திருச்சி ஏர்போர்ட் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா|Trichy Sri pilikan Muneeswarar Temple|
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
- #trichy
#amman
#anmeegam
திருச்சி: 02.04.2023
பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலய ஆண்டுதிருவிழா - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி, அலகுகுத்தி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருச்சி மாநகர், ஏர்போர்ட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் 40ம் ஆண்டு திருவிழாவானது கடந்த 24ம்தேதியன்று காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்றுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் கிராமங்கள்தோறும் வலம்வருதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடந்த 31ம்தேதி அம்பாள் சக்தி கரகத்துடன் பால்குடம் எடுத்துவரும் வைபவம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் வைபவம் இன்று இரவு நடைபெற்றது.
முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி பின்னர் கொட்டப்பட்டு கருப்பண்ணசாமி ஆலயத்திலிருந்து அலகுகுத்தியும், காவடி மற்றும் தீச்சட்டி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஆலயத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்திபரவசத்துடன் இறங்கி பெருந்திரளான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
30அடிநீளமுடைய அலகினை குத்தியபடியும் தீமிதித்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அலகு குத்தியபடி பூக்குழி இறங்கிய பெண் பக்தர் ஒருவர் திடீரென்று மயக்கம் அடைந்ததால் அக்கினி குண்டத்தில் விழமுயன்ற அவரை கமிட்டினர் பத்திரமாக மீட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது..
திருச்சி ஏர்போர்ட் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா |Trichy Airport Sri pilikan Muneeswarar Temple
Trichy Airport Sri angala Eswari - Sri pilikan Muneeswarar Temple