நீதிமொழிகள் 31-ம் அதிகாரம் பாடல் | C.S.I.Pulluvilai |Women’s fellowship | Women’s day special song.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Lyrics :
    புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
    புருஷனுக்கு கிரீடமாக வாழ்ந்து காட்டுகிறாள் - தன்
    புருஷனுக்கு கிரீடமாக வாழ்ந்து காட்டுகிறாள்.
    அதிகாலை இருட்டோடே வேலை செய்கிறாள்
    தன் அன்புமிக்க குடிம்பத்திற்கு உணவளிக்கிறாள்
    உணவளிக்கின்றாள் மனம் உவந்தளிக்கின்றாள்
    மெழுகு போல உருகி தினம் ஒளி கொடுக்கின்றாள்
    வியாபார கப்பல் போல அவளிருக்கின்றாள்
    ஒரு நிலத்தை வாங்கி விதை விதைத்து நீர் பாய்ச்சுகின்றாள்
    நீர் பாய்ச்சுகின்றாள் அதை நிவிர்த்தியாக்குகின்றாள்
    வரவறிந்து செலவு செய்து மீதம் ஈட்டுகின்றாள்.
    வீட்டோரம் கனிதரும் திராட்சை செடியாம்
    அவள் பிள்ளைகளும் ஒலிவ மர கன்றுகளாமே
    கன்றுகளாமே ஒலிவ கன்றுகளாமே
    ஒங்கி வளர்ந்த விருட்சங்களாய் அவரிருப்பார்கள்.
    முத்துக்களை பார்க்கிலும் விலை உயர்ந்து நிற்கின்றாள்
    தயையுள்ள போதகம் வநர் நலவிலே இருக்கும்
    நாவிலே இருக்கும் இனிமை நாவிலே இருக்கும்
    காரிருளில் அவள் தீபம் அணையாதிருக்கும்
    கர்த்தருக்கு பயந்த ஸ்திரீயே புகழபடுகின்றாள்
    அவள் கனிவுடனே மற்றவர்க்கும் வேண்டல் செய்கிறாள்
    வேண்டல் செய்கிறாள் அதில் வெற்றி காண்கிறாள்
    அவள் ஜெயத்தை நோக்கி போகும் பாதை நெய்யாய் பொழியும்
    தேசத்திலே ராஜா போல் அவள் புருஷனும் இருப்பான்
    தன் உயிரை போல உயிராய் அவன் அவளை நேசிக்கிறான்
    உயிராய் நேசிக்கிறான் மனைவியை உயிராய் நேசிக்கிறான்
    அவள் சிரசின் தேவ கரத்தினாலே கிருபையை பெறுவான்.

ความคิดเห็น • 35