ஊசி முனையில் அம்பாள் தவமிருந்து காட்சியளிக்கும் ஆடித்தபசு திருநாள்| ஆடித்தபசு திருநாள் |Aadithabasu
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- ஆடித்தபசு திருநாள்(Aadithabasu)
ஆடி மாதம் பௌர்ணமி நாளில் ஆடித்தபசு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் 21 தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை மாங்காடு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய சன்னதிகளில் தவக்கோலத்தில் அன்னை கோமதி தரிசனம் தருகிறார். சங்கரன் கோயிலில் ஆடித்தபசு விழா பிரசித்தி பெற்றது.
ஆடித்தபசு திருநாள் வரலாறு:
சிவபெருமான், விஷ்ணு இருவரில் பெரியவர்கள் யார் என்பதை உலகுக்கு உணர்த்த பார்வதி அன்னையே ஊசி முனையில் தவம் செய்து சக்தியை மக்களுக்குக் காட்டினாள்.
சங்கன் பதுமன் என்ற நாக வம்ச மன்னர்களுக்கு இடையே ஒரு போட்டி இருந்தது. சங்கன் சிவனை வழிபடுபவர். பதுமன் நாராயணனை வழிபடுபவர். சிவபெருமான் என்று சங்கன் சொன்னான், பதுமன் நாராயணனே பெரியவன் என்று சொன்னான்.
பிரசித்திப் பெற்ற சங்கரன் கோவில்:
அரிஹரனைக் கண்டு உருகிய பார்வதியிடம் சிவபெருமான் வரம் கேள் என்றார். இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருஉருவைக் கொண்டு என்னுடன் இணைந்து காட்சியளிக்க வேண்டும் என அம்பாள் கூற, ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியருடன் எழுந்தருளி, அங்கேயே கோமதி சங்கரனாய் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தபசுக்காட்சி:
அன்னையின் கடும் தவத்திற்குப் பலன் கிடைக்கும் நாள் வந்தது. ஆடி மாதம் பௌர்ணமி நாளில் ஊசி முனையில் தவம் செய்து கொண்டிருந்த அன்னையின் தவத்தை மகிழ்ந்து கொண்டிருந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமி அன்று புன்னை வனத்தில் சங்கரநாராயணராக பார்வதி உட்பட அனைவருக்கும் காட்சியளித்தார்.
#சங்கரன்கோவில் #murugandevotee #tamil #god #spirituality #spritual #tamilspirituality #tamilfestivals #viral #viralvideo
#Sankarankovil, #Gomathi Ambal, #Adithapasu #Adithapasu