அழியும் ஜமீன் வம்சம் |உடையார்பாளையம் ஜமீன் அரண்மனையின் தற்போதைய நிலை 😢
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே.
தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் உடையார் பாளையம் பாளையமும் ஒன்று. இதன் ஆட்சியாளர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று
தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே. கி.பி.1500-களின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அழகிய கலைநயமிக்க கட்டிடக்கலையுடன் கூடிய இந்த அரண்மனை 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனைச் சுற்றிலும் அகழி, கோட்டைச்சுவர் ஆகியவை கி.பி.1802 ஆண்டு வரை கட்டப்பட்டது. 64 அறைகள் இருந்த இந்த அரண்மனையில் 25 அறைகள் நன்றாக இருந்தன. சில அறைகள் தாஜ்மஹாலை போல் சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கின. அரண்மனையின் தர்பார் ஹால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று காணப்பட்டன. இச்செய்திகள் திரு கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 'உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்' நூலில் கூறப்பட்டுள்ளன. இவரது தந்தை திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் (கிபி.1869-1918) இந்த அரண்மனை இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பழுதுப்பார்க்கப்பட்டது. பழைமையும்,பெருமையும் மிகுந்த இந்த அரண்மனை தமிழக அரசின் ஆதரவின்றி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.
உடையார்பாளையம் 24-வது அரசரான திரு.கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார் கல்வியறிவும்,தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர். கி.பி.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் அரசராக முடிசூட்டிக்கொண்டபின் அரண்மனையில் தர்பார் கூடியபோது, சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் அருளாசி வழங்கியிருக்கிறார். சுமார் 600 ஆண்டுகள் பழைமையான கலைநயமிக்க உடையார்பாளையம் அரண்மனை இவரது தந்தையார் திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. அரும்பெரும் செயல்கள் செய்த தனது தந்தையார் நினைவாக 'கைலாச மஹால்' என்னும் கோயிலை சின்ன நல்லப்பர் எழுப்பினார். அரியலூர் மழவராயரின் மகளான ஒப்பாயாள் என்பவரை மணந்துகொண்டார். சின்ன நல்லப்பர் காலத்தில் தான் 'உடையார்பாளையம் சமஸ்தானத்தின் வரலாறு' ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. உடையார்பாளையம் அரசர்கள் விளந்தையை ஆட்சி செய்த வன்னியர்களான வாண்டையார்களுக்கு உறவினர்களாக விளங்கினார்கள் என்று கி.பி.18-ஆம் நூற்றாண்டின் விளந்தை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
#udayarpalayam #உடையார்பாளையம் #ஜமீன் #udayarpalayamjaminpalace #udayarpalayamjamin #உடையார்பாளையம்ஜமீன் #ஜமீன்ஆட்சி #jayakondam #ஜெயகொண்டம் #அரியலூர் #ariyalur #perambalur #பெரம்பலூர் #கும்பகோணம் #kumbakonam #pudukottai #pudukottaipalace #arupukottai #seemaraja #king #cholla #cozha #சோழன் #கங்கைகொண்டசோழபுரம் #gangaikondacholapuram #rajenderacholan #rajarajan #udaiyarpalayamsivantemple #udaiyarpalayamkoil #kattumannarkoil #cuddalore #traditional #village #villagestyle #vlog #sad #happy #ராஜா #udaiyar #உடையார்குடி #அரண்மனை #ராஜாஅரண்மனை #ராஜா #கோட்டை #fort #bigfort #oldfort #oldpalace #sivangangaipalace #mysore #mysorepalace #tamil #travel #udaiyarpalayamaranmanai #aranmanai #jaminaranmanai udaiyarpalayamaranmanai
தெளிவான விளக்கம், சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
மிக்க நன்றி அண்ணா ❤️
@@kmk360 th-cam.com/video/N-1rV_TzyvE/w-d-xo.html SAFARI TV LINK
Super
ஜமீன் என்றால் உடையார்பாளையம் ஜமீன்மட்டுமே. தமிழகத்துப் பட்டித்தொட்டி எல்லாம் அறிந்த பழைமையான ஜமீன் !
🤣🤣🤣🤣
மிக சிறப்பாக இருந்தது. இந்த காணொளியை பார்த்தாவது தமிழக அரசு நடவடிககை எடுத்து இந்த அரண்மனையை சீர்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றினால் இந்த காலத்து மாணவர்களுக்கு ஒரு வரலாற்றை அறிநதுகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.நன்றி
Thank you
இதற்கு செலவு செய்ய வேண்டுமானால், தமிழ்நாட்டின் மொத்த வருமானமும் பத்தாது. இதை போல் ஏகப்பட்ட ஜமீன் தமிழ்நாட்டில் உள்ளது. இன்னமும் இதற்கு வாரிசுகள் இருப்பார்கள். இன்னொரு காரணம் இவர்கள் பல்லவ வழி தோன்றல்கள்.தமிழர்கள் இல்லை. அதனால் கூட அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.
Arasu na nadavadikai edduka vendam raja ovada son sarakaduchi azhiyama erundha pothum
அந்த உடையார் பாளையம் ஜமீன்தார்கள் வம்சம் இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.
Jameen vamsam innum irukanga avanga govt ku kudukala
நம் பண்டைய கால தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய வரலாறு இப்படி அழிய விட கூடாது... இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அரண்மனை மறைக்கப்பட்ட அதிசயங்கள்.... நாம் இதனை மீட்டு எடுக்க நம் தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன் 😔🙏
அரசாங்கம் முன் வந்து இந்த உடையார் பாளையம் அரண்மனைய புதுப்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... வாழ்க ஜமின் வம்சம்...
தகவலுக்கும் முயற்சிக்கும் நன்றிகள்...!! நான் அந்த ஊருக்கு பக்கத்து ஊர் தான்...!! நான் விசாரித்த வரை கோவிலையும் - அரண்மனையும் ஜமின் வாரிசுகள் சொந்த செலவில் மட்டுமே புதுப்பிக்க விரும்புகிறார்கள்.... அரண்மனையின் - கோவிலின் உரிமையை அரசுக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை; NGO கள் முயற்சியையும் யாசகம் என்று கருதி ஏற்க மறுக்கிறார்கள்...!! அது எல்லாம் போக அளவுக்கு அதிக வரி - மற்றும் பல பெண்கள் வாழ்க்கை சூறையாடபட்டதல் வந்த சாபம் என்ற செவிவழி செய்தியும் உண்டு....!! எது எப்படியோ - ஒரு வரலாற்று அடையாளம் சிதைந்து கொண்டிருக்கிறது....!
இந்த அரண்மனையை ஒலி ஒளி காட்சி படுத்திய தங்களுக்கு நன்றி...🙏 எனது மூதாதையர் எனது தந்தையின் தந்தையார் நன்னாசாகேப் அவர்கள் இந்த அரண்மனையில் மன்னரின் நேர்முக பாதுகாவலரும் படை தளபதியாகவும் பணியாற்றியவர் என்று சொல்வதில் சந்தோஷம் உண்டாகும் நான் தற்போது தஞ்சாவூரில் இருந்தாலும் நான் பிறந்த மண் உடையார் பாளையத்தில் கால் பதிக்கும்போது ஒரு சிலிர்ப்பு என் உடலில் ஏற்படும் எனது உறவுகள் இன்றும் உடையார் பாளையத்தில் வசிக்கின்றனர். ஊருக்குள் வந்து அரண்மனை வழியாக வீட்டிற்கு போகும் போது எனையும் அறியாமல் என் கண்கள் அரண்மனை பக்கம் திரும்பும். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. நான் பலமுறை அரன்மனை சென்று வந்துள்ளேன் ஆனாலும் இவ்வளவு விரிவாக பார்த்ததும் இல்லை . அழகாக படம்பிடித்து அதற்கு வர்ணனையும் தந்து உலகின் பார்வைக்கு தந்த உங்களுக்கும் உங்கள் படபிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...🙏💕 அப்துல் ரஷீத் (பாபு) தஞ்சாவூர். 9043560330
உங்கள் விலை மதிப்பில்லாத நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி ❤️❤️❤️
காலம் மாறும் போது காட்சிகள் மாறும் இது தான் இயற்கையின் நியதி
தகப்பனுக்கு.. சிலை கட்ட துடிக்கும்.. முதல்வர். இது போன்ற இடங்களை பராமரிக்க முன் வரவில்லை
ஏன்னா.. அவர்கள் தமிழர்கள் இல்லை..😚😚😚😚
Sad fact😒
Intha jamin tamil kidayathu enru ninaikeran
Pallavargal kidayatu
Pallava kalam 8th century
Ohh
இது மட்டும் தமிழ் நாட்டை தாண்டி இருந்திருந்தால். இன்றும் இந்த அரண்மனை சிறப்பாக இருந்திருக்கும்
புகழ் மற்றும் பெருமை இன்றுமே அதிகம் இருக்கிறது.. பராமரிப்பு இல்லை 😢
Correct
crt
இதை அப்படியே தூக்கி கிட்டு போய் ஓசூர் மாநகராட்சியை தாண்டி வச்சிட்டா நல்லா இருக்கும்..... இத சொன்னா நம்மல பைத்தியக்காரன் னு சொல்றானுங்க......
மிகவும் சிறப்பு!!! தமிழக அரசுதான் இதற்கு உயிர் கொடுக்க வேண்டும். அல்லது சமூக ஆர்வலர்களும், மக்களும் ஒன்றிணைந்து இதை உயிர்ப்பிக்க வேண்டும்.
🙏🙏🙏
எனது தாத்தா நடேசகோனார் இந்த அரண்மனையில் மணியக்காரராக பணியாற்றியவர்
❤️❤️❤️ சிறப்பு நண்பா
Your number please... I'm from Chidambaram..
ஏன் இப்போது இந்த நிலைமை?
Phone number
உடையார் வம்ச ஜமீனாக இருந்தால் சோழர்கள் உடையார் வம்சத்தவரே.
அருமை நண்பரே எங்களை போன்றோருக்கு நேரில் பார்த்ததுபோல் விளக்கி காண்பித்தீர்கள் நன்றிகள் பல பல....இருந்தாலும் நேரில் ஒரு முறை சென்று பார்க்கவேண்டும் என்பது என் ஆசை அரச குடும்பத்தினர் வாழ்ந்த வாழ்க்கையை.....
கண்டிப்பா சென்று பாருங்கள் நண்பர்களே.. நல்ல அனுபவம் தரும்..
உடையார்பாளையம் ஜமீன் அரண்மனை மிகவும் கலைநயத்தோடு உள்ளது எப்படி இந்த அரண்மனை வியப்பாக உள்ளது அரசாங்கம் கூட இந்த அரண்மனை எடுத்து பாதுகாக்கலாம் தமிழ்நாட்டின் வரலாறு காக்கப்பட வேண்டும் நிகழ்ச்சி வர்ணனை சிறப்பாக உள்ளது நன்றி வணக்கம்
மிக்க நன்றி ❤️ அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம் 👍
அரசாங்கம் எடுத்து யாராவது ஒருவருக்கு சொந்தமாக்காமல் இருந்தால் நல்லது.
எடுக்க மாட்டன் என்ன இது தமிழர் ஆவார்
ஆணான பட்ட ராஜா ராஜ சோழன் சமாதியையே கண்டு கொள்ளாமல் உள்ளது இந்த அரசுகள்.
பழமை என்றும் அழிய கூடாது இதை தமிழக முதலமைச்சர் பார்வைக்கு கொண்டுச் செல்வோம் தமிழா
Do you want Stalin to take selfie?
இந்த நிலைக்கு காரணம் அவர்கள் பரம்பரை சார்ந்தவர்கள் தான் என்பது இன்னும் மருத்துவம் அளிக்கிறது சிறப்பான பதில் அளித்த உங்களுக்கு நன்றி❤
இதுவே வட இந்தியாவாக இருந்திருந்தால் இதனை புதுப்பித்து மக்கள் பார்வைக்காக வைத்திருப்பார்கள்... மிகவும் மன வேதனைக்குள்ளாக இருக்கிறது...😔
ஏன்?? பத்மனாப புரம் பேலஸ் பராமறிப்பில் தானே இருக்கு???!
It's in Kerala that's why...
If it had been North India, it would be renovated and converted to a 5 star hotel
@@ecityquery6203 yes but any way it ll be safe, but here in tamilnadu it destroyed fully and built a hotel new one on the pericious place 🤷🏻♂️🤦♂️
@@pixelboxmedia7758 I did not mean demolish and rebuild. By renovation, I meant preserve the current structure, do all repairs, flooring, plastering and paint to retain the same art and design without destroying/removing anything. That is how they have made 5 star hotels in Rajasthan. If Govt and family not spending to maintain, they have to sell it to someone who will bring back life to the beautiful palace. A stitch in time would have saved nine. Even if they could not afford to paint it, the family who lives there should have eradicated the plants that started growing years ago inside the building. The damage could have been averted. Some other families have invested to maintain/renovate heritage houses; they earn a lot by renting it out for shootings etc. like the chettinad houses for example. This family has been irresponsible and living only to claim ownership. Maybe they r renting out Darbar hall for functions.
வாழ்த்துக்கள் அண்ணா. நம் தமிழ் இணத்தின் கட்டிக்கலையை மற்றவர்களுக்கு புரியும் அளவுக்கு எடுத்துரைத்தற்கு மிகவும் நன்றி.இந்த நிலை மாறவேண்டும் என்று நாம் அனைவரும் ஆண்டவனிடம் வேண்டிக் கொள் வோம். கனத்த இதையத்துடன்.
Thanks
நானும் இந்த ஊர் தான் எனது தாத்தா இந்த அரண்மனை யில் வேலை பார்த்த தாகனக அறிந்தேன்.நான்பள்ளியில் 72-76படித்த போது தாங்கள் குறிப்பிடும் 60ஆம்கல்யாண ஜமீன் தனது தங்கையுடன் வில் வண்டியில் பள்ளி க்கு வருவார்கள்.சீர்காழியில் 1.5கோடியில் கட்டப்பட்ட தமிழிசை மூவர் கட்டிடம் தற்போது 43லட்ச்சத்தில் புனரமைப்பு செய்ய உள்ளார்கள்.இது போன்ற அரண்மனை மை புனரமைப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
👍❤🤝
intha oorla oollur ethavathu oooru erucka
நான் உடையார்பாளையம் சேர்ந்தவன் எங்க ஊரில் இதற்கு போல் சீரமைக்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருக்கிறது தமிழ் அரசு கவனத்தில் கொண்டு சீரமைத்து தர வேண்டும்
True
First develop Tamil dynasty tha will do automatically vote and give power
தமிழர்கள் தெலுங்கு கருணாநிதி குடும்பத்துக்கு ஓட்டை போட்டுவிட்டு அவர்களிடம் மனு கொடுப்பது, போராடுவது தமிழனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. தமிழர்களைச் சாதியாக பிரித்து வைத்திருக்கிறான் திருட்டு திராவிடன். சீமான் முதல்வர் ஆனால் இந்த வரலாறு காப்பாற்றப்படும். உதயநிதி நடத்திய கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு 10 கோடி வீண்செலவு செய்யமாட்டான் சீமான். 500 கோடியில் சினிமா நடிகருக்கு கட்டடம் கட்ட மாட்டான். திராவிடனுக்கு ஒட்டு போடும் தமிழன் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடவில்லை பொறம்போக்குகள்.
ஒரு காலத்தில் இந்த அரண்மனை யில்எத்தனை தலைமுறை , எத்தனை குடும்பங்கள் தங்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து இருப்பார்கள் அவற்றை கற்பனை செய்து பார்க்கும்போது கவலையாக உள்ளது 😢😢😢
உண்மை. பல புகைப்பட சான்றுகள் கூட உள்ளே உள்ளது
I've once visited this jameen with our family. I remember one photo of the favorite horse of the jameen. It's name was Benhur, named after the famous American movie
எத்தனை ஆயிரம் மக்களை கடுமையாக வாட்டி வரி வாங்கி , இதைக் கட்டி இருப்பார்கள் ?
Yes bro indha maari aranmai namba government sari panathu
@@prkaliappankaliappan8339 சவுகடிகளும் உண்டு,ஏழ்மை,தாழ்ந்த ஜாதி,ஆகியோரது வீடுகளில்,அழகான பெண்கள் இருந்தால் இவர்களினால் ஆபத்தும் இருந்தது
எப்படியெல்லாம் கம்பீரமாக வாழ்ந்து வீரம், வலிமையுடன் வாழ்ந்து இருப்பார்கள்....!!!!!!!ஆனால் இன்றைய நிலை காண இயலவில்லை...கண்களும்,மனதும் கணக்கிறது😔😥😥😓😓
இதை வெளியே கொண்டு வந்த தர்கு நன்றி சகோ.... இதை அரசு பார்வைக்கு போகும் வரை பகிர்வோம்🔥🔥💪🏻💪🏻
🙏🙏
நானும் ஜமீன் கணக்குப்பிள்ளை கலியபெரு
மாள் ஆசிரியரும் அந்த அரண்
மணையின் சிற்ப சிறப்புகள்
அழிந்து கொண்டிருப்பது கண்டு கவலை கொண்டேன்.அரண்மணையின் இரும்பு உத்தரப் கள் லண்டணிலிருந்து உத்தரப் கள் 1837ம் ஆண்டு வந்திருப்தைக்
கண்டேன். பழைய ஜமீண்தார்களுடன் ஆங்கில
அதிகாரிகள்இருக்கும் படம்
கண்டேன். இளைய ஜமீன்தார் எங்களுக்கு காப்பி கொடுத்தார்.
அழிந்து கலைக்கூடத்தில் தான்
அன்று ராஜரத்தினம் பிள்ளை
நாதஸவரக் கச்சேரி நடத்தினாராம். அரசு அந்த அரண்மணையைப் புதுப்பிக்க
ஒரு கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என்று பணி
வுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சீரங்கத்தார்.
2012ல் நாங்கள் அரண்மனை
இரும்பு உத்திரங்கள் 1837ல்
லண்டணிலிருந்து வந்திருப்பதை கண்டோம்.
சீரங்கத்தார்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனது அக்கா இந்த உடையார் பாளையத்தில் தான் வாக்கப்பட்டு உள்ளார் நாங்கள் போகும்போது ரோடு ஓரமாக இந்த ஜமீன் தெரியும் ஆனால் உள்ளே சென்று பார்த்தது இல்லை நீங்கள் காட்சிப்படுத்திய விதம் சூப்பர்
அற்புதம், பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம்.
நன்றி 🙏
மிக அருமையான... போற்றத்
தகுந்த...பாராட்டும்படியான
வீடியோ. உங்களைப் போன்றோர்
இதில் இந்த அக்கரை காட்டியதால்
தான் எங்கேஏஏயோ இருக்கும் என்
போன்றோர் இந்த அபூர்வ பொக்கி
ஷத்தை காண முடிந்தது. ஆசை
இருக்கு...நேரில் பார்க்க...மிக
அருமையான படப்பிடிப்பு.
வாழ்த்துக்கள்... நீடூழி வாழ்க.
மிக்க நன்றி ❤️❤️
மிக்க சந்தோஷம் இந்த அரண்மனை காட்டியதுக்கும் உங்கள் விளக்கமும். மனம் கவலையாகவும் உள்ளது இந்த அரண்மனை அழியும் தருவாயில் உள்ளது
Hi
ஒரு கோவிலின் அலகை விட மிகவும் சிறப்பாக இருக்கே. இந்த அரண்மனை இத்தனை இத்தனை கலைநயம் மிக்க சிற்பங்கள் தாழ்வாரம் தூண்கள் பார்க்கவே மிகவும் அலகாக இருக்கு ஆனா இவ் வரண்மனை அழிவின் விளிம்பில் இருக்கு என்பதை நினைக்கும் போது மனதுக்கு மிகவும் வருத்தமாய் உள்ளது இப்படி உள்ள அரண்மனைகள் அனைத்தையும் அரசாங்கம் எடுத்து புணரமைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் நமது பாரம்பரியம் மிக்க பொக்கிஷங்களை காப்பாற்ற முடியும் நன்றி வணக்கம்
ஆம் நண்பா
தமிழர்கள் தெலுங்கு கருணாநிதி குடும்பத்துக்கு ஓட்டை போட்டுவிட்டு அவர்களிடம் மனு கொடுப்பது, போராடுவது தமிழனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. தமிழர்களைச் சாதியாக பிரித்து வைத்திருக்கிறான் திருட்டு திராவிடன். சீமான் முதல்வர் ஆனால் இந்த வரலாறு காப்பாற்றப்படும். உதயநிதி நடத்திய கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு 10 கோடி வீண்செலவு செய்யமாட்டான் சீமான். 500 கோடியில் சினிமா நடிகருக்கு கட்டடம் கட்ட மாட்டான். திராவிடனுக்கு ஒட்டு போடும் தமிழன் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடவில்லை பொறம்போக்குகள்.
நான் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் உதயநத்தம் உடையார்பாளையம் வட்டத்தில் இருந்தது இப்போது ஜெயங்கொண்டம் வட்டம் அப்போதெல்லாம் மிகுந்த வரட்சியான பகுதி ஆனால் மக்கள் மனதில் ஈரம் இருந்தது தற்போது எங்கும் பசுமையாக உள்ளது ஆனால் மக்கள் மனம் வறட்சியாகிவிட்டது
😥😥
இவ்வளவு பேசும் நீங்கள் ஜமீன் வாரிசு ஒருவரை பேட்டி எடுத்து இருக்கலாமே
இவ்வளவு பேசும் நீங்கள் ஜமீன் வாரிசு ஒருவரை பேட்டி எடுத்து இருக்கலாமே!
அன்று ஜமீன் அவர்களின் 60 ஆம் ஆண்டு திருமணம். விரைவில் அவரிடமே எடுப்பேன். நன்றி 🙏
இப்பொழுது உடையார்பாளையம் வட்டம்தான் பெயர் அளவில்
Na oru 10 month kku munnadi poi erunthen aana pakka vedala. Rompa kastama etunthathu antru, but ennikku unga video mulam parthu racithen, very happy thanku so much.
Thanks😍🙏
சிறப்பு மிக்க வீடியோ. அரசின் பார்வைக்கு தெரிவித்து சீர் செய்யவும்.
நன்றி
தெளிவான விளக்கத்துடன் எங்களுக்கு இப்பதிவை தந்த தம்பி உங்களுக்கு எனது நன்றிகள்பல
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏
எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
கல்வி 😎
மிகச்சிறப்பான பதிவு. காட்சிப்படுத்தல் பாராட்டுக்குறியது. தெளிவான விளக்கம்.. இக்கட்டிடங்களில் உள்ள கலை அமைப்பு தமிழர் கட்டிடக்கலை மட்டுமன்றி நாயக்கர் மற்றும் இஸ்லாமிய கலை வடிங்களையும் காணலாம். இந்த கலை அம்சம் அரண்மணையின் புராதனத்தை உணர்த்துகிறது.
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா ❤️
Great salute beloved brotherI wish you have a wonderful life
They are OUR ANCESTORS
WE ARE FROM THE GRASS ROOT OF THE FAMILY
Hello sir how r u...na dhaulath thambi
Thanks sir
அழகான குரல் கேட்க இனிமையாக இருந்தது சென்று பார்த்த திருப்தி ஜமீன் அருமை
இது போலுள்ள👌 பொக்கிஷங்கள 🤝நாம பாதுகாக்கலைனா நம்ம🤔 ஏழு தலைமுறைக்கும்🤔 பாவம் வந்து சேரும்.🤔
இதை பார்வைக்கு கொண்டு வந்ததுக்கு நன்றிகள் பல ஆனால் மனம் கண்ணீர் வடிக்கிறது வாழ்த்து வாழ்த்துகளுடன்
இந்த ஜமீன் கோட்டையை சூட்டிங் எடுக்கும் டைரக்டர்கள் இந்த கோட்டையை கொஞ்சம் சீரமைத்து கொடுக்க முடியும்😎
தமிழ், தமிழன் என்று வெறும் பேச்சு வீண். இந்த மாதிரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டும். வெறும் 200, 300 வருட வரலாறு கொண்ட நாடுகள், மதங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் தமிழக பாடத்திட்டம், அதை விட முக்கியமாக
தமிழக கலாச்சாரம், இந்திய கலாச்சாரம், இந்துக்களின் நம்பிக்கை கொண்ட இடங்களைப் பாதுகாக்கவும், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்ய வேண்டும் 🙏
Prof. J. S. Manickarajan Kumbakonam. Tamilnadu government should do the needful to renovate this oldest palace for it declares the ancient civilisation of Tamilnadu The paintings and sculptures are really excellent
அருமையா தெளிவா சொல்லிட்டீங்க நண்பா எல்லோரும் பார்க்கவேண்டிய இடம் ரொம்ப அழகான சிற்பங்கள் மிக்க நன்றி நண்பா
நன்றி🙏💕
தமிழ்நாடு அரசுக்கு எனது கோரிக்கை இது மாதிரி இருக்கும் ஜமீன் சரி செய்து பொருள் காட்சி யாக மாற்ற வேண்டும் எனது பதிவு
அருமையான வீடியோ... வந்த வதயென்று பேசும் வீடியோக்களிள் இடையில் ஓர் உண்மையான வைரக்கல்லை பார்த்து போல் உணர்வு
❤❤❤மிக்க நன்றி அண்ணா 🙏🙏
உண்மை.தமிழ்தாத்தா.உ.வே.சா.அவர்களின்வாழ்வு.இங்கிருந்துதான்தொடங்குகிறது. உவேசாஅவர்களின்சுயசரிதை.நல்லுரைகோவை.போன்றநூல்களில்.உடையார்பாளையம்ஜமீன்குறித்துசிறப்பாகவும்..மேண்மையாகவும்குறிப்பிடுகிறார்.ஜணகமஹராஜாவுக்கு..இணையாக.ஆன்மீகம்.அறநெறியிலும்சிறந்துவிளங்கியதாக..பதிவுசெய்கிறார்.நானும்அம்மண்ணில்பிறந்து..ஜமீனுக்குசொந்தமான.காண்டீபதீர்த்தம்எனும்.பெரியகுளத்தில்.நீந்திவளர்ந்தேன்..அற்புதமானகாலமது.களமும்கூட...கணவுகளும்.கற்பனைகளும்..சிறகடிக்க......களமாடும்.....உளமோடு.....என்றும்நான்.....
🙏🙏🙏
நான் ஒருமுறை இதை சென்று பார்த்த போது எனக்கு ரத்த கண்ணீரே வந்துவிட்டது.
😢
பழமையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமாக கண்ணீர் ரத்தக்கண்ணீர் ஆக தான் வரும்
பாரம்பரிய நினைவு சின்னம் பாதுகாக்கப்படவேண்டும்
இத்தனை கலைநயம் மிகுந்த கட்டிடம்....என்றுமே உலக மக்கள் அனைவருக்கும் நாமே முன்னோடி...இந்த புராதான அரண்மனையை சீரமைத்து புதுப்பித்தால், ,,,மிகப்பெரிய சுற்றலா இடமாக மாறும்,,,,உள்ளூர் மக்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்,,,,சுவரின் அகலம் பிரமாண்டமாக உள்ளது,ஆழ்ந்த நுனுக்கமான வடிவமைப்பு,பாதுகாக்க வேண்டிய பல்வேறு பழங்கால பொருள்கள், இன்றைய தலைமுறையினர் மற்றும் வருங்கால தலைமுறைக்கு என போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்,,,
Just see how palaces castles forts are preserved for excursion and tourism all round the world. We need to have heritage value including the govt and the palace residents and caretakers.
Will our history teachers take interest in take the students around such places and inculcate heritage value?
எங்களது குலதெய்வம் பெரியநாயகிஅம்மன் இந்த ஊர்தான் அரண்மனையை அரசாங்கம் எடுத்துபுனரமைப்பு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
என்னுடைய குலதெய்வம் பெரியநாயகி அம்மன் தான் நான் தற்போது மலேசியாவில் இருக்கிறேன்
Udaiyar ninga💯
அரசாங்கம் புனரமைப்பு செய்து காக்க வேண்டும் சுற்றுலா தலமாக்கி அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் 😢😢
Engaladhu kulatheivamum periya nayahi amman
அரசு இதை உடனடியாக சீரமைத்து பாதுகாக்க வேண்டும்.
ஏன் ? நம் முன்னோர் பட்ட அவமானத்தை நினைவு படுத்தவா ?
அதற்க்கு தமிழர்கள் முதல்வர்களாக ஆட்சி செய்யனும்.
@@prkaliappankaliappan8339வந்தேறிகளால் நம்முன்னோர்கள் வீழ்ந்து போனார்கள்.
Wall ten bro
I support
Vaipaa illai Raja they are all busy in installing dravidians statues only
இது போல எத்தனையோ அரண்மனைகள். இபொழுது எல்லா அரசியல்வாதிகளின் தகுதியும் அந்த நிலைக்கு போய் விட்டது.
இம்மாதிரியான இடங்கள் அரசு முறைபடி பாதுகாத்து சுற்றுலா இடங்களாக மாற்றி அமைக்க வேண்டிம்.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எந்த அரசும் கவனிப்பார் இல்லை நன்றி 🙏🙏🙏🙏
@@ELANGOVAN3149
காரணம், தொல்லியல் ஆராட்சியாளர்கள் அரசியலில் ஈடுபாடு கொண்டு வரலாற்று இடங்களை மறந்து போய் விட்டனர்.
தனியார் இடமாக இருக்கும் வரை அரசு பொறுப்பேற்க்காது தானே
தமிழர்கள் தெலுங்கு கருணாநிதி குடும்பத்துக்கு ஓட்டை போட்டுவிட்டு அவர்களிடம் மனு கொடுப்பது, போராடுவது தமிழனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. தமிழர்களைச் சாதியாக பிரித்து வைத்திருக்கிறான் திருட்டு திராவிடன். சீமான் முதல்வர் ஆனால் இந்த வரலாறு காப்பாற்றப்படும். உதயநிதி நடத்திய கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு 10 கோடி வீண்செலவு செய்யமாட்டான் சீமான். 500 கோடியில் சினிமா நடிகருக்கு கட்டடம் கட்ட மாட்டான். திராவிடனுக்கு ஒட்டு போடும் தமிழன் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடவில்லை பொறம்போக்குகள்.
எனது ஊர் உடையார்பாளையம் இந்த அரண்மனையை நல்லமுறையில் சீரமைப்பு பணி தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அரண்மனை மட்டுமல்லாமல் பெரிய கோயிலும் சீரமைத்தால் இன்னும் சிறப்பாக அமையும் நமது ஊர் உடையார்பாளையம்
ஆம்.. சிறப்பாக இருக்கும்
திராவிட திருட்டு கும்பல்கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருப்பான்கள்...இதையெல்லாம் கண்டுகமாட்டான்க.....
உடையார்பாளையம் எந்த மாவட்டத்தில் உள்ளது ,,,,,
@@vajranrudra3818 அரியலூர் மாவட்டம் முன்பு திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிந்தது
இந்த காணொளியை நான் முதல் முறையாக பார்க்கிறேன் அந்த காலத்திற்கு சென்று விட்டேன். 🎉🎉🎉🎉🎉
சிறப்பான காட்சி மற்றும் செய்தி பதிவு 🙏
🙏🙏
நாம் தமிழ்ர் பிள்ளைகள் ஏதும் முயற்சி செய்யலாமே,சுத்தம் செய்ய.🇲🇾
Naam TAMILAR ramand bro
உடையார் பாளையத்தில் இருந்து
சில மைல் தொலைவில் உள்ள sripuranthan எங்க ஊரு இது வரை பார்த்தது இல்லை இப்ப பார்க்க ஆசையாக இருக்கு
போய் பாருங்கள் நண்பரே
இது போன்ற பழைய நினைவு அரண்மனைகள் தமிழக அரசு தொன்மை மாறாமல் சரி செய்து முன் வரவேண்டும்
நம்மளையும் ஒரு முன்னூறு நானூறு வருடங்கள் கழித்து இப்படித்தான் எதிர்கால சந்ததியினர் சொல்வார்கள்😅😅😅
ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அவர்களது நிலங்களை இழப்பார்கள். இதுதான் வரலாறு என்று சீமான் சொல்லிதை உணர்ந்து தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன். தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது நீ உன் தாய்மொழிக்கு செய்யும் துரோகம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஆடம்பரமாக வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் கடைசியில் இப்போது ஒரு பிடி சாம்பல், அவர்கள் எதையும் எடுத்து கொண்டு போக முடியல, முடியாது இதை உணர்ந்து மக்களை மக்களாக எண்ணி இருக்கும் காலம் வரைக்கும் முடிந்ததை உதவி செய்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்,
Every one knows but people are doing something simply sitting,eating instead of wasting time that we should approciate
இந்த காட்சியை பார்த்தே போது மனம் வருந்திய|து இதே வெளிநாட்டில் இருந்தால் இது இன்னும் புதுமை பெற்று பெறிய சுற்றுலாவாக மாரி இருக்கும் ஏன் என்றால் அங்கே அரசு ஆழ்கிறது இங்கே ஒரு குடும்பமே ஆழ்கிறது
சரியாகச் சொன்னீங்க தம்பி.
அது "ஆள்கிறது"...என்பதே சரி.
தமிழர்கள் தெலுங்கு கருணாநிதி குடும்பத்துக்கு ஓட்டை போட்டுவிட்டு அவர்களிடம் மனு கொடுப்பது, போராடுவது தமிழனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. தமிழர்களைச் சாதியாக பிரித்து வைத்திருக்கிறான் திருட்டு திராவிடன். சீமான் முதல்வர் ஆனால் இந்த வரலாறு காப்பாற்றப்படும். உதயநிதி நடத்திய கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு 10 கோடி வீண்செலவு செய்யமாட்டான் சீமான். 500 கோடியில் சினிமா நடிகருக்குக் கட்டடம் கட்ட மாட்டான் சீமான். திராவிடனுக்கு ஒட்டு போடும் தமிழன் சோத்தில் உப்பு போட்டுச் சாப்பிடவில்லை
@@shivajichakravarthy4653 சீமான் கேட்டான் தமிழை தமிழர்கள் எழுதாது வேறு யார் எழுதுவார்கள் என்று? அப்படி அவன் கன்னத்தில் அறைந்ததால் இன்று தமிழில் எழுதுகிறேன். தவறு இருந்தால் திருத்திக்கொள்ளலாம் ஆனால் தயங்காமல் இளைய பிள்ளைகள் தமிழில் எழுத வேண்டும். ஆளும் தெலுங்கர்களுக்கு தமிழ் அழிந்தால், செத்தால் கவலை இல்லை. நன்றி
உடையார்பாளைய ஜமீன் பற்றி எனது தாத்தா மிகவும் பெருமையாக கூற கேட்டுள்ளேன். ஆனால் இப்போது இருக்கும் நிலைமையை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. அவர்களின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் அரசு புணரமைத்து அரண்மனையை காக்க வேண்டும்.
Yes💯💯
ஜமீன் ல நிலம் இருந்தால் விற்று புன்னராமக்கலாமே
தமிழர்கள் தெலுங்கு கருணாநிதி குடும்பத்துக்கு ஓட்டை போட்டுவிட்டு அவர்களிடம் மனு கொடுப்பது, போராடுவது தமிழனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. தமிழர்களைச் சாதியாக பிரித்து வைத்திருக்கிறான் திருட்டு திராவிடன். சீமான் முதல்வர் ஆனால் இந்த வரலாறு காப்பாற்றப்படும். உதயநிதி நடத்திய கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு 10 கோடி வீண்செலவு செய்யமாட்டான் சீமான். 500 கோடியில் சினிமா நடிகருக்கு கட்டடம் கட்ட மாட்டான். திராவிடனுக்கு ஒட்டு போடும் தமிழன் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடவில்லை
Nice Contet Ram Udaiyarpalayam Poirukkum Pothu inga ponen avvalo anba pesunanga anga irukkura makkal romba anba palaguvanga... Vaazhga Udaiyarpalayam Jameen Kudumbam!!
Good family ❤️❤️ Thanks for your loveable words
அருமையான பதிவு நன்றி நன்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
Thanks
Wish the beautiful palace is renovated to it’s original glory and preserved for future generations..
நான் உடையார்பாளையத்தில் தான் UG படித்தேன் அப்பொழுது எனது பொழுதுபோக்கே இந்த அரண்மனையை சுற்றி பார்ப்பதுதான் மிக அருமையாக இருக்கும் அந்த அண்ணன் எனக்கு ஒரு முறை அந்த அரண்மனை முழுவதும் சுற்றிகாட்டியுள்ளார்
Arumy
இதுபோன்ற வரலா
ற்று சின்னங்களை, பாதுகாக்க மத்திய, மாநில, அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விஷயத்தில் வெளிநாட்டினர்,எப்படி பாதுகாக்கின்றர்கள். அது போல நமது மக்களும் எது முக்கியம் என உணரவேண்டும்.இந்த கட்டிடங்கள் சொல்லும் சரித்திரம் எத்தனை எத்தனையோ?இனி உள்ளவற்றையாவது பாதுகாக்கவேண்டும்.
பாரத் மாதாகீ ஜெய்......
🙏🙏
தமிழர்களின் வரலாற்றை அழிப்பவர்கள் எப்படி காப்பாற்றுவார்கள். அந்த மக்கள் காப்பாற்ற வேண்டும்
Antha jamin enna pudingittu irikaninga
@@kumarmariakumar appo Tanjai periya Kovil mattum yedhukku... Appadiye vittu velaiya paaka vendiyadhuthana...
ivargal taamilargal illa bro pallava's tax collectors.
வரலாறை தெரிந்து கொள்ள இவைகளை பாதுகாக்க வேண்டும்.
ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அவர்களது நிலங்களை இழப்பார்கள். இதுதான் வரலாறு என்று சீமான் சொல்லிதை உணர்ந்து தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன். தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது நீ உன் தாய்மொழிக்கு செய்யும் துரோகம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
Excellent videography and narration. Thank you
Thanks 🙏
உடையார்பாளையம் என் அப்பா பிறந்த ஊர் ❤️அரண்மனைக்கு வசலின் நேராக நின்று பார்த்தால் கோவிலின் வாசல் தெரியும் ,
கோவிலின் பக்கத்தில் ஒரு அழகான ஏறி, நான் முதல் முதலில் நீச்சல் கற்று கொண்டது அங்குதான் 😇நிறைய சினிமா படங்கள் இந்த ஊரில் கட்சி அமைக பட்டுள் லது❤️
ஆம் 96 திரைப்படமும் அங்கு தான் எடுத்தார்கள்
இப்ப ஏரி எப்படி இருக்கு?
நீராழி மண்டபம் நிலை என்ன?
79 to 85 வரை முத்தையன் செட்டியார் இப்போ அரசு பள்ளி அங்கு படித்தேன்.
👆 அந்த கால கட்டத்தில் படித்த யாராவது இருக்கீங்க கள?
Gb, saminathan mani, cc Teachers.
இந்த, ஜமீனை அரசாங்கம்
சீரமைக்க வேண்டும்.
இதை, மண்ணின் உணர்வாலர்கள். வரலாற்று
ஆய்வாளர்கள். தீவிர
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நடுநாடு வட தமிழன். 👍🏻
எடுத்தால் சிறப்பாக இருக்கும்
அருமை அருமை அருமை மதுரை தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது
🙏
இதெல்லாம் ஐரோப்பிய நாடுகள்ல இருந்திருந்தா மக்கள் பொத்தி பாதுகாத்திருப்பாங்க.
India la tamilnadu la than palasa maranthuttu pichakkaran lam panakkaaran mathiri vesham pottu suthittu irukkununga... Avanungalukku yeppadi idhoda arumai puriyum...
@@pabitha4658 அப்போ மற்ற மாநிலத்தில பழையது நியாபகம் வச்சுகிட்டு பணக்காரன் பிச்சைக்கார ரேஞ்சுக்கு இருக்காங்களா?
நீங்க வட நாட்டு பக்கம் போய் பாருங்க இதைய விட கேவளமா இருப்பானுக.
அப்படியா! !! அப்போ நம் நாட்டில்லுள்ள ஒவ்வொரு பழங்கால கட்டிடங்கள், அருங்காட்சியங்கள்ல பாருங்க.அதுல பெயர்கள் ஹார்ட்டின் விட்டு நாசம் பன்னிருப்பானுக.
உண்மை உண்மை உண்மை
வேட்டையன் ஞாபகம் வருகிறது.
குழந்தைகள், மாணவர்களை கொண்டு வந்து காட்டவேண்டும்
தலைமுறையாக வாழும் ஜமீன் வம்சம் ஆல் போல் தழைத்து வாழட்டும்... வாசு.முருகன்.. திருமுதுகுன்றம்
நீங்கள் காட்டிய காட்சிகள் எனக்கு மிகவும் வியப்பை அளித்து மிக்க நன்றி தங்களுக்கு
மிக்க நன்றி ❤️❤️
தங்களுக்கு தான் நன்றி தெளிவிக்க வேண்டும்
பழமையான நினைவு அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்.
ஆம்
Thank🙏🌹 you miha periya vishayam alagana padhivu manadhil ulla periya paramum aakkangalum theendhana nangalum Endha edathil pirandha munnorgalin varisugal
தெளிவான பதிவு அண்ணா❤️ பதிவுகள் தொடரட்டும்......❤️
நன்றி நண்பா.. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டி ❤️
அய்யா அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. தவிர உடையார்பாளையம் என்கிற ஊர் எங்கு உள்ளது என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.❤❤❤❤❤
தென்னாட்டில் மட்டும் தான் மன்னர்களின் அவர்கள் வாழ்ந்த தடையம் அழிந்து கொண்டு வருகிறது காப்பாற்றுமா இந்த அரண்மனையை உடையார் பாளையம்
ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அவர்களது நிலங்களை இழப்பார்கள். இதுதான் வரலாறு என்று சீமான் சொல்லிதை உணர்ந்து தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன். தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது நீ உன் தாய்மொழிக்கு செய்யும் துரோகம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தலைமை ஆட்சியர் திருவாளர் இறையன்பு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விரும்புகிறேன்.. ஆட்சியாளர்களிடம் எடுத்துக்கூறி மீட்டெடுத்து தமிழர்களின் வீரம் பண்பாடு மனிதநேயம் முதலியவற்றை இளம் வயதிலேயே பதியவைக்கலாம்.சுற்றுலாத்தலமாக மாற்றி வருவாயைப் பெருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
நீங்கள் சொல்லும் இந்த காலக்கணக்கீடு வைத்துப் பார்க்கும் பொழுது, ராஜராஜசோழன் பரம்பரைகள், ஜமீன்தார்களாக, விஜயநகர, திருமலை நாயக்கர் அரசின் அடிமைகளாக ஆக்கப்பட்டு ஜமீன்தார்கள் ஆக சுருக்கப்பட்ட நிலை ஆக மாறிய அவலநிலையடைந்ததாக நான் உணர்கிறேன்.
Anna., your 😢 translation is excellent, your worries of maharaja palace shows the involvement of human being nature.,namaste.
Beautiful coverage. Beautiful palace. Very painful
ஒரு தொலைந்த கோட்டையை
சரித்திரம் மறந்துவிடக்கூடாது!
தமிழ்நாடு சுற்றுலா கழகம், இது போன்ற கோட்டைகளை எடுத்து
அரசு செலவில் புதுப்பித்து,
சுற்றுலா விடுதிகளாக பராமரிக்கலாமே? அரசுக்கு வருமானமும் வரும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படும்!
Skip பண்ணாம பார்த்த வீடியோ.மிக அருமை
மிக்க நன்றி.. தொடர்ந்து பயணியுங்கள் எங்களுடன்.. எங்கள் ஊரான காட்டுமன்னார்கோயிலின் சிறப்புகளும்.. பல வரலாற்று வீடியோகள் வரும் ❤️
@@kmk360 நன்றி
நட்புகழ் எல்லாம்
நலிவுற்று போனாலும் கூட
நான் வாழ்ந்த காலம்
மகத்தானது என்று
சொல்லாமல் சொல்லும்
அந்த கட்டிடங்களின்
மெல்லிய குரல்
என் காதுகளில் கேட்டு வியந்தேன் நான்...காலங்கள் கடந்து போனதே என்றாலும் ....காவியம் படைத்த. இடம்.....இது.
❤️
உடையார் பாளையம்-கும்பகோனம் வழியில் உள்ள வாணதிரையன் பட்டனம் தான் எனது சொந்த ஊர் இப்போது சென்னையில் உள்ளேன்.
❤️❤️
உங்கள் ஊராட்சி தலைவர் முருகனின் அண்ணன் திரு சுப்ரமணியன் எனது நண்பர். நான் கரூரை சேர்ந்தவன். தற்போது துபையில் வேலை செய்கிரேன். திரு சுப்ரமணியண் தற்போது சென்னையில் வசிக்கிறார். நான் வாண்ரமடம் - வானதிரையன் பட்டினம் ஒருமுறை வந்திருகிறேன்
நான் உதயநத்தம் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில் இருக்கிறேன்
@@Boopathydubai you meant subramanian s/o dhanavel chettiyar, he worked in tnpl.
@@selvaraajan3887 Subramanian S/o Gopal.
Your explanation verynice beautiful
700aaindukal intha arainmanai
Thanki niereppadu kaittiya kalaon
Muthainmaiya siraeppain vilaekkukiradu
Eppa kaimpi cement poittu
Kaittukira building 60aaindukal
Varuvadu kashtamakave
Eruekkueppa
அரசு உதவி செய்து இதை புதுப்பித்து தர வேண்டும். இதை ஒரு சுற்றுலா தலமாக மாற்றி வருமானம் பெருக்க வேண்டும்
அண்ணா வீடியோ வேரலெவல் இதுமாதிரி பழைய கோவில்கள் அரண்மனை போன்ற வீடியோக்கள் போடுங்கள்
நன்றி நண்பரே
ஏன் இந்த Government க்கு இதெல்லாம் கண்ணுலே படமாட்டேங்குது. 🧐🧐பட்டாலும் ஒன்னும் பண்ண மாட்டானுங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா இந்த போஸ்ட் பாக்கும்போது. 🤨🤨ஏன் இந்த வம்சா வழி சந்ததிகள் இல்லையா, நீங்கள் இந்த அரும்பெரும் ஒரு பொக்கிஷத்தை ஏன் பாதுகாக்கவில்லை. 🧐🧐.. இருக்கும் பொக்கிஷத்தை இழந்து கொண்டும், இன்னும் இழக்கவும் தான் போகிறோம் நாம்..
அதாவது வாழ்வு சில காலம். தாழ்வு சில காலம் என்பார்கள்.வாழ்ந்தவன் கெட்டால் வரகு ஓட்டுக்கு வழி இல்லாமல் போவான். கெட்டவன் வாழ்ந்தால் கிளையோடி வாழ்வான் என்பார்கள். இதுதான் இன்றைய கால நிலைமை...... நண்பரே.....
தமிழர்கள் தெலுங்கு கருணாநிதி குடும்பத்துக்கு ஓட்டை போட்டுவிட்டு அவர்களிடம் மனு கொடுப்பது, போராடுவது தமிழனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. தமிழர்களைச் சாதியாக பிரித்து வைத்திருக்கிறான் திருட்டு திராவிடன். சீமான் முதல்வர் ஆனால் இந்த வரலாறு காப்பாற்றப்படும். உதயநிதி நடத்திய கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு 10 கோடி வீண்செலவு செய்யமாட்டான் சீமான். 500 கோடியில் சினிமா நடிகருக்கு கட்டடம் கட்ட மாட்டான். திராவிடனுக்கு ஒட்டு போடும் தமிழன் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடவில்லை பொறம்போக்குகள். Don''t worry everything will change when Seeman will be a CM in 2026
Proud moment.....to be a great grand daughter of udayairpalaym...zamin... thanks for creating a video . To recollecting our historicals....👍
Proud moment 😎.. thanks sister
Me too . My mother's birth place. 150years Kum melaha irukirom. My grand father & then zamindharwere close friends.
நாங்களும் இந்த நிலையில் தான் உள்ளோம் உண்மை யக நேர்மையான வாக இருந்த இந்த நிலையில் வாழ்க்கை
இறுதியில் நேர்மை உண்மை வெல்லும்.. பொறுமையாக இருந்தால்.. ❤️❤️வாழ்த்துக்கள் சகோ உங்கள் வருங்கால வெற்றிகளுக்கு
எதை எதையோ சீரமைக்கும் அரசு இந்த தமிழ்நாட்டின் சிறப்புகளை நினைவு சின்னங்களை அழியாமல் சீரமைத்து அடுத்த தலமுறைக்கு வழங்கலாம்.
மனிதனை மனிதன் அடிமை செய்து காலம் அந்த காலத்தில் உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
Arumayana pathivu seitha ungalukku nandrigal.
🙏🙏
This place should be protected. Govr should help them to maintain
ஜமீன் கட்டிடங்கள் பாதுகாக்க வேண்டும்
மிக சிறப்பான ஜமீன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🙏👍
🙏🙏