சத்திய வழியிலே நடவுங்கள் | WALK IN THE WAY OF TRUTH | INNERMAN DEVOTIONS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • மத்தேயு 7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்
    ஒரு சமயம் திரளான ஜனங்கள் ஆண்டவராகிய இயேசுவிற்கு பின் சென்றார்கள். ஆண்கள் மாத்திரம் ஏறத்தாழ ஐயாயிரம் பேர்கள் இருந்தார்கள். அநேக மணிநேரம் அவருடைய போதனைகளை கேட்டா ர்கள். அவர்களை பசியோடு அனுப்பிவிட மனதிருல்லாதிருந்ததால், ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பலுகச் செய்து, அவ ர்கள் யாவரையும் அற்புதமாக போஷpத்தார். மறுநாள் வரைக்கும், அநே கர் அவரை பின்பற்றி சென்றா ர்கள். அவர்களின் வயிறு நிரம்பி யதேயல்லாமல், அவருடைய ஆன்மீன்க போதனையினா லேயே அவர்கள் மனம் நிரம்பவி ல்லை என்று அறிந்த ஆண்டவ ராகிய இயேசு, அற்புதத்தை கண்டதினாலல்ல, நீங்கள் அப்பம் தின்று திருப்பதியானதினாலே தான் என்னை பின்பற்றுகின்றீ ர்கள் என்று அவர்களின் உண்மையான நிலைமையை கூறினார். தன்னை பின்பற்ற என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டவர் இயேசு விளக்கிக் கூறிய போது, அநேகர் இது கடினமாக உபதேசம் என்று கூறி, அவரைவிட்டு பின்வாங்கிப் போனார்கள். அநேகமாயிரம் திரள் கூட்டம் இப்போது, விரல்விட்டு எண்ணும் சிறு கூட்டமாக மாறிவிட்டது. நித்திய வாழ்விற்கென்று அழைப்பை பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, 'இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கின்றவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகி ன்ற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கின்றது, அதை கண்டு பிடிக்கின்றவர்கள் சிலர்' என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இது மனிதர்களுக்கு கடினமான உபதேசம். இடுக்க மான வாசல். அது உண்மை. ஆதனால் தான், நமக்கு வழியை காண்பி க்கும்படி ஆண்டவராகிய இயேசு இந்த பூமிக்கு வந்து, வாழ்ந்து காட்டி னார். நம்மை சகல சத்தியத்திலும் வழிநடத்திச் செல்லும்படிக்கு என் றென்றும் நம்மோடு இருக்கும்படிக்கு சத்திய ஆவியை பிதாவனாவர் நமக்கு கொடுத்திருக்கின்றார். உபத்திரவங்களிலே வெற்றிiயும், பாடுக ளின் மத்திலே மனச் சமானதானத்தையும் நமக்கு கட்டளையிடுகின்றார். எனவே, வேற்றுமையான, சுகபோக வாழ்வின் போதனைகளுக்கு விலகி ஓடுங்கள்.
    ஜெபம்:என் தேவனாகிய கர்த்தாவே, மாசத்தின் பெலத்தினால் அல்ல, நீர் எனக்கு தரும் ஆவியினாலே நான் தடைகளை தாண்டி, உம்முடைய சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்றி முடிக்க எனக்கு பெலன் தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
    மாலைத் தியானம் - யோவான் 6:60-65
    Matthew 7:15 - Beware of false prophets, which come to you in sheep's clothing, but inwardly they are ravening wolves.(KJV)
    Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada
    Background Music: Recorded by Grace Tabernacle apostolic church
    Our Website:
    gtachurch.ca/d...
    gtachurch.ca/im
    Produced by: Grace Tabernacle apostolic church, Toronto Canada

ความคิดเห็น • 3