அதிசயம் புரிந்திடும்/adhisayam /திருவிருந்து பாடல்
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- அதிசயம் புரிந்திடும்/ adhisayam /திருவிருந்து பாடல்
Lyrics & Music:
Fr.G.V. Panneer Selvam
Singer: Jagadesh
Music Director : Mr. X. Paulraj
Lyrics
அதிசயம் புரிந்திடும் திருவிருந்து
ஆனந்தம் தந்திடும் இறைவிருந்து
இறைமகன் இயேசுவின் பலி விருந்து
நீங்காத அன்பின் நினைவு இது
வாராய் என்னில் வாராயோ
இறைவா இறைவா வாராயோ
வாராய் என்னில் வாராயோ
உள்ளம் திறந்து வாராயோ
I
என்னில் வாழ அன்பில் ஆள
என்னைத் தேடி வந்தாயே
உலகம் வாழ உயிர்கள் வாழ
உணவின் வடிவில் வந்தாயே
மழைத்துளி மண்ணில் விழுந்திடும்போது
நிலமது பலனைத் தருவது போல
நீயும் என்னில் வந்தாலே
நிஜமாய் விளைவேன் நிலமாக
கொடியில் இணையும் கிளையாக
கனிகள் தருவேன் நிலையாக
வழியும் வாழ்வும் உண்மையுமாகி உறவு என
நிறைந்தவனே
II
பாவம் என்னும் பாரம் தீர
தாகம் போக்க வந்தாயே
கானல் நீர்தான் எந்தன் சோகம்
உண்மை சொல்ல வந்தாயே
சிறகுகள் விரிக்கும் பறவைகள் போல ஆ...
மலரென சிரிக்கும் மழலைகள்
போல ஆ...
உந்தன் பாதம் வந்தாலே
உள்ளம் மலர்வேன் உன்னாலே
காயங்கள் ஆறும் தன்னாலே
கனிவே உந்தன் சொல்லாலே
உடலின் உயிராய் உள்ளம் நுழைய திருவிருந்தானவனே
For more videos
Click the following link:
/ @tamilcatholicchannel
super பாடல்
Very nice...words and music🎉🎉
Very nice
Superb