அதிசயம் புரிந்திடும்/adhisayam /திருவிருந்து பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • அதிசயம் புரிந்திடும்/ adhisayam /திருவிருந்து பாடல்
    Lyrics & Music:
    Fr.G.V. Panneer Selvam
    Singer: Jagadesh
    Music Director : Mr. X. Paulraj
    Lyrics
    அதிசயம் புரிந்திடும் திருவிருந்து
    ஆனந்தம் தந்திடும் இறைவிருந்து
    இறைமகன் இயேசுவின் பலி விருந்து
    நீங்காத அன்பின் நினைவு இது
    வாராய் என்னில் வாராயோ
    இறைவா இறைவா வாராயோ
    வாராய் என்னில் வாராயோ
    உள்ளம் திறந்து வாராயோ
    I
    என்னில் வாழ அன்பில் ஆள
    என்னைத் தேடி வந்தாயே
    உலகம் வாழ உயிர்கள் வாழ
    உணவின் வடிவில் வந்தாயே
    மழைத்துளி மண்ணில் விழுந்திடும்போது
    நிலமது பலனைத் தருவது போல
    நீயும் என்னில் வந்தாலே
    நிஜமாய் விளைவேன் நிலமாக
    கொடியில் இணையும் கிளையாக
    கனிகள் தருவேன் நிலையாக
    வழியும் வாழ்வும் உண்மையுமாகி உறவு என
    நிறைந்தவனே
    II
    பாவம் என்னும் பாரம் தீர
    தாகம் போக்க வந்தாயே
    கானல் நீர்தான் எந்தன் சோகம்
    உண்மை சொல்ல வந்தாயே
    சிறகுகள் விரிக்கும் பறவைகள் போல ஆ...
    மலரென சிரிக்கும் மழலைகள்
    போல ஆ...
    உந்தன் பாதம் வந்தாலே
    உள்ளம் மலர்வேன் உன்னாலே
    காயங்கள் ஆறும் தன்னாலே
    கனிவே உந்தன் சொல்லாலே
    உடலின் உயிராய் உள்ளம் நுழைய திருவிருந்தானவனே
    For more videos
    Click the following link:
    / @tamilcatholicchannel

ความคิดเห็น • 4

  • @RobertEdison1984
    @RobertEdison1984 ปีที่แล้ว +1

    super பாடல்

  • @vinlove
    @vinlove หลายเดือนก่อน

    Very nice...words and music🎉🎉

  • @arulranil5679
    @arulranil5679 หลายเดือนก่อน

    Very nice

  • @arulranil5679
    @arulranil5679 หลายเดือนก่อน

    Superb