நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமா ஏற்பு! Cabinet meeting | Covai | Nellai | Mayor | Resignation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே நிலவிய பனிப்போர் காரணமாக மேயர் சரவணன் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
    மேயர் பதவி விலகல் கடிதம் இன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கப்பட்டது.
    இந்த கடிதம் மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு கடிதத்தின் மீது ஒப்புதல் பெறப்படும் நடவடிக்கைக்காக மாமன்ற சிறப்பு கூட்டம் துணை மேயர் ராஜ் தலைமையில் இன்று நடந்தது.
    மாநகராட்சி துணை மேயர், ஆணையாளர் மற்றும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வருகை தந்தனர்.
    சரியாக 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் பதவி விலகல் கடிதம் மாமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு விடுவதாக கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    பின்னர் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்த கவுன்சிலர்கள் மேஜையை தட்டி அதற்கு வரவேற்பு தெரிவித்தனர். #Tirunelveli #Coimbatore #MayorIssue #Dmk #Dinamalar #

ความคิดเห็น •