INDIA கூட்டணி வெற்றி வடஇந்தியா மக்களும் BJP எதிரான மனநிலையில் உள்ளதை உணர்த்துகிறது ஜவாஹிருல்லா!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #news #indiancomedian #india #mmk #tmmk #dmk #congress #bjp #dmknews #AJTamilNetwork #AJTamilNetworknews #AJTamilNetworklocal
    Subscribe channel :#indianactor #indian #TN #bsp leader K #Armstrong murder
    / ajtamilnetwork
    காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திறகு முழு ஆதரவு தருகிறோம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்தது ஏற்புடையதல்ல. இந்தியா கூட்டணி வெற்றி வட இந்தியா மக்களும் பிஜேபிக்கு எதிரான மனநிலையில் உள்ளதை உணர்த்துகிறது சீர்காழியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது
    கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது.ஜூன் 13ஆம் தேதியே மேட்டூர் திறக்கப்பட வேண்டும் ஆனால் உரிய நீர் இல்லாததால் மேட்டூர் தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவேரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல் படி தமிழகத்திற்கு ஜூன் ஜூலை மாதங்களில் இதுவரை 44 டி.எம்.சி நீரை கர்நாடகம் திறக்க வேண்டும் ஆனால் இதை மறுத்து வருகிறது. ஆகவே டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் வருகிற 24-ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் இதற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவை தருகிறது.
    தமிழகத்தில் தரமற்ற உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஒருவர் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார் இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றத்தின் மூலமாக குற்றவாளியாக நிரூபிக்க வேண்டுமே தவிர என்கவுண்டர் தீர்வாகாது.
    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது திமுகவின் மூன்று ஆண்டுகால சாதனைக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.தேர்தல் பரப்புரையின் போது எதிர் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர் அது அனைத்துக்கும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்துள்ளானர். தமிழகத்தில் நடைபெறும் சிறப்பான ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே நான் இதை கருதுகிறேன்.திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று இந்தியா முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல்களில் இந்தியா கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக பத்ரிநாத்தில் நடைபெற்ற இடை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.இது வட இந்திய மக்கள் மத்தியில் பிஜேபிக்கு எதிரான மனநிலை உள்ளதை காட்டுகிறது என விமர்சனம் செய்தார் .
    பேட்டி:- ஜவாஹிருல்லா மாநில தலைவர்.மனிதநேய மக்கள் கட்சி.

ความคิดเห็น •