How kavignar pulamai pitthan won the heart of Actor MGR by his first song | முதல் பாட்டில் எம்.ஜி.ஆர் மனதை வென்ற புலமைப்பித்தன் #pulamaipithan #mgr #msv #kannadasan #kshankardirector
திரு துரை சரவணனுக்கு இந்த ஒரு சிறப்பான பதிவைக் கொடுத்ததற்கு நன்றி. வாழ்க்கையில் மறக்க முடியாத மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். அதனுள் இத்தனை வரலாறுகளா என்ற வியப்பு!. " அடிப்பார் வலியார், துடிப்பார் மெலியார், தடுப்பார் யார் யாரோ என்ற வரியின் முடிவில் நான் இருக்கிறேன் என்பது போன்ற நாயகன் உருவில் எம்ஜிஆரின் அன்று தோன்றிய முகம் இன்று வரை எங்கள் மனதில் நீக்கமற நிறைந்துள்ளது.
*பித்தனுக்குப் பாட்டெழுதிய பித்தன்* *என்ற புகழுக்குரியவர்* **புலவர் புலமைப்பித்தன்** *(கரிகாலன்)* திரைப்படப் பாடலாசியர்களுள் புலவராக தன்னை அடையாளம் காட்டி, தமிழ்ப் புலமையுடன் தரமானப் பாடல்களை, தாராளமாக எழுதிக் குவித்தவர், *புலவர் புலமைப்பித்தன்* ஆவார். இன்று *செப்டம்பர் திங்கள் 8* ஆம் நாள் அவரது நினைவு தினமாகும். சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால், தனது *85* வயதில், கடந்த 2021 ஆம் ஆண்டில் அவர் காலமாகி விட்டார். *பித்தனுக்கு பாட்டெழுதிய பித்தன்* என்று, திரையுலகினரால் இன்றும் பேசப்படும் புலமைப்பித்தன், எண்ணற்ற பலப் பாடல்களை, தமிழ் ரசிகர்களுக்கு வார்த்திட்ட, கவிக் களஞ்சியமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலமைப்பித்தன் கோவை மாவட்டத்திலுள்ள பள்ளப்பாளையம் என்ற கிராமத்தில், *கருப்பண்ணன் -தெய்வானை அம்மாள்* வாழ்விணையருக்கு மகனாக, *1935 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6* ஆம் நாளில் பிறந்தவர். அவரது இயற்பெயர் ராமசாமி என்பதாகும். சிறு வயதிலேயே கல்வியில் நாட்டம் மிகுந்தவராக விளங்கினார். அதிலும் தமிழ்ப் பாடத்தில் அவரின் ஆற்றல் திறம்பட மேலிட்டிருந்தது. ஒருமுறை பள்ளி நேரத்தின் போது, இந்திப் பாட ஆசிரியர் ஒருவர் அவரை, *“இவன் ஒரு பைத்தியக்காரன்”* என்று திட்டியிருக்கிறார், அதனைக் கேட்டு உடனடியாக அவர், *“ஆம், நான் தமிழ்ப் புலமையில் பித்துக் கொண்ட பைத்தியக்காரன்”* என்று பதிலளித்து, அன்றே *புலமைப்பித்தன்* என்று, தனக்குத் தானே புனைப் பெயர் சூட்டிக் கொண்டார். கோவை சூலூர் பகுதியில், ஒரு நூற்பாலையில் பணி புரிந்து கொண்டே, தமிழ்ப் புலவருக்கான கல்வியை முடித்தார். பின்னர், 1964 ஆம் ஆண்டு, சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் அவர் தமிழாசிரியராக வேலைக்கு அமர்ந்து, பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் சிலரது தயவால், பிரபல இயக்குநர் கே.சங்கரின் அறிமுகம் கிட்டியது. அப்போது மக்கள் திலகம் எம்ஜிஆரின் இரட்டை வேட நடிப்பில், பரபரப்பாக உருவாகிக் கொண்டிருந்த, *'குடியிருந்த கோயில்'* படத்தை இயக்கும் பணியில் சங்கர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அந்நிலையில், சென்னை தியாகராய நகர் வீதியில் புலமைப்பித்தனை எதேச்சையாக சந்தித்த சங்கர், அப்படத்திற்காக ஒரு பாடலை எழுதித் தருமாறும், பித்தன் ஒருவன் தன்னைத் தானே பிதற்றிக் கொண்டு, பாடுவது போலவும், அப்பாடலிலே, வாழ்விலே பொதுவில் நடக்கும் விஷயங்களை பொருள்படும் வண்ணம் பதமான வரிகள் பொதிந்திருக்க வேண்டுமெனவும், கோரிக்கை விடுத்து விட்டு சங்கர் அங்கிருந்த அகல, புலமைப்பித்தனும் அங்கிருந்த வீதியின் ஓரத்திலேயே நின்று கொண்டு, பாடலை எழுதுகிறார். பல்லவியை கேள்விக் கணையோடு தொடுக்கிறார். தொடக்கத்திலேயே அதன் விஷயம் வினாவுடன் எழும்புகிறது. *"நான் யார்? நான் யார்? நீ யார்?* *நாலும் தெரிந்தவர் யார்?- யார்?"* படப்பிடிப்பு தளத்தின் அறையில் எழுத வேண்டியப் பாடல். பட்டப் பகலில் பலரும் உலாவுகின்ற வீதியில், புதுப் பானையில் பொங்குகின்ற பாலைப் போன்று, புதியப் புலவன் புலமைப்பித்தனுக்கு *"பா"* பொங்குகிறது. பாடலை மறுநாளே சங்கரிடம் சென்று ஒப்படைக்கிறார். சங்கர் திருப்தியடைகிறார். இது யாரும் அறியாமல் இரகசியமாகவே நடக்கிறது. சங்கரின் பரிந்துரையின் பேரில், மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் சம்மதம் பெறப்பட்டு, சாரதா படப்பிடிப்பு நிலையத்தில் அப்பாடலை *டி.எம்.எஸ்* பாட, மெல்லிசை மன்னர் *எம்.எஸ்.விஸ்வநாதன்* இசையில் பதிவாகிறது. *'குடியிருந்த கோயில்'* படத்தில், அப்பாடலுக்கு தனி மவுசு ஏற்படுகிறது. அப்படத்தில் பித்தனாகத் தோன்றும் எம்ஜிஆருக்கு இந்தக் கவிப் பித்தனின், *"நான் யார் நீ யார்"* என்ற அந்தப் பாட்டு ஒலிக்கிறது. பிறகுதான் அது புலமைப்பித்தனின் கவிப் புனையல் என்று பரவுகிறது. தொடர்ந்து, *டி.எம்.எஸ்-ஏ.எல்.ராகவன்* இருவரதுக் கூட்டு தயாரிப்பில் உருவான, *'கல்லும் கனியாகும்'* (1968) படத்திற்காக புலமைப்பித்தன், *"எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே"* என்றப் பாடலை எழுதுகிறார். பாடல் *டி.எம்.எஸ்* பாட, அமோக வரவேற்பைப் பெறுகிறது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் சொந்தப் படைப்பான, *'அடிமைப்பெண்'*(1969) படத்திற்கு, புலமைப்பித்தனின் *"ஆயிரம் நிலவே வா"* என்றப் பாடல், பெரும் புகழினை ஈர்த்தப் பாடலாகும். எம்.ஜி.ஆர் தனதுப் படங்களில் புலமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்து, *"இவரைப் போன்ற தமிழறிஞர்கள் பலர் சினிமாவிற்கு வர வேண்டும்*" என்ற வேண்டுகோளை முன் வைத்ததை, மறந்து விட முடியாது. இதனைத் தொடர்ந்து புலமைப்பித்தனின் திரைப்படப் பாடல் படலம் விசாலமடைந்து, பலப் படங்களுக்கு பாட்டெழுத அவருக்கு அழைப்பு கிட்டியது. மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில், 1982 இல் அவர் *"அரசவைக் கவிஞராக"* நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் அவர் சிறிது காலம் பணியாற்றினார். புலமைப்பித்தனின் மனைவி பெயர் தமிழரசி. அத்தம்பதியருக்கு *புகழேந்தி* என்ற மகனும், *கண்ணகி* என்ற மகளும் உண்டு. *“இலக்கிய நயத்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்த, புலவனென்றப் பெருமை எனக்குண்டு”* எனத் தமிழ் செருக்கோடு கூறியவர் புலமைப்பித்தன் ஆவார். அவர் புனைந்திருக்கும் சிலப் பாடல்கள் பின் வருமாறு:-
Ennaga Antha kalathil Varumai all side OK varumai all family vasathi ellamal than erukarkal evar Tech sehool la eruthadu vasathi erukum Napar Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Kangaras
வணக்கம் ஐயா, தாங்கள் விமர்சனம் செய்யும் தங்களுக்கே உரித்தான விதத்தில் மிகவும் அருமையாக உள்ளது. அதே வேளையில், சில விஷயங்களை தாங்கள் கயிறு திரித்திக் கூறுவது வருத்தமாக உள்ளது. புலமைப்பித்தன் இந்தப் பாடலை விஸ்வநாதன் முன்னிலையில் எழுதவில்லை. இயக்குநர் சங்கர் பாடலுக்கான காட்சியை அவரிடம் விவரிக்கவே, அதற்கேற்றவாறு தனது கற்பனை திறனால் அவர் எழுதிக் கொடுத்ததை, சங்கரே விஸ்வநாதனிடம் கொடுத்த பின்னர்தான் அப்பாடலுக்கு மெட்டமைக்கப்பட்டது. பின்னர்தான் புலமைப்பித்தன் நேரிடையாக வரவழைக்கப்பட்டதாக முன்பே ஒரு இதழில் படித்திருக்கிறேன். தாங்கள் கூறுவது முற்றிலும் வேறுபாடாக உள்ளது. நன்றி ஐயா.
pulamai pithan 1st song is not in குடியிருந்த கோயில் , அந்த பாட்டும் கிடையாது, சும்மா கதை அடிக்க வேண்டாம், அடிமை பெண் படத்தில் வரும் 1000 நிலவே வா தான் புலமை பித்தனின் 1st பாட்டு, SPB கும் அதுதான் 1st பாட்டு,, மேலும் குடியிருந்த கோயில் directed by p நீலகண்டன்,, அளவா புருடா விடு ,,
முதல் பாடல் குடியிருந்த கோயில் படத்தில் நான் யார் தான்! இயக்கியது கே.சங்கர்தான்...1968 ல் குடியிருந்த கோயில்,1969 ல் அடிமைப்பெண் ! இரண்டு படங்களின் இயக்குனருமே கே.சங்கர்தான் ! ஆக,துரை சீனிவாசன் புருடா விடவில்லை...கோவிந்த் நீர்தான் புருடா விடுகிறீர் !
திரு துரை சரவணனுக்கு இந்த ஒரு சிறப்பான பதிவைக் கொடுத்ததற்கு நன்றி. வாழ்க்கையில் மறக்க முடியாத மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். அதனுள் இத்தனை வரலாறுகளா என்ற வியப்பு!. " அடிப்பார் வலியார், துடிப்பார் மெலியார், தடுப்பார் யார் யாரோ என்ற வரியின் முடிவில் நான் இருக்கிறேன் என்பது போன்ற நாயகன் உருவில் எம்ஜிஆரின் அன்று தோன்றிய முகம் இன்று வரை எங்கள் மனதில் நீக்கமற நிறைந்துள்ளது.
MGR the Great....Evergreen...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய தகவலுக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்.....
😊
😊
முதல் பாட்டிலேயே
நான் யார் தான் யார்
பிறர் யார் என்பதை
தெரிவித்தவர் ஒரு
வித்தகர் தான்
புலமைப் பித்தன் தான்.
Thanks for the comment
மிகச்சிறந்த பாடல்.பல அற்புதமான பாடல்களை எழுதியவர்.
எம்ஜியார் எந்த அளவுக்கு அனைத்து படத்துறையிலே உள்நூட்பம் திறமை இருந்துள்ளது , என்பதை காட்டுகிறது
Thanks for the comment
F
🎉s4🎉4🎉4🎉4🎉4🎉é🎉🎉d🎉4🎉4🎉😂é🎉d🎉e🎉3🎉33😂😂😂@@duraisaravananclassic
அருமையான பதிவு
1) அழகென்னும் ஓவியம் இங்கே - *ஊருக்கு உழைப்பவன்*
2) ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா - *அடிமைப் பெண்*
3) கங்கை நதியோரம் ராமன் நடந்தான் - *வரப்பிரசாதம்*
4) அமுத தமிழில் எழுதும் கவிதை - *மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*
5) தென்றலில் ஆடும் கூந்தலில் - *மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*
6) புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என - *ஊரும் உறவும்*
7) நீங்க நல்லா இருக்கணும் - *இதயக்கனி*
8) இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - *இதயக்கனி*
9) பொன்னந்தி மாலைப் பொழுது- *இதயவீணை*
10) என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம் - *பல்லாண்டு வாழ்க*
11) இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா - *பல்லாண்டு வாழ்க*
12) பூமழை தூவி - *நினைத்ததை முடிப்பவன்*
13) எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா - *குமரிக்கோட்டம்*
14) உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை - *நீயா*
15) உனது விழியில் எனது பார்வை - *நான் ஏன் பிறந்தேன்*
16) ஓடி ஓடி உழைக்கணும்- *நல்ல நேரம்*
17) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - *நேற்று இன்று நாளை*
18) பாடும் போது நான் தென்றல் காற்று - *நேற்று இன்று நாளை*
19) நேருக்கு நேராய் வரட்டும் - *மீனவ நண்பன்*
20) கண்ணழகு சிங்காரிக்கு - *மீனவ நண்பன்*
21) சிரித்து வாழவேண்டும் - *உலகம் சுற்றும் வாலிபன்*
22) நாளை உலகை ஆளவேண்டும் - *உழைக்கும் கரங்கள்*
23) இந்த பச்சைக்கிளிக்கொரு *நீதிக்குத் தலைவணங்கு*
24) இனியவளே என்று பாடி வந்தேன் - *சிவகாமியின் செல்வன்*
25) எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது - *சிவகாமியின் செல்வன்*
26) ஒரு சின்னப் பறவை - *மதன மாளிகை*
27) சோளம் வெதைக்கையிலே - *பதினாறு வயதினிலே*
28) அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே - *கோவில் புறா*
29) இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் - *நல்ல பெண்மணி*
30) முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்- *ஆணிவேர்*
31) தென்பாண்டிச் சீமையிலே - *நாயகன்*
32) கஸ்தூரி மான் குட்டியாம் - *ராஜநடை*
33) நானொரு பொன்னோவியம் கண்டேன் - *கண்ணில் தெரியும் கதைகள்*
34) செண்டு மல்லிப் பூப்போல் அழகிய பந்து - *இதய மலர்*
35) மண்ணில் வந்த நிலவே - *நிலவே மலரே*
36) ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா - *தாலிதானம்*
37) பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே - *தீபம்*
38) ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது - *மதனமாளிகை*
39) தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ் - *இளஞ்சோடிகள்*
40) ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ - *தங்கமகன்*
41) கண்மணியே பேசு மெளனம் என்ன கூறு - *காக்கிச்ச்சட்டை*
42) முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையே தருக - *தர்மத்தின் தலைவன்*
43) அட்ரா மேளத்தை ராசா - *திசைமாறிய பறவைகள்*
44) சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் - *துடிக்கும் கரங்கள்*
45) அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசா - *உன்னால் முடியும் தம்பி*
46) புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - *உன்னால் முடியும் தம்பி*
47) உன்னால் முடியும் தம்பி - *உன்னால் முடியும் தம்பி*
48) சாதிமல்லிப் பூச்சரமே- *அழகன்*
49) கோழி கூவும் நேரம் ஆச்சு - *அழகன்*
50) மழையும் நீயே - *அழகன்*
51) சங்கீத ஸ்வரங்கள்- *அழகன்*
52) ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு - *சட்டம் ஒரு இருட்டறை*
53) உன்னை நம்பி நெத்தியிலே -ழ *சிட்டுக்குருவி*
54) மான் கண்டேன் மான்கண்டேன் - *ராஜரிஷி*
55) என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட - *சக்களத்தி*
56) சின்னமணி பொண்ணுமனி சிரிச்சாக்கா கோயில் மணி - *மல்லுவேட்டி மைனர்*
57) அந்தப்புரத்தில் ஒரு மகராணி - *தீபம்*
58) சங்கத்தில் பாடாத கவிதை - *ஆட்டோ ராஜா*
59) நீ ஒரு காதல் சங்கீதம்- *நாயகன்*
60) பூந்தென்றல் காற்றே வா - *மஞ்சள் நிலா*
61) நான் பிடிச்ச மாப்பிள்ளைதான் - *முந்தானை முடிச்சு*
62) அடி வண்ணக்கிளியே - *மிருதங்க சக்கரவர்த்தி*
63) வெண்மேகம் விண்ணில் - *நான் சிகப்பு மனிதன்*
64) பட்டுவண்ண ரோசாவாம் - *கன்னிப் பருவத்திலே*
65) உச்சி வகுந்தெடுத்து - *ரோசாப்பூ ரவிக்கைகாரி*
66) மரகதத் தோரணம் வாசலில் அசைந்திட - *பிள்ளையார்*
67) எனது ராகம் - *பொண்டாட்டி தேவை*
68) அழகே உன்னைக் கொஞ்சம் - *வாலிபமே வா வா*
69) குக்குக்கூ கூ - *வள்ளி*
70) அடியெடுத்து - *விடிஞ்சா கல்யாணம்*
71) தேவமல்லிகைப் பூவே - *நடிகன்*
72) மாலை செவ்வானம் - *இளையராஜாவின் ரசிகை*
அருமை !
*பித்தனுக்குப் பாட்டெழுதிய பித்தன்*
*என்ற புகழுக்குரியவர்*
**புலவர் புலமைப்பித்தன்**
*(கரிகாலன்)*
திரைப்படப் பாடலாசியர்களுள் புலவராக தன்னை அடையாளம் காட்டி, தமிழ்ப் புலமையுடன் தரமானப் பாடல்களை, தாராளமாக எழுதிக் குவித்தவர்,
*புலவர் புலமைப்பித்தன்* ஆவார். இன்று *செப்டம்பர் திங்கள் 8* ஆம் நாள் அவரது நினைவு தினமாகும். சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால், தனது *85* வயதில், கடந்த 2021 ஆம் ஆண்டில் அவர் காலமாகி விட்டார். *பித்தனுக்கு பாட்டெழுதிய பித்தன்* என்று, திரையுலகினரால் இன்றும் பேசப்படும் புலமைப்பித்தன், எண்ணற்ற பலப் பாடல்களை, தமிழ் ரசிகர்களுக்கு வார்த்திட்ட, கவிக் களஞ்சியமாக
திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலமைப்பித்தன் கோவை மாவட்டத்திலுள்ள பள்ளப்பாளையம்
என்ற கிராமத்தில், *கருப்பண்ணன் -தெய்வானை அம்மாள்* வாழ்விணையருக்கு மகனாக, *1935 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6* ஆம் நாளில் பிறந்தவர். அவரது இயற்பெயர் ராமசாமி என்பதாகும். சிறு வயதிலேயே கல்வியில்
நாட்டம் மிகுந்தவராக விளங்கினார். அதிலும் தமிழ்ப் பாடத்தில் அவரின்
ஆற்றல் திறம்பட மேலிட்டிருந்தது.
ஒருமுறை பள்ளி நேரத்தின் போது, இந்திப் பாட ஆசிரியர் ஒருவர் அவரை,
*“இவன் ஒரு பைத்தியக்காரன்”* என்று திட்டியிருக்கிறார், அதனைக் கேட்டு உடனடியாக அவர்,
*“ஆம், நான் தமிழ்ப் புலமையில் பித்துக் கொண்ட பைத்தியக்காரன்”* என்று பதிலளித்து, அன்றே *புலமைப்பித்தன்*
என்று, தனக்குத் தானே புனைப் பெயர் சூட்டிக் கொண்டார்.
கோவை சூலூர் பகுதியில், ஒரு நூற்பாலையில் பணி புரிந்து கொண்டே, தமிழ்ப் புலவருக்கான கல்வியை முடித்தார். பின்னர், 1964 ஆம் ஆண்டு, சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் அவர் தமிழாசிரியராக வேலைக்கு அமர்ந்து, பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் சிலரது தயவால், பிரபல இயக்குநர் கே.சங்கரின் அறிமுகம் கிட்டியது. அப்போது மக்கள் திலகம் எம்ஜிஆரின் இரட்டை வேட நடிப்பில், பரபரப்பாக உருவாகிக் கொண்டிருந்த,
*'குடியிருந்த கோயில்'* படத்தை இயக்கும் பணியில் சங்கர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
அந்நிலையில், சென்னை தியாகராய நகர் வீதியில் புலமைப்பித்தனை
எதேச்சையாக சந்தித்த சங்கர், அப்படத்திற்காக ஒரு பாடலை எழுதித்
தருமாறும், பித்தன் ஒருவன் தன்னைத் தானே பிதற்றிக் கொண்டு, பாடுவது போலவும், அப்பாடலிலே, வாழ்விலே பொதுவில் நடக்கும் விஷயங்களை பொருள்படும் வண்ணம் பதமான வரிகள் பொதிந்திருக்க வேண்டுமெனவும், கோரிக்கை விடுத்து விட்டு சங்கர் அங்கிருந்த அகல, புலமைப்பித்தனும் அங்கிருந்த வீதியின் ஓரத்திலேயே நின்று கொண்டு, பாடலை எழுதுகிறார்.
பல்லவியை கேள்விக் கணையோடு தொடுக்கிறார். தொடக்கத்திலேயே
அதன் விஷயம் வினாவுடன் எழும்புகிறது.
*"நான் யார்? நான் யார்? நீ யார்?*
*நாலும் தெரிந்தவர் யார்?- யார்?"*
படப்பிடிப்பு தளத்தின் அறையில் எழுத வேண்டியப் பாடல். பட்டப் பகலில் பலரும் உலாவுகின்ற வீதியில், புதுப் பானையில் பொங்குகின்ற பாலைப்
போன்று, புதியப் புலவன் புலமைப்பித்தனுக்கு *"பா"* பொங்குகிறது. பாடலை
மறுநாளே சங்கரிடம் சென்று ஒப்படைக்கிறார். சங்கர் திருப்தியடைகிறார்.
இது யாரும் அறியாமல் இரகசியமாகவே நடக்கிறது.
சங்கரின் பரிந்துரையின் பேரில், மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் சம்மதம்
பெறப்பட்டு, சாரதா படப்பிடிப்பு நிலையத்தில் அப்பாடலை *டி.எம்.எஸ்*
பாட, மெல்லிசை மன்னர் *எம்.எஸ்.விஸ்வநாதன்* இசையில் பதிவாகிறது.
*'குடியிருந்த கோயில்'* படத்தில், அப்பாடலுக்கு தனி மவுசு ஏற்படுகிறது.
அப்படத்தில் பித்தனாகத் தோன்றும் எம்ஜிஆருக்கு இந்தக் கவிப் பித்தனின், *"நான் யார் நீ யார்"* என்ற அந்தப் பாட்டு ஒலிக்கிறது. பிறகுதான் அது புலமைப்பித்தனின் கவிப் புனையல் என்று பரவுகிறது.
தொடர்ந்து, *டி.எம்.எஸ்-ஏ.எல்.ராகவன்* இருவரதுக் கூட்டு தயாரிப்பில் உருவான, *'கல்லும் கனியாகும்'* (1968) படத்திற்காக புலமைப்பித்தன்,
*"எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே"* என்றப் பாடலை எழுதுகிறார். பாடல் *டி.எம்.எஸ்* பாட, அமோக வரவேற்பைப் பெறுகிறது.
மிகவும் அருமை உங்கள் அவர் தான் திராவிட சித்தாந்த கொள்கை பற்று கொண்ட மாமேதை மக்கள் திலகம் டாக்டர் பாரத ரத்னா எம்ஜிஆர் என்ற மாமனிதர்
மிக சிறப்பான பதிவு நன்றி துரை சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்
Very very super super
Durai, your service is appreciable. Go ahead.
Thanks for the comment
The great MGR observed even songs sentence and it's effect in the heart of masses
எங்கள் ஊர்க்காரர் புலமை பித்தன் அவர்கள்.
தமிழ்நாட்டுக்காரர்.
எந்த ஊர்?
arumai❤
இவர்வீட்டில்தான் தலைர் பிரபாகரன் தங்கிபலநாட்கள் இருந்துவந்தார்
ஆம் !
Tamil overage@@user-eu2ct5ls2r
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் சொந்தப் படைப்பான, *'அடிமைப்பெண்'*(1969) படத்திற்கு, புலமைப்பித்தனின் *"ஆயிரம் நிலவே வா"* என்றப் பாடல், பெரும் புகழினை ஈர்த்தப் பாடலாகும். எம்.ஜி.ஆர்
தனதுப் படங்களில்
புலமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்து, *"இவரைப் போன்ற தமிழறிஞர்கள் பலர் சினிமாவிற்கு வர வேண்டும்*" என்ற வேண்டுகோளை முன் வைத்ததை, மறந்து விட முடியாது.
இதனைத் தொடர்ந்து புலமைப்பித்தனின் திரைப்படப்
பாடல் படலம் விசாலமடைந்து, பலப் படங்களுக்கு பாட்டெழுத அவருக்கு அழைப்பு கிட்டியது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில், 1982 இல் அவர்
*"அரசவைக் கவிஞராக"* நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் அவர் சிறிது காலம்
பணியாற்றினார். புலமைப்பித்தனின் மனைவி பெயர் தமிழரசி. அத்தம்பதியருக்கு *புகழேந்தி*
என்ற மகனும், *கண்ணகி* என்ற
மகளும் உண்டு.
*“இலக்கிய நயத்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்த, புலவனென்றப் பெருமை எனக்குண்டு”* எனத் தமிழ் செருக்கோடு கூறியவர் புலமைப்பித்தன் ஆவார். அவர் புனைந்திருக்கும் சிலப் பாடல்கள்
பின் வருமாறு:-
Super O Super speech.
Thanks for the comment
Ungal pachatral miga arumai kavi astrologer thank you
❤❤❤❤❤👍
MGR is God ❤️💚🌹👍🍁🙏
Super sir
Thanks for the comment
Very good information after long time . Thankyou very much sir. Durai saravana nm longlive. M.sivarasan
💐🙏சூப்பர்👌👋
Thanks for the comment
Super 💐✍️
Supper
Thanks
Great song for great star
Thanks for watching
Good song
தலைவர் இறந்தபோது கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய அஞ்சலிக்கவிதையின் தலைப்பு,'இறந்தது நானா,அவனா'.கவிஞர் கவிஞர்களில் 'ஆயிரத்தில் ஒருவர்'.வாழ்க,வாழ்க.
Super bro
🙏🙏🙏
தெரியாத.விசயம்❤
Super Explanation. ❤❤❤❤❤❤
Thanks for the comment
Super
Thanks for watching
Excellent 💯 perfect
Really great sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
இது குறித்து நான் ஏற்கனவே எழுதியிருந்த கட்டுரையை இத்துடன் இணைக்கிறேன்.
நன்றி ஐயா.
Excellent presentation by you about the great lyricist pulamaipithan
Super. Nobody knows how the turning point come elevates ur life.
Very interesting to seen and hear. Need more such informations reg.
Mgr the great.
Great sir🙏🙏🙏🙏
Super saran
இந்த பாட்ட முழுசா போடுங்கப்பா அப்பொழுது தான் தெரியும்
Thank
Ennaga Antha kalathil Varumai all side OK varumai all family vasathi ellamal than erukarkal evar Tech sehool la eruthadu vasathi erukum Napar Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Kangaras
❤❤❤
Excellent narrating story style. Keep it up. I am Coimbatore. Sulur tk Vadavalli. Near Sulthanpe
உங்கள் பதிவு autobiagraphy ஆக உள்ளது. இந்த சம்பவம் நிகழ்வுதள் பலரும் வாழ்கையில் வெற்றி பெ ற ஊதவும். நனறி
தலைவா சங்கர் இல்ல .ஸ்ரீதர்
Thalaivar padathukku padal eluthiyathalthan aver Pukal adainthar
❤
பிரபலங்களை மட்டுந்தான் குறிப்பிட்டு காணொளி போடுவீர்களா,?
என் போன்ற சாமான்யர்கள் பற்றி குறிப்பிட்டு காணொளி
போடுங்க!
பித்தனுக்கு பித்தன் எழுதிய உத்தம பாடல்
Ever green hero mass hero collection chakravarti is only one legend Dr.MGR songs are always super 🙏🙏🙏
MGR is jenious in not only cinima in allround of other fields he is sagalakalavallavan he is very much grate
Nice bro but poinnien Selvan story epo add பண்றீங்க
எனக்கு தெரியும். நீ. நீ. நீ. அவன் தானே. இல்லை. இல்லை. அதுதானே
வணக்கம் ஐயா, தாங்கள் விமர்சனம் செய்யும் தங்களுக்கே உரித்தான விதத்தில் மிகவும் அருமையாக உள்ளது.
அதே வேளையில், சில விஷயங்களை தாங்கள் கயிறு திரித்திக் கூறுவது வருத்தமாக உள்ளது.
புலமைப்பித்தன் இந்தப் பாடலை விஸ்வநாதன் முன்னிலையில் எழுதவில்லை. இயக்குநர் சங்கர் பாடலுக்கான காட்சியை அவரிடம் விவரிக்கவே, அதற்கேற்றவாறு தனது கற்பனை திறனால் அவர் எழுதிக் கொடுத்ததை, சங்கரே விஸ்வநாதனிடம் கொடுத்த பின்னர்தான் அப்பாடலுக்கு மெட்டமைக்கப்பட்டது. பின்னர்தான் புலமைப்பித்தன் நேரிடையாக வரவழைக்கப்பட்டதாக முன்பே ஒரு இதழில் படித்திருக்கிறேன். தாங்கள் கூறுவது முற்றிலும் வேறுபாடாக உள்ளது.
நன்றி ஐயா.
Day thambi patta sollu.....
pulamai pithan 1st song is not in குடியிருந்த கோயில் , அந்த பாட்டும் கிடையாது, சும்மா கதை அடிக்க வேண்டாம்,
அடிமை பெண் படத்தில் வரும் 1000 நிலவே வா தான் புலமை பித்தனின் 1st பாட்டு, SPB கும் அதுதான் 1st பாட்டு,,
மேலும் குடியிருந்த கோயில் directed by p நீலகண்டன்,, அளவா புருடா விடு ,,
have doubts, see the titles in அடிமை பெண் film titles
முதல் பாடல் குடியிருந்த கோயில் படத்தில் நான் யார் தான்! இயக்கியது கே.சங்கர்தான்...1968 ல் குடியிருந்த கோயில்,1969 ல் அடிமைப்பெண் ! இரண்டு படங்களின் இயக்குனருமே கே.சங்கர்தான் ! ஆக,துரை சீனிவாசன் புருடா விடவில்லை...கோவிந்த் நீர்தான் புருடா விடுகிறீர் !
பணத்துக்காக. தமிழ் அறிவை வித்த பாடல் ஆசிரியர்கள்
ரொம்ப வள வளா!
Dont give wrong information this is not his first film song