ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
TAMIL NOVEL- கி. ராஜநாராயணன் “பிஞ்சுகள்”இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல்.தமிழ் இலக்கிய நாவல்.
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
- TAMIL NOVEL-தமிழ் இலக்கிய நாவல்.
கி. ராஜநாராயணன் எழுதிய “பிஞ்சுகள்”
இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல்
• இலக்கிய உலகின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன். 98 வயதான போதும் எழுதித் தீராத கைகளுக்குச் சொந்தக்காரர். பல தலைமுறைகளைக் கடந்தும் ,புதிய கதைக் களன்களோடு எழுத்தின் வீச்சு குறையாத கரிசல்காட்டு கதைசொல்லி.
• அவர் "கரிசல் காடு" என்ற கரும் பருத்தி மண்ணின் பகுதி என்று பொருள்படும் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். அவரது கதைகள் கோவில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இப்பகுதி மக்கள் தனித்துவமான கலாச்சாரம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் எல்லா பழங்கால சமூகங்களையும் போலவே அவர்கள் தங்கள் நிலம், இயற்கை மற்றும் இயற்கை சக்திகளை வணங்கினர்: இந்த நம்பிக்கை அவர்களைப் போன்ற சில பழக்கவழக்கங்களைப் பின்பற்றிய சிறுபான்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சடங்குகள்,
• கரிசல் காட்டு மனிதர்களின் ஆன்மாவை தனது படைப்புலகில் உலவ விட்ட முன்னோடி. கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இவரின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டு பின்னால் எழுத வந்தோரில் பலர் இன்று நட்சத்திர எழுத்தாளர்கள்.
• இடதுசாரி சித்தாந்தத்தில் தீவிர நாட்டம் கொண்டவர். களப்போராளி. விவசாயிகள் பிரச்னைக்காகப் போராடி, சிறை சென்றவர்.
• ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றிருந்தாலும், பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியராக உயர்ந்தவர். நாட்டுப்புறக் கதைகளை தேடித் தேடி தொகுத்தவர்.
• கி.ரா.வின் எழுத்தை ஆய்வு செய்து பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். “மனிதனுக்கு வைத்தியம் செய்யணும்னா அதை கதைகளைக் கொண்டுதான் செய்ய முடியும்” என்று கூறும் கி.ரா.வின் மற்றொரு புகழ்பெற்ற வாக்கியம் “மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையேப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்!”.
அருமையான பதிவு .
நன்றி .🙏
மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌹
👌🏼super🙏🏼
Thank you very much 🌹🌺🌷
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼
@@user-gh1xw7ew9u 🙏🏼🙏🏼