அனைத்து நோய்களும் தீர்க்கும் வைத்தீஸ்வரன் பதிகம் | வெள்ளெருக்கரவம் 🙏 சிவன் பக்தி பாடல் | தேவாரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #thirumurai #thiruchitrambalam #siva
    அனைத்து நோய்களும் தீர்க்கும் வைத்தீஸ்வரன் பதிகம் 🙏 வெள்ளெருக்கரவம்| சிவன் பக்தி பாடல் | தேவாரம்
    அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
    திருமுறை : ஐந்தாம்-திருமுறை
    பண் : திருக்குறுந்தொகை
    நாடு :சோழநாடு காவிரி வடகரை
    தலம் : புள்ளிருக்குவேளூர்
    வெள்ளெ ருக்கர
    வம்விர வுஞ்சடைப்
    புள்ளி ருக்குவே
    ளூரரன் பொற்கழல்
    உள்ளி ருக்கு
    முணர்ச்சியில் லாதவர்
    நள்ளி ருப்பர்
    நரகக் குழியிலே. 1
    மாற்ற மொன்றறி
    யீர்மனை வாழ்க்கைபோய்க்
    கூற்றம் வந்துமைக்
    கொள்வதன் முன்னமே
    போற்ற வல்லீரேற்
    புள்ளிருக் குவேளூர்
    சீற்ற மாயின
    தேய்ந்தறுங் காண்மினே. 2
    அரும றையனை
    ஆணொடு பெண்ணனைக்
    கருவி டம்மிக
    வுண்டவெங் கண்டனைப்
    புரிவெண் ணூலனைப்
    புள்ளிருக் குவேளூர்
    உருகி நைபவர்
    உள்ளங் குளிருமே. 3
    தன்னு ருவை
    யொருவர்க் கறிவொணா
    மின்னு ருவனை
    மேனிவெண் ணீற்றனைப்
    பொன்னு ருவனைப்
    புள்ளிருக் குவேளூர்
    என்ன வல்லவர்க்
    கில்லை யிடர்களே. 4
    செங்கண் மால்பிர
    மற்கு மறிவொணா
    அங்கி யின்னுரு
    வாகி அழல்வதோர்
    பொங்க ரவனைப்
    புள்ளிருக் குவேளூர்
    மங்கை பாகனை
    வாழ்த்த வருமின்பே. 5
    குற்ற மில்லியைக்
    கோலச் சிலையினாற்
    செற்ற வர்புரஞ்
    செந்தழ லாக்கியைப்
    புற்ற ரவனைப்
    புள்ளிருக் குவேளூர்
    பற்ற வல்லவர்
    பாவம் பறையுமே. 6
    கையி னோடுகால்
    கட்டி யுமரெலாம்
    ஐயன் வீடினன்
    என்பதன் முன்னம்நீர்
    பொய்யி லாவரன்
    புள்ளிருக் குவேளூர்
    மையு லாவிய
    கண்டனை வாழ்த்துமே. 7
    உள்ளம் உள்கி
    உகந்து சிவனென்று
    மெள்ள வுள்க
    வினைகெடும் மெய்ம்மையே
    புள்ளி னார்பணி
    புள்ளிருக் குவேளூர்
    வள்ளல் பாதம்
    வணங்கித் தொழுமினே. 8
    இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை. 9
    அரக்க னார்தலை
    பத்தும் அழிதர
    நெருக்கி மாமலர்ப்
    பாதம் நிறுவிய
    பொருப்ப னாருறை
    புள்ளிருக் குவேளூர்
    விருப்பி னாற்றொழு
    வார்வினை வீடுமே.
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமி : வைத்தியநாதர்;
    அம்பாள் : தையல்நாயகி
    திருச்சிற்றம்பலம் "ஓம் நமச்சிவாய"
    Other Songs:
    குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
    • குழந்தை வரம் செல்வம் அ...
    திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
    • திருமயிலை கற்பகாம்பாள்...
    ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
    • ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ர...
    திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
    • நோய் நீங்கும் மந்திரம...
    Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
    / @shivaarpanam

ความคิดเห็น • 5

  • @srk8360
    @srk8360 16 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 15 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய 🙏

  • @ramasamisons7926
    @ramasamisons7926 15 วันที่ผ่านมา

    பேராயிரம் பரவி வானோர்கள் ஏத்தும் பெம்மான்தன்னைப்
    பிரியாத அன்பர்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி
    தீராத நோயெல்லாம் தீர்க்க வவ்லானைதிரிபுரங்கள் தீயெழ திண்சிலை கொண்ட
    போரானைபுள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள்போக்கினேனே🎉🎉🎉🎉🎉🎉 இது அப்பரின் திருத்தாண்டகம்

  • @AmmaAmma774
    @AmmaAmma774 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏அபிராமி அந்தாதி100 பாடல்களும் பதிவிடுவிங்களா

    • @ramasamisons7926
      @ramasamisons7926 15 วันที่ผ่านมา

      சீர்காழி கோவிந்தராஜன் 100 பாடல்களையும் திரு யேசுதாஸ் அவர்கள் 100 பாடல்களையும் பாடியுள்ளார் பாம்பே சகோதரிகளும் பாடி இருப்பதிக நினைவு