68. Pambai Nathi Karaiyinile Song (பம்பை நதி கரையினிலே பாடல்)Tamil lyrics in Description
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- Special Ayyappan song
பம்பை நதி கரையினிலே பாடல்
( பம்பை நதிக் கரையினிலே அந்தி வரும் வேளையிலே
சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கழுத்தில் மணி மாலை கொண்டு தாலேலோ
சின்ன விரல் அசைத்து விழி உருட்டி பார்த்ததே
இந்த உலகத்தையே தனதாக்கி கொண்டதே)2
( யாரும் இல்லையே அருகில் தாயும் இல்லையே+1
தேவனைக் காக்க யாரும் தேவை இல்லையே+1)
(தாயவளும் பாற்கடலில் உரு மாறி நின்றாலோ
தந்தையவன் பெரும் கூத்தில் உலகாள சென்றானோ)2
ஆதரவு யாருமின்றி என்னைப் போல நின்றாயோ
கொடும் பணி காட்டுக்குள்ளே தனியாக வந்தாயோ
கங்கை வந்து நீராட்ட நந்தவனம் பூச்சூட்ட அழகு ஊஞ்சலிலே தொட்டில் கட்டி குயில் பாட
பசியின்றி பயமின்றி துயில் பவனே
என் மன்னவனே கண்மணியே ஆராரோ
(யாருமில்......2)
( பந்தளத்து மன்னவனும் கனவோடு வந்தானோ
ஏழு ஜென்மம் தவம் செய்து உன்னை கண்டு கொண்டானோ)2
நாளும் தினம் ஏங்குகிறேன் என் வீடு வாராயோ
போதும் உந்தன் பிறவி என்று எனை ஆல மாட்டாயோ
பம்பை நதி ஓரம் எல்லாம் பித்தம் கொண்டு தெளிக்கிறேன்
உன்னை கொஞ்சி ஆதரவாய் முத்தம் தர ஏங்குகிறேன்
கலிகாலம் கரைசேர வந்தவனே
என்னை கொள்ளையிடும் நல்லழகே ஆராரோ
(யாருமி.....2)
(பம்பை....4வரி)
(யாருமி....2)