம்மா.
Yes.. 100 percent True.. We went to this temple and have done our grihpravesam this year.. Trust Lord muruga and he will guide and bless you.. 😊
சிறுவாபுரி போக முடியலைனா கூட பக்கத்தில் உள்ள முருகனிடம் மனமுருக வேண்டினாலும் நிசசயமவழிகாட்டுவார் என சொந்த அனுபவம
வேல்மாறல் தொகுப்பு பற்றி ஒரு பதிவு
அம்மா மூர்த்தி நாயனருக்கு கிடைத்த பரிசு உங்களுக்கும் கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி அம்மா...சொந்தமா பூர்வீக மணை இருந்தும் நல்ல வீடு அமைவில்லை அம்மா பாதியிலேயே நீண்ட நாட்களாக எடுத்து கட்டி முடிக்க முடியாமல் தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றது.அடியேன் கண்டிப்பாக இந்த பதிகங்கள் படித்து கடைபிடிக்கிரேன்.🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி அக்கா இந்த பதிவு கொடுத்ததுக்குநன்றி❤
அம்மா வணக்கம்... இந்த பதிகம் படிக்க படிக்க பயன் தரும்... இந்த திருப்புகழ் அனைத்தும் நமக்காக தந்த அருணகிரிநாதர் புகழ் வாழ்க... அருணகிரிநாதர் பற்றி பதிவு போடுங்கள்...
அம்மா வழக்கில் வெற்றி பெற திருப்புகழ் பதிவிடவும். நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்
I'm also Editor Mam... but I missed diz offer bcz na Chennai illa... na ungaloda periya fan mam.. unga program enga nadanthalum channels before inform pannidunga.. I'm eagerly waiting to see you mam...
அம்மா மிகவும் நன்றி ❤ மகிழ்ச்சி அடைகிறேன் ❤
உண்மை அம்மா எனக்கும் சொந்த வீடு அமையப்பெற்ற ஏன் இப்பதிகத்தால் மிக்க 🙏💕
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்சரவணபவஓம் ❤ ஓம்முருகா சரணம் ❤
மு௫கா உன்னுடைய கடைக்கண் பார்வை ௭ப்போது கிடைக்கும், ௭ங்களுக்கு உன் துணையுடன் ஓ௫ குடிசைய கிடைக்குமா காத்து இ௫கிரேன் ஐயா
அம்மா நான் நிங்க சொன்னது 2 வருடம் படித்தேன் அதற்கான பலனை அடைந்து விட்டேன்...1 வருடம் முந்தது நான் வீடு வாங்கி..
அம்மா,
நாங்கள் ஆசையா வாங்கிய வீடு 2020ல் இன்னமும் அந்த வீட்டுக்கு குடி போக முடியலை அம்மா..
என் கணவருக்கு வீடு வாங்கும் போது இருந்த வேகம் சுத்தமும் தற்போது இல்லை ஏதாவது காரணம் சொல்கிறார்..
வருடம் ஓடியது மட்டுமே மிச்சம்😢😢😢😢😢😢ஊர் கூட்டி கிரஹ பிரவேசம் கூட வேண்டாம் கனபதி ஹோமம் மட்டும் போதும் என கூட சொல்லிவிட்டேன்😢என் கணவர் மனம் மாறி நாங்கள் புதியதாக வாங்கிய இல்லத்துக்கு சென்று மனம் நிறைவாக மற்றும் நிம்மதியாக வாழ வாழ்த்துங்கள் அம்மா....
இன்றிலிருந்து நான் இந்த பதிகத்தை படிக்க போகிறேன் அம்மா 😢😢😢
௮ம்மா ௮ன்றட இந்த பதிகம் ௭ன் பூஐை அரையில் பாரயனம் பன்ற, மு௫கன் பெ௫மான் ௮௫ள் கடைக்கண் பார்வை ௭ப்போ கிடைக்கும் என்று பாத்து கொண்டு இ௫க்க அம்மா
எனக்கு ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா சிவபெருமானே துணை
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
Mam... Engal Ooruku Negal Varuvathuku Mikka Nandri.... I'm form Oddanchatram🔥🔥🔥
ஷியமளா நவராத்திரி விழா நல்வாழ்த்துக்கள் அம்மா!!
நானும் சிறுவாபுரி முருகன் அருளால் சொந்த வீடு வாங்கினேன்
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
Thodanrnthu seithu kondu varugiren Amma four months ahh..... Murugan viraivil karuvanai katuvar enra nambikaiyudan.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா, மாசில் வீணையும் மாலை மதியமும் பதிகம் பற்றிய தகவலையும் எவ்வாறு படிக்க வேண்டும் என்ற முறையும் பற்றி பதிவு தாருங்கள் அம்மா,நன்றி🤗
Enakagave sonna mathri iruku amma romba nandri
அம்மா இனிய காலை வணக்கம் அபிராமி அந்தாதியைப் போல் திருவாசகம் பதிவும் போட வேண்டும் மிகத் தாழ்மையுடன் வெண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
என்னுடைய பல வருட கனவு சொந்த வீடு, ஆனால் இந்த நொடி வரை நிறைவேறவில்லை, நிறைவேறும் என்ற நம்பிக்கையும் போய்விட்டது.
நானும் இந்த பாடல் பாடி வீடு வாங்கி வீட்டோம்
முருகா எங்கள் பழைய வீட்டை விற்கா அருள் புரிய வேண்டும் முருகா புதிய வீடு வாங்க அருள் புரிய வேண்டும் முருகா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Amma arumaiyana pathivu nanum sontha veedu kattanum romba varusama muyarchi paran mudiyala amma ungal pathivu enaku nambikai kuduthiruku romba nandri amma vetri vel murugan thunnai
சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
I hope buy happy home very soon Thank you muruga saravana bava
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி
Amma enghalukku innum sonthaveedhu amayavillai. Neenghal sonna pathivu mikka vudhavum.unghal sevai menmelum thodhara vazhthukkal.
மிகவும் நன்றி அம்மா❤
கருங்காலி மாலை பற்றி சொல்லுங்கள் அம்மா
சொந்த வீடு கட்டவேண்டும் நன்றி🙏
வணக்கம் அம்மா:-
குழைந்தைகள் நன்றாக படிப்பதற்கும்,நினைவா ற்றலை அதிகப்படுத்தவும் ஒரு பதிகம் போடவும்.
Amma வாசி தீரவே காசு நல்குவிர் பாடல் pattri kurunghal
சொந்த வீட்டுல இருக்கிற பங்காளிகள் பிரச்சனையாக உள்ளது.
இதற்காக பரிகாரம் மற்றும் பாசுரம் இருக்கிறதா?
Amma innaku saymala navarathiri ma yallarum raja matangi valipadu pannuga yallarum. Nalla irrupanga😊
நன்றி அம்மா எனக்கு மிகவும் பிடித்த பதிவு 😊
அம்மா எங்கள் வீட்டில் கெளலி சத்தம் வீட்டின் வெளிப்பகுதி மற்றும் மொட்டை மாடியில் கேட்கிறது ஆனால் வீட்டின் உள் பகுதியில் கெளலி பலன் சொல்ல மாட்டேங்கிறது கெளலி பலன் சொல்ல என்ன செய்ய வேண்டும் அம்மா தயவு செய்து கூறுங்கள்
Siruvapuri murugan pathigam yelarum padinga kandipa murugan arul kedaikum na padika aramiche one month kuda nanga EPA sonthama vedu katitu erukom vetri vel muruganuku arogaraaa
Amma ungala parthu romba visiyam thetinjikiten.
Om muruga please give me and my family a good home to live healthy happy wealthy successful long life...
Amma nanri nanri amma ❤amma niigal solliyathai pola murugar pathigam padithen amma. Murgar arulalum ungal arulalum eppo sontha vedu katti sontha vettil erukiren amma .kodi nanrigal amma .
Idhu dhan enadhu thevaiyaga irundhadhu poorthi seidhadharkku nandri amma
En manamarntha nanri amma. 🙏 vaztha vayathillai vanangugiren.
தங்களின் பதிலை எதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அம்மா
Vazhga valamudan mam❤
Amma enagu sonthama veedu ila entha oru porulume enagu sonthamila nanum veedu kattanum amma engal anaivarukum prarthaninpannikonga amma..
AMMA murugan Arulalaimu .unKAL vathivalaim .ennaku 11 years after .veedu kidaithu Amma .kootana Nanrikal Amma.