மனதை மயக்கும் திருவாசகம் | Thiruvasagam Song | Manickavasagar Padal - History | Part - 1
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- மனதை உருக்கும் திருவாசகம் | Thiruvasagam Padal | Manickavasagar Song | Varalaru - Part - 2
எங்களது பணியை தொடர உங்களால் முடிந்த உதவியை செய்ய கேட்டுக்கொள்கிறோம்
Bank Details:
Name: Ramayee N
A/C: 6490814733
A/C Type: savings
IFSC: IDIB000T027
Branch: Contonment,trichy
• மனதை உருக்கும் திருவாச...
#thiruvasagam
#thiruvasagamintamik
#sivapuranam
#tamilboxshow
*****************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel is meant for EDUCATIONAL PURPOSE only .
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
உயிர் இருக்கும் வரை , உடனிருக்க வேண்டும் திருவாசகம்! சிவ சிவ!!
ஐயா வணக்கம்!உயிர் வெளியே போகாமல் உள்ளடங்கி இருப்பவர்களே இன்று வணங்கப்படுகிறார்கள்.
Anpa sivam
Anpea sivam
Shiva Shiva Shiva namaste baje v
Nathan thal valga
0 en nenjil nee
@@snarendran8300 uk kiii UI889 lo88oo{o io POPOPPOOLPPOI99 9o0
மிக மிக அருமையான பதிவு அனைவரும் கேட்டு பயனடைய வேண்டும். இவ்வளவு பெருமைகள் உடைய இப்பெரும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் திருவாசகம் பாடிய ஓதுவார் பெரும்பாலும் "ம்" என்று முடியும் அனைத்து வார்த்தைகளை "ல்" என்று உச்சரிப்பது பெரும் பிழை. இது ஒரு நெருடலாக உள்ளது.
மிகச் சரியான தவறை நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்
இவ்வளவு சிரத்தையுடன் செய்த காரியம் இப்படி பெரும் பிழை இருப்பதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அருமை சிவாயநம திருவாசகம் கேட்பது என் பாக்கியம்
திருவாசகம் எனும் அமுதத்தை பொருளோடு அருளிய எம் பெருமான் அடியவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஓம் நமசிவாய போற்றி
திருவாசகம் முழுவதுக்கும் எப்போது பொருள் கிடைக்கும் என காத்து கிடந்தேன்.
ஐயா,
என் ஆவலை சிவபெருமான் வந்து உங்களுக்கு சொன்ன மாதிரி அல்லவோ பொருள் சொல்லி உள்ளீர்கள். நன்றி பல கோடி. 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🔥🔥🔥
மிக அற்புதமான பதிவு. திருவாசகம் ஆனந்தமாகப் பாடும் பெரியவர்கள் அவர்களுக்கும் வணக்கத்திற்குரிய ஜயா திரு. சொ.சொ.மீ. சுந்தரனார் அவர்களுக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
அய்யா வணக்கம் இந்த Sunday அன்று மகம் நட்சத்திரத்தில் திருவாசகம் முற்றோதல் நடக்க உள்ளது. திருவாசகம் புஸ்தகம் முடிந்தால் இலவசமாக கிடைக்கும் படி உதவுங்கள்
திருவாசகம் எனும் தேன்
திரு வா ச க த்திற் கு உரு கார் ஒரு வaசகதிற்கும் உருகார். அருமையான விளக்கம். மிக்க நன்றி. 🙏🙏
நமசிவாய வாழ்க
நாதன்தாள் வாழ்க🙏🙏🙏
இந்த இறைபணிக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏
நற்பவி நற்பவி நற்பவி
அய்யா வணக்கம் வரும் ஞாயரு அன்று மகம் நட்சத்திரத்தில் திருவாசகம் முற்றோதல் நடக்க உள்ளது என்பதை நான் அறிவேன். திருவாசகம் புஸ்தகம் முடிந்தால் இலவசமாக கிடைக்கும் படி உதவுங்கள்
[3/13, 1:16 PM] Thirunavukarasu:
Kameshwaram.
சிவபுராணம்..🙏🏽
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
[3/13, 1:16 PM] Thirunavukarasu: எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
[3/13, 1:17 PM] Thirunavukarasu: ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
[3/13, 1:17 PM] Thirunavukarasu: மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
[3/13, 1:17 PM] Thirunavukarasu: பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
[3/13, 1:18 PM] Thirunavukarasu: நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
பக்திரசம் சொட்டச் சொட்ட மணிவாசகப் பெருந்தகை இறையனாரோடு கலந்துரையாடுவதை நேரில் கண்டு களிப்படைவதைப் போன்றதோர் உணர்வு.
இனிமையான நெகிழும் தன்மையதான குரல்வளம்.
பக்திபபெருக்கில் ஊன் உருகி மெய் சிலிர்த்து
மெயதான் அரும்பி விதிர்விதிர்த்துன் விரையாற்கழற்கென் கைதான் தலைவைத்து கண்ணீர் ததும்பி இருக்குங்கால் இடையூறாக வரும் வர்த்தக விளம்பரங்கள் நெருடலாக இருக்கின்றன.
அவற்றைத் தவிர்க்க இயலாதா?
ஆஆ1
மலம்நீங்கி உன்மலரடிக்கீழ் இருக்க
என்னுள்ளத்துள் ஓங்காரப் பிரணவமாய் நிற்கும் பேராது
நிற்கும் பேரருட்பெருங்கருணைப்
பெருவெள்ளமே! அருமை ஐயா நன்றிங்க சிவயநம திருச்சிற்றம்பலம் ஜனகன் போஸ்.
திருவாசகத்தின் பொருள் திருச்சிற்றம்பலத்துள் ஆடும்
அருட்பெருஞ்சோதி ! அருமை ஐயா நன்றிங்க சிவயநம திருச்சிற்றம்பலம் ஜனகன் போஸ் சென்னை.
ந ன்றீ
கைகூப்பி வணங்கி நன்றி தெரிவிக்கிறேன் இந்த அமைப்பினரின் இவ்வரிய செயலுக்கு.
திருவாசகத்தை பதிவு செய்து கொண்டு இருக்கும் போது ஒரு அவலட்சணமான ஆங்கில
பாடல் போடுவது மிகவும்
சீர்கேடுகள் உண்டாக வழி வகுக்கும். இப்படி எல்லாம்
விளம்பரம் செய்வதைவிட
தெய்வீக காணங்களை
பதிவிடாதிருபது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நிர்வாகம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.
சரி யா க சொன்னீர்கள்
உண்மையான கருத்து
அ/மி பிரகதீஸ்வரர் அனந்த கோடி
நமஸ்காரம் உடல் பொருள் உயிர்
அனைத்து ம் தங்களது காலில் சரண்அடைந்த என்னை உடனிருந்து காத்தருளும்
தன்னியன் ஆனேன் சிவாயநமக வாழ்க இறை பனி
திருவாசகத்துக்கு.உருகார்.ஒருவாசகத்துக்கும்.உருகார்.திருச்சிச்சிற்றம்பலம்.நன்றி.
நால்வர் இறை வாசகம் செவிமடுத்து சிவ நேயர்களுக்கு காலைப் பொழுதில் நாளும் நிறைவான நலம் தரும் தொடரவேண்டுவோம்.
ஒதுவா மூர்த்திகள் பல்லாண்டு காலம் வாழ்க
வாழ்த்துக்கள் ஐயா. திருவாசகத்திற்க்கு உரையை தருவது மிகவும் மகிழ்ச்சி. அதுவும் ஐயாவின் உரையை கேட்பதே சிறப்பு.
நமசிவாய வாழ்க! வாழ்க!
ஈசனின் ஆசியுடன் என்னுள் இருக்கும் சிவனை சீக்கிரம் அறிந்திட செய்வாயாக. ஓம் நமசிவாய
என்னோடு ஆசையும் ஓம் நமசிவய
@@eswarimurugesan2013 THE GREAT LORD SIVAN BLESS YOU AND GET YOU ALL HAPPY THINGS.WISH YOU A HAPPY VERY VERY LONG LIFE AND PROSPERITY.
@@sundaram.s3608 நன்றி சார் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏👍👍👍
@@eswarimurugesan2013 kkkkkkkkkkkkkk(kkkkkkkkk mom
என் விருப்பம் அதுவே
அன்பர்க்குச் சிவன்
வன்பர்க்கு அவன்!
அருமை ஐயா நன்றிங்க சிவயநம திருச்சிற்றம்பலம் ஜனகன் போஸ்.
பஞ்ச இந்திரியங்கள் மற்றும் காமம், க்ரோதம், ஆசூயை என்னும் பாழும் கிணற்றில் இருக்கின்ற என்னை இந்த திருவாசகம் எனும் ஈர்த்து இழுக்கக்கூடிய தேன் என்னை பாழும் கிணற்றில் இருந்து வெளியேற்ற உதவும் தங்களது இந்த பதிவுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். திரு தொண்டர் தொகையில் கூறியபடி இந்த பதிவைத் தொகுத்த அடியார்க்கும் அடியேன். சிவாய நம:
🙏🙏🙏 அருமை சிவாயநம திருவாசகம் கேட்பது என் பாக்கியம் 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய நமக
கைகூப்பி வணங்கி நன்றி தெரிவிக்கிறேன் இந்த அமைப்பினரின் இவ்வரிய செயலுக்கு.
ஓம் நமசிவாய. மாணிக்கவாசகரின் புகழ் வாழ்க.
கை.கூப்பி.வணங்கி.கோடணகோடி.ஐய்யா.அவர்களுக்கு.நன்றி
திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! சீர் ஆர் திருவையாறா போற்றி போற்றி!
ஐயா திருவாசகம் என் வாழ்வின் அங்கமாக திகழ்கிறது
இதுவல்லவோ பெருந்தொண்டு...
நன்றிகள் பல கோடி...
இறைவன் அருளால் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வையகம் போற்ற வாழி பல்லாண்டு.....
சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம் மிக்க நன்றிங்க அய்யாநான்வாழ்வதற்அர்த்தம்இந்ததிருவாசகம்கேட்டதுஎன்அப்பன்ஈசனைகடலில்கையலவுஉணரவைத்ததற்குமிகமிகநன்றிங்க🙏🙏🙏🙏🙏🙏
அருமையான திருவாசகத்தின்
அரிய. கருத்துக்களும்
மனதை தெளிவு அடைய செய்த
தங்கள் இனிய பாடல்கள்
அய்யா.மிக்க நன்றி
ஓம் நமசிவாய வாழ்க.
இனிய மதிய வணக்கத்துடனே
அய்யா வணக்கம் வாரும் ஞாயிரு அன்று மகம் நட்சத்திரத்தில் திருவாசகம் முற்றோதல் நடக்க உள்ளது. எனவே திருவாசகம் புஸ்தகம் முடிந்தால் இலவசமாக கிடைக்கும் படி உதவுங்கள்
திருவாசகத்திற்க்கு உருகாத மனம் ஒரு வாசகத்திற்க்கும் உருகாகாது.... என்பதை மனமுருக ஒப்புக்கொண்டேன் ஓம் நமசிவாயம்... சிவயா நமக
நன்றி சிவ சிவ
இந்த சிவதொண்டுக்கு உழைத்த அத்துனை தொண்டர்கள் பாதங்களை வணங்குகிறேன் சிவாயநம
இது உண்மையில் நானும் நேசிக்கிறேன் 🙏🙏🙏🙏✡️🔱✡️
திருவாசகம் மற்றும் திருமுறைகளை வாழ்நாளில் ஒருமுறையேனும் கேட்பதே மோட்சம் என்பேன்.தமிழனாக பிறந்தமைக்கு பெருந்தவம் பெற்றேன். அவன் அருளால் சித்தர்கள் தாள்வணங்கி அவன் தாள் அடைந்த பேறு பெற்றேன்.திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏻 எங்கள் அனைவரின் கருணை ஒளியே🙏🏻🙏🏻🙏🏻🧘
அருமையான விளக்க தொகுப்பு
பொற்பாதம் பணிகிறேன்
வணக்கம்
சிங்கப்பூர் தமிழர்களுக்கு வாழ்த்தி,
வணங்குகிறேன்.
வாழிய, வாழிய பல்லாண்டுகள் என...
தெண்ணாடுடைய சிவனே போற்றி.
ஓம் நமசிவாய என் மனசுமை நீக்கிடுவாய் அம்மைஅப்பனே போற்றி போற்றி
Thiruvasathirku uruhar oru vasathirkum uruhar enpathanai ipaadal kedka kedka unernthen nandri iyaa
இவ் உலகிற்கு தேவையான ஒன்று சரியான நேரத்தில் கிடைத்தது நன்றி இறைவா.
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
மெய்ச்சிலிர்க்க கேட்டு பயனடைவோம். இன்பமே சூழ எல்லோரும் வாழ்க
வாழ்க்கைக்கு ஒரு வாசகம் அது திருவாசகம். தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி...
S
அஆஆஇ ஆஇஆஆ ஆஇஆஆ ஆச
@@sivanesant9429 ழ்00
ச்
Super 💐💐👌💐💐👌💐💐⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🤝💐💐💐💐💐💐💐💐💐
Sivayanama
அருமையான பொக்கிஷம் பாதுகாக்கவேண்டியஒன்று.
கேட்டு கேட்டு இன்புற வேண்டிய ஒன்று.
முயன்ற வெளியிட்ட சிவனடியார்க்கு மிக்க நன்றி.
🙏🙏சிவ சிவ சிவ சிவ 🙏🙏
தங்கள் சிறந்த அருமையான சிவப்பணிக்கு அடியார்க்கடியேனின் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்கள்.....சிவ சிவ. நன்றி.....🙏🙏
அன்பே சிவம், திருச்சிற்றம்பலம்
ஐயா இந்த பதிவை அனுப்பியதற்கு மிக்க நன்றி இந்த பதிவை கேட்டவுடன் தேனை அருந்தியதை போல் மனதில் ஒரு ஆனந்தம்
Thebsstgholyexplanation thanky
By rajeswari
🙏சிவய நம 🙏அனைவரின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் 🙏அருமையான பதிவு 🙏
💖அன்பே சிவம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஹரஹர மகதேவா நற்றுணையாவது நமசிவாய அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் 💖
CGood Night 💤🌙
😊 Sweet Dream
🌠🌠🌠🌠🌠🌠🌠
🌱🍯🌱🌱🍯🌱🐝🌱
🌱🍯🌱🌱🍯🌱🌱🌱
🌱🍯🍯🍯🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌼🌱 Hi honey! 🌱🌼
🌱🍯🌱🌱🍯🌱🐝🌱
🌱🍯🌱🌱🍯🌱🌱🌱
🌱🍯🍯🍯🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌼🌱 Hi honey! 🌱🌼
Kinjonknoko
Kikk
Kookil ok kk NV in on kokkokkkkkkkkjjkkb
@@parvathiparvathi9587p̺p̺p̺0p̺p̺p̺p̺9l̺p̺p̺p̺
அருமை.நமச்சிவாயா🙏
பிணிக்கு மருந்து, திருவாசகம் என்னும் தேன்.
🙏திருச்சிற்றம்பலம் ஐயா🙏
நன்றி ஐயா வாழ்க தங்கள் தொண்டு மேலும் வளர்க
திருவாசகம் தந்த வள்ளல் மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி! ஐயா அவர்களை வணங்குகின்றேன். குருவடி போற்றி போற்றி!
அருமை , மனது மிகவும் மகி்ச்சியளிக்கிறது நன்றி
Hai ok
Thiruchitrampakam.iyyavinshivathondu.thodarattum.sivathondil.nam.anivarum.onnippom.namasivaya.vazhga.nathan.tHal vazhgha
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன் புறுவோம்.நன்
றி.விளக்க உரைதயாரித்துவழங்
கிய நல் உள்ளங்களுக்கு நன்றி!திருவாசகம் தந்த மணிவாசகர் திருத்தாள் போற்றி.என்றும் சிவனடிமை இராசம் சிவகுமார் .கம்பம் தேனி மாவட்டம்.தமிழ்நாடு.இந்தியா.
அருமையான குரல் அழகான தெளிவான விளக்கம் பதிவிட்ட அனைத்து உறவுகளுக்கும் உள்ளங்களுக்கும் நன்றி நமசிவாய போற்றி
சிவ சிவ ஓம்
தங்களின் சிவ தொண்டு பணி சிறக்கட்டும்.அய்யா நீங்கள் வாழ்க வளமுடன் அவினாசி கே விசுவநாதன்
திருவாசகத்தின் பாடலைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்.தறபொழுது தங்கள் கானொளி மூலம் பொருளையும் உணர்ந்துகொண்டேன்.வாழ்க திருமுறை சண்முகம்.திருச்சி.
Good nice
@@gokilavel200😂
Anbu.vasagamwel(sa
Am 2:33:32 2:33:32
I.f4e3
Arumaiyan vezakkam Ayya Thangal Thiruvadigal pottri pottri 🔥
வையத்துள் வாழ்வாங்கு வாழ....
திருவாசகம்
அப்பா அம்மா தந்தையே தாயே அனைத்து மக்களையும் காத்திருங்கள் உமா மகேசா துணை
என்றும் என் தாய் தமிழே வாழ்க
ஓம் நம சிவாய நற்றுனை யாவது நமசிவாயவே இறைவா....
அற்புதமான ஒரு பதிகம்!
தமிழின் பெருமையையும்,
இறைவன் மேன்மையும்
சிறுவனாகிய எனக்கு உணர்த்திய தங்களுக்கு, உங்கள் பொற்பாதங்கள் பணிந்து நன்றி!!!
நன்றி அய்ய வாழ்த்துக்கள்
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
Om namasivaya valzhga Nathan thal valzhga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏valzhga valamudan super 👌👌👌👌👌
வாழ்க வளமுடன் அய்யா உங்கள் சேவை தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் இறைவனின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்க வளமுடன்
😁3
கையிலை பாக்கியலட்சுமி
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
சிந்தையில் நிறைந்த திருவாசகத் தேனே போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி
மணிவாசகப் பெருந்தகை அருளிய திருவாசகத்தை இசை ஞானத்தோடு ஓதுவார் மூர்த்தி அவர்கள் திருவாய் மலர தேன் வந்து நேயர்களின் காதுகளில் பாய்ந்து எல்லையில்லா பரமானந்த்தத்தையும்
அனுபவிக்கவும், பேராசிரியர் பெருந்தகை அவர்களின் விரிவுரைகள் மூலம் பாட்டிற்கு பொருளை அறிந்து
ஞானகண்களை திறக்கவைத்தும், அல்லல்
பிறவி அறுப்பவனை
எம்பெருமான் சிவப்பெருமானின்
அடிக்கீழ் என்றும் திளைத்து
இருக்க வழி தேடிடும் ஆன்மாக்களுக்கு இந்த
இணையதளம் மூலமாக
தர்மச்செயலை ஒல்லும்
வகையால் ஒலிக்க வைத்த
சிங்கப்பூர் திருவாசக மாநாட்டின் குழுவினர்கள்
அனைவர்களின் பொன்னார்
திருவடிகளையும், ஓதுவார் மூர்த்தி மற்றும் பேராசிரியர்
ஆகியோர்களையும் வணங்கி நினைந்து போற்றியும்,
எம்பெருமான் திருவருளால்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்,
கழுபிணியிலாத உடலும்,
அறக்கட்டளை 16 செல்வ
வளங்களோடு நீண்ட ஆயுளுடனும் பல்புகழோடு
வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க என அவன் அருளாலே அவன்தாள் வணங்கி வாழத்தி மகிழ்ந்திடும்
என்றும் ஆரூரான் அடிமை
மா.சு.இருதயகமலநாதன்
திருவாரூர்.
@@kamalanathansubramanian523
Lllllllllll,
@@kamalanathansubramanian523 .,.,,. ,.,..,,.,.,.,.,,.,.,.,.
.,
திருவாசக விளக்கத்திற்கு மிக்க நன்றி.
திருவாசகம் என்னும் தேன் அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்று என்று நினைத்தாலும் அது ஆச்சர்யம் இல்லை ஏனன்றால் திருவாசகம் அதற்கெல்லாம் மேலானது என்று நான் நினைக்கிறேன். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகமாட்டார் என்று உலக அளவில் மக்கள் நினைப்பது உண்மை நன்றி வணக்கம் !
தேனின் சுவை மட்டும் அல்ல.. தன்மை..
தானும் சிறந்தது..
சேர்வதையும் சிறப்பிக்கும் திருவாசகம் ❤
மனதில் பக்தி நிலையில் .ஊறின்
அனைத்தும் சிவமயம் ஓம் நமசிவாய
நமச்சிவாய வாழ்க நன்றி
மிக, மிக அருமையான பயனுள்ள பதிவு. ஓதுவாரின் உச்சரிப்பு தெளிவு. குரல் இனிமை. அய்யா சோ. சோ. மீ. சுந்தரம் அவர்களின் பொருளுரை மிகச் சிறப்பு. இந்த சீரீய பணியினை முன்னெடுத்துச் சிறந்த முறையில் முடித்துள்ள சிங்கப்பூர் திருமுறைக் குழுவினருக்கு, மனமார்ந்த பாராட்டுகளும், சிரம் தாழ்ந்த வணக்கங்களும். ஒம் நமசிவாய : திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
சிவாணர். வாழ்க... வாழ்க... போற்றி.. போற்றி... போற்றிஓம் 🙏🙏🙏🙏🙏
எவ்வளவு பாடல்கள் ஜயா திருவாசகத்தில்
அருமையான படைப்பு. தெண்ணாடுடைய சிவணே போற்றி , என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.. ஓம் நம சிவாய. திருச்சிற்றம்பலம்.. ஜெகன்
தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. 🙏🙏🙏🙏
நமசிவாய...மிக அருமை...மிக்க நன்றி...சிவ சிவ 🙏🙏🙏
0 Bengaluru Suresh s
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 💐👌👏👏👏👏👏
ஓம் நமச்சிவாய மாணிக்கவாசகர் புகழ் ஓங்குக ஓம் நமச்சிவாய த்துக்கு கோடி கோடி நன்றிகள்
அருமையான பதிவு எளிதான விளக்கம் உயர்ந்த ஆண்மீக கருத்துகள் 🌄🙋
Tq
தெய்வமே, என்ன பேரு கொண்டேன் என் அய்யா சிவா பெருமானே இதை கேட்க 🙏 நன்றி 🙏 சிவ சிவா 🙏 ஓம் நமச்சிவாய 🙏
நாதம் நாமம் நமசிவாய வே
ஓம் திருசிற்றம்பலம்...
ஓம் சதாசிவம்..
ஓம் நமசிவய.
சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்.
தில்லை அம்பலம்
சிவ கடாட்சம்
பரிபூரணம்.
திருச்சிற்றம்பலம்.விளக்கம் அருமை இனிமை.நமஸ்காரம்
எளிதில் கிடைக்கப்பெறாத பொக்கிஷம்
இதை அனைவர் இடத்தும் பகிர முன்வந்த அடியார் ஐயாவின் திருவடிகளை வணங்குகிறேன்
இத்தொண்டில் ஈடுபட்ட அணைத்து அடியார் பெருமக்களுக்கும் நன்றி
சைவம் வளரவும் உங்கள் தொண்டு தொடரவும் அம்மை அப்பரை அடிநாய் வேண்டிக்கொள்கிறேன்
புரிந்துகொண்டு
விட்டீர்கள் happy
இன்று தான் எம்பெருமான் சிவபெருமானின்அருளால்இப்பதிவைகேட்கமுடந்தது.நன்றி நன்றி நன்றி ஐயா
ஐயா சிவபெருமானே தென்னாட்டுடைய சிவனே உன்னை நான் மறவேன் மறவேன் ஓ நமச்சிவாயம்
வாழ்க்கையை தத்ரூபமாக எழுதி உள்ளார் மாணிக்கவாசகர் அவர்கள்
ஓம் நமசிவாய
நன்றி சிவாயநம
பல நுட்பமான சக்திகளை வார்த்தைகளால் கூற முடியும் என்பதற்கு இக் காணொளி ஒரு சான்று மன அமைதியைத் தேடும் பல ஆன்மாக்களுக்கு விடை தரும் காணொளி எல்லையில்லா சக்தி கொண்ட இறைவனைத் தேடும் முதல் படி ஓம் நமசிவாய.....
Ooooooooo great Google geee
@@aarankammanuvel1235
டா
Hi
@@dhanalakshmikiruthika3221 வணக்கம்.
GURUVE SARANAM 🙏
கோடான கோடி நன்றிகள் ஐயா...!😊
ஓம் நமோ சிவாய
எல்லாம் எல்லாமே சிவமயமே என் சிவபெருமானே
ஐயா, நன்றி. என் வாழ்நாளில் இது போன்ற வாய்ப்பை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தேன். நன்றி.. நன்றி...
Yes
'very super program sir God bless you
ஓம் குரு வாழ்க வாழ்க வளமுடன்
கோடான கோடி நன்றிகள் ஐயா...🙏🙏🙏🙏🙏
கோடான கோடி நன்றி
நமசிவாய வாழ்க