பூங்கதவே தாழ் திறவாய் HD Video Song | நிழல்கள் | ராஜசேகரன் | ரோகினி | இளையராஜா
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- Watch this Video Song "Poongathavae Thaal Thiravai" from Nizhalgal.
Song: Poongathavae Thaal Thiravai
Star Cast: Rajasekaran, Rohini
Music: Ilayaraaja
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #rajasekaran #ilayaraaja
யாரெல்லாம் இந்த பாடலை 2024ல் ரசிக்கிறீங்க❤
It's Meee....❤
Iam also...... 👍
Nan daily intha song kepan❤
தினம் குறைந்தது.ஒரு முறை கேட்பேன்.
me
என்னுடைய 15 வயதில் நண்பர் ஒருவரை பார்பதற்கு பாண்டிச்சேரிக்கு சென்றிருந்தேன். அவருக்கு கொடுப்பதற்காக ஒரு கடையில் இனிப்பு வகை வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் ஒலித்துக் கொண்டிருந்த ராஜாவின் இந்த பாடலை திரும்ப திரும்ப போடசொல்லி அதற்கு கைமாறாக வாங்க நினைத்த ஒரு சுவீட்டுக்கு பதில் பல பண்டங்களை வாங்கியதால் கையில் காசில்லாமல் பார்க்கபோன நண்பனே பஸ்சுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து கைசெலவுக்கு காசும் கொடுத்து வழியனுப்பியதை இன்றுவரையும் மறக்க முடியாது.
Super bro...innum marakkaama irukkeenga....👏
அருமை அண்ணா 🙏
Suthakar Appo Eppo VIMAL
Thank you. I forgot about my box of sweets, but after seeing your comment, I remembered and ate them.
@@MyselfIrays😅😅
துளியும் திகட்டாத.. காமம் கலக்காத வரிகள்...எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....90களில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் ❤
இதுபோன்ற பாடல்களை எனது இறுதி நாட்களில், இறுதி நிமிடங்களில கேட்டுக்கொண்டே இவ்வுலகை விட்டு பிரிய வேண்டும்...!"
அவ்வளவு அற்புதமானவை..!"
S boss
I feel like you...
❤
Endrum iniyavai❤❤✨✨👌🏻👌🏻
எதுக்கு சாகனும் . இந்த மாதிரி பாட்டு கேட்டுகிட்டே வாழணும்னு சொல்லுங்க .
பாடலில் வரும் வயலின் ஒவ்வொரு முறையும் செத்து பிழைக்கிறேன் 👍👍👍🔥🔥
போய் வாருங்கள் உமாரமணன் இந்த பாடல் ஒன்று போதும் இந்த உலகம் உள்ள வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
இந்த பாடலை பாடிய உமா ரமணன் அவர்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏 ஓம் சாந்தி ஓம்🙏🙏🙏
Yes BRO 🎉🎉🎉🎉🎉🎉🎉
Rest in peace
அம்மாவின் ஆண்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் எளிமை அமைதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்
உமா ரமணன் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொ்கிறேன்
ஓம் சாந்தி ✨💐
இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன். பாராட்டுபவர்கள் அவரைப் பற்றியும் ஒருவார்த்தை சொல்லலாம். பல நல்ல பாடல்கள் அவர் எழுதியது பலருக்கும் தெரியாது
உண்மை நண்பா நிறைய ஹிட் பாடல்கள் இசை ராஜா இசையில் அவர் எழுதி உள்ளார்
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮6⁷6⁷7⁷77⁷
Gangai amaran oru paraiyan Anna nalla musician
@@saravanangurunathan1982 இதுல எதுக்கு ஜாதியெல்லாம் இழுக்குறீங்க நல்ல கவிஞர்,நல்ல திறமைசாலி
@@saravanangurunathan1982 நல்ல பாடல்..நல்ல வரிகள்..அவ்வளவுதான்!
தமிழ இலக்கணத்தை மீறாமல் பாடல் வரிகள் உள்ளன இது அமரனின் கைவண்ணம்
பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாள் திறவாய்
ஹ்ம்ம் ம்ம்ம்
நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
ஹ்ம்ம் ம்ம்ம்
திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…
பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
Bro super
NaLla aapasa padal super
நன்றி சகோதரா...
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்
மாலை சூடும் மங்கையிடம் இல்ல மாலை சூடும் அந்நேரம் மங்கள வாழ்தொலி கீதம்...
திருமதி உமா ரமணன் அவர்களை அஞ்சலிக்கிறேன் 🌹🙏
உங்கள் இனிய இசையை எங்களுடன் விட்டுச்சென்று பிரபஞ்ச சக்தியில் சங்கமித்தீர்கள்❤
பெரிய நடிகரோ, சின்ன நடிகரோ, பெரிய இயக்குனரோ சின்ன இயக்குனரோ எல்லோருக்கும் நல்ல பாடல்களை முடிந்தளவு கொடுக்கும் நம்ம இசை ஞானி.
உண்மை
This movie director is Bharathiraja dealing umemployment music by Ilayaraja - Musical Hit - Boxoffice Flop
Same time release movie Varumaiyin Niram Sivappu dealing umemployment by K.Balachander, music by MSV - Musical Hit - Boxoffice Hit
@@munabas7368 . . .v.m v.. mm km99mn
@@munabas7368 நிழல்கள் படம் தோல்வி அடைந்ததற்கு ராஜாவா காரணம்? இன்றும் அப்படம் நினைவில் கொள்ளப்படுவதற்கு அவரது பாடல்கள் தான் காரணம்.
@@tamilanjack2829 I have mentioned it as Musical Hit - One of my favourite album. Also it is classic movie. I just like to highlight musical hit cannot make a film hit but it supports.
In western musical albums produced, performed and released by performers.
It's not the case in India, musical hits are only movie albums and produced, directed, performed - composing creativity for mostly director's situation makes the core of the music album. Completely composer cannot own the song as wholesome. This for all movie composers.
பழைய படங்களில் புல்லாங்குழல் இசை இல்லாமல் இருக்காது இனிமை ஆரவாரம் இல்லாத இசை நெஞ்சை தொடும் பாடல்
காலத்தை வென்று நிற்கும் இசைஞானியின் காவியப் பாடல்!
Super
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை, இதுதான் இசைஞானின் இசையின் வசியமா
Yes
ஆமாம். நானும் இப்படித்தான்.
nanumthan sago
Yes
பொய் பேசாதீங்க பாஸ்
ஆஹா இசைக்கெனபிறந்த உமா ரமணன் நம்மிடையே இல்லையே.இநதப்பாடலை உலகம் உள்ளவரை மனித ஜீவராசிகள் கேட்டு ரசிப்பார்கள்
இசைஞானி இசைக்கு இந்த இந்த உலகத்தில் ஈடு இணை எதுவும் இல்லை
உண்மை
இன்று 2023 இப்படி ஒரு பாடல் எந்த சினிமாவிலும் கேட்க முடியாது.
இன்றைய பாடல் ஸஜஜஸஸஸஸஸவஜஸழபவபவவபவவவபநநமஙஙபபநநப இப்படி உள்ளது. சரியா👍
Ssssssssss pa
Ps1 and 2:kettu paru badu
@@ChandraSekar-pc6uhketaachu lyrics puriyala
இதுப்போண்ற பாடல் எப்போதும் கேட்க முடியாது.❤
இதையேதான் " மன்மத லீலையை வென்றார் உண்டோ" தியாகராஜ பாகவதர் பாடல் kettavargal சொல்வார்கள்
இந்தப் பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்ரவர்த்தி (இவர் பழம் பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் மகன்) மற்றும் உமா ரமணன் ஆகியோர். இந்தப் பாடலின் வெற்றிக்கு அவர்களின் அருமையான குரலும் காரணம்.
தீபன் சக்ரவர்த்திக்கு தமிழ்நாட்டின் சிறந்த பாடகர் விருதை பெற்றுத்தந்த பாடல்.
Nice message sir..awesome
Voice excellent
Good explanation
Very nice and excellent voice
1990, 2000 பாட்டெல்லாம் கேட்க ஆசைப்பட்டு நகர நினைத்தால் இப்படிப் பட்ட பாடல்கள் பல நம்மை நகர விடாமல் பண்ணுதே. நம்மை அடிமையாக்கிப் போடுகிறதே.
Yes
உண்மை தான்...
😢
உண்மை, உண்மை
@@murugavelmuthu66960⁰⁰⁰
இசைஞானியின் பாடலை மனம்குளிர கேட்பதே என் பிறவி பயன்....
இன்று வரை பல தடவைகள் இந்த பாலை கேட்டு மகிழ்ந்துள்ளேன்.... அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஆழ்ந்த இரங்கல் 🙏✨✨✨ உமா ரமணன் 😌😌😌 இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும் 🙏🌹🙏
செவியில் நுழைந்து ...இதையம் நிறைந்து......உயிரில் கழந்த இசையே.......🎵 🎵🎵🎸 🎸....
உயிரில் கலந்த...
7zaazza****
இந்த பாடலை எத்தனை வருடமாக எத்தனை தடவை கேட்டாலும் உயிரரோட்ட இருக்கு.
தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய பல பாடகர்களில் உமா ரமணன் அவர்கள் மட்டும் விதிவிலக்கா? 😞
தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இவர்களின் குரலில், இசைஞானி இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
வாழ்க கங்கை அமரனின் புகழ் அவர் பெயரைப்போல அமரத்துவமாக
மயிருமுத்தை வளர்த்ததுக்கு சகோதரனை வளர்திருக்கலாம்
கதா நாயகியின் பார்வை வீச்சு காதலை சொல்கிறது
@2:54, இதற்கு பெயர் தான் உண்மையில் மஞ்சள் குளித்தல்,
மஞ்சள் புடவை நீருக்குள் மூழ்கி வெள்ளை புடவையாக மாறிய அதிசயம் 😊
😁😁💗👍
அதிசயம்.... இவ்வளவு உண்ணிப்பா கவனித்து இருக்கிங்க
கடவுள் பெரும் மேதைகளை ஒரே வீட்டில் பிறக்கவைத்துவிட்டார்! இசைஞானியும் அவர் தம்பி கங்கைஅமரனும்!!!
Melody melody
Mr Bill Gates Sir is very handsome
And yuvan bavatharani total
மனதை மயிலிறகால் வருடும் ஒரு பாடல்.
இரவில் சாப்பிட்டு முன் கேட்டுகொண்டே சாப்பிடும் பழக்கம்.... இந்த காவிய வரிகளை❤❤❤2024.
எத்தனை முறை கேட்டாலும் கேட்க சலிக்காது பார்க்க நளின நடனமும் நளின நடையும் முகபாவமும் அருமை மிகவும் அருமை ♥️ 👌 👌 👌 👌 👌 👌 அருமையான இனிய பாடல் வரிகள் எழுதிய கங்கை அமரனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌹🤝👌👌🤝🤝🤝🤝🤝
அருமையான பாடல் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா அவர்களின் இனிமையான இசை மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌👌
இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
ஞானி அவர்கள் வயலின் அதில் ஏதோ செய்கிறார் நான் அமைதியாய் உட்கார்ந்து விடுகிறேன்
இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.
என்றும் நினைவில் நீங்காத பாடல் ❤️❤️❤️❤️❤️
இசைஞானி தனது இசையால் இதயத்தை இயக்குகிறார்... இந்த உலகத்தில் சஞ்சரிக்கும் போது.... இவ்வுலக கஷ்ட நஷ்டங்கள்.... மறந்து போகிறது ❤❤❤
இப்போதெல்லாம் flute, guitar,
Violin போன்ற கருவிகளை keyboard லேயே வாசித்து விடுகிறார்கள். அதனால் பாடலில் உயிரோட்டம் குறைந்துவிடுகிறது.
கண்ணை மூடி கேக்கும் பாடல் ❤🌹🌹❤💞💞👄
கங்கை அமரன் ஐயா அவர்கள் இயற்றிய பாடல் வரிகள் என்செவிகதவை திறந்து தேன் 🍯 போல் பாய்கிறது
இது வைரமுத்துவின் முதல் திரைப்பாடல்
@@mercyprakash7081அப்ப "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடலை இயற்றியவர் யார்.
Kannathasan
@@selvakumarkumar1669adichivudu adichivudu
இந்த பாடலை வார்த்தை இல்லாமல் instrumental ல் கேட்ப்பது தனி சுகம்
No one can beat the Ilayaraaja music in this world forever. It touches our inner (soul) feelings and gives Bliss, that's the speciality of his music.
மனசு இறுக்கமா இருக்கும் போதும் கஸ்ட்மா இருக்கும் போது இந்த பாட்ட கேட்டால் என்னமோ மனசு லேசாகுது இசைஞானி வாழ்க பல்லாண்டு
🎻🙌🤗
That is speciality of cute Raja❤️
Sssss
Sssssssssssssssssss
Yes
இதுவும் காதல் பாடல் தான்
என்னை பாடல் வரிகளால் கொன்ற பாடல் இது வாழ்கையில் இது போன்ற மறு படைப்பை நான் கேட்பேனோ வாழ்கையில் கடவுளின் கைகளில்
எல்லா தலைமுறைக்கும் ஆவணப் படுத்தப் பட்ட பாடல்கள்
இந்த பாடலை இன்று இளையராஜாவே நினைத்தாலும் தரமுடியாது
என்ன சொல்ல வர.....
NO ONE TAKE TIME BACK
அது தான் ஏற்கனவே குடுத்துட்டாரே மறுபடியும் எதுக்கு? ஏதாவது உளறி வெப்போம். அதானே?
s
Kirukkanaya nee
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறீங்க ஒரு like போடுங்க பாப்போம்
இசைக்காக இறைவனால் படைக்கப்பட்ட இளைய ராஜா
இசை சரஸ்வதி எம் இராஜா ஐய்யா வின் மூலம் இந்த பூலோகத்தில் இசை வடிவில் வந்த தருணம்.......
கடவுள்களும் அப்டேட் ஆகனும் இல்லையா.... இனி இசைக்கு கடவுள் இளையராஜா!!!
உமா அம்மாவின் குரலுக்கு அடிமை நான் ❤️❤️❤️எத்தனை அருமை, அதிசயம், ஆச்சர்யம் ஒரு குரலுக்கு. 🌹🌹🌹
பாடல் மிகவும் அருமை.ராஜாவைத்தவிர வேறு யாராலும் தரமுடியாது. நடிகை ரோகிணியின் அழகு வார்த்தைகளில் சொல்ல முடியாதது.அவ்வளவு எளிமையான அழகு.
She had left the cinema field and now a dance teacher based in California. She had given life to the lyrics and music in the debut film along with Nizhalgal Ravi and Tamil cinema is not lucky to get talented actresses
நடிகையின் பெயர் ராது
The prelude of this song... The interludes... The conversation between veena and flute and violin.... My God... Raja is a maniac...
uma ramanan amma what a mesmerzing voice ma miss u ma ...😭🙏
yarukellam intha paadal uma rammanan paadiyathunu ninaivukuvaruthu....
இது போல ஒரு பாடல் இசை ஞானி இளையராஜா தவிர வேறு யார் போட முடியும்
வரிகளை யார் போடுவது...?
@@selvisuresh3283 வரிகள் தேவை இல்லை . ஒரு tune ஓகே ஆனால் தான் அங்கு கவியனுக்கு வேலை . வரிகளே இல்லாத இளையராஜாவின் NOTHING BUT WIND என்ற இசை ஆல்பம் உண்டு
@@selvisuresh3283 வரிகள் இல்லாத இளையராஜாவின் BGM மட்டும் பல கடைகளில் நீங்கள் கேட்கவில்லையா
வரிகளோ, இசையோ இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது.... மனதிற்க்கு இனிமையாகவும் சுகமாகவும் எதுவாக இருந்தால் என்ன?
@@jegadeeshjega9954 மிகவும் சரியான கருத்து நண்பரே.
Raja sir, am truly tired Of expressing my feelings on the youtube comments section.....you are a gem...... nothing more to say......
இந்த பாடல் நான் பல முறை கேட்டாலும் மீண்டும் கேட்க வைக்கிரது
I will cry always when I am listening to this masterpiece 😍😍raja sir🙏🙏🙏
2025 கேட்க தயாராகும் மக்களே, வாருங்கள்..
Naa sakum vaikkum kooda ketpan bro
@@rahumanramlan9769 சூப்பர் சகோ
எம்-பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பதிவேற்றம்👉அரவிந்த்👫 நீடாமங்கலம்🍀🌿🌴
F-நீரோட்டம் M-ம்ம்
F-போலோடும் M-ம்ம்ம்
F-ஆசைக் கனவுகள் ஊர்கோலம் M-ம்ம்_ம்ம்ம்
F-ஆகாகா M-ம்ம்
F-ஆனந்தம் M-ம்ம்
F-ஆடும் நினைவுகள் பூவாகும் M-ம்ம்ம்__ம்ம்ம்
எம்-காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்ம்
F- பூங்கதவே M-ம்ம்ம்
தாழ் திறவாய் M-ம்ம்ம்
எம்-பூவாய் பெண் பாவாய்
🎆🎇🎉🎊🎍🎏🎌🎐🎋
பதிவேற்றம்👉அரவிந்த்👫 நீடாமங்கலம்🍀🌿🌴
M-திருத் தேகம் F-ம்ம்
எம்-எனக்காகவும் எஃப்-ம்ம்
எம்தேனில் நனைந்தது என் உள்ளம் F-ம்ம்ம்__ம்ம்
M-பொன்னாரம் F-ம்ம்
M-பூவாழை F-ம்ம்
எம்-ஆடும் தோரணம் எங்கெங்கும் F-ம்ம்ம்__ம்ம்
F-மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்ம்
எம்-பூங்கதவே தாழ் திறவாய்
F-பூங்கதவே தாழ் திறவாய்
எம்-பூவாய் பெண் பாவாய்
F-பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
F-ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எம்-ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி🙏😆😂🤣
இலக்கிய நயத்தோடு அமைந்துள்ள அருமையான பாடல்
While Mozart came from a small alpine town Salzburg, our very own Raja hailing from Pannayapuram, present day Theni district creating magical compositions lasting generations. What a beautiful composition ❤
கங்கை அமரன் சார் எழுதிய பாடல்கள் அனைத்தும் இளையராஜாவுக்கு மட்டுமே பெருமை சேர்க்கிறது பாவம் கங்கை அமரன் சார்
Romba உலராதீங்க, கண்ணதாசன், வாலி எழுதி ராஜா sir பாட்டு போடலையா,
வைரமுத்து எழுதிய பாடல் இது
@@thirumalnatarajan7441கங்கை அமரன் சார் எழுதிய பாடல் இது
@@thirumalnatarajan7441 இந்த படத்தில் முதலில் வரும் பாடல் இது ஒரு பொன் மாலை பொழுது பாடல் வைரமுத்து எழுதியது பிறகு பூங்கதாவே பாடல் கங்கை அமரன் சார் எழுதிய பாடல்
What a great song.
Muzik director, lyric writer, male female singer, violin, veenai, etc
இந்த பாடலில் நடித்துள்ள நடிகை எத்தனை அழகு!!!
இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ?
Unmai...oruvar vaazhum alayam padathil kooda varuvaar.... Naan side adicha aunty kalil oruvar
@@skynila2132 என் இனமடா நீ😀😂
@@kmchidambaramsnkmcsn8882 kakaka po... 😄😄😄... Naan sarojadevi, vennira aadai nirmala, jeyalalitha, kanjana vai kooda side adichavan thaan... Aanal thamanna fan aakum naan.... Pengal enru vanthaal thiyagarajar kaalathu aalungalayum vida maaten... Tr rajakumari.... Pothuva serial paarka pidikathu... Aanal enna nadakuthu nu theriyama serial kujiligalai mattum paarkum jollu mannan naan
இவர் நடிகை சோபானாவின் அத்தை.
இசை கடவுள் இளையராஜா
இந்தப் பாடல் நான் காளையார்கோவிலில் முதன்முதலில் டீக்கடையில் கேட்டேன் அப்பொழுதே வியந்தேன் அருமையான பாடல்
மிருதங்கம் சக்கரவர்த்தி இசைஞானியின் இந்த பாடலை இப்ப யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் 90ks ஆனால் இந்த பாடலை தினமும் விரும்பி கேட்பேன்
There can be 1000 composers but none to Raja sir.🙏🙏
Absolutely
இசைஞானி அய்யா ஒரு இசை தெய்வம். இப்படிப்பட்ட படைப்புகள் வாரி வரமாய் வள்ளலாய் வழங்குவதால் அவர் நிச்சயமாக இசையின் இறைவனே.
கங்கை அமரன் எழுதிய பாடல் இது
தேனினும் இனிய தீஞ்சுவைப்பாடல்
தமிழினத்தின் என்றுமே மறக்க முடியாத குரல் அய்யா இளைய ராஜா வின் குரல் தான்....
❤
பிடிச்ச பாட்டு.. இயற்கையான கதையும்,நடிப்பும்,காதலும்,இயக்கமும் ஒரு சேர அமைஞ்சி,வரிகள்,குரல்கள் பின்னாடி இசை வந்த அழகு இது 😍
Negative climax fashion nu irunta matiri aanatula miss aachi 😓
அப்புறம் KS Ravikumar,Vikraman வந்து மாத்துற வரைக்கும் வாழ்றதுக்கு நம்பிக்கை சொல்லுங்கடான்னா மாட்டான்னுடாங்க இருக்கிற நாட்டு பிரரச்சனைல வேற 😏
நல்லதே நடக்கும் 😃🌟✨🌏🙌
07.03.2023 03:06 am ist
How does IR come up with the second set of violins at 2:42-2:44. Amazing creativity
திருமதி உமா ரமணன் பாடிய பாடல்கள் அனைத்துமே அருமை.
There was no one like Raja...
There is no one like Raja...
There will be no one like Raja...
Pazhya patto patto thanga super ❤❤❤❤
அந்த பூங்கதவு என்ன என்று எனக்கு தெரியும்
This song is irresistible! Antha veenai and violin part... Wow!!
எதோ ஒரு வலி ஏற்படுவதால்...❤❤❤❤❤❤
இசை
இயக்கம்
வரிகள்..
மூன்று பேரும் வித்தை காட்டிய வசந்தகாலம்..
பந்தயத்தில் முந்துவது ராஜாவின் இசைத்தேர் தான்..
Paadiyavargal?
இதில் இயக்கம்,நடிப்பு,கதை,காதலுக்கு தான் பாடகர்கள் வரிகளவருகிறார்கள்,இசை பின்னுக்கு வருகிறது..
இசையை,வரியை சரியாக கவனிக்காமல்/கேட்க முடிய்லைன்னாலும் நடிப்பு,இயக்கம் தான் ஒன்றி இருந்தது பாடகர்களின் குரலோடு 😃🌟✨🌏🙌
07.03.2023 02:43 am ist
My Mother's reached her eternal abode during Covid. If there is an advanced telecom tech coming soon, that can telecast favourite songs to the people in their 'after-life', i would certainly dedicate this song to my Mother. This is certainly one of her favourites and so is mine.
👍And so is mine👍 fine comment.
So is my mine and millions, RIP your mother Sir.
Ilayaraja - ULTIMATE. SIR GODS WORK FOR U
There is interlude mmmmm which makes it almost sound like breathless
❤ Beautiful song ❤
Greatest prelude of all time❤
இசைஞானி இளையராஜா அவர்களின் தம்பி திரு. கங்கை அமரன் அவர்கள் எழுதிய பாடல் இது.
கூவின பூங்குயில்...
உமா ரமணனுக்கு அஞ்சலி.
பாடல் பதிவின்போது 14 டேக்குகள் எடுத்துக்கொண்டது அந்தப் பாடல். குரலுக்காக அல்ல. வாத்தியங்களின்
ஒருங்கிணைப்புக்காக. பின்மதியத்தில் தொடங்கிய பாடல் பதிவு நள்ளிரவில் முடிந்தது. யாரையும் அதிகம் வாய்விட்டுப் பாராட்டாத இளையராஜா, கார் வரை வந்து அந்தப் பாடலை நன்றாகப் பாடியதாகச் சொல்கிறார். அந்தப் பாடல்‘பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த ராகம்'. பாடியவர் உமா ரமணன்.
நவம்பர் 26, 1952-ல் மத்தியப் பிரதேசத்தில் பிறந்த உமா வெங்கட்ராமன், தந்தையின் பணி மாற்றம் காரணமாக மதுரைக்குக் குடும்பத்துடன் குடிபெயர, அங்கே சங்கீதம் கற்கிறார். பின்னர் சென்னை வந்தடைகிறார். இளவயதில் தந்தை இறந்ததால், குடும்பத்துக்கு
விருப்பமில்லை என்கிறபோதிலும் வருவாய்க்காக மெல்லிசைக் கச்சேரிகளில் பாட வேண்டிய சூழல். பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஏ.வி.ரமணனின் 'மியூசியானோ' குழுவில் சேர்ந்து நான்கு வருடங்கள் மேடைகளில் பாடுகிறார். முதலில் தோழமையும், பின்னர் காதலுமாக மாறி ஏ.வி.ரமணனைக் கரம் பற்றி உமா வெங்கட்ராமன், உமா ரமணன் ஆகிறார்.
இந்தி மற்றும் தமிழில் கணவருடன் திரைப்பாடல்கள் பாடி அறிமுகமானாலும் 1980-ல் வெளிவந்த 'மூடுபனி'யில் ஒரு நிமிடத் தாலாட்டு பாடலாக இடம்பெற்ற 'ஆசை ராஜா' முதல் அடையாளம் தருகிறது. இரண்டாவதாக அதே ஆண்டில் வெளிவந்த 'நிழல்கள்' வணிக ரீதியாகத் தோல்வியடைந்த போதிலும், தீபன் சக்ரவர்த்தியுடன் இணைந்து பாடிய 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடல் திரையிசையுலகில் இவருக்கு உண்மையாகவே தாழ் திறந்து விட்டது மட்டுமல்ல; வெளிச்ச மும் தந்தது. அதன் பின்னர் சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், டி.ராஜேந்தர் எனப் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடி நிதானமான ஒரு பாதையில் திரையிசைப் பயணம் தொடர்கிறது.
முகத்தில் அதிகம் உணர்ச்சிகள் காட்டாமல், பாவங்கள் காட்டாமல் இளையராஜாவைப் போலவே வெறுமனே வாயசைத்து ஆனால் முழு ஜீவனுடன் பாடுவது உமா ரமணனின் தனித்த பாடும் முறை. 1980-களில் மிக மெதுவாகவே தொடங்கி 1995-ல் 'பாட்டுப் பாடவா' திரைப்படம் வரை தொடர்ந்து ஒலித்தது, ஜீவனை உருக்கி வார்த்த இவரின் குரல்.
காலம், ரசனை மாற்றத்தின் தொடக்கமாகப் புத்தாயிரம் பிறந்தது. 2000-க்குப் பிறகு சில பாடல்கள் பாடினாலும் 2005-ல் மணி ஷர்மாவின் இசையில் ஒரு பாடல் வெளியாகிறது. திருப்பாச்சியில் இடம்பெற்ற 'கண்ணும் கண்ணும் தான்' என்கிற பாடல்தான் அது. மூன்று தசாப்தங்களாகப் பாடும் பெரும் பின்னணி இருக்கிறது. ஆனால், மற்ற சமகாலப் பாடகர்களைப் போல இவர் இன்னும் பெரிய அளவில் பேசப்படாததும் பாடல்கள் கிடைக்கப் பெறாததும் ஒரு குறையே. இந்திய ஆட்சியில் மக்கள் பணி செய்தவர் இவரது
அப்பா. கணவரும், மகனும்
இசையமைப்பாளர்கள். குடும்பமே ஓர் இசைக்குழுவாக இருக்கையில், அமைதியான ஓர் ஓடையைப்போல மேடைக் கச்சேரிகளில் தன் குரலெனும் கோடைத் தென்றலைத் தவழவிட்டதில் நிறைவு கண்டார். குறைவான பாடல்களே என்றாலும் ஜென்ஸியைப் போலவே இவருக்கும் பிரத்யேக ரசிகர்கள் இன்றும் உண்டு.
பட்டியலாக இல்லாமல் புத்தாயிரத் தலைமுறைக்கு இவரை அறிமுகப்படுத்த இந்த 10 திரைப்பாடல்களைக் குறிப்பிடலாம். ‘பூங்கதவே தாழ் திறவாய்' (நிழல்கள்), 'ஆனந்த ராகம்' (பன்னீர் புஷ்பங்கள்),
'ஓ உன்னாலே நான்' (என்னருகே நீயிருந்தால்), 'பூபாளம் இசைக்கும்' (தூறல் நின்னு போச்சு), 'வெள்ளி நிலவே (நந்தவனத் தேரு),'ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்' (மகாநதி), 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே' (நண்டு), 'நீ பாதி நான் பாதி' (கேளடி கண்மணி), 'கண்ணும் கண்ணும் தான்' (திருப்பாச்சி), 'ஆகாய
வெண்ணிலாவே'
(அரங்கேற்ற வேளை).
'ஜான் விக்' திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், "காரணமென்றோ, மோனையென்றோ
நிஜ வாழ்வில் எதுவுமில்லை". இன்னும் அதிகம் கவனம் பெற்றிருக்க வேண்டிய எல்லாத் தகுதிகளும் இருந்தும் அந்த உயரத்தை அடையாமல் செய்வது வாழ்வின் எதிர்பாராமைகளில் ஒன்று. தன்னை முன்னிறுத்தாமல் காலத்தின் கைகளில் வாழ்வை ஒப்படைத்து அதன் போக்கில் வாழ்ந்து முடித்த உன்னதமான கலைஞர்களில் பிரத்யேகக் குரல் வளம் கொண்ட உமா ரமணனும் ஒருவர்.
காலத்தை உறைய வைக்கும் இரவு நேரப் பண்பலை வானொலி மட்டும் இன்னமும் இவரது பாடல்களைக் காற்றில் பரப்பி, அர்த்தமற்ற வாழ்வை உன்னதமாக்குகிறது. காற்று வீசும் வரை உமா ரமணனின்
குரலும் நம்மைத் தாலாட்டும்.
-டோட்டோ
-நன்றி "இந்து தமிழ்"
10.5.2024
என் உயிரினில் கலந்த பாடல் ❤
நான் கேட்கிறேன். My favorite song 🎵
தமிழ் பாட்டில் #பூங்கதவை_தாழ்திறந்தவர்
#உமாரமணன்_காலமானார் #ॐ_சாந்தி
Yes BRO 🎉🎉🎉🎉🎉
RIP உமா ரமணன் 💔
Raja had the guts to change suddenly from one theme of music to a entirely different one between the Saranams
அனிருத் தை - ஒரு பரத நாட்டியத்திற்கு உண்டான கர்நாடிக் இசையில் பாடல் போடச் சொல்லுங்கள் - பார்ப்போம். தமிழ் சினிமா இசைக்கு சமாதி கட்ட வந்தவன் அனிருத்
இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் தான் வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படமும் வெளியானது. அதற்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் வி இசையமைத்திருந்தார். இரண்டு திரைப்படங்களின் கதையும் ஒன்றேதான். இன்னும் சொல்லப்போனால் என்னைப் பொறுத்தவரை நிழல்கள் திரைப்படம் சிறந்ததாக இருந்தது. ஆனால் மெல்லிசை மன்னரின் இசையில் 'தந்தனத் தத்தன்ன' பாடல் உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் பாடல்களும் சூப்பர் ஹிட் என்பதனால் வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படம் அபாரமாக ஓடியது.
கமல் ஶ்ரீதேவியும் ஒரு காரணம்.
Nizhalgal songs were also super hits. Padam dhan odaama poiduchu.
BTW, Sippi irukudhu muthum irukudhu is such a lovely song. One of my favorite songs of MSV.
இந்தமாதிரி பட்ட கேட்டா இறந்தவனுக்கும் உயிர் வந்துரும் என் உயிர் ராசாவே ஆன நான் ஷாகும் போது உங்களோட பட்டோட சாவேன்