Lord Murugan Songs | Sri Arunagirinathar'S Vel Virutham Mayil Virutham | Dr.Seergazhi S.Govindarajan
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ก.ค. 2024
- MRT Music Bhakthi Sagara Presents: "Sri Arunagirinathar'S Vel Virutham Mayil Virutham" Audio Songs Jukebox. Sung By : Dr. Seergazhi S. Govindarajan, Music Composed By : T.R. Papa, Lyrics By : Arunagirinathar, Tamil Bhakthi Padalgal.
#SriArunagirinatharSVelViruthamMayilVirutham #TamilPadalgal #DevotionalSongs #MuruganSongs #TamilBhakthiSongs #MRTMusic
Subscribe to our TH-cam Channel : bit.ly/3qs9I1i
----------------------
Vel Viruththam 00:00
Mayilvruththam 22:06
------------------------
Song Name : Vel Viruththam
Programe Name : Sri Arunagirinathar'S Vel Virutham Mayil Virutham
Singer Name : Dr. Seergazhi S. Govindarajan
Music Director : T.R. Papa
Lyricist Name : Arunagirinathar
Music Label : MRT Music
Song Name : Mayilvruththam
Programe Name : Sri Arunagirinathar'S Vel Virutham Mayil Virutham
Singer Name : Dr. Seergazhi S. Govindarajan
Music Director : T.R. Papa
Lyricist Name : Arunagirinathar
Music Label : MRT Music
----------------------------------------------------
Enjoy & stay connected with us!!
Subscribe to our TH-cam Channel : bit.ly/MRTMusicBhakthiSagara
Follow Us On Twitter : bit.ly/MRTMusicTwitter
Follow Us On Instagram: bit.ly/MRTMusicInstagram
Follow Us On Facebook : bit.ly/MRTMusicFB
Follow Us On Koo : bit.ly/MRTMusicKoo
Follow Us On MOJ : bit.ly/MRTMusicMOJ
Follow Us On ShareChat : bit.ly/MRTMusicShareChat - เพลง
❤🎉அய்யா முருகா ❤வேலும் மயிலும் சேவலும் எப்போதும் என் குடும்பத்திற்கு துணையாக இருக்க உன் கருணைவேண்டும் கந்தா❤🎉❤
திருப்புகழில் உள்ள வகுப்பு பாடல்கள் தொகுப்புகளையெல்லாம் பாடவைத்து ஆவணப்படுத்தாமல் தவற விட்டது இளைய தலைமுறை களுக்கு நாம்செய்த பெரிய துரோகம் ஆகும், இன்னும் காலம் கடத்தாமல் திருப்புகழ் முழுமையாக இசைவல்லுனர்களால் பாடவைத்து ஆவணப்படுத்த வேண்டும்
Very true sir....
@@anotheranonymous4652தயவுசெய்து தமிழில் பதிவிடுங்கள் சகோ.
திராவிட நாதாரிங்க செய்த அய்க்கியதனம்
ஆமாம் கண்டிப்பாக இளைய தலைமுரைக்கு கொண்டு சேர்க வேண்டுகிரேன் நன்றி
சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடல் எனக்கு ஒரு இணைபிரியாத ஈர்ப்பு.தெளிவான உச்சரிப்பு மனம்உருகும் குரல் இவரின் பாடல் அத்தனையும் பழந்தன்மை மாறாமல் திரும்பவும் வெளியீடு செய்யவேண்டும்.🌷🌹🍀🌺
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதியார் வாக்கு இப்போது ஞாபகம் வருகிறது
வேல் விருத்தம்
மகரம் அளறு இடை புரள உரகம் கணபண மவுலி மதியும் இரவியும் அலையவே
வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல மகிழ்வு பெறும் அறு சிறையவாம்
சிகர வரை மனை மறுகு தொறும் நுளைய மகளிர் செழு செனல்களொடு தரளம் இடவே
செகம் சிரம் பகிரதி முதல் நதிகள் கதிபெற உததி திடர் அடைய நுகரும் வடிவேல்
தகர மிருகமதம் எனும் மணமருவு கட கலுழி தரு கவுளும் உறுவள் எயிறும்
தழை செவியும் நுதல் விழியும் உடைய ஒரு கடவுள் மகிழ் தரு துணைவன் அமரர் குயிலும்
குகரமலை எயினர் குல மடமயிலும் என இருவர் குயமொடு அமர் புரியும் முருகன் குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள் குலைய விடு கொடிய வேலே.
தாங்கள் பதிவிட்டிருக்கும் வேல் விருத்தத்தை என்னைப் போன்றோருக்கு பிழையின்றிப் படிக்கவே சிரமமாக இருக்கும். ஆனால் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் எப்படி தெளிவான உச்சரிப்புடன் பாடவும் செய்கிறார் என்பதை நினைத்தால் பெரும் வியப்பு ஏற்படுகிறது. ஐயா அவர்கள் உண்மையிலேயே கருவில் திருவுடைவராக முருகன் அருள் பெற்றவர் என்பதில் ஐயமில்லை!!
🙏🙏🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை.🙏💐💐💐💐💐💐💐💐💐
(இனிய தமிழின்தெளிவான உச்சரிப்பு வெண்கலக்
குரலில்.🙏) நன்றி
கதிர்காமத்தையனே என் அபபனே முருகா போற்றி.
மா முதல் தடிந்து தண் மல்கு கிரி ஊடு போய் வலிய தானவர் மார்பு இடம் வழி கண்டு
கமல பவனத் தனை சிறையிட்டு மகவான் தன்னைச் சிறை விடுத்து
ஓம இருடித் தலைவர் ஆசி பெற்று உயர் வானில் உம்பர் சொல் துதி பெற்று
நா உடைய கீரன் தனது பாடல் பெற்று உலகு தனில்
ஒப்பு இல் புகழ் பெற்ற வைவேல்.
சோம கலச ப்ரபா அலங்கார தர ஜடா சூடி கால அந்த காலர் துங்க ரட்க்ஷக த்ரோண கட்க குலிசம் சூலம் துரகம் கேசரம் அம்பரம்
சேம வடவா அம்புயம் பரண சங்கு ஆபரண திகம்பர த்ரியம்பக மகாதேவ நந்தன கஜானன சகோதர குகன் செம்பொன் திருக்கை வேலே.
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களைத் தவிர இவ்வளவு தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பக்தி மயமாகப் பாட யாருளார்??
என் வாழ்க்கை என் உடல் நோயை பரிபூரணமாக குணம் பெற செய்த என் அப்பன் அருள் அன்றி வேறில்லை இப்பாடல் மூலம் 🎉❤
Murugan Adimai, Ayya Sirkazhi Govindarajan voice is so divine
Ommurugha
ஓம் முருகா சரணம்
And the great musician TR PAPPA . What a great music composition. Hats off to Him. Thank You for such a treat to our ears.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Murugan Thunai
Nobody can ever sing like him. Such a great musician. The highlight is he always sings in different mettu for each para of the song. I m a great fan of him. All his songs can be heard at any time of the day with full devotion such an tamil expression . He stresses each and every word In such a way that it's meaning will reach the devotees heart straight even if they do not understand it fully. They will automatically become engrossed in his song once they start hearing him sing. Such a mesmerizing voice and expression
ஓம் முருகா
ஓம் சரவணபவ ஓம் முருகா முருகா முருகா
ஓம் முருகா சரணம்
AYYA THIRUVADI SARANAM
வாழ்க வளர்க.
Great songs
Sorry I missed my tribute to the great composer the late T.R. Papa. He was another Isai Gjani that our Tamil people easily forget. God bless 🙏🙏
Om Saravana Bhava
முருகா முருகா
OM MURUGA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Arogaraa murugaa
My God. It's so divine and Athma touching. There are no comparison to this great Isai Gjani Seerkaliyar. Physically he is not here. But his divine voice and his mesmerizing tamil will always be with us. 🌹🌹🙏🙏🙏
அண்டர் உலகும் சுழல எண் திசைகளும் சுழல அங்கியும் உடன் சுழலவே
அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல அகில தலமும் சுழலவே
மண்டலம் நிறைந்த ரவி சதகோடி மதி உதிர மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினிற் சகல தலமும் அருளச் சிரம வகைவகையினிற் சுழலும் வேல்
தண்டமுடனும் கொடிய பாசமுடனும் கரிய சந்தமுடனும் பிறைகள் போல்
தந்தமுடனும் தழலும் வெம் கண்ணுடனும் பகடு தன்புறம் வருஞ் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்சல் என மென் சரண கஞ்சம் உதவும் கருணை வேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம் புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.
To hear this we have to do some good deeds......muruga
🙏🏻ஓம் சரவண நவ🙏🏻
தேடுதற்கு அரிதான நவமணி அழுத்தி இடு செம் கரனை அமுதம் வாய் கொள்
செயம் அளித்து அருள் எனக்கு என உவப்போடு வந்து சேவடி பிடித்தது எனவும்
நீடு மை கடல் சுட்டதிற்கு அடைந்து எழுகடலும் நீ எமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடிய கிரி எந்தமைக் கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடுவேல்.
ஆடு மை கணபண கதிர்முடி புடை எயிற்று அடல் எரி கொடிய உக்ர
தழல் விழிப் படுகொலை கடைய கட்செவியினுக்கு அரசினை தனி எடுத்தே
சாடும் மைப் புயல் என பசு நிறச் சிகரியில் தாய் திமித்துடன் நடிக்கும்
சமர மயில் வாகனன் அமரர் தொழும் நாயகன் சண்முகன் தன் கை வேலே.
YB
Wow
🎉🙏
ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய் ஆதவனின் வெம்மை ஒளி மீது
அரிய தவமுனிவருக்கு இந்துவின் தண் என்று அமைந்து
அன்பருக்கு முற்றா மூலமாம் வினை அறுத்து
அவர்கள் வெம் பகையினை முடித்து
இந்திரர்க்கும் எட்டா முடிவில் ஆனந்தம் நல்கும் பதம் அளித்து எந்த மூதண்டமும் புகழும் வேல்
ஏலமா யானையின் கோடு அதில் சொரி முத்தும்
இன் பணைகள் உமிழும் முத்தும்
இனி வாடை மான்மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவம் ஆரும்
தால மா மர முதல் பொருள் படைத்திடும் எயினர் தரு வனிதை மகிழ்னன் ஐயன்
தனிநடனம் புரி சமர முருகன் அறுமுகன் குகன் சரவணக் குமரன் வேலே.
அண்டங்கள் ஒருகோடி ஆயினும் குலகிரி அநந்தம் ஆயினும் மேவினால்
அடைய உருவி புறம் போவது அல்லது தங்கல்
அறியாது சூரன் உடலைக்
கண்டம் படப் பொருது காலனும் குலைவு உறும் கடிய கொலை புரியும் அது
செம் கனக அசலத்தைக் கடைந்து முனை இட்டுக் கடுக்கின்ற துங்க நெடுவேல்.
தண்டம் தநு திகிரி சங்கு கட்கம் கொண்ட தானவ அந்தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடல் பல தலை தமனியச் சுடிகையின் மேல்
வண்டு ஒன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை மங்கையும் பதம் வருடவே
மதுமலர்க் கண் துயில் முகுந்தன் மருகன் குகன் வாகைத் திருக்கை வேலே.
⚘👏🙏🙏🙏🙏⚘
2)வெங்காளக் கண்டர் கைச் சூலமும் திருமாயன் வெற்றி பெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலம் கல்லி வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீ சயித்து அருள் எனத் தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப
சயிலமொடு சூரன் உடல் ஒரு நொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கௌமாரி கமலாசனக்கன்னி
நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை கௌரி காமாக்ஷி
சைவசிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி த்ரியம்பகி அளித்த
செல்வச் சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குல அந்தகன் செம்பொன் திருக்கை வேலே.
🙏🙏
பந்து ஆடலிற் கழங்கு ஆடலிற் சுடர் ஊசல் பாடலினொடு ஆடலில் எல்லாம்
பழம் தெவ்வர் கட்கம் துணித்து இந்திரர்க்கு அரசு பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தம் ஆரு நாள் மலர்க் குழல் அரம்பையர்களும் சசி மங்கை அனையர் தாமும்
தன்னை அன்பொடு பாடி
ஆடும் ப்ரதாபமும் தலைமையும் பெற்ற வைவேல்.
மந்தாகினி தரங்கச் சடிலருக்கு அரிய மந்த்ர உபதேசம் நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகக் சிகா அலங்கார வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்து ஆர் மலர்க் கடம்பும் செச்சை மாலையும் குவளையும் செங்காந்தளும்
கூதாள மலரும் தொடுத்து அணியும் மார்பினன் கோலத் திருக்கை வேலே.
இடையில் விளம்பரம் தேவை இல்லை
சீர்காழி ஒரு தெய்வ பிறவி எப்படி இப்படி சரளமாக வேல்விருத்த கடைசி வரிகளை பாடினார் என்பது வியப்பாக உள்ளது இன்றும் யார் முயற்சி செய்தாலும் திணறிடுவார்கள் அந்த கடைசி வரிகளை படிக்கும்போது
இல்லை. தொடர்ந்து இறைவனின் பாடல்களைப் படிப்பவர்களுக்கு இது கடினமானது அல்ல.முதலில் சொல் பிரித்துப் பாடல் வரியின் பொருளை விளங்கிக் கொண்டால் வார்த்தைகள் மனதை விட்டும் அகலாது.நாவிலும் சரளமாக வரும். நமச்சிவாயம்.
வேதாள பூதமொடு காளி காளாத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும்
வெங் கழுகுடன் கொடி பருந்து செம்புவனத்தில் வெம் பசி ஒழிக்க வந்தே
ஆதார கமடமும் கணபண வியாளமும் அடக்கிய தடங்கிரி எலாம்
அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத் தசை அருந்திப் புரந்த வைவேல்.
தாது ஆர் மலர்ச் சுனை பழநிமலை சோலைமலை தனிப் பரங்குன்று ஏரகம் தணிகை செந்தூர் இடைக்கழி ஆவினன்குடி தடங்கடல் இலங்கை அதனில்
போது ஆர் பொழில் கதிர்காமத் தலத்தினை புகழும் அவரவர் நாவினில்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே.
வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே கரிய மால் அறியும் நாலு மறை நூல்
வலான் அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் இவர் மனோலயம் உல்லாசம் உறவே
உலா வரு கலோல மகர ஆலய சலங்களும் உலோக நிலை நீர் நிலையிலா
ஒலா ஒலி நிசாசரர் உலோகமெலாம் அழல் உலாவிய நிலாவு கொலை வேல்.
சிலா வட கலா விநோதவா சிலிமுகா விலோசனா சினசிலா தணி விலா
சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய சேவக சராப முகிலாம்
விலாச கலியாண கலைசேர பசு மேலை முலை மேவிய விலாச அகலன்
விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு வேழம் இளைஞன் கை வேலே.
மயில் விருத்தம்
சந்தன பாளித குங்குமம் புளகித சண்பக கடக புய
சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவு அணியும்
கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப் பரவுங்
கூதள சீதள பாதம் எனக்கு அருள் குஞ்சரி மஞ்சரி தோய்
கந்த க்ருபாகர கோமள கும்ப கர அதிப மோக ரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதான மதத்
எந்தை மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுக சிவசுத கணபதி விக்ன விநாயக தெய்வ சகோதரனே.
சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரண யுகள அமிர்த ப்ரபா
சந்த்ர சேகர மூஷிக ஆரூட வெகுமோக சத்ய பிரிய ஆலிங்கன
சிந்தாமணிக் கலச கரகட கபோல த்ரி அம்பக விநாயகன் முதல்
சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்
மந்தாகினி பிரபவ தரங்க விதரங்க வனசரோதய கிருத்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்தி அ வர அசலன் குலிசாயுதத்து இந்த்ராணி மாங்கல்ய தந்து ரட்க்ஷாபரண இகல் வேல் விநோதன் அருள் கூர் இமய கிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ ரத்ன கலாப மயிலே.
சக்ர ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளிபட்டுக் க்ரௌஞ்ச சயிலன்
தகரப் பெருங் கனக சிகரச் சிலம்பும் எழு தனி வெற்பும் அம் புவியும்
எண் திக்குத் தடங் குவடும் ஒக்கக் குலுங்க வரும் சித்ரப் பதம் பெயரவே
சேடன் முடி திண்டாட ஆடல் புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கும் மயிலாம்.
பக்கத்தில் ஒன்று படு பச்சைப் பசும் கௌரி பத்மப் பதம் கமழ் தரும்
பாகீரதி சடில யோகீசுரர்க்கு உரிய பரம உபதேசம் அறிவிக்
கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு கந்தசுவாமி தணிகை
கல்லார கிரி உருக வரு கிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே.
ஆதார பாதளம் பெயர அடி பெயர மூதண்ட முகடது பெயரவே
ஆடு ஆரவம் முடி பெயர எண் திசை பெயர எறி கவுள் கிரிசரம் பெயரவே
வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் மிக்கப் பிரியப்பட விடா விழி பவுரி கௌரி கண்டு உள மகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம்.
மாதானுபங்கி எனும் மாலது சகோதரி மகீதரி கிராத குலி மா மறை முனி குமாரி சாரங்கம் நம் தனி வந்த வள்ளி மணி நூபுர மலர்
பாத அரவிந்த சேகரன் நேயம் மலரும் உற்பல கிரி அமர்ந்த பெருமாள்
படை நிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப் பசுந் தோகை வாகை மயிலே.
யுக கோடி முடிவில் மண்டிய சண்ட மாருதம் உதித்தது என்று அயன் அஞ்சவே
ஒரு கோடி அண்டர் அண்டங்களும் பாதாள லோகமும் பொன் குவடு உறும்
வெகு கோடி மலைகளும் அடியினில் தகர்ந்து இரு விசும்பில் பறக்க
விரிநீர் வேலைச் சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை வீசிப் பறக்கும் மயிலாம்.
நக கோடி கொண்டு அவுணர் நெஞ்சம் பிளந்த நர கேசரி முராரி திருமால் நாரணன் கேசவன் ஸ்ரீதரன் தேவகீ நந்நனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகு ஓடி அநவரதம் முகில் உலவு நீலகிரி வாழ்
முருகன் உமை குமரன் அறுமுகன் நடவு விகடதட மூரிக் கலாப மயிலே.
மலம் thinnum panryye vilambaram podathe
Naimavana etukuda edail add