#பத்தூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • சொற்றமிழ்ச்செல்வர் சோலார்சாயி அவர்களின் தெய்வீக குரலில் சுந்தரர் திருப்பாட்டு- இசை - நாம்

    திருச்சிற்றம்பலம்
    பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
    பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
    செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
    செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
    முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
    அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
    கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 1------------------------------------------------------------------------------------------------------------------
    வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
    விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
    பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
    பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
    சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
    திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
    காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 2 ------------------------------------------------------------------------------------------------------------------
    பூண்பதோர் இளஆமை பொருவிடையொன் றேறிப்
    பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
    பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
    பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
    வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
    வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
    காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 3 ------------------------------------------------------------------------------------------------------------------
    விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
    வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
    துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
    சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
    வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
    மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
    கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 4 ------------------------------------------------------------------------------------------------------------------
    மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
    வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
    தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
    சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம்
    பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
    பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக்
    கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 5 ------------------------------------------------------------------------------------------------------------------
    இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
    இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
    பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்
    பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
    உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
    உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
    கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 6 ------------------------------------------------------------------------------------------------------------------
    தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
    தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
    தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
    திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
    நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
    நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
    காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7 ------------------------------------------------------------------------------------------------------------------
    மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
    வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
    ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
    அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில்
    தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந்
    தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
    காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 8 ------------------------------------------------------------------------------------------------------------------
    மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
    மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
    எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்
    எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்
    திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்
    திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
    கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 9 ------------------------------------------------------------------------------------------------------------------
    மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர்
    மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
    கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
    கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
    பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
    பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
    கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 10 ------------------------------------------------------------------------------------------------------------------
    பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
    பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
    உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
    ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்
    கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்
    றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன
    அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.11 ------------------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 59

  • @raghuramanr8574
    @raghuramanr8574 2 วันที่ผ่านมา

    Hara hara mahadeva om namasivaya Om 🕉 🙏

  • @AkilandeshwariS-w7l
    @AkilandeshwariS-w7l 7 หลายเดือนก่อน +3

    இறைவா உம்மை என்றும் மறவாத நிலை வேண்டும்

  • @rml-s6t
    @rml-s6t 8 หลายเดือนก่อน +8

    சுந்தரர் தேவாரம் அற்புதமா சாயி குரல் அற்புதமா இரண்டும் அற்புதம்

  • @raghuramanr8574
    @raghuramanr8574 19 วันที่ผ่านมา +1

    Om 🕉 namasivaya Om 🕉 🙏

  • @Amsarani-u1k
    @Amsarani-u1k 7 หลายเดือนก่อน +5

    சுந்தர தேவாரம் என்றால் சோலார் சாயிதான் உரியவர் ஓம் நமசிவாய ஓம் ஓம்

  • @raghamalakitchen
    @raghamalakitchen 27 วันที่ผ่านมา +2

    அற்புதமான குரலில் இறைவனை நேரில் கண்டேன் நன்றி ஐயா

  • @rjbharathi6191
    @rjbharathi6191 7 หลายเดือนก่อน +4

    வரிகளுடன் தங்கள் பாடல் பாடும் தன்மை மிகவும் அழகு வாழ்த்துக்கள்❤

  • @mangalmr2096
    @mangalmr2096 7 หลายเดือนก่อน +5

    அருமையான குரல்
    இனிமையாக இவ்வளவு எளிதாக தேவாரம் கேட்பேன் படிப்பேன் என்று நான் நினைத்து பார்த்தது இல்லை நீங்கள் பல கோடி நூறாண்டுகள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

  • @raghuramanr8574
    @raghuramanr8574 23 วันที่ผ่านมา

    Om namasivaya Om 🕉 🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 6 หลายเดือนก่อน +1

    அருமையான அற்புதமான பாடல் அற்புதமானகுரல்வளம்வாழ்த்துக்கள்

  • @gowthamshanthi3368
    @gowthamshanthi3368 7 หลายเดือนก่อน +1

    நமச்சிவாய வாழ்க

  • @SSuba-b7h
    @SSuba-b7h ปีที่แล้ว +6

    சிவ சிவ ஹர ஹர

  • @revathyrevathy926
    @revathyrevathy926 7 หลายเดือนก่อน

    ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏

  • @weyneegovind814
    @weyneegovind814 หลายเดือนก่อน

    Om nama shivaya

  • @ponnusamymutharasu5029
    @ponnusamymutharasu5029 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @nanusri4558
    @nanusri4558 7 หลายเดือนก่อน +6

    நமச்சிவாய சிவா இந்த பதிகம் தொடர்ந்து 48 நாள் கேட்கும் போது கண்டிப்பாக செல்வம் செழிப்பு சுந்தரர் பெற்றது உண்மை நமக்கும் இறைவன் ஒருவரால் 100 பேரை நேரில் பார்த்தேன்

    • @Moorthyusha-nr6mh
      @Moorthyusha-nr6mh 7 หลายเดือนก่อน +2

      சிவாயநம🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @bhavaniswaminathan6431
      @bhavaniswaminathan6431 3 หลายเดือนก่อน +1

      சுந்தர்பாடலுக்குசுந்தர இசையால் கேட்டு மகிழ்ந்தேன்😂

  • @balaswathymahendran9202
    @balaswathymahendran9202 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @bommaasree748
    @bommaasree748 ปีที่แล้ว +11

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை 🍂🎂 இனிய பிறவி திருநாள் நல்வாழ்த்துக்கள் மகேஸ்வரி மகேஸ்வரா போற்றி 🌷☘️ நன்றி இறைவா 🙆☘️🌺🌿👌🤞மகா தேவா போற்றி 🌷

  • @muruganandham-1854
    @muruganandham-1854 11 หลายเดือนก่อน +23

    கோயிலுக்கு சென்று வந்து பதிகத்தை பல முறை படித்தும் மிகவும் புரியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சிவனே நேரில் வந்து புரிய வைத்தார். ஓம் சிவாயநம

  • @chenthiltr
    @chenthiltr ปีที่แล้ว +2

    சிவாயநம

  • @sambooranamv5032
    @sambooranamv5032 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @nanusri4558
    @nanusri4558 ปีที่แล้ว +8

    குருவின் குருவே! நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவடி நிழலில் சரணம் இந்த பதிகம் இறைவனிடம் உரிமையாக.சுந்தரர் எனக்கு நீதான் எல்லாம் கதர் வேண்டும்.என கேட்டு அனுபவித்தார்.நாமும் தொடர்ந்து.11நாள் கேளுங்கள்.பலன் கை மேல் இறைவன்.நமக்கு எல்லா செல்வத்தையும் தருவார்!

    • @dharmarr392
      @dharmarr392 9 หลายเดือนก่อน +1

      True Anna

  • @tmmurugan3241
    @tmmurugan3241 2 หลายเดือนก่อน

    Om nama sivaya

  • @nanusri4558
    @nanusri4558 ปีที่แล้ว +15

    பதிகம்.பாட பாட கேட்க கேட்க பதியும் அடுத்த தலைமுறைகள் எளிமையாக..பாட உதவிய சிவலோகத்திற்கும் குரலுக்கு சொந்தமான சிவ சோலார் சாய் ஐயா.வாழ்க வளமுடன் என்றும்

  • @premasambandham6409
    @premasambandham6409 ปีที่แล้ว +3

    சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh 4 หลายเดือนก่อน +2

    இந்த பதிகம் பாடினால் ஒரு தனி பலன் இருக்கு அடியேன்

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t ปีที่แล้ว +3

    Shiva Shiva Shiva 🙏🏻

  • @kanagarathinamkumar2592
    @kanagarathinamkumar2592 ปีที่แล้ว +2

    சிவ சிவ.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    சிவாய நம🍋🙏

  • @sriramagency5047
    @sriramagency5047 9 หลายเดือนก่อน

    Om namasivaya.

  • @saravanan-bu5yb
    @saravanan-bu5yb 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @santelahshmy74
    @santelahshmy74 10 หลายเดือนก่อน

    om namashivaya 🙏

  • @periyasamy1494
    @periyasamy1494 5 หลายเดือนก่อน

    Om namasivaya ❤

  • @danasekaran327
    @danasekaran327 5 หลายเดือนก่อน

    இப்புன்னியவான் பாடியருளிய வேல் மாறல் பாடல் கேளுங்கள் பத்த கோடி பெருமக்களே வேற லெவல் சாய் அவர்களுடய கனீர் குரலில் முருகப்பெருமானையே காணலாம்

  • @MalathiNagarajan-m4n
    @MalathiNagarajan-m4n 2 หลายเดือนก่อน

    Super

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 ปีที่แล้ว +1

    சிவாய நம.. 🙏🙏🙏

  • @PramilaDillibabu
    @PramilaDillibabu 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 4 หลายเดือนก่อน

    கேட்போர் மனதை மயக்கும் அருமையான குரல்வளம் அற்புதமான பாடல் நன்றி நன்றி நண்பரே

  • @Sivansittam
    @Sivansittam 3 หลายเดือนก่อน

    Good to have in english as well😊

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh 7 หลายเดือนก่อน

    Om nama shivaya 🎉🎉🎉🎉🎉nama arumai iyya

  • @கஅய்யாசாமி-ய8த
    @கஅய்யாசாமி-ய8த 11 หลายเดือนก่อน

    நமசிவாய மனம்உருகுகிறது

  • @anbesivan6499
    @anbesivan6499 ปีที่แล้ว

    உஷா கோவில்பட்டி
    ஓம்நமசிவாய 🙏🙏🙏

  • @rubeshkumar3906
    @rubeshkumar3906 3 หลายเดือนก่อน

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 10 หลายเดือนก่อน +1

    கத்தூரி கமழ்சாந்து சரியான வார்த்தை கஸ்த்துரி இல்லை

  • @sriramvallivalli813
    @sriramvallivalli813 9 หลายเดือนก่อน

    இந்த தேவாரப்பாடல் வரிகள்எங்கு கிடைக்கும் ஐயா

    • @balammalmuthuirlappan8056
      @balammalmuthuirlappan8056 5 หลายเดือนก่อน

      சுந்தரர் பாடிய
      ஏழாம் திருமுறையில்
      திருநாகைக் காரோணம்
      பதிகம். கூகுளில்
      பாருங்கள்.....

  • @HariSharma-vu9pj
    @HariSharma-vu9pj ปีที่แล้ว +3

    Om namah shivaya

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t ปีที่แล้ว

    Shiva Shiva Shiva 🙏🏻

  • @PramilaDillibabu
    @PramilaDillibabu 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @lathabaskar2079
    @lathabaskar2079 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @meenapriya2287
    @meenapriya2287 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @PramilaDillibabu
    @PramilaDillibabu ปีที่แล้ว +1

    🙏🙏🙏