Thiruma Vs Pa Ranjith: இதுவரை இருவரும் பேசியது என்ன? Armstrong Case-ஆல் முரண்பாடு என்பது உண்மையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • 'அற்பர்கள்' என்று திருமாவளவன் யாரை குறிப்பிட்டார்? திருமா - பா.ரஞ்சித் இடையே என்ன நடக்கிறது?
    படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம் செலுத்துவது, அந்த படுகொலையை கண்டிப்பது போன்றவை விடுதலைச் சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
    யாரோடும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர், அதே சமயத்தில் எந்தவொரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்நிலையில் வைத்து அணுகியது இல்லை என்றும் குறிப்பிட்டார்.
    சனிக்கிழமை அன்று, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 'ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி' நிகழ்வைக் குறிப்பிட்டுதான் திருமாவளவன் பேசியதாக விமர்சனங்களும் எழுந்தன.
    இந்த பேரணியின் போது பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், "எங்களுக்கு எதிராக அண்ணன் திருமாவளவனை நிறுத்துவது கொடுமையான விஷயம். அவருக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் நிற்க மாட்டோம். அவர் எங்களுடைய குரல்" எனக் கூறினார்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Thirumavalavan #VCK #PaRanjith
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 252