முரளி ஐயா அனைத்து மதங்களிந்தும் உள்ள ஞானங்களை .தத்துவங்களை.." மேற்கத்திய தத்துவங்களை.இந்திய தத்துவங்களை அனைத்தயும் இத்தளத்தில் கொட்டுகிறார். ரொம்ப அருமையாக உள்ளது உங்களுடைய பதிவுகள் ரொம்ப அருமை ஐயா . உங்களுடைய பதிவுகள் தேடலை தூண்டுகிறது உங்களுடைய உழைப்புக்கு முயற்சிக்கு வணங்கி வாழ்த்துகிறேன்.
நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு காணொளிகளை கேட்டு கொண்டு இருக்கும் பலரில் நானும் ஒருவன். இது வரை தங்கள் பதிவுகள் ( இறைவன், இறைத்தூதர், இறைத்தன்மை, ஆன்மீகம்,சித்தர்,தத்துவம், இவைகள் யாவும், நூல் பிடித்தார் போன்று ஒரு புள்ளியில் தொடங்கி, அதே புள்ளியில் முடிகிறது..மையப் புள்ளி ஒன்று தான் என்பதை தெளிவாக்குகிறது. எனினும் தங்களுக்கு நன்றி.❤
வக்கிரம், அவமானம், வஞ்சனை ஆகியவை கூட ஒரு வழிகாட்டலுக்காக தொலைதூரத்திலிருந்து அனுப்பப்படுபவை என்ற கவிதை வரிகள், என்னுடைய மனத்தின் தற்போதைய நிலைக்கு சொல்லப்பட்ட ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு விட்டேன். மிக்க நன்றி 🙏
ருமி அவர்களின் கவிதைகள் நிறைய படித்திருக்கிறேன், அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த அருமையான பதிவு உதவியது. இனி இணையத்தில் தேடி நிறைய படிக்கலாம், உங்களின் மிகச் சிறந்த பதிவுகளில் இது ஒன்று, நன்றி முரளி sir
கடவுள் மதம் இரண்டுமே மிகப்பெரிய வியாபாரம். ஏற்றத்தாழ்வுகளின் மூலம்! இவை தான் வருமை மற்றும் வன்முறைக்கு காரணம். உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் 🙏❤️ இயல் இசை நாடகம் ஒரு கலை அவ்வளவே ❤️
கடவுள்...சமயம் இரண்டும் வியாபாரமாக மட்டுமல்ல.... அது ஒரு ஊதியம் வாங்கி சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. மனிதர்களின்.... நன்னடத்தைகளை மெய்ப்பித்துக்காட்டுகின்ற ஆதாரங்களாக..... """கடவுளும்....சமயங்களும்"" பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, கடவுள் மேலும் சமயங்கள் மீதும் பற்றும்....100% நம்பிக்கையும் உடையவர்களே. ...""நல்லவர்கள் """ மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள். என்ற தப்பறைககளை பரப்புவதுதான் இன்றைய போலி ஆன்மிகம்😮😮😮😮😮😮😮😮😮😮
இறைவனுக்காக மனிதன் தீயதைகளை விட்டு விலகி நன்மைகளை மேற்கொள்ளும் போதுமனிதன் இறைவனை நெருங்கி விடுகிறான். அதற்காகத் தான் தொழுகை நோன்பு ஹஜ் ஸக்காத் போன்ற கடமைகளை இறைவன் வைத்து உள்ளான் . இறைவன் ஒருவனே என்று மனிதன் புரிந்து கொள்ளும் போது தான் இது சாத்தியம். அதனால் தான் இஸ்லாத்திற்கு முன் உள்ள மதங்களும் ஒரே இறைவனையே போதித்தன. அந்த இறைவனை அடைய வேண்டி தான் சில நாட்கள் காடுகளுக்கு சென்று தவம் செய்தார்கள். தங்களுடைய ஈகோ வை அழித்தார்கள். நீதி நேர்மை உண்மை நாணயம் அன்பு போன்ற பண்புகளை பெற்றவர்களாக ஆகிறார்கள். இறைவன் அவர்களை தம்முடைய நண்பனாக ஆக்கிக் கொள்கிறான். இதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் அல்லாஹ் வலிய்யுல்லதீன ஆமனு நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் நண்பனாவான். ஆக அல்லாஹ் முஹம்மது நபி அவர்களின் மூலமாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்தான். அதனால் தான் நபித் தோழர்கள் இறைவனுக்காகப் பல தியாகங்களை செய்தார்கள். இரவுகளில் விழித்து இருப்பது என்பது இரவுத் தொழுகையில் தங்களிடம் உள்ள தீமைகளை அழிப்பதற்காக அழுது அழுது மன்றாடி இறைவனிடம் பிரார்த்தனை செய்து அழிப்பது ஆகும். இவ்வாறு மனிதன் அழிக்க அழிக்க இறைவன் அவர்களை நண்பனாக ஆக்கிக் கொள்கிறான். அவர்களுடைய பிரார்த்தனைகளை அங்கீகரிக்கின்றான். அதனால் அவர்கள் இறைவனை உணர உணர இறை அன்பில் அவர்கள் தம்மை மாய்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் மக்களுக்கு இறை அன்பின் காரணமாக சேவை செய்கிறார்கள். இது தான் அனைத்து மதங்களின் சாராம்சமாகும். இஸ்லாம் இதனை முழுமைப்படுத்தியது. அனைத்து மதங்களும் அல்லாஹ்வால் அந்தந்த காலத்தில் அந்தந்த சமுதாயங்களுக்கு வழங்கப் பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. காரணம் சமுதாயங்கள் தனித்தனியாக பிரிந்து இருந்தன. ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை அறியாது இருந்தது. எப்போது அனைத்து சமுதாயங்களும் ஒன்றாக சேர ஆரம்பித்தனவோ அப்போது இறைவன் இறுதி சமயமாக அனைத்து மக்களுக்கும் இஸ்லாம் என்ற இறுதி மார்க்கத்தை வழங்கினான்.
அல்லாமா ஜலாலுத்தீன் றூமி (றஹ்) அவர்களைப்பற்றி இந்தக் காணொலியில் மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி ஒரு அன்பான வேண்டு கோள் மறைந்த இறைநேசர்களின் தர்ஹாக்களுக்கு முஸ்லிம்கள் செல்வது அவர்களை வணங்குவதற்காக அல்ல அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே ஆனாலும் மகான்களின் தர்ஹாக்களுக்கு செல்வது அங்கு சென்று அவர்களுக்காக பிரார்த்தனை செய்து அவர்களின் ஆசீர் வாதத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பொருட்டால் நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றித்தருமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்வதற்காகவேயாகும் மேலும் நப்ஸ் என்றால் மனம் என்று பொருள்
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். அருமையான காணொளிதான்..... ஆனால், எந்தவொரு சமயமும் எப்பொழுது நிறுவனமயப்படுத்தப்பட்டதோ.... அன்றைக்கே அங்கு செயற்கைத்தன்மை புகுந்துவிட்டது. சமயச்(RELIGION) சகதிக்குள் சிக்கியுள்ள மனித இனம் முட்டாள்களாகவும் , மடையர்களாகவும், இருப்பதையே சமய த்தலைவர்கள் விரும்புகின்றனர். திருவிழாக்களைக்கொண்டாடச் சொல்கின்றனர்.... கோயில் கட்டகோடிகளை வழங்கிட பணிக்கின்றனர். குறிப்பிட்ட நாட்களில் வழிபாடுகளில் பங்குபெற வில்லையெனில்..... பாவம்😢😢😢 சாபம்😢😢😢😢😢 வரும் என மிரட்டுகின்றனர். நீங்கள் காட்டுகின்ற "உள்ள விடுதலை" ? எந்த சமயத்திலும் இல்லையே??? சமயங்கள் ஒவ்வொரு மனிதரையும். ...சிந்திக்க விடாமல் தடுத்து தன் வாலையே பிடித்து இழுத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வரும் குரங்குகளாகவே. ... வைத்திருக்க மெனக்கெடுகின்றன.........
நான் சமீபகாலமாக தங்கள் காணொளிகளைப் பார்த்து வருகிறேன். பல்வேறு சிந்தனையாளர்கள் குறித்த தங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. தங்கள் ரூமி அவர்கள் குறித்த இந்த காணொளியில் அவர் இறைச்சி சாப்பிடுவதை கைவிட்டுவிட்டதாகவும், ஆன்மிகத் தேடலில் உணவுக்கும் ஒரு பங்கு உண்டென பல அறிஞர்கள் கூறியுள்ளதையும் நினைவு கூர்ந்தீர்கள். நானும் இவ்வாறு பல அறிஞர்கள் கூறியுள்ளதைப் படித்திருக்கிறேன். மாணிக்கவாசகர் மனிதப் பிறவி குறித்து கூறும்போது "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாய் கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி" என்று கூறுகிறார். அதாவது ஆன்மா பல்வேறு மிருகங்களாகப் பிறவி எடுத்த பின்னரே மனிதப்பிறவி எடுக்க முடியும் என்று பொருளாகிறது. ஆனால் பெரும்பாலான மிருகங்கள் பிற மிருகங்களை வேட்டையாடிதான் உண்கின்றன. அப்படியானால் அவை எப்படி அடுத்த உயர்பிறவி அடையமுடியும் என்பது எனது ஐயம். இதையே இன்னொரு கோணத்தில் நோக்கினால் ஒரு உயிருக்கு இன்னொரு உயிரை உணவாக படைத்திருந்தால், அப்படிப் படைத்தவரை எப்படி கடவுளாக கருத முடியும்? தங்களுடைய அடுத்த காணொளியில் இதுகுறித்த தங்கள் கருத்தை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி, வணக்கம்
ரூமிஅவர்களின் சிறப்பு அருமை....சார் அவர்களின் புத்தகம் எங்கே கிடைக்கும் அந்த தகவலையும் சேர்த்துஇணைத்தால் அதனை வாங்கி பயன்படுத்திபயன் பெற மக்களுக்கு ஏதுவாகஇருக்கும் சார்...நன்றி
சுய தேடல் உள்ளவர்களும், இறை தேடல் உள்ளவர்களும்,அன்பின் அவசியத்தை அறிவார். ரூமி, குரு கிடைக்க தேடியதில் அவர் தன்னுள் இருக்கிறார் என்று ரூமி உணர்ந்தார் என்று கண்ணீர் மல்க நீங்கள் கூறியது உங்கள் அறிவு தேடலின் உண்மையை வெளிப்படுத்தியது. சுழல் நடனம் இறை அனுபவம் பெற உதவும் என்று Osho வும் கூறியுள்ளார். உன்னை நான் தேடித்தேடி, என்னிடம் கண்டு கொண்டேன் என்று சொல்வது காதலருக்கு இறை தேடல் உள்ளவர், இருவருக்கும் பொருந்தும். காதல் உணர்வு இல்லாமல் கவிதை வர வாய்ப்பில்லை. ரூமி பற்றிய உங்கள் காணொளி அருமை. பாராட்டுக்குரியது. நன்றிகள்
முதன்மையாக நன்றி ஐயா இறை காதல் நிறைந்த ஆன்மீகம் குறித்து நீங்கள் இவ்வளவு விளக்கம் கூறியும் பல முரண்பட்ட சிந்தனையுடைய கருத்துக்கள் சுய விளக்க கருத்துக்களாக பதிவிடப்பட்டுள்ளது புரிதலில் அவர்களின் கொள்கை வெளிப்படுகிறது
I am Immensely delighted everytime I watch a video from Murali in the last few years. 👏👏👏👍👍👍 In this digital age, for deeply searching intellectual Tamils, you have become the gateway to the world of philosophy and Sprituality. 👍👍👍👏👏👏 With gratitude, wholeheartedly, deeply, I want to thank Murali for bringing the rest of the world brilliance in a capsule form to this Tamil world of wisdom. முத்தாய்ப்பாக என் நன்றியை ரூமியின் பிடித்த வடிவத்தில் வடிக்க முயற்சிக்கிறேன்...👇🙂 கூகுளில் ரூமியை பற்றி தேடிக்கொண்டு இருந்தேன்.... அது முரளியின் ரூமி காணொளியை அள்ளிக் கொண்டு வந்து போட்டது... ரூமியையே கண்டது போல் ஆனந்தக் கூத்தாடினேன்...🙏🙂 மு.சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
தத்துவ உலகிற்கு தமிழர்களை கைபிடித்து அழைத்துச் சென்று அதன் பரந்துபட்ட பரிமாணங்களை தன் ஆழ்ந்த தத்துவப் புலமையினால் சுவைபட, தெளிவுற விளக்கும் பேராசிரியர் அவர்கட்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.
மன்னிக்கவும். மாறுபட்ட தத்துவ உலகிற்கு என்று கூறுவது சரியாக இருக்கும். ஏனென்றால் தமிழர்களுக்கு என்று பழமையான அற்புதமான அறம் சார்ந்த தத்துவம் உள்ளது. 😊. தத்துவம் நமக்கு புதிதல்ல.
அருமை ஐயா ருபாயத் என்பது உமர் கயாம் கவிதை தொகுப்பின் பெயர் ஃபனா அழிதல் பக்கா மீதமாய் இருத்தல் திருக்குரான் வசனம்" யாவும் ( பனா) அழிந்து விட கூடியவையே அவனுடைய திருமுகம் மட்டுமே நிலைத்திருக்கும்(பக்கா)" உங்களின் பதிவு மிகவும் அற்புதானது நன்றி...
One of the finest videos. He is one of the great philosophers. I have read his poems. I would like to mention that you missed his most famous quote. WHAT YOU ARE SEEKING IS SEEKING YOU. It has great meaning. I agree that the world is a GUESTHOUSE. Many thanks to you and may the almighty bless you and your famil.
இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மானிடர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய சூஃயிசம். காசா போன்ற நிலை வராதிருக்க ரூபின் சூஃபியிசத்தை பரவலாக விதையுங்கள். நன்றி. -சிவகுமார்
வணக்கம் முரளி ஐயா .. அனுதினமும் தங்களுடைய காணொளிப் பதிவின் மூலம் தத்துவம் , ஆன்மீகம் பற்றிய கருத்துகளை விடாமல் செவிமடுத்து வருகிறேன். உங்களுடைய அரிய பலதகவல்கள் என்னுடைய தேடல்களுக்கு நல்விருந்தாக அமைந்து வருகின்றது. தங்களுடைய இந்தத் தொண்டினைத் தொடருங்கள். மெய்யுணர்வு கூடி தாங்களும் தங்கள் சுற்றத்தாரும் நீடு வாழ்வர். ( பாலசிங்கம் அய்யாக்கண்ணு - மலேசியா )
Sir He is very great person. He mingled with God. He is more or less like U. G. Krishnamurthy.His words resemble Upanishad words.Whatever he tells is absolute truth. Mr. Murali Sir you are a gifted person.
Beautiful illustration.. I am a Christian.. sufi philosophy is quite similar to Christian teachings.. love is God and God is Love .. nothing is greater than love ! Ego is the veil separate man and God . Thanks for your work.. please continue the good work .. such understanding is really needed for the current world!
சூபிகளையும், அவர்களின் வழி முறைகளையும் மூளையைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள இயலாது... இதயத்தின் வழியாகவே புரிந்து கொள்ள முயல முடியும்.... மகா ஞானி ரூமி குறித்த இந்த காணொளி அற்புதமாக அமைந்துள்ளது... மற்றைய சூபி ஞானியர் குறித்த காணொளிகளையும் தொடர்ந்து அவ்வப்போது வெளியிடவும் சார் ... மெய்வழி சாலை பாண்டியன், போடிநாயக்கனூர்.
உண்மையை கொஞ்சம் உணர்ந்தவர்கள் எல்லாரும் தனக்குள்ளே இருக்கும் இந்த ஆன்மா பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருபதை உணர்கின்றார்கள்... .இதை அத்வைத நிலை என்று இந்துமதம் பல ஆயிரம் வருடம் முன்பே சொல்கிறது...ஒவ்வொருவரும் தங்கள் பரம்பொருளை உணரும் சக்திக்கு ஏற்ப பல்வேறு விதமாக விளக்குகின்றனர் ..... இத்தகைய ஆன்மீக அறிவு சிறிதும் இல்லாத மதங்கள் மட்டுமே பிற மதங்கள் சைத்தான் மதம் இறைவனுக்கு எதிரானது என்று பகை உணர்வை ஏற்படுத்துகின்றன . கற்சிலை மூலம் இறைவனை வணங்குவது பாவசெயல் என சொல்கின்றனர் நண்பர்களே எங்கும் நிறைந்த பரம்பொருள். கற்சிலையில் இருக்க மாட்டார?. அதனால் தான் அரைகுறை மனதிற்கு அகண்ட வெளி அகப்படாது என சொல்கிறார்களா?:
பக்தி மார்க்கம் என்று சொல்லப்படுகின்ற இரட்டை நிலையே உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே இறைவனை அடையும் சுலபமான மார்க்கம் உலகிலுக்கு ஏற்ற மார்க்கமும் கூட இது இறைவன் பக்தன் என்றும் குரு சிஷ்யன் என்றும் பல நிலைகளில் பக்தி மார்க்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு சிறந்த மார்க்கம். ஆன்மீகத்தில் அத்வைத நிலையை அனுபவத்தால் புரிந்து கொண்டவர்கள் துவைத நிலையை கடைப்பிடித்து கடை தெரியவர்கள் பலரும் இருக்கின்றனர் நாயன்மார்கள்இதில் அடக்கம். எப்படி ஒரு சிறு குழந்தைக்கு எங்களை சொல்லிக் கொடுக்க பல உருவ பந்துகளை உபயோகித்து சொல்லிக் கொடுக்கிறோமோ அதுபோல்தான் இந்த பக்தி மார்க்கமும் உருவ வழிபாட்டை கொண்டு உருவம் இல்லா வழிபாட்டிற்கு உயர்த்திக் கொள்ளும் வழியாகும் இது எல்லோ ரோலும் சுலபமாக பின்பற்றக் கூடியது அத்வைத நிலையில் ஒருமை நிலையை கடைபிடிக்கும் பொழுது நாம் கடந்த செல்லும் பாதை முடியும் வரை மிகக் கடுமையான பாதையாக இருக்கும் மிக்க சிக்கல் ஆனதும் கூட அது எல்லோருக்கும் ஒத்து வராது சன்னியாசி மட்டுமே ஒத்துவரும் அவர் கட்டாயம் உலகில் இருந்து விலகியே இருப்பார் இந்த உலகிற்கு எந்த பயனும் இருக்காது அவரால் அதனால் இந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்பது மிகுந்த மன வலிமையும் எதையும் தியாகம் செய்யும் தன்மையும் மரணத்தை துச்சமாக மதிக்கின்ற மனோதிடமும் இருக்க வேண்டும் ஆகையினால் இது சிலருக்கு மட்டுமே சாத்தியப்படும். ஆதலால் தான் பக்தி மார்க்கத்தை பயன்படுத்தி தன்னை தானே அடையுங்கள்
என்னுடைய புரிதலில் இந்து மதத்தில் ஆரம்பத்தில் உருவ வழிபாட்டின் வழியாக கடவுளின் மீது பக்தி காதல் கொண்டு இறுதியில் உருவமற்ற நிலைபில் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை தரிசிப்பதே வெட்ட வெளி சுத்த வெளி ஒளி மபமானவன் என்ற உருவமற்ற இறை வழிபாட்டுக்கு உச்ச நிலைக்கு உபர்துவதே நோக்கம். இந்து மதத்தின் உச்ச நிலை இஸ்லாமிய ஆன்மீகத்தில் ஸூஃபி வழியில் ஆரம்ப நிலை தூய ஸூஃபி குருமார்கள் தாங்கள் பல வருடங்கள் தங்களை வருத்தி அடைந்த ஆன்மீக நிலைகளை கடவுளை அடைய தேடல் உள்ளவர்களுக்கு வாரி வழங்கிடுவார்கள். உதாரணத்திற்கு குணங்குடி மஸ்தான் அவர்களின் பல சீடர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள். பரம்பெருளை அடையும் தேடல் இருந்தால் ஸூஃபிச வழியில் விரைவாக அடையலாம். தாகித்தவனை தண்ணீரும் தேடிக் கொண்டு இருக்கிறது.
இதில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை தவளை பாம்பு கதை. நெஜத்தில் நடந்த அனுபவம் ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையில் இருந்த போது நடந்த அனுபவம் தவளை தன்வாயால் கெட்டது என்பர் அப்படி ஆனால் எனக்கு ஆண்மீகத்தில் பயணிக்க உந்து சக்த்தியாக மைந்தது ஆசைகளை துறந்தது,
இது உங்களின் தவறான புரிதல் உங்களுக்கு கால நேரம் தேவை என்று எண்ணுகிறென். எனது இரண்டாவது குருவும் ஏகாதியபத்தியம் யூதர்கள் சரி என்கிறார் போர் அரசியல் ஆனால் எனது எண்ணம் சிந்தனைகள் வேறு. போர் அரசியல் ஆக்கிரமிப்பு.அவருக்கு மூன்றாவது பார்வை உண்டு எனக்கு இல்லை,
வணக்கம் அய்யா. ஶ்ரீ ரமண பகவான் கருணையினால் என் ஆன்மாவாக இருந்து எண்ணனை ஆன்ம பாதையில் வழி நடத்தி வருகிறார். பல ஆசரியாரின் sorpozhiyukalai um கேட்டு என்னை நற்கதி அடைய அவரே அருளுகிறார். மகான் ரூமி அவர்களின் sorpozhiyukalai உங்கள் மூலம் கேட்ட தில் ஓர் வார்த்தை என்னை ஒரு நொடிக்கு என்னை நான் மறக்க வைத்தது. அது _"மனம் மௌனம் ஆளால் இருப்பில் இருக்கலாம்". தங்களுக்கு என் manamaartha நன்றிகள். சொன்னவர் பகவான் கேட்பவர் பகவான் ஆக வேண்டும். நன்றி அய்யா.
What a wonderful man you are, amazing work and CRYSTAL CLEAR speech.... Allah bless your family! From Australian man! PS- I NEVER skip advertising while watching your clips, !
ஐயா, ரூமி, சூரியனை புகழ்ந்து அதன் ஒளியில் நட்சத்திரங்கள் மறைந்து போகும் அது போல நாமெல்லாம் நட்சத்திரங்களாக மாறலாம், ஆனால், சூரியனாக ஆக முடியாது என்று அவர் கூறியது இன்றைய விஞ்ஞானத்தில் நாம் காணும் சூரியனே மிக மிக சிறிய நட்சத்திரம்! நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாமே இந்தச் சூரியனை காட்டிலும் பன்மடங்கு பெரிய சூரியன்கள் என்கிற உண்மைக்கு உங்கள் பதில் என்ன?!
[11/11, 1:13 pm] Dayanand Bharathi: மவுன விளக்கம் என்னை உருவாக்கி உனதெனச் சொல்லி விலைதந்து அதனை நீயே வாங்கி ஒருநொடி கூட பயன் படுத்தாது உடனே உடைத்ததின் காரணம் சொல்லு உருவாக்கும் உனக்கு உரிமையும் உள்ளது விலையொன்று தந்தது ஏனனெச் சொல்லு அதற்கும் மேலாக இப்படி நொறுக்கி உடைத்து போட்டதின் காரணம் யாது விடையேதும் வாராது எனக்கும் தெரியும் வீண்வாதம் செய்கிறேன் அதுவும் புரியும் ஆயினும் உன்மவுனம் தருகின்ற விளக்கத்தை அறிந்தது ஆன்மா அதுமட்டும் போதும் ரீவா, 11-11-23, மதியம் 1 [11/11, 1:14 pm] Dayanand Bharathi: After listening Rumi how can one remain NOT writing a poem. As I am reading "The Essential Rumi, by Coleman Barks, New York, HarperCollins, 2004, I listened one Gazal by Rumi, impressed by one line I wrote this song
Out of jealousy Rumi's son murdered Shamus ji, Shamus ji is also my Master, he was teaching the path of Light n Sound of GOD the Creator, I dont want to confuse others, Thank you sir for touching such a topics, he is a Spiritual teacher.
All we have to find about these saints are must in the basic need of hunger to be filled in at least stage to keep their sprit, mind, to thought stage of soul in body level otherwise nobody will find saint stage reach the space level, loving all stage . Is there any body continue their with hunger ? If possible to declare about any saint. Without least food nothing will stand, I think . Howlong you keep your 'PASiTHiRU ' stage .My humble request for your reply sir,
முரளி ஐயா அனைத்து மதங்களிந்தும் உள்ள ஞானங்களை .தத்துவங்களை.." மேற்கத்திய தத்துவங்களை.இந்திய தத்துவங்களை அனைத்தயும்
இத்தளத்தில் கொட்டுகிறார். ரொம்ப அருமையாக உள்ளது உங்களுடைய பதிவுகள் ரொம்ப அருமை ஐயா . உங்களுடைய பதிவுகள் தேடலை தூண்டுகிறது
உங்களுடைய உழைப்புக்கு முயற்சிக்கு வணங்கி வாழ்த்துகிறேன்.
அருமை … இதுபோல இன்னொரு வலைதலம் ‘செம்மைவனம்’ - ஆசான்செந்தமிழன் ஆன்மீக அறிவு மிக ஆழமான, எளிமையான மெய்ஞானம்.
உருப்படியான மிகச்சில சேனல்களில் நீங்கள் முதன்மையானவர்...மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் 🎉
அருமை … இதுபோல இன்னொரு வலைதலம் ‘செம்மைவனம்’ - ஆசான்செந்தமிழன் ஆன்மீக அறிவு மிக ஆழமான, எளிமையான மெய்ஞானம்.
சூஃபி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம், காதல்தான்... இறைமையோடு.......!
நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு காணொளிகளை கேட்டு கொண்டு இருக்கும் பலரில் நானும் ஒருவன்.
இது வரை தங்கள் பதிவுகள் ( இறைவன், இறைத்தூதர், இறைத்தன்மை, ஆன்மீகம்,சித்தர்,தத்துவம், இவைகள் யாவும், நூல் பிடித்தார் போன்று ஒரு புள்ளியில் தொடங்கி, அதே புள்ளியில் முடிகிறது..மையப் புள்ளி ஒன்று தான் என்பதை தெளிவாக்குகிறது.
எனினும் தங்களுக்கு நன்றி.❤
வக்கிரம், அவமானம், வஞ்சனை ஆகியவை கூட ஒரு வழிகாட்டலுக்காக தொலைதூரத்திலிருந்து அனுப்பப்படுபவை என்ற கவிதை வரிகள், என்னுடைய மனத்தின் தற்போதைய நிலைக்கு சொல்லப்பட்ட ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு விட்டேன்.
மிக்க நன்றி 🙏
ஆம். உண்மையே....
எனக்கும் கூட அப்படித்தான் நிகழ்ந்திருக்குமோ
.... என எண்ணுகின்றேன்.
❤மிக்க நன்றி அய்யா.மகத்தான மக்களின் சேவை.இக்கணம் தேவை.காலத்தின் கட்டாயம்.❤❤❤🎉🎉🎉🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏
மௌனம் கடவுளின் மொழி அல்ல நீ கடவுள் ஆகும் பொழுது ஏற்படுகின்ற அனுபவம்.
ருமி அவர்களின் கவிதைகள் நிறைய படித்திருக்கிறேன், அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த அருமையான பதிவு உதவியது. இனி இணையத்தில் தேடி நிறைய படிக்கலாம், உங்களின் மிகச் சிறந்த பதிவுகளில் இது ஒன்று, நன்றி முரளி sir
கடவுள் மதம் இரண்டுமே மிகப்பெரிய வியாபாரம். ஏற்றத்தாழ்வுகளின் மூலம்! இவை தான் வருமை மற்றும் வன்முறைக்கு காரணம். உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் 🙏❤️ இயல் இசை நாடகம் ஒரு கலை அவ்வளவே ❤️
கடவுள்...சமயம் இரண்டும் வியாபாரமாக மட்டுமல்ல....
அது ஒரு ஊதியம் வாங்கி சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.
மனிதர்களின்....
நன்னடத்தைகளை
மெய்ப்பித்துக்காட்டுகின்ற ஆதாரங்களாக.....
"""கடவுளும்....சமயங்களும்"" பயன்படுத்தப்படுகின்றன.
அதாவது,
கடவுள் மேலும் சமயங்கள் மீதும் பற்றும்....100% நம்பிக்கையும் உடையவர்களே. ...""நல்லவர்கள் """
மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள். என்ற தப்பறைககளை பரப்புவதுதான் இன்றைய போலி ஆன்மிகம்😮😮😮😮😮😮😮😮😮😮
Good statement
"பார்க்க தெரிந்தால் பாதை தெரியும்,
பாதை தெரிந்தால் "பயணம்" தொடரும்,
"பயணம்" தொடர்ந்தால் "கதவு" திறக்கும்,
"கதவ" (கண் =நாடி)) திறந்தால் "கட்சி" கிடைக்கும்,
"கட்சி" கிடைத்தால் "கவலைத் தீரும்,
கவலை தீர்ந்தால் வாழலாம்" .!!!!!
"கண்கண்ட தெய்வம் (ரூமி) .!!!!
Superbly explained 👌
கட்சி அல்ல 'காட்சி'
இறைவனுக்காக மனிதன் தீயதைகளை விட்டு விலகி நன்மைகளை மேற்கொள்ளும் போதுமனிதன் இறைவனை நெருங்கி விடுகிறான். அதற்காகத் தான் தொழுகை நோன்பு ஹஜ் ஸக்காத் போன்ற கடமைகளை இறைவன் வைத்து உள்ளான் .
இறைவன் ஒருவனே என்று மனிதன் புரிந்து கொள்ளும் போது தான் இது சாத்தியம். அதனால் தான் இஸ்லாத்திற்கு முன் உள்ள மதங்களும் ஒரே இறைவனையே போதித்தன. அந்த இறைவனை அடைய வேண்டி தான் சில நாட்கள்
காடுகளுக்கு சென்று தவம் செய்தார்கள். தங்களுடைய ஈகோ வை அழித்தார்கள். நீதி நேர்மை உண்மை நாணயம் அன்பு போன்ற
பண்புகளை பெற்றவர்களாக ஆகிறார்கள்.
இறைவன் அவர்களை தம்முடைய நண்பனாக ஆக்கிக் கொள்கிறான்.
இதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் அல்லாஹ் வலிய்யுல்லதீன ஆமனு
நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் நண்பனாவான்.
ஆக அல்லாஹ் முஹம்மது நபி அவர்களின் மூலமாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்தான். அதனால் தான் நபித் தோழர்கள் இறைவனுக்காகப் பல தியாகங்களை செய்தார்கள்.
இரவுகளில் விழித்து இருப்பது என்பது இரவுத் தொழுகையில் தங்களிடம் உள்ள தீமைகளை அழிப்பதற்காக அழுது அழுது மன்றாடி இறைவனிடம் பிரார்த்தனை செய்து அழிப்பது ஆகும். இவ்வாறு மனிதன் அழிக்க அழிக்க இறைவன் அவர்களை நண்பனாக ஆக்கிக் கொள்கிறான். அவர்களுடைய பிரார்த்தனைகளை அங்கீகரிக்கின்றான். அதனால் அவர்கள் இறைவனை உணர உணர இறை அன்பில் அவர்கள் தம்மை மாய்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் மக்களுக்கு இறை அன்பின் காரணமாக சேவை செய்கிறார்கள். இது தான் அனைத்து மதங்களின் சாராம்சமாகும். இஸ்லாம் இதனை முழுமைப்படுத்தியது. அனைத்து மதங்களும் அல்லாஹ்வால் அந்தந்த காலத்தில் அந்தந்த சமுதாயங்களுக்கு வழங்கப் பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
காரணம் சமுதாயங்கள் தனித்தனியாக பிரிந்து இருந்தன. ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை அறியாது இருந்தது.
எப்போது அனைத்து சமுதாயங்களும் ஒன்றாக சேர ஆரம்பித்தனவோ அப்போது இறைவன் இறுதி சமயமாக அனைத்து மக்களுக்கும் இஸ்லாம் என்ற இறுதி மார்க்கத்தை வழங்கினான்.
@@althafhussainfm3அதான பார்த்தேன்... காட்சி என்று வரவேண்டும்... கட்சி என்று எப்படி வரும் என்று...
உங்களின் கருத்துக்களை கேட்கும் பொழுதுகளில் வேறொர் உலகத்தில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.
மிகவும் அருமை!
தொடருங்கள்.
Alhamdulillah mashallah super sir thanks❤
அல்லாமா ஜலாலுத்தீன் றூமி (றஹ்) அவர்களைப்பற்றி இந்தக் காணொலியில் மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி
ஒரு அன்பான வேண்டு கோள் மறைந்த இறைநேசர்களின் தர்ஹாக்களுக்கு முஸ்லிம்கள் செல்வது
அவர்களை வணங்குவதற்காக அல்ல அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று
வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே
ஆனாலும் மகான்களின் தர்ஹாக்களுக்கு செல்வது அங்கு சென்று அவர்களுக்காக பிரார்த்தனை செய்து அவர்களின் ஆசீர் வாதத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பொருட்டால் நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றித்தருமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்வதற்காகவேயாகும்
மேலும் நப்ஸ் என்றால் மனம் என்று பொருள்
A different Sufi saint. Superb Sir
இரவில் தியானம். அருமை. நன்றி
வணக்கம், நன்றி தோழரே! இதுநாள் வரை உரையாடி வந்த தாங்கள் இன்று கவிதை பாடிவிட்டீர்கள்.
மகிழ்ச்சி!🎉
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
அருமையான காணொளிதான்.....
ஆனால், எந்தவொரு சமயமும் எப்பொழுது நிறுவனமயப்படுத்தப்பட்டதோ....
அன்றைக்கே அங்கு செயற்கைத்தன்மை புகுந்துவிட்டது.
சமயச்(RELIGION)
சகதிக்குள் சிக்கியுள்ள
மனித இனம் முட்டாள்களாகவும் ,
மடையர்களாகவும்,
இருப்பதையே சமய த்தலைவர்கள் விரும்புகின்றனர்.
திருவிழாக்களைக்கொண்டாடச் சொல்கின்றனர்....
கோயில் கட்டகோடிகளை வழங்கிட பணிக்கின்றனர்.
குறிப்பிட்ட நாட்களில் வழிபாடுகளில் பங்குபெற வில்லையெனில்.....
பாவம்😢😢😢
சாபம்😢😢😢😢😢
வரும் என மிரட்டுகின்றனர்.
நீங்கள் காட்டுகின்ற "உள்ள விடுதலை" ?
எந்த சமயத்திலும் இல்லையே???
சமயங்கள் ஒவ்வொரு மனிதரையும். ...சிந்திக்க விடாமல் தடுத்து தன் வாலையே பிடித்து இழுத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வரும்
குரங்குகளாகவே. ...
வைத்திருக்க மெனக்கெடுகின்றன.........
Sarithaan
நான் சமீபகாலமாக தங்கள் காணொளிகளைப் பார்த்து வருகிறேன். பல்வேறு சிந்தனையாளர்கள் குறித்த தங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. தங்கள் ரூமி அவர்கள் குறித்த இந்த காணொளியில் அவர் இறைச்சி சாப்பிடுவதை கைவிட்டுவிட்டதாகவும், ஆன்மிகத் தேடலில் உணவுக்கும் ஒரு பங்கு உண்டென பல அறிஞர்கள் கூறியுள்ளதையும் நினைவு கூர்ந்தீர்கள். நானும் இவ்வாறு பல அறிஞர்கள் கூறியுள்ளதைப் படித்திருக்கிறேன். மாணிக்கவாசகர் மனிதப் பிறவி குறித்து கூறும்போது "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாய் கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி" என்று கூறுகிறார். அதாவது ஆன்மா பல்வேறு மிருகங்களாகப் பிறவி எடுத்த பின்னரே மனிதப்பிறவி எடுக்க முடியும் என்று பொருளாகிறது. ஆனால் பெரும்பாலான மிருகங்கள் பிற மிருகங்களை வேட்டையாடிதான் உண்கின்றன. அப்படியானால் அவை எப்படி அடுத்த உயர்பிறவி அடையமுடியும் என்பது எனது ஐயம். இதையே இன்னொரு கோணத்தில் நோக்கினால் ஒரு உயிருக்கு இன்னொரு உயிரை உணவாக படைத்திருந்தால், அப்படிப் படைத்தவரை எப்படி கடவுளாக கருத முடியும்? தங்களுடைய அடுத்த காணொளியில் இதுகுறித்த தங்கள் கருத்தை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி, வணக்கம்
Nice ques
அருமையான அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள் தோழரே நன்றி நீவிர் நீடூழி வாழ்க
அன்பே பிரதானம் என்னும் அவரது தத்துவம் உயர்வானது
ரூமிஅவர்களின் சிறப்பு அருமை....சார் அவர்களின் புத்தகம் எங்கே கிடைக்கும் அந்த தகவலையும் சேர்த்துஇணைத்தால் அதனை வாங்கி பயன்படுத்திபயன் பெற மக்களுக்கு ஏதுவாகஇருக்கும் சார்...நன்றி
👏🏼👏🏼👏🏼அது என்ன காலி பண்றது ஐயா?
I like that coinage. Ego is emptied out. 🥰
வணக்கம் அய்யா. உங்களின் எல்லா உரய்களையும் கேட்டு நல்ல கருத்துகளை அறிந்து கொண்டேன். நன்றி அய்யா.
Great men think alike என்பது போல அவர்களின் இறை அனுபவங்களும் ஒன்றாகவே உள்ளன
சுய தேடல் உள்ளவர்களும், இறை தேடல் உள்ளவர்களும்,அன்பின் அவசியத்தை அறிவார். ரூமி, குரு கிடைக்க தேடியதில் அவர் தன்னுள் இருக்கிறார் என்று ரூமி உணர்ந்தார் என்று கண்ணீர் மல்க நீங்கள் கூறியது உங்கள் அறிவு தேடலின் உண்மையை வெளிப்படுத்தியது. சுழல் நடனம் இறை அனுபவம் பெற உதவும் என்று Osho வும் கூறியுள்ளார். உன்னை நான் தேடித்தேடி, என்னிடம் கண்டு கொண்டேன் என்று சொல்வது காதலருக்கு இறை தேடல் உள்ளவர், இருவருக்கும் பொருந்தும். காதல் உணர்வு இல்லாமல் கவிதை வர வாய்ப்பில்லை. ரூமி பற்றிய உங்கள் காணொளி அருமை. பாராட்டுக்குரியது. நன்றிகள்
ஒரு நல்ல பதிவு❤
முதன்மையாக நன்றி ஐயா
இறை காதல் நிறைந்த ஆன்மீகம் குறித்து நீங்கள் இவ்வளவு விளக்கம் கூறியும் பல முரண்பட்ட சிந்தனையுடைய கருத்துக்கள் சுய விளக்க கருத்துக்களாக பதிவிடப்பட்டுள்ளது புரிதலில் அவர்களின் கொள்கை வெளிப்படுகிறது
I am Immensely delighted everytime I watch a video from Murali in the last few years. 👏👏👏👍👍👍
In this digital age, for deeply searching intellectual Tamils, you have become the gateway to the world of philosophy and Sprituality. 👍👍👍👏👏👏
With gratitude, wholeheartedly, deeply, I want to thank Murali for bringing the rest of the world brilliance in a capsule form to this Tamil world of wisdom.
முத்தாய்ப்பாக என் நன்றியை ரூமியின் பிடித்த வடிவத்தில் வடிக்க முயற்சிக்கிறேன்...👇🙂
கூகுளில் ரூமியை பற்றி தேடிக்கொண்டு இருந்தேன்....
அது முரளியின் ரூமி காணொளியை அள்ளிக் கொண்டு வந்து போட்டது...
ரூமியையே கண்டது போல் ஆனந்தக் கூத்தாடினேன்...🙏🙂
மு.சிவா
நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
தத்துவ உலகிற்கு தமிழர்களை கைபிடித்து அழைத்துச் சென்று அதன் பரந்துபட்ட பரிமாணங்களை தன் ஆழ்ந்த தத்துவப் புலமையினால் சுவைபட, தெளிவுற விளக்கும் பேராசிரியர் அவர்கட்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.
மன்னிக்கவும். மாறுபட்ட தத்துவ உலகிற்கு என்று கூறுவது சரியாக இருக்கும். ஏனென்றால் தமிழர்களுக்கு என்று பழமையான அற்புதமான அறம் சார்ந்த தத்துவம் உள்ளது. 😊. தத்துவம் நமக்கு புதிதல்ல.
நான் கடவுள் அல்லன்! ஆனால் கடவுள் என்னை அவனிலும் மேலாக படைத்தனன்!
அருமை ஐயா ருபாயத் என்பது உமர் கயாம் கவிதை தொகுப்பின் பெயர்
ஃபனா அழிதல் பக்கா மீதமாய் இருத்தல்
திருக்குரான் வசனம்" யாவும் ( பனா) அழிந்து விட கூடியவையே அவனுடைய திருமுகம் மட்டுமே நிலைத்திருக்கும்(பக்கா)"
உங்களின் பதிவு மிகவும் அற்புதானது நன்றி...
கவிதை...மனம் மனமுருகி பேசும் கதை🎉🎉❤
One of the finest videos. He is one of the great philosophers. I have read his poems. I would like to mention that you missed his most famous quote. WHAT YOU ARE SEEKING IS SEEKING YOU. It has great meaning. I agree that the world is a GUESTHOUSE. Many thanks to you and may the almighty bless you and your famil.
A great Sufi poet
இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மானிடர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய சூஃயிசம். காசா போன்ற நிலை வராதிருக்க ரூபின் சூஃபியிசத்தை பரவலாக விதையுங்கள். நன்றி. -சிவகுமார்
வணக்கம் முரளி ஐயா .. அனுதினமும் தங்களுடைய காணொளிப் பதிவின் மூலம் தத்துவம் , ஆன்மீகம் பற்றிய கருத்துகளை விடாமல் செவிமடுத்து வருகிறேன். உங்களுடைய அரிய பலதகவல்கள் என்னுடைய தேடல்களுக்கு நல்விருந்தாக அமைந்து வருகின்றது. தங்களுடைய இந்தத் தொண்டினைத் தொடருங்கள். மெய்யுணர்வு கூடி தாங்களும் தங்கள் சுற்றத்தாரும் நீடு வாழ்வர். ( பாலசிங்கம் அய்யாக்கண்ணு - மலேசியா )
அருமை. நன்றி. இறையின் மேல் தீராக் காதல் கொண்ட மகான்.
தாகித்தவன் தண்ணீரை தேடுகிறான் தண்ணீர் தாகித்தவனை தேடுகிறது... சூஃபி நடனம் நன்றாக இருக்கும். சுல்தான் அல்அரிபின் சூஃபி ஞானி புலாவ் பசார் மலேசியா
U
جزاكم الله خيرا
அழகான அருமையான மொழிபெயர்ப்பு கவிதைகள்.
மிக அருமை முரளி Sir
Sir He is very great person. He mingled with God. He is more or less like U. G. Krishnamurthy.His words resemble Upanishad words.Whatever he tells is absolute truth. Mr. Murali Sir you are a gifted person.
Thanks for excellent narration 🎉
Beautiful illustration.. I am a Christian.. sufi philosophy is quite similar to Christian teachings.. love is God and God is Love .. nothing is greater than love ! Ego is the veil separate man and God . Thanks for your work.. please continue the good work .. such understanding is really needed for the current world!
Keep spreading wisdom and love.. live long healthy murali Sir.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
மிக அழகான விளக்கம்
மனிதர்கள் அணைவரும் வாழ்க்கையில் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்
தமிழில் 6 பாகமும் கிடைக்கின்றன
Enna pathippagam nanbare?
குடம் நிறைய நீர் இருந்தாலும் அதன் ஓரங்கள் வற்றித்தான் இருக்கும்--மௌலானா ரூமி
🙏. Excellent Sir.
சூபிகளையும், அவர்களின் வழி முறைகளையும் மூளையைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள இயலாது... இதயத்தின் வழியாகவே புரிந்து கொள்ள முயல முடியும்.... மகா ஞானி ரூமி குறித்த இந்த காணொளி அற்புதமாக அமைந்துள்ளது... மற்றைய சூபி ஞானியர் குறித்த காணொளிகளையும் தொடர்ந்து அவ்வப்போது வெளியிடவும் சார் ... மெய்வழி சாலை பாண்டியன், போடிநாயக்கனூர்.
அருமை
தங்களின் இருக்கும் விசேஷம் என்னும் பால் அதனை எங்களுக்கு ஊற்றி கொடுத்து நாங்கள் அதனை பருகி மகிழ்கிறோம்.🪔
நன்றி. அருமையாக இருந்தது
Eagerly waiting for your next release of tamil philosophical video. Please be fast.
Energetic and enthusiastic lectures from Dr Murali sir
Great
Thanks a lot Prof.
உண்மையை கொஞ்சம் உணர்ந்தவர்கள் எல்லாரும் தனக்குள்ளே இருக்கும் இந்த ஆன்மா பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருபதை உணர்கின்றார்கள்...
.இதை அத்வைத நிலை என்று இந்துமதம் பல ஆயிரம் வருடம் முன்பே சொல்கிறது...ஒவ்வொருவரும் தங்கள் பரம்பொருளை உணரும் சக்திக்கு ஏற்ப பல்வேறு விதமாக விளக்குகின்றனர் .....
இத்தகைய ஆன்மீக அறிவு சிறிதும் இல்லாத மதங்கள் மட்டுமே பிற மதங்கள் சைத்தான் மதம் இறைவனுக்கு எதிரானது என்று பகை உணர்வை ஏற்படுத்துகின்றன .
கற்சிலை மூலம் இறைவனை வணங்குவது பாவசெயல் என சொல்கின்றனர் நண்பர்களே எங்கும் நிறைந்த பரம்பொருள். கற்சிலையில் இருக்க மாட்டார?.
அதனால் தான் அரைகுறை மனதிற்கு அகண்ட வெளி அகப்படாது என சொல்கிறார்களா?:
பக்தி மார்க்கம் என்று சொல்லப்படுகின்ற இரட்டை நிலையே உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே இறைவனை அடையும் சுலபமான மார்க்கம் உலகிலுக்கு ஏற்ற மார்க்கமும் கூட இது இறைவன் பக்தன் என்றும் குரு சிஷ்யன் என்றும் பல நிலைகளில் பக்தி மார்க்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு சிறந்த மார்க்கம். ஆன்மீகத்தில் அத்வைத நிலையை அனுபவத்தால் புரிந்து கொண்டவர்கள் துவைத நிலையை கடைப்பிடித்து கடை தெரியவர்கள் பலரும் இருக்கின்றனர் நாயன்மார்கள்இதில் அடக்கம். எப்படி ஒரு சிறு குழந்தைக்கு எங்களை சொல்லிக் கொடுக்க பல உருவ பந்துகளை உபயோகித்து சொல்லிக் கொடுக்கிறோமோ அதுபோல்தான் இந்த பக்தி மார்க்கமும் உருவ வழிபாட்டை கொண்டு உருவம் இல்லா வழிபாட்டிற்கு உயர்த்திக் கொள்ளும் வழியாகும் இது எல்லோ ரோலும் சுலபமாக பின்பற்றக் கூடியது அத்வைத நிலையில் ஒருமை நிலையை கடைபிடிக்கும் பொழுது நாம் கடந்த செல்லும் பாதை முடியும் வரை மிகக் கடுமையான பாதையாக இருக்கும் மிக்க சிக்கல் ஆனதும் கூட அது எல்லோருக்கும் ஒத்து வராது சன்னியாசி மட்டுமே ஒத்துவரும் அவர் கட்டாயம் உலகில் இருந்து விலகியே இருப்பார் இந்த உலகிற்கு எந்த பயனும் இருக்காது அவரால் அதனால் இந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்பது மிகுந்த மன வலிமையும் எதையும் தியாகம் செய்யும் தன்மையும் மரணத்தை துச்சமாக மதிக்கின்ற மனோதிடமும் இருக்க வேண்டும் ஆகையினால் இது சிலருக்கு மட்டுமே சாத்தியப்படும். ஆதலால் தான் பக்தி மார்க்கத்தை பயன்படுத்தி தன்னை தானே அடையுங்கள்
என்னுடைய புரிதலில் இந்து மதத்தில் ஆரம்பத்தில் உருவ வழிபாட்டின் வழியாக கடவுளின் மீது பக்தி காதல் கொண்டு இறுதியில் உருவமற்ற நிலைபில் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை தரிசிப்பதே வெட்ட வெளி சுத்த வெளி ஒளி மபமானவன் என்ற உருவமற்ற இறை வழிபாட்டுக்கு உச்ச நிலைக்கு உபர்துவதே நோக்கம். இந்து மதத்தின் உச்ச நிலை இஸ்லாமிய ஆன்மீகத்தில் ஸூஃபி வழியில் ஆரம்ப நிலை தூய ஸூஃபி குருமார்கள் தாங்கள் பல வருடங்கள் தங்களை வருத்தி அடைந்த ஆன்மீக நிலைகளை கடவுளை அடைய தேடல் உள்ளவர்களுக்கு வாரி வழங்கிடுவார்கள். உதாரணத்திற்கு குணங்குடி மஸ்தான் அவர்களின் பல சீடர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள். பரம்பெருளை அடையும் தேடல் இருந்தால் ஸூஃபிச வழியில் விரைவாக அடையலாம். தாகித்தவனை தண்ணீரும் தேடிக் கொண்டு இருக்கிறது.
நன்றி ஐயா
Good video
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
You are truly a genious for it needs more than just brain but you are bleessed by Almighty to narrate so interestingly.
இதில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை தவளை பாம்பு கதை.
நெஜத்தில் நடந்த அனுபவம் ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையில் இருந்த போது நடந்த அனுபவம் தவளை தன்வாயால் கெட்டது என்பர் அப்படி ஆனால் எனக்கு ஆண்மீகத்தில் பயணிக்க உந்து சக்த்தியாக மைந்தது ஆசைகளை துறந்தது,
நன்றி நண்பரே ❤
Rumikkaga waitting., Mikka Nandri Sir., Valka Valamudan
இன்று வரை உலகில் தத்துவங்களாக ஏற்றுக்கொள்ள பட்ட அனைத்துமே யூத கோட்பாடுகளின் சூழ்ச்சியே❤
இது உங்களின் தவறான புரிதல் உங்களுக்கு கால நேரம் தேவை என்று எண்ணுகிறென்.
எனது இரண்டாவது குருவும் ஏகாதியபத்தியம் யூதர்கள் சரி என்கிறார் போர் அரசியல் ஆனால் எனது எண்ணம் சிந்தனைகள் வேறு. போர் அரசியல் ஆக்கிரமிப்பு.அவருக்கு மூன்றாவது பார்வை உண்டு எனக்கு இல்லை,
அன்பு சகோதரரே மனநல மருத்துவரை அணுகவும்❤
வணக்கம் அய்யா. ஶ்ரீ ரமண பகவான் கருணையினால் என் ஆன்மாவாக இருந்து எண்ணனை ஆன்ம பாதையில் வழி நடத்தி வருகிறார். பல ஆசரியாரின் sorpozhiyukalai um கேட்டு என்னை நற்கதி அடைய அவரே அருளுகிறார். மகான் ரூமி அவர்களின் sorpozhiyukalai உங்கள் மூலம் கேட்ட தில் ஓர் வார்த்தை என்னை ஒரு நொடிக்கு என்னை நான் மறக்க வைத்தது. அது _"மனம் மௌனம் ஆளால் இருப்பில் இருக்கலாம்". தங்களுக்கு என் manamaartha நன்றிகள். சொன்னவர் பகவான் கேட்பவர் பகவான் ஆக வேண்டும். நன்றி அய்யா.
அருமையான பதிவு
❤🎉
Fantastic.
Fantastic. The great professor.
You are great...
Thank u sir
"மோனம் என்பது ஞான வரம்பு'' ஓளவை
❤
Wonderful Sir. thanks a lot for your efforts .
❤❤❤❤
Thank you sir. I think in Gita Mehta 's River Sutra, the poems of Rumi is mentioned in a music festival. 19-11-23.
What a wonderful man you are, amazing work and CRYSTAL CLEAR speech.... Allah bless your family! From Australian man!
PS- I NEVER skip advertising while watching your clips, !
😮
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
ரூமி மதவாதி அல்ல மக்கனள நேசித்த நாயகன் சிறந்த சித்தர் சிறந்த மருத்துவர்
Excellent Dr murali sir
ஐயா, ரூமி, சூரியனை புகழ்ந்து அதன் ஒளியில் நட்சத்திரங்கள் மறைந்து போகும் அது போல நாமெல்லாம் நட்சத்திரங்களாக மாறலாம், ஆனால், சூரியனாக ஆக முடியாது என்று அவர் கூறியது இன்றைய விஞ்ஞானத்தில் நாம் காணும் சூரியனே மிக மிக சிறிய நட்சத்திரம்! நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாமே இந்தச் சூரியனை காட்டிலும் பன்மடங்கு பெரிய சூரியன்கள் என்கிற உண்மைக்கு உங்கள் பதில் என்ன?!
இஸ்லாமிய ஷரீயத் சட்டத்துறை ஃபிக்ஹ் பற்றி ஒரு காணொளி தாருங்கள். நன்றி
Thank you sir.
அப்பிடியே ரூமி மாதிரியே நானும்.... 😊🙏
நன்றி ஆசான்
ஐயா யாரும் இந்த அனுபவத்தை எட்டவில்லை என்றாலும் , நீங்கள் சொல்லுகின்ற விதம் அந்த அனுபவத்திற்கு ,உள் ஙுளைவது போன்ற உணர்வை உண்டாக்குகிறது . நன்றி.
தக்கலை பீர் முகம்மது அவர்களின் படைப்புக்கள் குறித்து ஒரு காணொளி வழங்குங்கள். சூபியிஸத்தை தமிழில் வழங்கியவர் அவர். மொழிபெயர்க்க தேவையில்லை.
Gread post.sr
ஆண்மீக அரசியல் ஆண்மீக காதல் நன்று
👌👌👌👌❤❤❤
[11/11, 1:13 pm] Dayanand Bharathi: மவுன விளக்கம்
என்னை உருவாக்கி
உனதெனச் சொல்லி
விலைதந்து அதனை
நீயே வாங்கி
ஒருநொடி கூட
பயன் படுத்தாது
உடனே உடைத்ததின்
காரணம் சொல்லு
உருவாக்கும் உனக்கு
உரிமையும் உள்ளது
விலையொன்று தந்தது
ஏனனெச் சொல்லு
அதற்கும் மேலாக
இப்படி நொறுக்கி
உடைத்து போட்டதின்
காரணம் யாது
விடையேதும் வாராது
எனக்கும் தெரியும்
வீண்வாதம் செய்கிறேன்
அதுவும் புரியும்
ஆயினும் உன்மவுனம்
தருகின்ற விளக்கத்தை
அறிந்தது ஆன்மா
அதுமட்டும் போதும்
ரீவா, 11-11-23, மதியம் 1
[11/11, 1:14 pm] Dayanand Bharathi: After listening Rumi how can one remain NOT writing a poem. As I am reading "The Essential Rumi, by Coleman Barks, New York, HarperCollins, 2004, I listened one Gazal by Rumi, impressed by one line I wrote this song
Super sir
💙💙💙
நானே நீ
நீயே நான்
நானும் நீயும்
நானே நான்
Sir please Alan watts பத்தி பேசுங்கனு ரொம்ப நாளா கேக்குறேன்.
Out of jealousy Rumi's son murdered Shamus ji, Shamus ji is also my Master, he was teaching the path of Light n Sound of GOD the Creator, I dont want to confuse others, Thank you sir for touching such a topics, he is a Spiritual teacher.
All we have to find about these saints are must in the basic need of hunger to be filled in at least stage to keep their sprit, mind, to thought stage of soul in body level otherwise nobody will find saint stage reach the space level, loving all stage . Is there any body continue their with hunger ? If possible to declare about any saint. Without least food nothing will stand, I think . Howlong you keep your 'PASiTHiRU ' stage .My humble request for your reply sir,
🙏🙏🙏🙏🙏
தாசமார்க்கம்-இறைவன் தலைவன்.சத்புத்ர மார்க்கம்-இறைவன் தந்தை.சகமார்க்கம்-இறைவன் நண்பன்.சன்மார்க்கம்-உயிர் இறைதன்மை அடைதல்.