உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு, இரத்த தானம் செய்பவர்களை கௌரவித்த அம்ருதா மருத்துவமனை
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு #அம்ருதாமருத்துவமனை (@amritahospitals) இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கௌரவித்தது. மாற்று மருத்துவத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பீனா கே. வி துவக்கி வைத்தார். எர்ணாகுளம் ‘RTO’, திரு கே.மனோஜ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். அம்ருதா விஸ்வ வித்யாபீடம் கொச்சி வளாகத்தின் இயக்குநர் டாக்டர். யு. கிருஷ்ணகுமார், (Dr. U. Krishnakumar), ‘HDFC’ மாநிலத் தலைவர் திரு லட்சுமிநாராயணன் (Lakshminarayanan) மற்றும் மாற்று மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் வீணா ஷெனாய் (Dr. Veena Shenai) உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.