வான் சிறப்பு- அதிகாரம் 2 - அறத்துப்பால் - திருக்குறள் || Vaan sirappu- Adhikaram 2 Arathupal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • வான் சிறப்பு- அதிகாரம் 2 - அறத்துப்பால் - திருக்குறள் || Vaan sirappu- Adhikaram 2 Arathupal
    தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களின் குறள் தினம் ஒரு குறள் விளக்கத்துடன் கொடுக்கப்படும்.
    குறள் 11:
    வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று
    குறள் 12:
    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉ மழை
    குறள் 13:
    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின் றுடற்றும் பசி
    குறள் 14:
    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்
    குறள் 15: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை
    குறள் 16:
    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண் பரிது
    குறள் 17:
    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்
    குறள் 18:
    சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
    குறள் 19:
    தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
    வானம் வழங்கா தெனின்
    குறள் 20:
    நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
    வானின் றமையா தொழுக்கு
    திருக்குறள்
    #thirukkural
    #tamil
    #thiruvalluvar
    #திருக்குறள்
    #திருவள்ளுவர்
    #அறத்துப்பால்
    #kural
    #thirukural
    #thirukkural
    #thirukkuralintamil
    #viral

ความคิดเห็น • 1