பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மட்டிட்ட புன்னையங் கானல்(திருமயிலை)
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- / layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
This video contains the rendition of the Devaara Thirumurai Paadalgal wrote and composed by Appar, Sundarar, Thirugnana Sambandar and Manikkavasagar are Saiva poet-saints of Tamil Nadu who lived sometime in the 7th century who were call as NAALVAR of Tamil. They composed so many hymns in complex meters of Tamil Poetry. These narrate an intense loving devotion (bhakti) to the Hindu god Shiva. The surviving compositions are preserved in the first three volumes of the Tirumurai, and provide a part of the philosophical foundation of Shaiva Siddhanta. They are the most prominent of the sixty-three Nayanars, Tamil Saiva bhakti saints who lived between the sixth and the tenth centuries CE. Periya Puranam, the eleventh-century Tamil book on the Nayanars compiled by Sekkizhaar. Sambandar is the first poet-saint featured in the Tirumurai, the canonical works of Tamil Saiva Siddhanta.
/ layamusicindia / agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
சிவசிவதிருசிற்றம்பழம். எனக்கும். இத்திருதலத்துக்கும்.மிக.நெருங்கிய. தொடர்பு ன்டு.ஓதுவார்மூர்த்தி.சத்குரு நாதன்.அவர்.திருபள்ளி.எழுச்சி.கோபூசை.தெடங்கி.அம்மை.அப்பன்அபிசேக.நேரத்தில். ஐயாஅவர்கள்.பாடுவதை.அருகிள்லிருந்துகேட்கும்.பெற்றுறுக்கிறேன்.நான். சேலத்தில். வசிக்கிறேன்..என்முதுகுதன்டில்.ஏற்பட்ட பிரச்சனைக்காக.சென்னை.ராஜிவ்காந்திமருத்துவமனைக்குவந்தேன்.அப்போது. அருள் மிகு.கற்பகாம்பாள். கபாலிச்சரன்.தரிசிக்க. மருத்துவ மனையில்லிருந்து.பலநாள்.நடந்தும்.பேருந்து லியும்வந்து.தரிசிப்பேன்.திருஞானசம்பந்தர்.பூம்பாவை.சன்நிதியின்.முன்நின்று.என்எலும்பில்.ஏற்பட்டபிரச்சனையய்தீர்க.எனக்காக.ஈசனிடன்வின்னப்பம்வைக்குமாறு.திருஞானசம்பந்தர் ரிடம்.வேண்டினேன்.எனக்குசரியானது.அச்சமயம்.ஐயாவின்.திருவாயால்.திருமுறை பாட.கேட்டேன்.நன்றி. சிவசிவதிருசிற்றம்பழம்
ஓம் நமசிவாய சிவா🙏💕
மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய்.
1 மைப்பயந்த ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி ஓண
விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே
போதியோ பூம்பாவாய்.
2 வளைக்கை மடநல்லார்
மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்
சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்.
3 ஊர்திரை வேலை
யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார்
கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே
போதியோ பூம்பாவாய்.
4 மைப்பூசும் ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல்
நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
போதியோ பூம்பாவாய்.
5 மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல்ஆனே றூரும்
அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய்.
6 மலிவிழா வீதி
மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய்
பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே
போதியோ பூம்பாவாய்.
7 தண்ணா அரக்கன்தோள்
சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான்
பண்ணார் பதினெண்
கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே
போதியோ பூம்பாவாய்.
8 நற்றா மரைமலர்மேல்
நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா
மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங்
கபாலீச் சரம்அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே
போதியோ பூம்பாவாய்.
9 உரிஞ்சாய வாழ்க்கை
அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க
ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த
கபாலீச் சரம்அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே
போதியோ பூம்பாவாய்.
10 கானமர் சோலைக்
கபாலீச் சரம்அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப்
பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன்
நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத்
தவரோடும் வாழ்வாரே.
Qw😊qqq
Very nice padal
Today morning we met Ayya Satgurunatha Othuvar in this temple. Got his blessings. Thank you ayya.
தொண்டர் தம் பெருமை.ஆஹா கரும்பு தின்ன கூலியா.பூம்பாவாய் எனும் போது கண்ணீர் வருகிறது.சிவசிவ
Om Namah Shivaya 🙏🌷
Om Namah Shivaya 🌷🙏
Hari Om Namah Shivaya 🙏🌷
இவர் பாடுவதைக்கேட்டாலேபோதும் அனைவரும்தேவாரம் பாடலாம்
மனம் உருக்கும் குறல் ஐயா....
சிவ சிவ....❤❤❤
Golden voice . Thirunavukarasar -2
ஓம் நமச்சிவாய 🙏
நன்றி ஐயா 🙏🙏
திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் புகழி வேந்தர் சிராபுரத்தலைவர் மறைஉண்டவள்ளல் காழிவேந்தர் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙆🙆🙏🙏🌸🌸🌹🌹🌹🌺🌺
Om namasivaya
Miga arumaiyana kural valam iya vazga pallandu om nama sivaya sivaya namaha vasanthinathan🎉
ஓம் சிவாய நம
Sivaya nama Siva Siva
Arumai❤🎉
Intha padal ketta govt job kadaikum solraga is it.
Miga arumai
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Sundara
se
Voice super
சிவசிவதிருசிற்றம்பழம். 🙏🙏🙏🙏🙏
சம்மந்தர் இல்லை சம்பந்தர் என்பதே சரி