ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் உண்டியல் திறப்பு ரூ 26.65 லட்சமும், தங்கம் 33gm, வெள்ளி காணிக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ரூபாய் 26.65 லட்சமும், தங்கம் 33 கிராம் மற்றும் 300 கிராம் வெள்ளிப்பொருட்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் உள்ள 8 உண்டியல்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கோயில் செயல் அலுவலர்கள் சின்னசாமி, சிவா ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் பூவரசன், அருள்மணி மற்றும் வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், ஊர்பொதுமக்கள் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். உண்டியலில் ரூ.25லட்சத்து 65 ஆயிரத்து 422 ரூபாய் காணிக்கையும் மேலும் 33 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளிபொருட்களும் இருந்தன. மேற்கண்ட தொகை வங்கி ஊழியர்களிடம் ஒப்படைத்து தனியார் வங்கியில் செலுத்தப்பட்டது.

ความคิดเห็น •