தமிழகம் முழுதும் விநாயகர் விஜர்சனம் கோலாகலம் Ganesh Chathurti Visarjan| Vinayagar Silai Karippu
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- #Partnership விநாயகர் சிலைகள் கரைப்பு
தேனியில் தள்ளுமுள்ளு
டிஸ்க்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
சென்னை திருவொற்றியூர், எண்ணுார், எர்ணாவூர், காசிமேடு பகுதிகளில் வைத்து வழிபடப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகள் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காசிமேடு கடற்கரை பகுதியில்
ராட்சத கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றதால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே போல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை மக்கள் கடலில் கரைத்தனர்.
நெல்லை மாநகர் பகுதியில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அவற்றில் 84 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெல்லையப்பர் காேயில் முன் வைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தாமிரபரணி ஆற்றை ஒட்டி அமைக்கப்பட்ட செயற்கை குளத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், வேர்க்காடு, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகள் ராமநாத சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தன. அங்கிருந்து நான்கு ரத வீதிகளை சுற்றியபின், அக்னி தீர்த்தக் கரையில் சிலைகள் கரைக்கப்பட்டன.
மதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நிறுவப்பட்ட பல்வேறு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மதுரையில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில், இலங்கை முன்னாள் எம்.பி.யோகேஸ்வரன் கலந்துகொண்டார்.#GaneshChathurtiVisarjan #Vinayagar #GaneshChathurtiFestival
Super
நேற்றுநான்காட்டுப்பாக்கம்அழிஞ்சிவாக்கம்யெரான்ஹெளராசென்றுவருவதற்குள்சிலவேலைக்காரி236pm1254pm245pmகாணவில்லைசரியா......எர்ணாவுர்மிஞ்சுர்அயனம்பாக்கம்குரேம்பட்டைசென்றுவருவதற்குள்349pmகிளம்பி554pmகாஞ்சிபுரம்வந்தேன்சரியா
yeanna perachanai ivanugalukku
Jai sree ram