வேத ஆராய்ச்சி சங்கீதம்:95:7-11. திரு.ஜெபக்குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • வேத ஆராய்ச்சி சங்கீதம்: 95: 7-11
    திரு.ஜெபக்குமார்
    1 கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.
    சங்கீதம் 95:1
    2 துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
    சங்கீதம் 95:2
    3 கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
    சங்கீதம் 95:3
    4 பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது, பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
    சங்கீதம் 95:4
    5 சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார், வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
    சங்கீதம் 95:5
    6 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்.
    சங்கீதம் 95:6
    7 அவர் நம்முடைய தேவன், நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர்கைக்குள்ளான ஆடுகளுமாமே.
    சங்கீதம் 95:7
    8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
    சங்கீதம் 95:8
    9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
    சங்கீதம் 95:9
    10 நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
    சங்கீதம் 95:10
    11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
    சங்கீதம் 95:11

ความคิดเห็น •