அரசு மதுபான கடைக்கு எதிராக பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • அரசு மதுபான கடைக்கு எதிராக பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் : அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    ஓசூர் அருகே அஞ்செட்டி தாலுகாவுக்கு உட்பட்ட நாட்றாம்பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. இந்த அரசு மதுபான கடையை டாஸ்மாக் நிர்வாகத்தினர் அருகில் உள்ள புதூர் பகுதிக்கு மாற்றம் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். புதூர் பகுதிக்கு அரசு மதுபான கடையை கொண்டு வரக்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    இந்த நிலையில் இன்று அரசு மதுபான கடையை புதூர் கிராமத்திற்கு கொண்டுவர கூடாது அப்படி கொண்டு வந்தால் பாதுகாப்பு இல்லாத சூழலும், குடிமகன்களால் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும், எனவே டாஸ்மாக் நிர்வாகம் புதூர் கிராமத்தில் அரசு மதுபான கடையை அமைக்க கூடாது என கூறி அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் சாலையின் குறுக்கே முள்செடிகளை போட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ความคิดเห็น •