ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அம்மன் பாடல், செங்கழுநீர் அம்மன் பாடல், AMMAN SONG VENBA,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ค. 2023
  • செங்கழுநீர் அம்மன் பாடல்!
    (கட்டளை வெண்பா)
    இடம் - வீராம்பட்டினம்
    அம்மன் பெயர் - செங்கழுநீர் அம்மன்
    ராகம் - ஆனந்த பைரவி
    பாடல்
    செங்கழுநீர் அம்மா, செழிக்கின்ற வாழ்வினை
    எங்களுக்குத் தந்தருள் எந்நாளும்! - மங்கையர்
    குங்குமத்தின் உள்ளே குடிகொண்ட தேவியே
    பொங்கல் படைப்போம் புகழ்ந்து!
    .
    வேப்பிலை ஆடை விரும்பிடும் வித்தகியே
    கூப்பிட வந்தருளும் கோமதியே! - காப்பாய்!
    வருத்திடும் அம்மை வடிந்தோடச் செய்யும்
    மருந்தைக் கொடுத்ததுன் மாண்பு!
    .
    அலைதொடரும் வாழ்வும் அடங்காத் துயரும்
    நிலையிலா வேலை நிலத்தில் - தலைமகள்
    உன்முகம் கண்டால் உயர்ந்தோங்கும் வாழ்வு!நல்
    பொன்னென மின்னும் பொலிந்து!
    .
    தளிர்இலைப் பந்தலிட்டுத் தண்ணீர் தருவார்!
    குளிர்மோருங் கஞ்சியுங் கூழும் - அளிப்போர்க்குச்
    செங்கேணி அம்மா சிறப்பெல்லாம் தந்திடுவாள்
    அங்கம் குளிர அறிந்து!
    .
    ஆடிவரும் தேரில் அமர்ந்து மகிழ்பவள்!
    கோடி நலங்கள் கொடுப்பவள் - தேடிநலம்
    ஓடிவந்து காப்பாள்! உளமொன்றிக் கும்பிடக்
    கூடிடும் நெஞ்சம் குளிர்ந்து!
    .
    பாவலர் அருணா செல்வம்
    .
    பாடியவர்
    நித்யா சிவகுமாரன்.
    நன்றி

ความคิดเห็น • 2