கூற்றாயினவாறு
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
- கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 1
நெஞ்சம் முமக்கே யிடமாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென்னீர் அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 2
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தே யுமக்காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடிகொண்டு மெய்பூசவல்லீர்
பெற்றமேற்றுகந்தீர் சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 3
முன்னம் மடியேன் அறி யாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை யடியே னுமக் காளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை யடைந்தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 4
காத்தாள்பவர் காவல் இகழ்ந் தமையாற்
கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தை யிதுவொப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் புனலார் அதிகைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 5
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 6
உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவல் லிலாமையினால்
வயந்தே யுமக்காட்செய்து வாழலுற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தே யென் வயிற்றின கம்படியே
பறித்துப் புரட்டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டா னாத்துறை அம்மானே. 7
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம்மனம் மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
சங்க வெண்குழைக்காது டைஎம்பெருமான்
கலித்தே யென் வயிற்றி னகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 8
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
புரிபுன்சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி யென்றிவற்றை
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார்
அடியார் படுவதிது வேயாகில்
அன்பேஅமையும் மதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 9
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங்கா நடமா டவல்லாய்
ஆர்த்தான ரக்கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த அதுகருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் மெழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 10
❤