🔴தமிழ்த்தாய் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
- நூல்:
பாரதி கவிதைகள்
பாடியவர்:
மகாகவி. பாரதியார்
தலைப்பு:
தமிழ்த்தாய்
கவிதை:
ஆதி சிவன் பெற்று விட்டான்-என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
முன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.
கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.
சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.
நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.
கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!
தந்தை அருள்வலி யாலும்-முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன்-என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை-அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள்வலி யாலும்-இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
#bharathiyar #bharathiyarquotes
#bharathi #bharathiyarkavithaigal #bharathiyar_varigal #bharathikannamma #bharathiyarsong #bharathiar #bharathiyarkavithai #bharathiyarquotesareinspiring #kadavulbharathi #bharathiyarmedia #bharathiyarkavithaigalismyinspiration🔥 #bharathilove #bharathians #Ajithbharathi #bharathi #tamilan #ajithbharathi #tamil #kavithaigal #bharathistatus #mahakavi #bestpoems
கண்களில் கண்ணீர். நெஞ்சிலே நெருப்பு மூளுகின்றதே. தமிழன்னையின் ஏக்க குரலாக பாரதியின் தீர்க்க தரிசனம்😢😢😢
really like your video work.... please do continue and post more of bathiyar kavithaigal like this... you have a subscriber and follow for your videos now
Thank you really you gave hope me to work
Hello Ajith, can i use this poem in one of my music tracks?
Yes you can....my friend it is mahakavi poem . It is common to all people in this world..😊