தானெனை முன்படைத்தான் | தேவாரம் -13 | THEVARAM | திருநொடித்தான்மலை | Thaan Enai Mun Padaithan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • A Humble Offering by Keerthana Vengatesan.
    Let us get soaked by Eternal Music..
    Like || Share || Comment || Love
    #thevaram #sundarar
    If you like the song, please Remember to SUBSCRIBE to the channel.
    Like and Share with your Family and Friends.
    Make sure you Subscribe and Never miss a Video.
    TH-cam Link: www.youtube.co...
    Join whatsapp Community of Keerthana Music World
    chat.whatsapp....
    Follow us on Instagram:
    / __keerthana_vengatesan
    Follow us on Facebook Page:
    / keerthanavengatesan1தி...
    தானெனை முன்படைத் தானத
    றிந்துதன் பொன்னடிக்கே
    நானென பாடலந் தோநாயி
    னேனைப் பொருட்படுத்து
    வானெனை வந்தெதிர் கொள்ளமத்த
    யானை அருள்புரிந்து
    ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்
    தான்மலை உத்தமனே. 1
    ஆனை உரித்த பகைஅடி
    யேனொடு மீளக்கொலோ
    ஊனை உயிர்வெருட் டிஒள்ளி
    யானை நினைந்திருந்தேன்
    வானை மதித்தம ரர்வலஞ்
    செய்தெனை ஏறவைக்க
    ஆனை அருள்புரிந் தான்நொடித்
    தான்மலை உத்தமனே. 2
    மந்திரம் ஒன்றறி யேன்மனை
    வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
    சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்
    தொண்டனெனை
    அந்தர மால்விசும் பில்அழ
    கானை அருள்புரிந்த
    துந்தர மோநெஞ்ச மேநொடித்
    தான்மலை உத்தமனே. 3
    வாழ்வை உகந்தநெஞ் சேமட
    வார்தங்கள் வல்வினைப்பட்
    டாழ முகந்தவென் னைஅது
    மாற்றி அமரரெல்லாஞ்
    சூழ அருள்புரிந் துதொண்ட
    னேன்பரம் அல்லதொரு
    வேழம் அருள்புரிந் தான்நொடித்
    தான்மலை உத்தமனே. 4
    மண்ணுல கிற்பிறந் துநும்மை
    வாழ்த்தும் வழியடியார்
    பொன்னுல கம்பெறு தல்தொண்ட
    னேனின்று கண்டொழிந்தேன்
    விண்ணுல கத்தவர் கள்விரும்ப
    வெள்ளை யானையின்மேல்
    என்னுடல் காட்டுவித் தான்நொடித்
    தான்மலை உத்தமனே. 5
    அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்
    கொண்டடி சேர்வறியா
    வஞ்சனை யென்மன மேவைகி
    வானநன் னாடர்முன்னே
    துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட
    னேன்பர மல்லதொரு
    வெஞ்சின ஆனைதந் தான்நொடித்
    தான்மலை உத்தமனே. 6
    நிலைகெட விண்ணதி ரநில
    மெங்கும் அதிர்ந்தசைய
    மலையிடை யானையே றிவழி
    யேவரு வேன்எதிரே
    அலைகட லால்அரை யன்அலர்
    கொண்டுமுன் வந்திறைஞ்ச
    உலையணை யாதவண் ணம்நொடித்
    தான்மலை உத்தமனே. 7
    அரவொலி ஆகமங் கள்அறி
    வாரறி தோத்திரங்கள்
    விரவிய வேதஒ லிவிண்ணெ
    லாம்வந் தெதிர்ந்திசைப்ப
    வரமலி வாணன்வந் துவழி
    தந்தெனக் கேறுவதோர்
    சிரமலி யானைதந் தான்நொடித்
    தான்மலை உத்தமனே. 8
    இந்திரன் மால்பிர மன்னெழி
    லார்மிகு தேவரெல்லாம்
    வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
    யானை அருள்புரிந்து
    மந்திர மாமுனி வர்இவ னாரென
    எம்பெருமான்
    நந்தமர் ஊரனென் றான்நொடித்
    தான்மலை உத்தமனே. 9
    ஊழிதோ றூழிமுற் றுமுயர்
    பொன்னொடித் தான்மலையைச்
    சூழிசை யின்கரும் பின்சுவை
    நாவல ஊரன்சொன்ன
    ஏழிசை இன்றமி ழால்இசைந்
    தேத்திய பத்தினையும்
    ஆழி கடலரை யாஅஞ்சை
    யப்பர்க் கறிவிப்பதே. 10
    திருச்சிற்றம்பலம்
    பதிக வரலாறு:
    சுவாமிகள், திருவஞ்சைக்களத்துப் பெருமானைப் பணிந்து, 'இவ்வுலக வாழ்வை நீக்குதல் வேண்டும்' என்று வேண்டி, "தலைக்குத் தலைமாலை" என்னும் திருப்பதிகத்தில் பாடிய குறிப்பால், திருக்கயிலைப் பெருமான், 'நம் ஆரூரனை வெள்ளானையில் ஏற்றிக் கொணர்க' என்று அருளியவாறு, மால் அயன் முதலாகிய தேவர்கள் திருவஞ்சைக்களம் வந்து, சுவாமிகளை வணங்கி, 'அருளிப்பாடு' எனப் போற்றி, 'ஏவல்' என்றனர்.
    சுவாமிகளும் பணிந்து எழுந்து எதிரேற்று, சேரர் பெருமானை எண்ணியவராய், வெள்ளானையின் மீதேறி, சேரர் பெருமானும் பின்பு வந்து தமது குதிரையில் முன்னே செல்ல, வான் வழியில் பாடிக்கொண்டே சென்று, திருக்கயிலையில் முடித்தருளியது இத்திருப்பதிகம். (தி. 12. வெள்ளானைச். சரு. 39)
    சுவாமிகள், இத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் அருளிய அருளாணையின் வண்ணம் வருணனால் திரு, வஞ்சைக் களத்தில் இது சேர்ப்பிக்கப்பெற்றது.
    குறிப்பு: இத்திருப்பதிகம் பல பெருமைகளையுடையது. அவை, தேவாரத் திருமுறைகளை நிறைவு செய்தமை, களையா உடலோடு நம்பியாரூரர் வெள்ளானையின்மீது வான் வழியாகத் திருக்கயிலை செல்லுங்கால், இறைவரது எல்லையற்ற பேரருட்டிறத்தை நினைந்து எழுந்த இன்ப மேலீட்டில் பாடிக்கொண்டு சென்றமை, நம்பியாரூரது வரலாற்றுக்குரிய அகச்சான்றுகள் பலவற்றைத் தருதலுடன், உரை யளவைக்குரிய சிறப்பியல்பு தெற்றென விளங்க நிற்றல், திருக்கயிலையில் முற்றுப்பெற்று நாயனாரது அருளாணையால் வருணனால் நிலவுலகிற் கொணர்ந்து அளிக்கப்பட்டமை முதலியனவாம்.
    இத்திருப்பதிகம் நுதலியபொருள், இதன் வரலாற்றானே விளங்கும்.

ความคิดเห็น • 66

  • @sivagnanamswamivel6396
    @sivagnanamswamivel6396 ปีที่แล้ว +6

    பேத்தி கீர்த்தனா சிவாய நம சரஸ்வதி உன்னிடம் குடிகொண்டு உள்ளார், வாழ்க வளமுடன் 🙏🚩🙏👌👌👌🏵️🔥🌹🍀🔱🌴

  • @venkatesans860
    @venkatesans860 9 หลายเดือนก่อน +3

    ommm

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 8 หลายเดือนก่อน +2

    Siva siva om sivayanamah om namasivayanamah thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 7 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.மிகவும் அருமை.வாழ்க

  • @murugeswari5134
    @murugeswari5134 3 หลายเดือนก่อน +2

    Ennaku kannir varugirathu en thangame ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤hara hara mahadeva

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  3 หลายเดือนก่อน +1

      மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 4 วันที่ผ่านมา +1

    வலிவு-சமம்-மெலிவு
    மெலிவு-சமம்-வலிவுஇப்படி பாடவேண்டும் அருமை அருமை நல்ல முறையில் பாடுகிறீர்கள் சிவாய நம

  • @ravichandar216
    @ravichandar216 ปีที่แล้ว +4

    மிக மிக அருமை.ஒரு நொடியில் ஐராவனத்தின் மீதேற்றி கைலாயம் காட்டுவித்த சைவப்பிழம்பே நீ வாழி பல ஊழிகாலம்.சிவாயநம.

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ☺️🙏

  • @lakshmikesavan729
    @lakshmikesavan729 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை. இசை குயில் கீர்த்தனா. வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +1

      Romba thanks Athachi ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 ปีที่แล้ว +4

    மிகப்பெரிய பக்தி பெருக்கான தேவாரம் உனது இனிமையான குரலில் இறைவன் வந்து ஆசி அளிப்பது போல உள்ளது🙏🙏🙏❤️

  • @ramadassl8615
    @ramadassl8615 2 หลายเดือนก่อน +2

    Veryverygood

  • @t.rajasekarant.rajasekaran7350
    @t.rajasekarant.rajasekaran7350 7 หลายเดือนก่อน +1

    மிகவும் இனிமையான குரலில் தேவாரம் கேட்க ஆனந்தமாய் உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரிக்கு 👏🏽👏🏽👏🏽🙏🙏🙏

  • @sivavijay3882
    @sivavijay3882 8 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு தங்களின் சிவத்தொண்டு தொடர எம் சிவபெருமானை வேண்டுகிறேன்.🙏🌹🙏

  • @cananthakumar
    @cananthakumar 3 หลายเดือนก่อน +2

    Very very arumai keerthana madam🎉🎉🎉🎉🎉

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว +3

    நல்ல முயற்சி கீர்த்தனா. வாழ்த்துக்கள்.

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏

  • @arunadevi2575
    @arunadevi2575 8 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி

  • @iyanmolhi
    @iyanmolhi ปีที่แล้ว +5

    மிக நன்று. வாழ்க வளமுடன்!

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @EthirajanElumalai
    @EthirajanElumalai ปีที่แล้ว +2

    ❤❤

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 ปีที่แล้ว +2

    வணங்கிகிறேன் அம்மா

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ☺️🙏

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 ปีที่แล้ว +2

    Sivaaya namaha shivaya namah vaallga valamudan nanri

  • @mangaim3217
    @mangaim3217 ปีที่แล้ว +2

    Super

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 ปีที่แล้ว +4

    தங்கத்திற்கு குரலில் ஏற்ற இறக்கங்கள் தடுமாறுகிறது...ஆனால் நன்றாக முயற்சி செய்துள்ளார்.கேட்டு ரசிக்க வைக்கிறது. திருஷ்டி பட்டு விட்டது பிள்ளைக்கு,சுற்றி போடுங்கள்👌👏

  • @ramsabi
    @ramsabi ปีที่แล้ว +4

    Divine singing my child.

  • @c.a.nithiksha5229
    @c.a.nithiksha5229 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @karthielumalai2037
    @karthielumalai2037 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 3 วันที่ผ่านมา

    Arumai amma
    Adiyen Madurai G SANKARA NARAYANAN @ TRIVANDRUM

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை, மிக்க நன்றி, வாழ்த்துக்கள்... ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அம்மா 🙏

  • @kavithanagarajan9964
    @kavithanagarajan9964 ปีที่แล้ว +3

    Annampalikum. Padal. Padavum

  • @thirumal969
    @thirumal969 ปีที่แล้ว +2

    Very good Keerthana...I wish u all Sucess ahead ....keep Shining in the world of music...

  • @ramakrishnanramadoss3303
    @ramakrishnanramadoss3303 ปีที่แล้ว +2

    அருமை கீர்த்தனா

  • @sudesh14feb
    @sudesh14feb ปีที่แล้ว +2

    Super keerthana.

  • @beautyofnature3897
    @beautyofnature3897 8 หลายเดือนก่อน +1

    Keerthan venkatesh podhigai tv la padra ponna

  • @santhidevan3944
    @santhidevan3944 3 หลายเดือนก่อน +2

    இந்தநாள்இனியநாள்மகளேசிவன்அருள்உம்மிடம்பணிகிறோம்உம்மை

  • @MrManian47
    @MrManian47 ปีที่แล้ว +2

    Very devotional and soothing rendition.How many songs you have done? Is it mostly by Sundarar? This is 13th.

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +1

      Hello Sir.. Thankyou so much for your appreciation...She has done others as well appar and Gnanasambandar... Recently Sundarar... In total around 18 songs.. ☺️🙏🙏

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ☺️🙏

  • @RandeleeNaicker
    @RandeleeNaicker หลายเดือนก่อน +1

    Please add the English lyrics to your renditions thanks 🙏

  • @muthusamy3476
    @muthusamy3476 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @mangaim3217
    @mangaim3217 ปีที่แล้ว +2

    Super