Thirupugazh Vengkalam Panam (thiruchchendhUr)-திருப்புகழ் வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)
ฝัง
- เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2024
- Thirupugazh Vengkalam Panam (thiruchchendhUr)-திருப்புகழ் வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)
#திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #Vengkalam Panam #வெங்காளம் பாணம் #lordshiva #lordshiv #thiruchendur
Written by - Saint Arunagirinadhar
Music Programming and Arranging - Rajaravivarma
Mixing and Mastering - KeerthiVasan (Rogue Wav Records)
Chorus: Chennai vox (Deepan
John vianni
Sudharshan)
Flute : R S Vikram
Video editing and Animation - RamKumar +919791529964
Vocals - Venkatesan Thirunaukkarasu Produced by - Yaazh Music
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com)
Produced by - Yaazh Music
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே.
vengA LampA NanjcEl kaNpAl
menpA kanjcoR ...... kuyilmAlai
menkE canthA nenRE koNdAr
menRO LonRap ...... poruLthEdi
vangA LanjcO nanjcee nampOy
vanpE thunbap ...... padalAmO
maindhA runthOL mainthA anthA
vanthE yinthap ...... pozhuthALvAy
kongkAr painthE nuNdE vaNdAr
kunRAL kongkaik ...... kiniyOnE
kunRO dunjcU zhampE zhunjcU
rumpOY mangkap ...... porukOpA
kangkA LanjcEr moympA ranpAr
kanRE vumpark ...... korunAthA
kampUr cinthAr thenpAl vanthAy
kanthA centhiR ...... perumALE. - เพลง
இல்ல இந்த மனுசன என்ன சொல்றதுன்னு தெரியல. ஒரு காதல் பாட்டுல ஒரு பெண்ணையும் அவள் குணங்களையும் வர்ணிச்சா தப்பில்ல. நம்மாளு பக்தி பாட்டுல அப்படி எழுதியிருக்காரு. ஈராயிர குழவிகளுக்கு மட்டுல 90களின் பிள்ளைகளுக்குமே தெரியாத ஒரு இலக்கியம். சொல்லப் போனா வைரமுத்துவுக்கே வாத்தியாருங்கிற மாதிரி தான் இருக்கும்..
பாருங்க. நம்மாளு முருகா இப்பவே வந்து என்ன வழிநடத்துனு தான் கேட்குறாரு ஆனா மனுசன் அதுல முருகன பத்தி ஒரு நாலுவரி பாடியிருக்காப்ல.
வண்டு சுத்தி வர மாதிரி நல்ல வாசனையான மலர்கள் பூத்திருக்கும் கானகத்துல வாழுற குறமகள் வள்ளியை விரும்பினாய்.
எலும்புகளை தூக்கி அணிகலன்களா மாட்டிக்கிற உலகின் மீது அன்பு கொண்ட சிவனின் கன்றாய் இருக்கிறாய். உன்மீது அன்பு கொண்ட மக்களின் தலைவனாக இருக்கிறாய்.
சங்குகள் நிறைந்த கடலலை மிதக்கும் செந்தூரில் இருக்கிறாய். கொஞ்சமும் சூரன் செஞ்சத எண்ணி ஏழுகடலும் ஐந்து கண்டமும் அழியுற மாதிரி கோபப்படுகிறாய்.
எல்லாம் சரிப்பா . இதுக்கெல்லாம் நடுவுல என்னையும் நீதான் வழிநடத்தனும்னு சொன்ன வரைக்கும் அருணகிரிநாதர் ஒரு அடியார் தான்.. ஆனா
சூரியனை மாதிரி நெருப்புகளை வீசி தாக்குற அம்புமாதிரியும். மீன் மாதிரியும் வேல் மாதிரியும் கண்கள் கொண்டு. தேன்கலந்த பாகுமாதிரியும் குயில் மாதிரியும் பேசுகிற. குயில் மாதிரி கரிய மென்மையான கூந்தலை உடைய பெண்ணின் தோள்களை தழுவிடனும் என்பதற்காக வங்காளத்திலும் சோனநகரத்திலும் சீனாவிலும் சென்று பொருள் சேர்த்து துன்ப படாம என்னை முருகா நீ வழிநடத்துங்கிறதுல தான் அருணகிரியார் கவிஞன்..
அத அதே உணர்வுல பாடுன Yaazh Music Venkatesan Thirunaukkarasu அண்ணாக்கு நன்றிகள் தான் சொல்லனும்.
இத இன்னும் விளக்கமா எழுதனும். எழுதலாம்..
அருமையான விளக்கம். நன்றி பவித்ரன்
Engada Meaning kandupidikurathu nu ninachu comment section pathen..Thank you so much. @YaazhMusic-You dont know how much happy impact you are creating in Velan Devotee's life, Thank you so much ! My day starting and ending with Yaazhmusic!
Am a big fan of Anunagirinathar's Tamil புலமை and Yaazh music team's magic. Main singer உருகிப் பாடுவது சிறப்பு. இந்தப்பாடலை இவர்கள் பாடிக் கேட்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்🙏. அநேக திருப்புகழ் பாடல்களில்
பெண்கள் வருணனை பற்றி மட்டும் சில ஆதங்கம். வருணனை மட்டுமல்ல வசையும்தான்! அருணகிரி பெண்ணாசையிலிருந்து மீண்டபின் திருப்புகழ் எழுதியதாகக் கதை. மீண்டிருந்தால் எதற்கு பாதிப் பாடல் வருணனை? மனதைக் கட்டுப்படுத்தாமல் விலைமாதர்களிடம் போய்விட்டு அவர்களை ஏன் எல்லா பாடல்களிலும் வசை பொழிகிறார்? அருணகிரியாரின் இணையற்ற தமிழ்ப்புலமைக்கும் பக்திக்கும் தலை வணங்குகிறேன்.
பிடிக்காத விஷயம்: வள்ளியையும் விட்டு வைக்காமல் வருணிக்கிறார் 😡. தெய்வானை இந்திரன் மகளானதால் அவரை விடுத்து, வள்ளி குறப்பெண்ணானதால் சகட்டு மேனிக்கு வருணிக்கிறார். இதுவும் racial discrimination தானே? வணங்கும் தெய்வத்தின் துணைவியை அப்படி வருணிப்பது தவறல்லவா? இந்தப் பெண் வருணனைகளால்தான் திருப்புகழ் திருமுறைகளில் ஒன்றாகக் கருதப்படவில்லையோ என்பது என் ஐயம். மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் பெண்களை ப் பற்றி எழுதி இருக்கிறாரே. அந்தக் காலத்துப் புலவர்களெல்லாம் அப்படித்தானோ😅
@@ecityquery6203 நல்ல கேள்வி உண்மையில் அவர் வர்ணிப்பதும் ஒரு காரணத்திற்காக . மறுத்து புலம்புவதும் ஒரு காரணத்திற்காக. அழகிய பெண்கள் அருகினில் கிடந்து தோய்ந்தவர்க்கு இதைவிட ஆன்மீகம் ஆனந்தம் என்று உணர்த்த வர்ணிக்கிறார்.
பலப்பல பெண்கள் பலவித இன்பம் கண்டு தேய்ந்து வீணாகும் முன் உண்மை இன்பத்தை அடையும் வழியை காட்டுகிறார்..
வள்ளியை வர்ணிப்பதெல்லாம் ஒருவகை ஆச்சரியத்தின் வெளிப்பாடு தான். நாங்க ஞானம் தேடி தவம் செபம் யோகம் தியானம் தலயாத்திரை இவ்வளவு செய்றோம் இடையில கொஞ்சம் ஒரு அழகான பெண்ணை பார்த்தா மொத்தமா சரிஞ்சிடுறோம். ஆனா நாங்க பாத்த பெண்கள் எல்லாம் தூசுங்கிற அளவு அழகான வள்ளிக் கூட இருந்தே நீ எப்படி இவ்வளவு ஞானியாக குருநாதனாக இருக்கிறாய் ங்கிற ஆச்சரியம் தான் அவர் வள்ளியை வர்ணிக்க காரணம்.
மற்றபடி எங்காளுக்கு பெண்கள் மீதெல்லாம் ஒரு காண்டும் இல்ல . தெய்வானை மீது அவருக்கு பிடிப்பே இல்ல . தமிழ்நாட்ல பல பேருக்கு வள்ளி மேல தான் உரிமை ஜாஸ்தி.
ஒருவகையில மொத்தமா சாமியாரா போய் தொலையாதீங்கடா பேரபசங்களா ங்கிற எண்ணத்துல தான் எங்காளு காமம் சொட்ட சொட்டா எழுதிருப்பாரு..
லிப்லாக் என்ன பெரும். எங்காளு அத எழுதினத பாத்து இனி லிப்லாக்னா இதுதான் தோணனும்ங்கிற ரேஞ்ச்ல இருக்கும்.
அமுதினை மெத்தச் சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால்நறவு அதனொடு தித்தித்த கண்டளாவிய இதழாராய்.
உலகத்திலேயே சுவையானது அமுதம் தான் அமுதினை நிறைய ஊற்றி மாம்பழத்துலயே நல்ல டேஸ்டான பழமா எடுத்து சாறு பிழிஞ்சு பால் சேர்த்து இனிப்பான கற்கண்ட கலந்து சாப்டா என்ன டேஸ்ட் வருமோ அப்படி ஒரு லிப் னு எழுதுறதெல்லாம் விட்டுப்புட்டு ஆண்டியா போங்கடானு சொல்றதுக்கா. அளவோட அனுபவிங்க ஆண்டவனையும் புடிச்சிக்கோங்க.
காமம் தப்பா கிழவான்னு கேள்வி வந்தா நம்ம கந்தனே லவ்வர்பாய் தான அவன் வள்ளிக்கூட பண்ணாத ரொமான்ஸா ன்னு தான் எங்காளு எழுதுறாப்டி. நேரா சொன்னா சாமியாவதுன்னு சொல்லிட்டா அதான் எல்லாத்தையும் கலந்துகட்டு கலக்கிட்டாப்ல.
திருமழபாடி ஆனந்த் அடியேன் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை அருணகிரிநாதர் சாமிகள் திருப்புகழ் அமிர்தம் கேட்க அணைத்து யாழ் இசை நண்பர்கள் வாழ்க வளமுடன் எனது வாழ்க்கை திருப்புகழ் வந்து உங்களால் தான் மற்றும் சம்பந்த குருக்கள் தினமும் திருப்புகழ் பாராயணம் செய்யாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது இனி திருப்புகழ் அமிர்தம் உயிர் பிரியும் வரை
நன்றி ஆனந்த் அவர்களே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்யினும் பெற்றவன் நீ குரு பொறுத்து உன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென்று அன்பாய் பிரியமளித்து
Please upload a live performance video, we want to see your team, like here those who have the same thought.
We are in different parts of the world , bit tough right now for making a live video. Will look for opportunities for us be united in one place to do this 😊
Continue your works guys❤Om Muruga Saranam🙏
🤝
காலையில் வடபழனி முருகன் தரிசனம் பாத்துட்டு வந்து அடுத்து திருப்புகழ் தரிசனம்❤
என் அப்பா அம்மா முருகா❤🙏🥺
🙏🏽🙏🏽🙏🏽
Yaazh team has a special blessings from Murugar and Arunagirinaadhar 🙏🙏☺️☺️
Giving a life and soul to the divine songs written 500 years ago is not a simple thing! Such a wonderful contribution to the Spiritual world! Thank you from the bottom of my heart ❤
Thank you Sister 🙏🏽🙏🏽
Unga videos parthu murugar melaiyum thirupugazh melaiyum paithiyamayitten brother unga videos parthu thirupugazh 3 songs manapaadam pannirukken
Wow 🤩 super 👌
ஊன் உருகி உள்ளம் உருகி...... அப்பா முருகா என்றதும் உருகுதே மனம்..... அய்யா yazh music கண்ணீர் பெருகுகிறது ....
🙏🏽🙏🏽🙏🏽
மெய் சிலிர்த்தது, அனைத்து பாடல்களும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன், உங்கள் பாடல் அனைத்தும் எங்களுக்கு கிடைத்த வரம். தமிழின் சுவையை ருசிக்க வைத்ததற்கு நன்றி.
நன்றி நண்பரே 🙏🏽🙏🏽
அருமை அருமை தொடரட்டும் தங்கள் திருப்புகழ் பாடல் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Congratulations yaazh music keep rocking because of you so many people started chanting thirupugal god bless u
Thank you 🙏🏽
மங்கைகளின் மோகத்தை தவிர்த்து முருகனின் திருவடியை அடைய விளக்கத்துடன் அற்புதமான திருப்புகழ்👌
கேட்க கேட்க என்ன இனிமை. 🙏🏻🙏🏻🙏🏻
அப்பப்பா அருணகிரிநாதரும் முருகப் பெருமானும் மெய்சிலிர்த்திருப்பர்.வாழ்க வளமுடன் யாழ் மியூசிக்
I wish that too 🙏🏽🙏🏽
ஓம் முருகா
திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் சத்தியமான உண்மை 🙏🙏🙏
இந்த பாடலின் இசை கோர்வை என்னமோபண்ணுகிறதுஆஹ..ஆஹா..ஆஹா.. அற்புதம் அற்புதம் அதி அற்புதம்..
அருமை அருமை கண்ணுகும் காதுகும் திகட்டாத தேன்.
திருப்புகழ் பொருள் உணர்ந்து பாடல் கேட்டு மனதில் பதிய பதிய, முன்பு திரைப்பட முருகன் பக்தி பாடல்கள் கேட்டு ரசித்த நான் இன்று அதை மறந்து விட்டேன்.
ஆனால் பக்தி என் முருகோனின் மீதும் அன்பு என் தமிழின் மீதும் பெருகுகிறது.❤
நன்றி yaazh music. Pls continue upload all thiruppugal songs.
நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
ஓம் சரவண பவ🙏🏻🙏🙏
அருணகிரிநாதர் சாமிகள் முருகனிடம் மக்களுக்கு முறையிடுவது தெளிவாக உள்ளது
திருப்புகழ் புரட்சி அனைத்து முருகன் அடியார் திருப்புகழ் அமிர்தம் யாழ் இசை நண்பர்கள்யுடன் இணைந்து அனைத்து பாடல்களையும் இசை நாடகம் வடிவில் அமைக்கவேண்டும் இனி பிறந்த குழந்தை கூட திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும் நம் வீட்டில் கட்டாயம் திருப்புகழ் கேட்க வேண்டும் யாழ் இசை நண்பரே நான் தயாராக இருக்கிறேன் என்னால் முடிந்த உதவிகளை செய்ய வருகிறேன்
நன்றி ஆனந்த், கண்டிப்பாக நாம் அனைவரும் சேர்ந்தால் விரைவாக பாடல்கள் உருவாக்கலாம் , நீங்கள் onlyvocalmusic@gmail.com தொடர்பு கொள்ளுங்கள் , நாம் பேசலாம்
Wounderful devotional work😊❤.. Thank you so much for the blissful morning, Yaazh team....
Om Saravana bava🙏🙏🙏
நன்றி
OM SARVANA BHAVAYA NAMAHA OM SKANDAYAA NAMAHA OM SHANMIKHAYA SWAMEYA NAMAHA NAMO NAMAHA NAMO NAMO NAMO NAMO NAMO NAMO NAMO NAMO NAMAHA NAMO NAMO NAMO NAMO NAMO.
Vetrivel muruganuku arokara ❤❤
Awesome sir thanks. சத்தியமாவது சரவணபவவே🙏
அருமை, பணி சிறக்கட்டும் 🎉
முந்து தமிழ் மாலை கோடி கோடி திருப்புகழ் பாடுங்கள் ஐயா
Anna engal oor Redhills Padiyanallur sakthivel murugar kovilil dhinamum ungal padalai paduven anna.
🙏🏽🙏🏽
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
Wt a divine job.. Yaazh team.. Hatts off u.. 🙏🙏🙏 murugar alwys blessed u..
அருமை ஐயா உணர்வானவை உள்ளம் வென்றவை வெற்றிவேல் வீரவேல்👌👌👌🪷🪷🪷🦚🦚🦚🦚🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
I love the song ❤🙏
யாழ் இசை நண்பர்கள் நாம் திருப்புகழ் அமிர்தம் அனைத்து பாடலை துசி தட்டி துக்கவோண்டும் நம் இறக்கும் போது அனைத்து பாடல்களையும் இசை நாடக வடிவில் அமைந்துள்ளது என்று கூறவும் வேண்டும் ஐயா என்னால் இயன்ற அளவு உதவிக்கு தாயார்
❤️🤙✨🤙Big fan bruh so good
குன்ற குறவர்கள் சார்பாக ❤️ வாழ்த்துகள் ❤️
Arrputham Senthil Muruga 🙏🙏 Senthura
🙏🏻 vetrivel murugan ki arohara
Tears rolling down ❤ God bless you Yazh music & Team
Thank you 🙏🏽
அருமை இறுதி வரிகளில் கண்ணேரே வந்துவிட்டது.....மீண்டும் மீண்டும் கேட்க மனம் ஏங்குகிறது😍😍😍😍😍😍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎵❤️
Thanks
Thank you
முருகா சரணம் 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அரோகரா 🙏🙏🙏
Next karur thirzupuzgal upload pannunga kind request
Super 👍. Tq so much team. God bless you 🙏🙏🙏. God bless us 🙏🙏🙏
🙏🏽🙏🏽
அருமை அருமை மிக அருமை❤ சேயோன் என் செவியில் தவழ்கிறான்🦚🎶🙏🐓
🙏
அருமை அண்ணா 🦚🙏🦚
திருமண திருப்புகழ்
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீ வந்த வாழ்வைக்கண்டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே...
வேண்டுகிறோம்
Wonderful ,muruga❤
🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
Thank you yaazh music❤
... அருணகிரிநாதர் புகழ் வாழ்க
Super❤
Awesome teamwork 👍. Your songs take us to a different world altogether❤️
Thank you 🙏🏽
நாளெல்லாம் இதே மெட்டு மனதில் எதிரொலிக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. இன்னமும் பல திருப்புகழ் பாடல்களை நாங்கள் கேட்க யாழிசை குழுவுக்குக் கந்தன் அருள் புரியட்டும். ஓம் சரவண பவ 🙏
Muruga
Pls vel vagupu
I wish these songs must be used in Tamil cinema
🙏🙏🙏
Waiting for thirupuzhal 786
❣️❣️
❤❤❤
முருகா
Anna vaadhinai adardha thirupughal post pannunga plssss
Om muruga potri potri.....
ஐயா கோடி நன்றிகள்...❤
Om Saravanabhava Om
Listening on repeat mode❤💗💗💗💗💗
👍
Miga arumai
Arumai anna
Mikavum Arumei❤
Muruga.... Thank you yazh.....
மெய் சிலிர்க்க, கண்ணீர் பெருக, உள்ளம் உருக வைக்கும் குரலில் மிகவும் அருமையாக திருப்புகழை வடிவமைத்துள்ளீர்கள்.🥺😭❤🩹🦚💚🙏🏻
🙏🏽🙏🏽🙏🏽
@@YaazhMusic ❤🙏🏻
Pls make vel vaggupu...
Alagan
Your voice is so mesmerizing ❤❤❤ 💚💚
🙏🏽 thank you
I would really like to know are these images of lord Muruga are AI generated? Soo wonderfully presented ... Unmai sollapona anda kumarane naan ippidi da iruppen ani solli vecha mari .. panirkinga
Thanks for noting that point :-). We use the technology to the maximum extend to get the feel of Muruga. Every image takes more than days to get to this point of using in the song and lot more processing done beyond AI too. I have got really valuable feedback from all of you to fine tune the art to the level you are seeing now. I hope we can get better every time 🙏🏽🙏🏽🙏🏽. If possible watch all songs in the 4k TV to enjoy it more !
@@YaazhMusic thanks for ur reply , sure I'm watching and I listen to every single thirupugazh of ur presentation daily and also recommend to many to watch...
Can I ask u a simple question, which technology I mean what application do u use to make such wonderful images
@opinion7111 it depends on what we need , we use multiple ai image generation tools - fire fly , dalle , midjourney you won’t get the same output from the same tool every time , lots of experimentation time is required to get to the desired image in any tools
முருக அடியவர்களுக்கு அறுசுவை விருந்தாக 😍 அமையும்படி காணொளியை சிறப்பாக வடிவமைத்துள்ளீர்கள் 🙏🏻 . உங்கள் குழுவிற்கு இனியவாழ்த்துக்கள்❤💝💐💐 . இறைப்பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻.
நன்றி நண்பரே
@@YaazhMusic 🦚💚❤🙏🏻
Are you all murugan devotees or music lovers who have natural mastery over music and singing ? Truly wondering. Your rendition of these classical poems dedicated by the saint to Him is so beautifully sang by the singers with soul .
We have a deep passion and love for Tamil and Lord Muruga, along with profound respect for the legends Sri Sambandam Gurukkal and Guruji AS Raghavan, whose legacy continues to inspire us. Everything else comes naturally.
@@YaazhMusic thanks for sharing. How could I contribute ,for, I have received so much from your effort ? Any links for me to do monetary transfer? Thanks.
Thanks for the interest , you can use the super thanks button in any of our videos to contribute
@@YaazhMusic Have contributed. It is the least way of me thanking all of you for the amazing effort . The healing , love , peace ,and your videos gave me the confident to learn Thirupugalzh.
It is all about the thought you had to appreciate , nothing in small when you appreciate from the heart. Thank you 🙏🏽, on behalf of all the team members who were involved in this song making !
...... சொல் விளக்கம் .........
வெங்கா ளம்பாணஞ்சேல் கண் ... கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன்
- இவற்றை ஒத்த கண்கள்,
பால் மென்பாகு அஞ்சொற் குயில் ... பால், மென்மையான
வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள்,
மாலை மென் கேசந்தா னென்றே கொண்டார் ... இருளை ஒத்த
மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது
மாதர்களின்
மென்றோள் ஒன்றப் பொருள்தேடி ... மென்மையான தோள்களைத்
தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி,
வங்காளஞ் சோனஞ் சீனம்போய் ... வங்காள நாடு, சோனக நாடு*,
சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய்
வன்பே துன்பப் படலாமோ ... வம்பிலே கொடிய துன்பத்தைப்
படலாமோ?
மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா ... வலிமை மிகுந்த
தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே,
வந்தே யிந்தப் பொழுதாள்வாய் ... வந்து இந்த நொடியிலேயே
என்னை ஆண்டருள்வாயாக.
கொங்கார் பைந்தேனுண்டே வண்டார் ... வாசனை மிக்க
பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும்
குன்றாள் கொங்கைக் கினியோனே ... வள்ளிமலையில்
வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே,
குன்றோடுஞ் சூழ் அம்பேழுஞ் சூரும் ... சூரனுக்கு அரணாக
விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும்,
போய் மங்கப் பொருகோபா ... பட்டு அழியும்படியாக போர்
செய்த சினத்தை உடையவனே,
கங்காளஞ்சேர் மொய்ம்பார் அன்பார் கன்றே ... எலும்புகளும்
கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய
சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய்,
உம்பர்க் கொருநாதா ... தேவர்களின் ஒப்பற்ற தலைவனே,
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் ... சங்குகள் தவழும்
கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே,
கந்தா செந்திற் பெருமாளே. ... கந்தனே, திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Thiruporur thirupugal
Thiruporur thirupugal podunga
Name of the song please
Thimira mamana
Thiruporur kandhaswamy thirupugal thimira mamana madamayen
Ok 👍
Bro kandha purana sollunga bro
வாழ்த்துக்கள்... இப் பாடல் எதற்காக பாடப் பட்டது... என்பதை பதிவிட்டால் எனக்கு கொஞ்சம் புரியும்...
Anna songs wynk music la upload pannunga plss.
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
வெங்கா ளம்பாணஞ்சேல் கண் ... கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன்
- இவற்றை ஒத்த கண்கள்,
பால் மென்பாகு அஞ்சொற் குயில் ... பால், மென்மையான
வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள்,
மாலை மென் கேசந்தா னென்றே கொண்டார் ... இருளை ஒத்த
மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது
மாதர்களின்
மென்றோள் ஒன்றப் பொருள்தேடி ... மென்மையான தோள்களைத்
தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி,
வங்காளஞ் சோனஞ் சீனம்போய் ... வங்காள நாடு, சோனக நாடு*,
சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய்
வன்பே துன்பப் படலாமோ ... வம்பிலே கொடிய துன்பத்தைப்
படலாமோ?
மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா ... வலிமை மிகுந்த
தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே,
வந்தே யிந்தப் பொழுதாள்வாய் ... வந்து இந்த நொடியிலேயே
என்னை ஆண்டருள்வாயாக.
கொங்கார் பைந்தேனுண்டே வண்டார் ... வாசனை மிக்க
பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும்
குன்றாள் கொங்கைக் கினியோனே ... வள்ளிமலையில்
வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே,
குன்றோடுஞ் சூழ் அம்பேழுஞ் சூரும் ... சூரனுக்கு அரணாக
விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும்,
போய் மங்கப் பொருகோபா ... பட்டு அழியும்படியாக போர்
செய்த சினத்தை உடையவனே,
கங்காளஞ்சேர் மொய்ம்பார் அன்பார் கன்றே ... எலும்புகளும்
கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய
சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய்,
உம்பர்க் கொருநாதா ... தேவர்களின் ஒப்பற்ற தலைவனே,
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் ... சங்குகள் தவழும்
கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே,
கந்தா செந்திற் பெருமாளே. ... கந்தனே, திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Thank you for ur efforts
கந்தர் அனுபூதி பாடலை உங்கள் பாணியில் பாடுங்கள்
அருணகிரிநாதர் எப்போ சீனம் போனரு.
பொருள் தேடச் செல்லும் மனிதர்களை திருப்புகழில் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதப்பெருமான் நண்பா ❤
Sorry kandha puranam padal
தயவுசெய்து வார்த்தைகளை தெளிவாகக் காட்டவும். மனப்பாடம் செய்யும் பொழுது கஷ்டமாக உள்ளது.
Ethuku china pathi solranga
Please enable the captions to understand the meaning of the song
✨திருப்புகழ் 102📿
வெங்காளம் பாணம்
(திருச்செந்தூர்)
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே...📿🔥🚩
🙏
Super❤
Thanks
Thanks
Thank you 🙏🏽
@@YaazhMusic I am just falling for this music. Without hearing this song i feel like,I missed something which is part of my life.
Thank you for giving this awesome playlist
Please continue with the great work and once again thanks for your hard work ❤️❤️❤️❤️
@arjunravichandran8371 thank you Arjun for your kind words 🙏🏽