Dmk spokesperson Vetrikondan Speech About Jayalalitha | வெற்றிகொண்டான் பேச்சு | nd pages

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2020
  • கழக உடன்பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
    நமது ND Pages சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால்,நமது ND Pages சேனலில் வெளியிடப்படும் வீடியோக்கள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க,நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.அதற்கு கீழே உள்ள (Subscribe Link) லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.நன்றி. / @dmk_pages
    Dmk spokesperson Vetrikondan Speech About Jayalalitha.dmk vetrikondan speech at chennai dmk public meeting.
    வெற்றிகொண்டான் மறைவிற்கு கலைஞரின் கவிதை அஞ்சலி
    காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து கழகக் குரலை கர்ச்சித்துக் கொண்டிருந்த சிங்கம் ஒன்று தலை சாய்ந்து விட்டது ஆம்; நமது வெற்றிகொண்டானை சாவு பற்றிக் கொண்டு விட்டது தம்பீ வெற்றி, உன்னைத் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதற்கு தொகை தொகையாய் தோழர்கள் இருந்தாலும் அவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து எட்டாத தொலைவுக்கு ஏனய்யா சென்றுவிட்டாய்? அன்பைப் பிழிந்து கொடுக்க உன் அண்ணன் நானிருக்க ஆயிரம் ஆயிரம் என் தம்பிமார்கள் உன் வருகைக்காக காத்திருக்க வண்ணமிகு சொல்லடுக்கால் சுயமரியாதை எண்ணங்களை தொகுத்தளித்து தோகை மயிலாக ஆடத் தொடங்கி தொகை தொகையாய் பகை வீழ்த்தும் போர் வாட்களாக நீயொருவன் மின்னிடுவாயே சொல்லழகைக் கணையாக பூட்டி மேடையில் நிமிர்ந்து நிற்கும் உன் வில்லழகைக் கண்டு நான் வியந்து போற்றிய காலமெல்லாம் இனி வீண்தானோ? வார்த்தை சித்தனே வான் நடுங்க முழக்கமிடும் ஆண் சிங்கமே எம் உயிரெல்லாம் நடுநடுங்க எப்படித்தான் அடங்கிற்றோ உன் உயிர்? நீ மறைந்துவிட்டதாக சொல்கிறார்கள் நான் நம்பவில்லை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உன் எக்காளக் குரல் எதிரொலித்துக் கொண்டிருப்பதை கேட்கும்போது மறைந்துவிட்டாய் நீ என்பது நம்ப முடியாத வார்த்தைக் கோவை இருக்கின்றாய் நீ என்றைக்கும் கழகத்தோடு அண்ணாவோடு அவர்தம் தம்பியராம் எங்களோடு.
    முதல்வர் கருணாநிதியையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து அதிமுக தரப்பிலோ அல்லது பிறரோ பேசும்போது அதற்கு உடனுக்குடன் சூடான பதிலடிகளை திமுக மேடைகளில் அளிப்பார் வெற்றிகொண்டான். மிகவும் எளிமையானவர், சிபாரிசுக்காக கட்சித் தலைமையை அணுகாதவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சிறந்த பேச்சாளரான இவர், ஒருமுறை திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசியதை கேட்ட முதல்வர் கருணாநிதி தமது நிறைவு உரையில், வெற்றி கொண்டான் என்னைப் பேச்சிலே வெற்றி கொண்டான் என்று புகழாரம் சூட்டினார்.
    அண்ணாவின் மேடைப் பேச்சும், கருணாநிதியின் தமிழ் பேச்சும் இவரை பெரிதும் கவர்ந்தது. அதன் விளைவாக தி.மு.க.வில் சேர்ந்து பணியாற்றினார்.
    தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்குகொண்டு பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வெற்றிகொண்டானுக்கு திமுக சார்பில் வழங்கப்படும் கலைஞர் விருது கடந்த 1992ம் ஆண்டு வழங்கப்பட்டது.
    சிறந்த பேச்சாளரான வெற்றிகொண்டான், திமுக மேடைகளை அனல் பறக்க வைத்துக் கொண்டிருந்தவர். அதிமுகவையும், ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக விமர்சிப்பவர். மிகத் தீவிரமான கருணாநிதி பக்தர். திமுகவிலிருந்து வைகோ வெளியேறியபோது அவரை கடுமையாக விமர்சித்து மேடை தோறும் பேசினார். இதனால் திமுகவினர் வைகோ என்ற இழப்பை மறந்து, வெகோ என்று வெற்றிகொண்டானை அழைக்கும் அளவுக்கு அவரது பேச்சுக்கள் அப்போது இருந்தன.
    மிசா காலத்தில் திருச்சி சிறையில் ஒரு ஆண்டு தண்டனையை அனுபவித்தவர் வெற்றிகொண்டான். ஆரம்பத்தில் ஜெயங்கொண்டத்தில் அவர் நடத்தி வந்த காபித்தூள் கடை வாசலிலும், காபித்தூள் விற்பனைக்காக செல்லும் பகுதிகளிலும் அங்குள்ள மக்களிடம் தி.மு.க.வின் கொள்கைகளை, அதன் நிலைப்பாடுகளை சுவாரசியமாக விளக்கினார். இக்காலங்களில்தான் ஜெயங்கொண்டம் என்ற ஊரின் பெயரையே வெற்றிகொண்டான் என தமிழாக்கி தன் பெயராகவும் ஆக்கிக்கொண்டார். அவரது பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தி.மு.க. மேடைகளில் மைக் பிடிக்க தொடங்கினார்.
    ‘வெற்றிகொண்டானைப் பார்த்து பலமுறை சிரித்திருக்கிறோம். இப்போது அழ வைத்துவிட்டார்’ என்று சொல்லும் சீனியர் தி.மு.க. தொண்டர்கள் சிலர், வெற்றிகொண்டானின் கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். இப்படி தி.மு.க.வினரிடம் மட்டும் புகழ்பெற்ற வெற்றிகொண்டான் தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்பற்றவர்களிடமும் புகழ்பெற்றது தி.மு.க.வில் இருந்து வைகோ விலக்கப்பட்ட 1993-ம் ஆண்டுக்குப் பிறகுதான். அப்போது வைகோ மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டு தி.மு.க.வின் மீதும், கலைஞரை நோக்கியும் ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறினார். அந்த சமயத்தில் வைகோவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வெற்றிகொண்டானை கலைஞர் மாநிலம் முழுவதும் அனுப்பினார். ம.தி.மு.க.வினர் ‘வைகோ பேசுகிறார்’ என்று கூட்டம் போட்டால், உடனே ‘வெகொ பேசுகிறார்’ என்று தி.மு.க.வினர் கூட்டம் போடுவார்கள். வைகோ தி.மு.க. மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்களைக் கேட்டு நரம்பு துடிக்க கண்ணீர் சிந்தியவர்கள், அந்த குற்றச்சாட்டுக்களுக்கு வெகொ(வெற்றிகொண்டான்) கூறும் பதிலை கேட்டு வயிறு வலிக்க சிரித்துச் செல்வார்கள்.
    #Vetrikondanspeechvideo #vetrikondanspeech #dmkvetrikondan #வெற்றிகொண்டான்பேச்சு #Vetrikondan #vetrikondanspeechpart2 #vetrikondanspeechaudio #vetrikondanspeechonly #வெற்றிகொண்டான் #dmkvetrikondanspeechmp3 #dmkmeeting #kalaignar #mkstalin #dmk #திமுக #karunanidhi #udhayanidhi
    Vetrikondan Speech About Jayalalitha vetrikondan speechVetrikondan வெற்றிகொண்டான் vetrikondanspeech Vetrikondan about Jayalalitha vetrikondan speech part 2 vetrikondan speech only vetrikondan speech video vetrikondan speech video download dmk vetrikondan speech mp3 vetrikondan speech download dmk vetrikondan speech download vetrikondan political speech dmk vetrikondan speech video download vetrikondan speech video vetrikondan old speech வெற்றிகொண்டான் ஸ்பீச்

ความคิดเห็น •