திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறு | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech | Part 2
ฝัง
- เผยแพร่เมื่อ 8 พ.ย. 2023
- திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறு | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech | Part 2
#ஆன்மீகசொற்பொழிவு #aanmeegam #aanmegam #tamildevotional #sosomeenakshisundaram #periyapuranam #nayanmar #பெரியபுராணம்
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள்
அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து
சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து
பத்தருடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர்
தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில். 267
பந்து அணை மெல் விரலாளும்
பரமரும் பாய் விடை மீது
வந்து பொன் வள்ளத்து அளித்த
வரம்பில் ஞானத்து அமுது உண்ட
செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம்
கேட்டு இறைஞ்சு தற்காக
அந்தணர் பூந்தராய் தன்னில்
அணைந்தனர் நாவுக் கரையர். 268
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து
அணைந்தார் எனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடம்
சூழ் புகலிப் பெருந்தகையாரும்
ஆக்கிய நல் வினைப் பேறு என்று
அன்பர் குழாத் தொடும் எய்தி
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்
கொள எய்தும் பொழுதில். 269
சிந்தையிடை அறா அன்பும்
திருமேனி தன்னில் அசைவும்
கந்தம் மிகையாம் கருத்தும்
கை உழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவில்
பொலி திரு நீறும்
அந்தம் இலாத் திரு வேடத்து
அரசும் எதிர் வந்து அணைய. 270
கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில்
பரவு மெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே
தோன்றியது என்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்து அங்கு
அரசும் எதிர் வந்து இறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர
மொழி அருள் செய்தார். 271
பேரிசை நாவுக்கரசைப் பிள்ளையார்
கொண்டு உடன் போந்து
போர் விடையார் திருத்தோணிப் பொற்
கோயில் உட்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும்
அவருடன் கும்பிட்டு அருளால்
சீர்வளர் தொண்டரைக் கொண்டு
திருமாளிகையினில் சேர்ந்தார். 272
அணையும் திருத்தொண்டர் தம்மோடு
ஆண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திரு அமுது ஆக்கி
இயல்பால் அமுது செய்வித்துப்
புணரும் பெருகு அன்பு நண்பும்
பொங்கிய காதலில் கும்பிட்டு
உணரும் சொல் மாலைகள் சாத்தி
உடன் மகிழ்வு எய்தி உறைந்தார். 273
அந்நாள் சில நாள்கள்
செல்ல அருள் திருநாவுக்கரசர்
மின்னார் சடை அண்ணல் எங்கும்
மேவிடம் கும்பிட வேண்டி
பொன் மார்பில் முந்நூல் புனைந்த
புகலிப் பிரான் இசைவோடும்
பின்னாக எய்த இறைஞ்சிப்
பிரியாத நண்பொடும் போந்தார். 274
வாக்கின் தனி மன்னர் ஏக
மாறாத் திரு உளத்தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த
புகலியின் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத்
திருத்தோணி வீற்று இருந்தாரைத்
தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது
அங்கு உறைகின்ற நாளில். 275
செந்தமிழ் மாலை விகற்பச்
செய்யுள்களால் மொழி மாற்றும்
வந்த சொல் சீர் மாலை மாற்றும்
வழி மொழி எல்லா மடக்குச்
சந்த வியமகம் ஏகபாதம் தமிழ்
இருக்குக் குறள் சாத்தி
எந்தைக்கு எழு கூற்றிருக்கை
ஈரடி ஈரடி வைப்பு. 276
நாலடி மேல் வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கியமாக எல்லாப்
பொருள்களும் முற்ற
ஞாலத்து உயர் காழியாரைப்
பாடினார் ஞான சம்பந்தர். 277
இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப்
பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசை வடிவான
மதங்க சூளா மணியாரும்
பன்னிய ஏழ் இசை பற்றிப்
பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தாளம் பெற்றார்
புகலியில் போற்றி இருந்தார். 278
அங்கண் அமர் கின்ற நாளில்
அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும்
திங்கள் சடை அண்ணலார்தம்
திருப்பதி யாவையும் கும்பிட்டு
எங்கும் தமிழ் மாலை பாடி
ஏத்தி இங்கு எய்துவன் என்று
தம் குலத் தாதையா ரோடும்
தவ முனிவர்க்கு அருள் செய்தார். 279
பெருகு விருப்புடன் நோக்கிப்
பெற்ற குலத் தாதையாரும்
அருமையால் உம்மைப் பயந்த அதனால்
பிரிந்து உறைவு ஆற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும்
யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சிலநாள் உடன்
எய்துவேன் என்று உரைத்தார். 280
மருவலார் புரம் முனிந்தவர்
திரு முன்றில் வலம் கொண்டு
உருகும் அன்புடன் உச்சி
மேல் அஞ்சலியினராய்த்
திருவலஞ்சுழி உடையவர்
சேவடித் தலத்தில்
பெருகும் ஆதரவுடன் பணிந்து
எழுந்தனர் பெரியோர். 381
ஞான போனகர் நம்பர் முன்
தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணவர்
தமை வினவும்
ஊனமில் இசையுடன்
விளங்கிய திருப்பதிகம்
பானலார் மணிகண்டரைப்
பாடினார் பரவி. 382
புலன் கொள் இன் தமிழ்
போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப் பொன்னி
சூழ் திருப்பதியினில் இருந்து
நலம் கொள் காதலின்
நாதர்தாள் நாள்தொறும் பரவி
வலஞ்சுழிப் பெருமான் தொண்டர்
தம்முடன் மகிழ்ந்தார். 383
மகிழ்ந்த தன்தலை வாழும்
அந் நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்
புணர் ஓரை உள் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும்
ஏழ் கடல் நீர்மை குன்ற
வெகுண்டு வெம் கதிர்
பரப்பலின் முதிர்ந்தது வேனில். 384
தண் புனல் குளிர் கால்
நறும் சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாச மென்
மலர் பொதி பனி நீர்
நண்புடைத் துணை நகை
மணி முத்தணி நாளும்
உண்ப மாதுரியச் சுவை
உலகு உளோர் விரும்ப. 385
அறல் மலியும் கான் ஆற்றின்
நீர் நசையால் அணையுமான்
பெறல் அரிய புனல் என்று
பேய்த்தேரின் பின் தொடரும்
உறை உணவு கொள்ளும் புள்
தேம்பிஅயல் இரை தேரும்
பறவை சிறை விரித்து
ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால். 386
நீண் நிலை மாளிகை மேலும்
நிலா முன்றின் மருங்கினும்
வாண் நிழல் நல் சோலையிலும்
மலர் வாவிக் கரை மாடும்
பூண் நிலவு முத்து அணிந்த
பூங்குழலார் முலைத் தடத்தும்
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து
மாந்தர் கலந்து உறைவாரால். 387
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க்
கமல முகை விரியக்
குயில் ஒடுங்காச் சோலையின் மென்
தளிர் கோதிக் கூவி எழத்
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும்
துயில் பயிலச் சுடர் வானில்
வெயில் ஒடுங்கா வெம்மை தரும்
வேனில் விரி தரு நாளில். 388
சண்பை வரும் பிள்ளையார்
சடா மகுடர் வலஞ்சுழியை
எண் பெருகத் தொழுது
ஏத்திப் பழையாறை எய்துதற்கு
நண்பு உடைய அடியார்களுடன்
போத நடந்தருளி
விண் பொரு நீள் மதிள் ஆறை
மேல் தளி சென்று எய்தினார். 389
திருவாறை மேற்றளியில் திகழ்ந்து
இருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி உருகிய
அன்பொடு போற்றி
மருவாரும் குழல் மலையாள்
வழிபாடு செய்ய அருள்
தருவார் தம் திரு சத்தி
முற்றத்தின் புறம் சேர்ந்தார். 390
திருச் சத்தி முற்றத்தில்
சென்று எய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வம்
உறப் பணிந்து ஏத்திக்
கருச் சுற்றில் அடையாமல்
கை தருவார் கழல் பாடி
விருப்புற்றுத் திருப் பட்டீச்சரம்
பணிய மேவுங்கால். 391
வெம்மை தரு வேனிலிடை
வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலைத் தமிழ்
விரகர் முடிமீதே சிவபூதம்
தம்மை அறியாதபடி தண்
தரளப் பந்தர் எடுத்து
எம்மை விடுத்து அருள் புரிந்தார்
பட்டீசர் என்று இயம்ப. 392
அவ்வுரையும் மணி முத்தின்
பந்தரும் ஆகாயம் எழச்
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ் வினைதான் ஈசர் திரு அருளால்
ஆகில் இசைவது என
மெய் விரவு புளகம் உடன்
மேதினியின் மிசைத் தாழ்ந்தார். 393
அது பொழுதே அணி முத்தின்
பந்தரினை அருள் சிறக்கக்
கதிர் ஒளிய மணிக் காம்பு
பரிசனங்கள் கைக் கொண்டார்
மதுர மொழி மறைத் தலைவர்
மருங்கு இமையோர் பொழிவாசப்
புது மலரால் அப்பந்தர்
பூம் பந்தரும் போலும். 394
தொண்டர் குழாம் ஆர்ப்பு
எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி
எண் திசையும் நிறைந்து
ஓங்க எழுந்தருளும் பிள்ளையார்
வெண் தரளப் பந்தர் நிழல்
மீது அணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்த திருவடி
நீழல் என அமர்ந்தார். 395
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக்
கலந்து அடியாருடன் காதல் பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்து
இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று
தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்
அண்டர் பிரான் தன் அருளின்
வண்ணம் அடியார் பெருமையில் கேட்டருளி. 352
வினவி எடுத்த திருப் பதிகம்
மேவு திருக்கடைக் காப்பு தன்னில்
அனைய நினைவு அரியோன் செயலை
அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து
போந்து புகலிக் கவுணியனார்
துனை புனல் பொன்னித் திரை வலம் கொள்
சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார். 353
அப்பர் சோற்றுத் துறை
சென்று அடைவோம் என்று
ஒப்பில் வண் தமிழ்
மாலை ஒருமையால்
செப்பியே சென்று
சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர்
கோயில் முன். 354
தொல்லை நீள் திருச் சோற்றுத்
துறை உறை
செல்வர் கோயில் வலம்
கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்க நஞ்சு
உண்ட பிரான் அடி
எல்லையில் அன்பு கூர
இறைஞ்சினார். 355
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார்
சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில். 356
வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை. 357
எழுது மா மறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி முதல்வரைப்
போற்றி முன்
தொழுது போந்து வந்து
எய்தினார் சோலை சூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப்
பதியினில். 358
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலின் நாண் மதிக்
கண்ணியார் தம் கழல் இணை போற்றியே
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார். 359
பாடி நின்று பரவிப் பணிந்து போய்
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறை புகழ் வேதியர். 360
மொய் தரும் சோலை சூழ்
முளரி முள்ளடவி போய்
மெய் தரும் பரிவிலான்
வேள்வியைப் பாழ்படச்
செய்த சங்கரர்
திருச்சக்கரப் பள்ளி முன்பு
எய்த வந்தருளினார் இயல்
இசைத் தலைவனார். 361
சக்கரப் பள்ளியார் தம்
தனிக் கோயில் உள்
புக்கு அருத்தியின் உடன் புனை
மலர்த் தாள் பணிந்து
அக்கரைப் பரமர்பால் அன்பு
உறும் பரிவு கூர்
மிக்க சொல் தமிழினால்
வேதமும் பாடினார். 362
தலைவர் தம் சக்கரப் பள்ளி
தன்னிடை அகன்று
அலைபுனல் பணைகளின் அருகு
போய் அருமறைப்
புலன் உறும் சிந்தையார்
புள்ள மங்கைப் பதி
குலவும் ஆலந்துறைக்
கோயிலைக் குறுகினார். 363
மன்னும் அக் கோயில்
சேர் மான் மறிக் கையர்தம்
பொன் அடித்தலம் உறப்
புரிவொடும் தொழுது எழுந்து
இன்னிசைத் தமிழ் புனைந்து
இறைவர் சேலூருடன்
பன்னு பாலைத் துறைப்
பதி பணிந்து ஏகினார். 364
காவின் மேல் முகில் எழும்
கமழ் நறும் புறவு போய்
வாவி நீடு அலவன் வாழ்
பெடையுடன் மலர் நறும்
பூவின் மேல் விழைவுறும்
புகலியார் தலைவனார்
சேவின் மேல் அண்ணலார்
திருநலூர் நண்ணினார். 365
ஆண்டகையாரும் இசைந்து அங்கு
அம்பொன் திருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ் பணிவுற்று
நீடு அருள் பெற்றே
ஈண்டு புகழ்த் தாதையார்
பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
காண் தகு காழி தொழுது
காதலினால் புறம் போந்தார். 281
அத்திரு மூதூரின் உள்ளார்
அமர்ந்து உடன்போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை
கொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகை மேல் கொண்டு
மொய் ஒளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது நிறை
மதி போல நிழற்ற. 282
சின்னம் தனிக் காளம் தாரை
சிரபுரத்து ஆண்டகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற
திருப் பெயர் சாற்ற
முன் எம்மருங்கும் நிரத்த முரசு
உடைப் பல்லியம் ஆர்ப்ப
மன்னும் திருத்தொண்டரானார் வந்து
எதிர் கொண்டு வணங்க. 283
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு
பொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும் மல்க
மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி
எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப்
புகலிக் கவுணியர் போந்தார். 284
திருமறைச் சண்பையர் ஆளி
சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெரு விருப்பால் அணைந்து ஏத்திப்
பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர்
தமிழ் மாலை கொண்டு ஏத்தி
வரு புனல் பொன்னி வடபால்
குட திசை நோக்கி வருவார். 285
போற்றிய காதல் பெருக
புள்ளிருக்கும் திருவேளூர்
நால் தடம் தோளுடை மூன்று
நயனப் பிரான் கோயில் நண்ணி
ஏற்ற அன்பு எய்த வணங்கி
இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி
அஞ்சொற் பதிகம் அணிந்தார். 286
நீடு திரு நின்றியூரின் நிமலனார்
நீள் கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண் தமிழ் கூறி
நாடு சீர் நீடூர் வணங்கி
நம்பர் திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந் தமிழ் பாடி அமர்ந்தார். 287
அங்கு நின்று ஏகி அப்பாங்கில்
அரனார் மகிழ் கோயிலான
எங்கணும் சென்று பணிந்தே
ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறை பழ மண்ணிப்
படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ் மாலை சாத்தித்
திருக்குறுக்கைப் பதி சார்ந்தார். 288
திருக்குறுக்கைப் பதி மன்னித்
திரு வீரட்டானத்து அமர்ந்த
பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து
அன்னியூர் சென்று போற்றிப்
பருக்கை வரை உரித்தார்
தம் பந்தணை நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைந்தார்
வேதம் தமிழால் விரித்தார். 289
அப்பதி போற்றி அகல்வார்
அரனார் திருமணஞ் சேரி
செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று
தொழுது இசை பாடி
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்
கொள் பாடிப் பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு
வேள்விக் குடி உற்றார். 290
செழுந்திரு வேள்விக் குடியில்
திகழ் மணவாள நற்கோலம்
பொழிந்த புனல் பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத் தண்
தமிழ் மாலையில் பாடிக்
கொழுந்து வெண் திங்கள்
அணிந்தார் கோடிகாவிற் சென்றடைந்தார். 291
திருக்கோடி காவில் அமர்ந்த
தேவர் சிகாமணி தன்னை
எருக்கோடு இதழியும் பாம்பும்
இசைந்து அணிந்தானை வெள்ளேனப்
பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து
சொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர்
கை தொழச் சென்றார். 292
கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக்
கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து
மஞ்சணி மாமதில் சூழும்
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி
அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
திருமங்கலக் குடி சேர்ந்தார். 293
வெங் கண் விடை மேல் வருவார்
வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப்
பதிகத் தொடை சாத்தி
அங்கண் அமர்வார் தம் முன்னே
அருள் வேடம் காட்டத் தொழுது
செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து
தேவன் குடி சேர்ந்தார். 294
திருந்து தேவன் குடி மன்னும்
சிவ பெருமான் கோயில் எய்திப்
பொருந்திய காதலில் புக்குப்
போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும்
இவர் வேடமாம் என்று
அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில்
ஞானத்து அமுது உண்டார். 295
பாரின் மிசை அன்பர்
உடன் வருகின்றார் பன்னகத்தின்
ஆரம் அணிந்தவர் தந்த அருள்
கருணைத் திறம் போற்றி
ஈர மனம் களி தழைப்ப
எதிர் கொள்ள முகம் மலர்ந்து
சேர வரும் தொண்டர்
உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார். 396
சென்று அணைந்து திருவாயில்
புறத்து இறைஞ்சி உள்புக்கு
வென்றி விடையவர் கோயில் வலம்
கொண்டு வெண் கோட்டுப்
பன்றி கிளைத்து அறியாத
பாத தாமரை கண்டு
முன் தொழுது விழுந்து எழுந்து
மொழி மாலை போற்றி இசைத்தார். 397
அருள் வெள்ளத் திறம்
பரவி அளப்பரிய ஆனந்தப்
பெரு வெள்ளத்திடை மூழ்கிப்
பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே செம்பொன்
மலை வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட
சம்பந்தர் புறத்து அணைந்தார். 398
அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பரும் சீர் திருவாறை வட
தளியில் சென்று இறைஞ்சி
ஒப்பரிய தமிழ் பாடி
உடன் அமரும் தொண்டரொடு
எப்பொருளுமாய் நின்றார் இரும்
பூளை எய்தினார். 399
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்
பூளை சென்று எய்தக்
காவண நீள் தோரணங்கள் நாட்டி
உடன் களி சிறப்பப்
பூவண மாலைகள் நாற்றிப் பூரண
பொற்குடம் நிரைத்து அங்கு
யாவர்களும் போற்றி இசைப்பத்
திருத் தொண்டர் எதிர் கொண்டார். 400
வண் தமிழின் மொழி
விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு
அவர் தொழத் தாமும் தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து
இறைஞ்சி முன் நின்று
பண்டரும் இன்னிசைப் பதிகம்
பரம் பொருளைப் பாடுவார். 401
நிகர் இலா மேருவரை
அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர் தமக்கு
அமுதாகி நொய்யானை
தகவு ஒன்ற அடியார்கள் தமை
வினவித் தமிழ் விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள்
விரியப் பாடினார். 402
பாடும் அரதைப் பெரும்
பாழியே முதலாகச்
சேடர் பயில் திருச்சேறை
திருநாலூர் குட வாயில்
நாடிய சீர் நறையூர் தென்
திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ்த் தொடை புனைந்து
அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார். 403
அங்கண் இனிது அமரு நாள்
அடல் வெள் ஏனத்து உருவாய்ச்
செங்கண் நெடுமால் பணியும்
சிவபுரத்துச் சென்று அடைந்து
கங்கைச் சடை கரந்தவர் தம்
கழல் வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம் முன்
நின்று போற்றி இசைத்தார். 404
போற்றி இசைத்துப் புனிதர் அருள்
பெற்றுப் போந்து எவ் உயிரும்
தோற்றுவித்த அயன் போற்றும்
தோணிபுரத்து அந்தணனார்
ஏற்றும் இசை ஏற்று உகந்த
இறைவர் தமை ஏத்துதற்கு
நாற்றிசை யோர் பரவும்
திருக் குடமூக்கு நண்ணினார். 405
தேமருவு மலர்ச் சோலைத்திரு
குடமூக்கினில் செல்வ
மாமறையோர் பூந்தராய்
வள்ளலார் வந்தருளத்
தூமறையின் ஒலி பெருகத்
தூரிய மங்கலம் முழங்க
கோ முறைமை எதிர் கொண்டு
தம்பதி உள் கொடு புக்கார். 406
திருஞான சம்பந்தர் திருக்குட
மூக்கினைச் சேர
வருவார் தம் பெருமானை
வண் தமிழின் திருப்பதிகம்
உருகா நின்று உளம் மகிழ்க்
குட மூக்கை உகந்து இருந்த
பெருமான் எம் இறை என்று
பெருகு இசையால் பரவினார். 407
வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து
இருந்த வான் பொருளைச்
சிந்தை மகிழ்வுற வணங்கித்
திருத்தொண்டருடன் செல்வார்
அந்தணர்கள் புடை சூழ்ந்து
போற்றி இசைப்ப அவரொடும்
கந்த மலர் பொழில் சூழ்ந்த
காரோணம் சென்று அடைந்தார். 408
பூ மருவும் கங்கை முதல்
புனிதமாம் பெரும் தீர்த்தம்
மா மகம் தான் ஆடுதற்கு
வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர்க் கையால்
தொழுது வலம் கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார்
கழல் பணிந்து கண் களித்தார். 409
கண்ணாரும் அருமணியைக்
காரோணத்து ஆர் அமுதை
நண்ணாதார் புரம் எரித்த
நான் மறையின் பொருளானைப்
பண் ஆர்ந்த திருப்பதிகம்
பணிந்து ஏத்திப் பிறபதியும்
எண் ஆர்ந்த சீர்
அடியாருடன் பணிவுற்று எழுந்தருளி. 410
மன்றலங் கழனி சூழ்
திரு நலூர் மறைவலோர்
துன்று மங்கல வினைத்
துழனியால் எதிர் கொளப்
பொன் தயங்கு ஒளி
மணிச் சிவிகையில் பொலிவுறச்
சென்று அணைந்தருளினார்
சிரபுரச் செம்மலார். 366
நித்திலச் சிவிகை மேல்
நின்று இழிந்து அருளியே
மொய்த்த அந்தணர் குழாம் முன்
செலப் பின் செலும்
பத்தரும் பரிசனங்களும்
உடன் பரவவே
அத்தர் தம் கோபுரம்
தொழுது அணைந்து அருளினார். 367
வெள்ளி மால் வரையை நேர்
விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம் வரும்
பொழுதினில் பெருகுசீர்
வெள்ள ஆனந்தம் மெய் பொழிய
மேல் ஏறி நீர்
துள்ளுவார் சடையரைத் தொழுது
முன் பரவுவார். 368
பரவு சொல் பதிகம்
முன் பாடினார் பரிவுதான்
வர அயர்த்து உருகு நேர்
மனனுடன் புறம் அணைந்து
அரவுடைச் சடையர்
பேரருள் பெறும் பெருமையால்
விரவும் அப்பதி அமர்ந்து
அருளியே மேவினார். 369
அன்ன தன்மையில் அப்பதியினில்
அமர்ந்து அருளி
மின் நெடும் சடை விமலர்
தாள் விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும்
பல முறை பாடி
நன்னெடும் குல நான்
மறையவர் தொழ நயந்தார். 370
நீடும் அப்பதி நீங்குவார்
நிகழ் திருநல்லூர்
ஆடுவார் திருவருள் பெற
அகன்று போந்து அங்கண்
மாடும் உள்ளன வணங்கியே
பரவி வந்து அணைந்தார்
தேடும் மால் அயற்கு
அரியவர் திருக்கருகாவூர். 371
வந்து பந்தர் மாதவி
மணம் கமழ் கருகாவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழல் இணை தாழ்ந்தே
அந்தம் இல்லவர் வண்ணமாம்
அழல் வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந் தமிழ்ப் பதிகம். 372
பதிக இன்னிசை பாடிப்
போய்ப் பிறப்பதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள்
நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர்
அணைந்தனர் மன்றுள்
அதிர் சிலம்பு அடியார் மகிழ்
அவள் இவள் நல்லூர். 373
மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மையார் பயில் கோயில்
உள் தம்பரிசு உடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்தி முன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப் பதி பலவும்
அப்பால் சென்று பணிவார். 374
பழுதில் சீர்த் திருப் பரிதி
நல் நியமும் பணிந்து அங்கு
எழுது மாமறையாம் பதிகத்து
இசை போற்றி
முழுதும் ஆனவர் கோயில்கள்
வணங்கியே முறைமை
வழுவிலார் திருப்பூவனூர் வணங்கி
வந்து அணைந்து. 375
பொங்கு காதலில் போற்றி
அங்கருளுடன் போந்து
பங்கயத் தடம் பணைப் பதி
பலவும் முன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி
எடுக்க வந்து அணைந்தார்
அங்கணர்க்கு இடம் ஆகிய
பழம்பதி ஆவூர். 376
பணியும் அப்பதிப் பசுபதி
ஈச்சரத்தின் இனிது இருந்த
மணியை உள் புக்கு
வழிபடும் விருப்பினால் வணங்கித்
தணிவு இல் காதலினால் தண்
தமிழ் மாலைகள் சாத்தி
அணி விளங்கிய திருநலூர்
மீண்டும் வந்து அணைந்தார். 377
மறை விளங்கும் அப்பதியினில்
மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே
நிகழ்பவர் நிலவும்
பிறை அணிந்தவர் அருள் பெறப்
பிரச மென் மலர் வண்டு
அறை நறும் பொழில்
திரு வலஞ் சுழியில் வந்து அணைந்தார். 378
மதி புனைந்தவர் வலஞ்சுழி
மருவு மாதவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்
தம் முன் வந்து
எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர்
எதிர் செல மதியைக்
கதிர் செய் வெண் முகில்
குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார். 379
கலந்த அன்பர்கள் தொழுது
எழக் கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கமலக் கரம்
குவித்து உடன் அணைவார்
வலஞ்சுழிப் பெருமான் மகிழ்
கோயில் வந்து எய்திப்
பொலம் கொள் நீள் சுடர்க்
கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார். 380
அங்கண் அகன்று அம் மருங்கில் அங்கணர்
தம் பதி பிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும்
வயல் மதுவால் சேறு மாறாப்
பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி
வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம்
பணிய நண்ணும் போதில். 310
அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும்
பெறல் ஆர் அமுத மென் சொல்
கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக்
கொழுந்தின் கதிர் செய் மேனி
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து
அணைவுற மெய் வருத்தம் எய்தித்
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத்
தானும் மனம் தளர்வு கொள்வான். 311
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை
மறி வளரும் கையார் பாதம்
பற்றியே வரும் குலத்துப் பான்மையினான்
ஆதலினால் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடு வந்து போர்க்
கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர் தம் கோயிலினுட் கொடு புகுந்து
திரு முன்பே இட்டு வைத்தான். 312
அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்தருளி அணுக எய்தச்
செவ்விய மெய்ஞ் ஞானம் உணர்
திருஞான சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகும் துயர் நீங்கப் பணி மாறும்
தனிக் காளத்து எழுந்த ஓசை
எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல்லியலை
விட்டு எதிரே விரைந்து செல்வான். 313
மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம்
நாட்டும் மணி நீர் வாசத்
தூ நறும் பூரண கும்பம் சோதி
மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனை அணி பிறவும் எலாம் எழில்
பெருக இயற்றும் என ஏவித் தானும்
வானவர் நாயகர் மகனார் வருமுன்பு
தொழுது அணைந்தான் மழவர் கோமான். 314
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று
ஆனந்தம் பெருகு காதல்
வெள்ள நீர் கண் பொழியத் திருமுத்தின்
சிவிகையின் முன் வீழ்ந்த போது
வள்ளலார் எழுக என மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று
குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான். 315
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி
கடந்து மதிச் சடையார் கோயில்
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆகப்
புனை முத்தின் சிவிகை நின்றும்
அங்கண் இழிந்து அருளும் முறை
இழிந்தருளி அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு
திருமுன் வணங்கச் சாரும் காலை. 316
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து
நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி
என் இது என்று அருள் செய்ய
மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன் இவளை முயலகனாம் பொருவில்
அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்
முன் அணையக் கொணர்வித்தேன் இது
புகுந்தபடி என்று மொழிந்து நின்றான். 317
அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும்
கேட்டு அந் நிலையின் நின்றே
பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய
பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து
மணி வளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்பது என்று
தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத்
தண்தமிழ் பாடினார் சண்பை நாதர். 318
பன்னு தமிழ் மறையாம் பதிகம்
பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன்
பயந்த மழலை மென் சொல்
கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும்
எனப் பார் மிசை நின்று எழுந்து
பொன்னின் கொடி என ஒல்கிவந்து
பெருவலித் தாதை புடை அணைந்தாள். 319
வன்பிணி நீங்கு மகளைக் கண்ட
மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கத்
தன்தனிப் பாவையும் தானும் கூடச்
சண்பையர் காவலர் தாளில் வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர்அணி
வேணி நிமலர் பாதம்
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர்
பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார். 320
நீடு திரு வாச்சிராமம் மன்னும் நேரிழை
பாகத்தர் தாள் வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும்
கொள்கை மேற்கொண்டு போந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து
பணிந்து அடிபோற்றி ஏகிச்
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார். 321
பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப்
பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து
மண் பரவும் தமிழ் மாலை பாடி
வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ்
சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச்
சண்பை வளம் தரும் நாடர் வந்து
தடம் திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார். 322
செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ்
திரு ஈங்கோய் மலையில் மேவும்
கங்கைச் சடையார் கழல் பணிந்து
கலந்த இசைப் பதிகம் புனைந்து
பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும்
புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார்
கோதில் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார். 323
மொய் திகழ் சோலை அம் மூதூர்
முன் அகன்று அந் நெறி செல்வார்
செய் தரு சாலி கரும்பு தெங்கு
பைம் பூகத்து இடை போய்
மை திகழ் கண்டர் தம் கோயில்
மருங்கு உள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர்
ஈசர்தம் கோயில். 296
இன்னம்பர் மன்னும் பிரானை
இறைஞ்சி இடை மடக்கான
பன்னும் தமிழ்த் தொடை மாலைப்
பாடல் புனைந்து பரவிப்
பொன்னங் கழல் இணை போற்றிப்
புறம் போந்து அணைந்து புகுந்தார்
மன்னும் தடம் கரைப்
பொன்னி வட குரங்காடுதுறையில். 297
வட குரங்காடுதுறையில் வாலியார்
தாம் வழிபட்ட
அடைவும் திருப்பதிகத்தில் அறிய
சிறப்பித்து அருளிப்
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து
புறத்துள்ள தானங்கள் போற்றி
படை கொண்ட மூவிலை வேலர்
பழனத் திருப்பதி சார்ந்தார். 298
பழனத்து மேவிய முக்கண்
பரமேட்டியார் பயில் கோயில்
உழைபுக்கு இறைஞ்சி நின்று
ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி
விழை சொல் பதிகம் விளம்பி
விருப்புடன் மேவி அகல்வார்
அழனக்க பங்கய வாவி
ஐயாறு சென்று அடைகின்றார். 299
மாட நிரை மணி வீதித்
திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்
நாடு உய்யப் புகலிவரு ஞான
போனகர் வந்து நண்ணினார் என்று
ஆடலொடு பாடல் அறா அணி
மூதூர் அடைய அலங்காரம் செய்து
நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள
நித்தில யானத்து நீங்கி. 300
வந்து அணைந்து திருத்தொண்டர் மருங்கு
வர மான் ஏந்து கையர் தம்பால்
நந்தி திருவருள் பெற்ற நன்னகரை
முன் இறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து
அஞ்சல் என்பார் தம் ஐயாறு என்று
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை
போற்றி இசைத்தார் புகலி வேந்தர். 301
மணி வீதி இடம் கடந்து மால்
அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில்
அணி நீடு கோபுரத்தை அணைந்து
இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல்
தணியாத கருத்தினோடும் தம்பெருமான் கோயில்
வலம் கொண்டு தாழ்ந்து
பணி சூடும் அவர் முன்பு பணிந்து
வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார். 302
கோடல் கோங்கம் குளிர் கூவிளம்
என்னும் திருப்பதிகக் குலவு மாலை
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த
திரு உள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று
எம் ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
கண் பொழி நீர் பரந்து பாய. 303
பல முறையும் பணிந்து எழுந்து புறம்
போந்து பரவு திருத் தொண்டரோடு
நிலவு திருப்பதி அதன் கண் நிகழும்
நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை
அலையும் மதி முடியார் தம்
பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக்
குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு
அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில். 304
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு
அங்கு அருள் பெற்றுக் குறிப்பின்னோடும்
படரும் நெறி மேல் அணைவார்
பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி
அடையும் மனம் உற வணங்கி அரும்
தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்
புடைவளர் மென் கரும்பினொடு
பூகமிடை மழபாடி போற்றச் சென்றார். 305
செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப்
புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம்
எடுத்து அருளி அணைந்த போழ்தில்
மங்கை வாழ் பாகத்தார்
மழபாடி தலையினால் வணங்குவார்கள்
பொங்கு மா தவம் உடையார் எனத்
தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார். 306
மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து
மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி
செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச்
சென்று தாழ்ந்து எழுந்து நின்று
தொழுது ஆடிப் பாடி நறும் சொல்
மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டு
அங்கு உறைந்தார் சின்னாள். 307
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர்
பணிந்து ஏத்தி ஆன்ற சைவ
முதன் மறையோர் அன்பிலாலந் துறையின்
முன்னவனைத் தொழுது போற்றிப்
பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார்
பயில் பதியும் பணிந்து பாடி
மத கரட வரை உரித்தார் வட கரை
மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர். 308
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும்
திருநதி வாழ் சென்னியார் தம்
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை
வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள்
தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில்
சொல் மாலை நிகழப் பாடி. 309
பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக்
கொடு முடியார் தம்பாதம்
மருவி வணங்கி வளத் தமிழ்
மாலை மகிழ்ந்து சாத்தி
விரி சுடர் மாளிகை வெஞ்ச
மாக் கூடல் விடையவர் தம்
பொருவில் தானம் பல
போற்றிக் குணதிசைப் போதுகின்றார். 338
செல்வக் கருவூர்த் திருவானிலைக்
கோயில் சென்று இறைஞ்சி
நல்லிசை வண் தமிழ்ச் சொல்
தொடை பாடி அந்நாடு அகன்று
மல்கிய மாணிக்க வெற்பு
முதலா வணங்கி வந்து
மல்கு திரைப் பொன்னித்
தென் கரைத் தானம் பல பணிவார். 339
பன்னெடும் குன்றும் படர் பெரும்
கானும் பல பதியும்
அந் நிலைத் தானங்கள் ஆயின
எல்லாம் அமர்ந்து இறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக
வாய்மை மறையவனார்
பொன் இயல் வேணிப் புனிதர்
பராய்த் துறையுள் புகுந்தார். 340
நீடும் பராய்த் துறை நெற்றித்
தனிக் கண்ணர் கோயில் நண்ணிக்
கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில்
தமிழ்ச் சொல் மாலை
பாடும் கவுணியர் கண்பனி
மாரி பரந்து இழியச்
சூடும் கரதலத்து அஞ்சலி
கோலித் தொழுது நின்றார். 341
தொழுது புறம்பு அணைந்து அங்கு
நின்று ஏகிச் சுரர் பணிவுற்று
எழு திரு ஆலந்துறை
திருச்செந்துறையே முதலா
வழுவில் பல் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்து அணைவார்
செழு மலர்ச் சோலைத்
திருக் கற்குடி மலை சேர வந்தார். 342
கற்குடி மாமலை மேல் எழுந்த
கனகக் கொழுந்தினைக் கால் வளையப்
பொன் திரள் மேருச் சிலை வளைத்த
போர் விடையாளியைப் போற்றி இசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி
ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார். 343
செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப்
பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம் மலை ஈருரி போர்வை சாத்தும்
கண் நுதலாரைக் கழல் பணிந்து
மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர
விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து
மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை
வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார். 344
விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில்
வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து
எழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலை பாடிப்
பரவி நின்று ஏத்தினர் பான்மையினால். 345
நாரணன் நான்முகன் காணா உண்மை
வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத்
திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உட் பொருள் ஆயினாரை
ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை
ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார். 346
கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து
காமர் பதி அதன் கண் சில நாள்
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார்
மன்னும் தவத்துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்
தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்று
உள்ள தானம் வழுத்திச் செல்வார். 347
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும்
எறும்பியூர் மாமலையே முதலா
வேறு பதிகள் பலவும் போற்றி
விரவும் திருத்தொண்டர் வந்து சூழ
ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம்
எண் திசையோரும் தொழுது இறைஞ்ச
நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள
மா நகர் சென்று சேர்ந்தார். 348
நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால்
நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும்
இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள்
அணைந்து பணிந்து நியமம் போற்றிக்
கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த
காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார். 349
சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச் செஞ்சடை
நம்பர் தம் கோயில் எய்தி
முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து
மொய் கழல் சேவடி கை தொழுவார்
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக்
கண் நுதலாரை முன் போற்றி செய்து
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார்
வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார். 350
அங்கு அப்பதி நின்று எழுந்தருளி
அணிந்திரு வாலம் பொழில் வணங்கி
பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி
பொய்யிலியாரைப் பணிந்து போற்றி
எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம்
எதிர் கொள்ள எப்பதியும் தொழுது
செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த
திருக் கண்டியூர் தொழச் சென்று அணைந்தார். 351
சிவாய நம🔱❤🎉🙏🙏🙏🙏❤
Thanks for watching👍
நச்சி இன் தமிழ் பாடிய
ஞான சம்பந்தர்
இச்சையே புரிந்து அருளிய
இறைவர் இன் அருளால்
அச் சிறப்பு அருள் பூதம்
முன் விரைந்தகன் பீடத்து
உச்சி வைத்தது பசும் பொன்
ஆயிரக் கிழி ஒன்று. 426
வைத்த பூதம் அங்கு அணைந்து
முன் நின்று நல் வாக்கால்
உய்ந்த இக்கிழி பொன்
உலவாக் கிழி உமக்கு
நித்தனார் அருள் செய்தது என்று
உரைக்க நேர் தொழுதே
அத்தனார் திருவருள் நினைந்து தவ
மேனி மேல் பணிந்தார். 427
பணிந்து எழுந்து கை தொழுது
முன் பனி மலர்ப் பீடத்து
அணைந்த ஆடகக் கிழிதலைக்
கொண்டு அருமறைகள்
துணிந்த வான் பொருள் தரும்
பொருள் தூய வாய்மையினால்
தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு
அளித்து உரைசெய்வார். 428
ஆதி மாமறை விதியினால்
ஆறு சூழ் வேணி
நாதனாரை முன்னாகவே புரியும்
நல் வேள்வி
தீது நீங்க நீர் செய்யவும்
திருக் கழுமலத்து
வேத வேதியர் அனைவரும்
செய்யவும் மிகுமால். 429
என்று கூறி அங்கு அவர்தமை
விடுத்த பின் அவரும்
நன்றும் இன்புறும் மனத்தொடும்
புகலி மேல் நண்ண
வென்றி ஞான சம்பந்தரும்
விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில்
மகிழ்ந்து இனிது இருந்தார். 430
அண்டர் பிரான் ஆலயங்கள்
அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண்திரை நீர்த் தடம் பொன்னித்
தென் கரையாம் கொங்கின் இடை
வண்டு அலையும் புனல் சடையார்
மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசைக்
கொடி மாடச் செங்குன்றூர். 324
அந் நகரில் வாழ்வாரும்
அடியவரும் மனம் மகிழ்ந்து
பன்னெடுந்தோரணமுதலாப் பயில்
அணிகள் பல அமைத்து
முன் உறவந்து எதிர் கொண்டு
பணிந்து ஏத்திமொய் கரங்கள்
சென்னியுறக் கொண்டு அணைந்தார்
சினவிடையார் செழுங்கோயில். 325
தம் பெருமான் கோயிலினுள் எழுந்தருளித்
தமிழ் விரகர்
நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து
எழுந்து நலம் சிறக்க
இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை
வண் தமிழ் பாடிக்
கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ
நகரில் இனிது அமர்ந்தார். 326
அப்பாலைக் குட புலத்தில்
ஆறணிந்தார் அமர் கோயில்
எப்பாலும் சென்று ஏத்தித்
திரு நணாவினை இறைஞ்சிப்
பைப் பாந்தள் புணைந்த வரைப்
பரவிப் பண்டு அமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்து
அணைந்து வைகினார். 327
ஆங்கு உடைய பிள்ளையார்
அமர்ந்து உறையும் நாளின்கண்
தூங்கு துளி முகில் குலங்கள்
சுரந்து பெயல் ஒழிகாலை
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம்
வெயில் பெறா விருப்பு வரப்
பாங்கர் வரையும் குளிரும்
பனிப் பருவம் எய்தியதால். 328
அளிக்குலங்கள் சுளித்து அகல
அரவிந்தம் முகம் புலரப்
பளிக்கு மணி மரகத வல்லியில்
கோத்த பான்மை எனத்
துளித் தலைமெல் அறுகு பனி
தொடுத்து அசையச் சூழ் பனியால்
குளிர்க் குடைந்து வெண் படாம்
போர்த்து அனைய குன்றுகளும். 329
மொய் பனி கூர் குளிர் வாடை
முழுது உலவும் பொழுதேயாய்க்
கொய் தளிர் மென் சோலைகளும்
குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான்
போல் விசும்பின் இடை
ஐது வெயில் விரிப்பதுவும்
அடங்குவதும் ஆகுமால். 330
நீடிய அப் பதிகள் எலாம்
நிறை மாடத்து உறையுள் தொறும்
பேடையுடன் பவளக்கால் புறவு
ஒடுங்கப் பித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார்
துணைக் கலச வெம் முலையுள்
ஆடவர் தம் பணைத்தோளும்
அணி மார்பும் அடங்குவன. 331
அரிசனமும் குங்குமமும் அரைத்து
அமைப்பார் அயல் எல்லாம்
பரிய அகில் குறை பிளந்து
புகைப்பார்கள் பாங்கு எல்லாம்
எரி உமிழ் பேழ் வாய்த் தோணி
இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்
விரி மலர் மென் புறவு
அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம். 332
அந்நாளில் கொடி மாடச் செங்
குன்றூர் அமர்ந்து இருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன்
மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில் பயின்ற
அதனால் பனித்த குளிர்
முன் ஆன பிணி வந்து
மூள்வது போல் முடுகுதலும். 333
அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு
அவர்கள் எல்லாம்
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார்
அருள் தொழுதே
இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு
எய்தப் பெறா என்று
சென்னி மதி அணிந்தாரைத்
திருப்பதிகம் பாடுவார். 334
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து
ஐயர் அமுது செய்த
வெவ்விடம் முன் தடுத்து எம்
இடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும் அடியார் இடர்
காப்பது கண்டம் என்றே
செய்வினை தீண்டா திரு நீல கண்டம்
எனச் செப்பினார். 335
ஆய குறிப்பினில் ஆணை
நிகழ அருளிச் செய்து
தூய பதிகத் திருக் கடைக்
காப்புத் தொடுத்து அணிய
மேய அப்பொற்பதி வாழ்பவர்க்கே
அன்றி மேவும் அந்நாள்
தீய பனிப் பிணி அந்நாடு
அடங்கவும் தீர்ந்தது அன்றே. 336
அப்பதியின் கண் அமர்ந்து சில
நாளில் அங்கு அகன்று
துப்புறழ் வேணியர் தானம்
பலவும் தொழுது அருளி
முப்புரி நூலுடன் தோல்
அணி மார்பர் முனிவரொடும்
செப்பரும் சீர்த் திருப்பாண்டிக்
கொடுமுடி சென்று அணைந்தார். 337
Thenaludaiya sivane potri Ennattavarugum Enraiva potri 🥰🥰🥰
Thanks for watching👍
தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏
Thanks for watching👍
உங்களின் தூய பாதங்களை வணங்குகிறேன் ஐயா 🙏🙏
Thanks for watching👍
திரு நாசேச் சரத்து அமர்ந்த
செங்கனகத் தனிக் குன்றைக்
கரு நாகத்து உரி புனைந்த கண்
நுதலைச் சென்று இறைஞ்சி
அருஞானச் செந்தமிழின்
திருப்பதிகம் அருள் செய்து
பெரு ஞான சம்பந்தர்
பெருகு ஆர்வத்தின்புற்றார். 411
மா நாகம் அர்ச்சித்த மலர்க்
கமலத் தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி
தீர்க்கும் நலம் போற்றிப்
பால் நாறும் மணி வாயர்
பரமர் திருவிடை மருதில்
பூ நாறும் புனல் பொன்னித்
தடங்கரை போய்ப் புகுகின்றார். 412
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன்
என்று எடுத்தருளித்
தாங்க அரிய பெருமகிழ்ச்சி
தலை சிறக்கும் தன்மையினால்
ஈங்கு எனை ஆளுடைய பிரான்
இடை மருது ஈதோ என்று
பாங்கு உடைய இன்
இசையால் பாடி எழுந்தருளினார். 413
அடியவர்கள் எதிர் கொள்ள
எழுந்தருளி அங்கு அணைந்து
முடிவில் பரம் பொருள் ஆனார்
முதற் கோயில் முன் இறைஞ்சிப்
படியில் வலம் கொண்டு திரு முன்பு
எய்திப் பார் மீது
நெடிது பணிந்தெழுந்து அன்பு
நிறை கண்ணீர் நிரந்து இழிய. 414
பரவுறு செந்தமிழ்ப் பதிகம்
பாடி அமர்ந்த அப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல
பாடி வெண் மதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர் தம்
தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத் தொண்டருடன் பணிந்து
ஏத்தி உறையும் நாள். 415
மருங்கு உள நற் பதிகள் பல
பணிந்து மா நதிக்கரை போய்க்
குரங்காடு துறை அணைந்து
குழகனார் குரை கழல்கள்
பெரும் காதலில் பணிந்து
பேணிய இன்னிசை பெருக
அரும் கலை நூல்
திருப்பதிகம் அருள் செய்து பரவினார். 416
அம் மலர்த் தடம் பதிபணிந்து
அகன்று போந்து அருகு
மைம்மலர்க் களத்து இறைவர்
தம் கோயில்கள் வணங்கி
நம் மலத்துயர் தீர்க்க
வந்தருளிய ஞானச்
செம்மலார் திருவாவடு
துறையினைச் சேர்ந்தார். 417
மூவர்க்கு அறிவரும் பொருள்
ஆகிய மூலத்
தேவர் தம் திருவாவடு துறைத்
திருத் தொண்டர்
பூ அலம்பு தண் பொரு புனல்
தடம் பணைப் புகலிக்
காவலர்க்கு எதிர் கொள்ளும்
ஆதரவுடன் கலந்தார். 418
வந்து அணைவார் தொழா முனம்
மலர் புகழ்ச் சண்பை
அந்தணர்க்கு எலாம் அருமறைப்
பொருள் என வந்தார்
சந்த நித்திலச் சிவிகை நின்று
இழிந்து எதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர் தம்
கோயில் முன் சென்றார். 419
நீடு கோபுரம் இறைஞ்சி உள்
புகுந்து நீள் நிலையான்
மாடு சூழ் திரு மாளிகை
வலம் கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு
துறையுள் ஆரமுதை
நாடு காதலில் பணிந்தெழுந்து
அருந் தமிழ் நவின்றார். 420
அன்பு நீடிய அருவி கண்
பொழியும் ஆர்வத்தால்
முன்பு போற்றியே புறம்பு
அணை முத்தமிழ் விரகர்
துன்பு போம் மனத் திருத்தொண்டர்
தம்முடன் தொழுதே
இன்பம் மேவி அப்பதியினில்
இனிது அமர்ந்திருந்தார். 421
மேவி அங்கு உறை நாளினில்
வேள்வி செய்வதனுக்கு
ஆவது ஆகிய காலம் வந்து
அணைவுற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத்
தாதையார் தாமும்
போவதற்கு அரும் பொருள் பெற
எதிர் நின்று புகன்றார். 422
தந்தையார் மொழி கேட்டலும்
புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை
நினைந்து அருள் முன்னி
அந்தமில் பொருள் ஆவன
ஆவடு துறையுள்
எந்தையார் அடித் தலங்கள்
அன்றோ என எழுந்தார். 423
சென்று தேவர் தம்பிரான் மகிழ்
கோயில் முன்பு எய்தி
நின்று போற்றுவார் நீள்
நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்றிலேன் உன்னடி
அல்லது ஒன்று அறியேன்
என்று பேரருள் வினவிய
செந்தமிழ் எடுத்தார். 424
எடுத்த வண் தமிழ்ப் பதிக
நாலடியின் மேல் இரு சீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த
இன்னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார்
அடி இணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்து
அஞ்சலி அளித்தார். 425
ஓம் நமசிவாய🙏🙏
Thanks for watching👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ sivaya namaka ayya
Thanks for watching👍
❤❤❤❤❤
Thanks for watching👍
🙏🙏
Thanks for watching👍
புரிஞ்சவங்களுக்கு நீங்க சொன்னது புரியும் புரியாதவங்களு அந்த சாமி தான் புரிய வைக்கனும்
Thanks for watching👍
ஓம் நமசிவாய🙏
Thanks for watching👍