கூற்றாயினவாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
    கொடுமைபல செய்தன நானறியேன்
    ஏற்றாய் அடிக்கே இரவும்பகலும்
    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
    குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 1
    நெஞ்சம் முமக்கே யிடமாகவைத்தேன்
    நினையாதொரு போதும் இருந்தறியேன்
    வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
    நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
    நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
    அஞ்சேலுமென்னீர் அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 2
    பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
    படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
    துணிந்தே யுமக்காட்செய்து வாழலுற்றாற்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
    பிணிந்தார்பொடிகொண்டு மெய்பூசவல்லீர்
    பெற்றமேற்றுகந்தீர் சுற்றும் வெண்டலைகொண்
    டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 3
    முன்னம் மடியேன் அறி யாமையினான்
    முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
    பின்னை யடியே னுமக் காளும்பட்டேன்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
    தன்னை யடைந்தார்வினை தீர்ப்பதன்றோ
    தலையாயவர் தங்கட னாவதுதான்
    அன்னநடை யார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 4
    காத்தாள்பவர் காவல் இகழ்ந் தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
    நீத்தாய கயம்புக நூக்கியிட
    நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
    வார்த்தை யிதுவொப்பது கேட்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
    ஆர்த்தார் புனலார் அதிகைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 5
    சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
    தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
    உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
    உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
    உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
    அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 6
    உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
    ஒருவர்தலை காவல் லிலாமையினால்
    வயந்தே யுமக்காட்செய்து வாழலுற்றால்
    வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
    பயந்தே யென் வயிற்றின கம்படியே
    பறித்துப் புரட்டியறுத் தீர்த்திடநான்
    அயர்ந்தேன் அடியேன் அதிகைக்கெடில
    வீரட்டா னாத்துறை அம்மானே. 7
    வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
    வஞ்சம்மனம் மொன்று மிலாமையினாற்
    சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
    சங்க வெண்குழைக்காது டைஎம்பெருமான்
    கலித்தே யென் வயிற்றி னகம்படியே
    கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
    அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 8
    பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
    புரிபுன்சடையீர் மெலியும் பிறையீர்
    துன்பே கவலை பிணி யென்றிவற்றை
    நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
    என்போலிக ளும்மை இனித்தெளியார்
    அடியார் படுவதிது வேயாகில்
    அன்பேஅமையும் மதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 9
    போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
    புறங்காடரங்கா நடமா டவல்லாய்
    ஆர்த்தான ரக்கன்றனை மால்வரைக்கீழ்
    அடர்த்திட்டருள் செய்த அதுகருதாய்
    வேர்த்தும் புரண்டும் விழுந்தும் மெழுந்தால்
    என்வேதனை யான விலக்கியிடாய்
    ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே. 10

ความคิดเห็น • 1