🔴தமிழ்த்தாய் | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • நூல்:
    பாரதி கவிதைகள்
    பாடியவர்:
    மகாகவி. பாரதியார்
    தலைப்பு:
    தமிழ்த்தாய்
    கவிதை:
    ஆதி சிவன் பெற்று விட்டான்-என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
    முன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
    மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
    ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.
    கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
    காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
    தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.
    சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
    தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
    நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.
    நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
    சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.
    கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
    காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
    என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
    யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!
    தந்தை அருள்வலி யாலும்-முன்பு
    சான்ற புலவர் தவவலி யாலும்
    இந்தக் கணமட்டும் காலன்-என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
    இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
    ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
    கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
    புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
    மெத்த வளருது மேற்கே-அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
    சொல்லவும் கூடுவ தில்லை-அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
    மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
    என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லாமோ?
    சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
    தந்தை அருள்வலி யாலும்-இன்று
    சார்ந்த புலவர் தவவலி யாலும்
    இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
    #bharathiyar #bharathiyarquotes
    #bharathi #bharathiyarkavithaigal #bharathiyar_varigal #bharathikannamma #bharathiyarsong #bharathiar #bharathiyarkavithai #bharathiyarquotesareinspiring #kadavulbharathi #bharathiyarmedia #bharathiyarkavithaigalismyinspiration🔥 #bharathilove #bharathians #Ajithbharathi #bharathi #tamilan #ajithbharathi #tamil #kavithaigal #bharathistatus #mahakavi #bestpoems

ความคิดเห็น • 5

  • @YADHUMANAVAL-yadhumanaval...
    @YADHUMANAVAL-yadhumanaval... 11 หลายเดือนก่อน +1

    கண்களில் கண்ணீர். நெஞ்சிலே நெருப்பு மூளுகின்றதே. தமிழன்னையின் ஏக்க குரலாக பாரதியின் தீர்க்க தரிசனம்😢😢😢

  • @pavitrhanayagie7980
    @pavitrhanayagie7980 4 ปีที่แล้ว +1

    really like your video work.... please do continue and post more of bathiyar kavithaigal like this... you have a subscriber and follow for your videos now

    • @Ajithbharathi
      @Ajithbharathi  4 ปีที่แล้ว +1

      Thank you really you gave hope me to work

  • @cliffordmanasseh7458
    @cliffordmanasseh7458 3 ปีที่แล้ว

    Hello Ajith, can i use this poem in one of my music tracks?

    • @Ajithbharathi
      @Ajithbharathi  3 ปีที่แล้ว

      Yes you can....my friend it is mahakavi poem . It is common to all people in this world..😊