Mastitis மடி நோய் அல்லது மடியழற்சி சரிசெய்யும் முறை வீட்டுப் பொருட்களுடன் 50 ரூபாய் இல் ✨🙌🏻
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
- நோயின் தன்மை
மடி நோய் பல்வேறு பட்ட காரணிகளால் மாடுகளின் மடியில் ஏற்படும் அழற்சியாகும்
இந்நோயினால் மாடுகளின் பாலின் நிறம் மற்றும் தன்மை மாறி விடுகிறது
பால் உற்பத்தி திடீரென குறைந்து விடுவதுடன் அதனால் அதிகமான பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது
அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகள், குறைந்த அளவு பால் உற்பத்தி செய்யும் மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன
அயல் நாட்டின மற்றும் கலப்பின மாட்டினங்கள், உள்நாட்டின மாட்டினங்களை விட இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன
நோய்க்கான காரணங்கள்
பாக்டீரீயா, பூஞ்சைள் மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற நுண்ணுயிரிகள் மடி நோய் உண்டாக்கும் காரணிகளாகும்
மடி நோயினை ஏற்படுத்தும் முக்கியமான நுண்ணுயிரிகளாவன- ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ், ஸ்டஃபைலோகாக்கஸ் அகலக்சியே, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஜூஎபி டெமிக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஃபீகாலிஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீனஸ், கிளெப்சியல்லா ஸ்பீஸ், மைக்கோபாக்டீரியம் போவிஸ், ஈ.கோலை, புரூசெல்லா அபார்டஸ், சூடோமோனாஸ் பயோசயனியஸ், லெப்டோஸ்பைரா பொமானா, பேஸ்சுரெல்லா மல்டோசிடா போன்ற நுண்ணுயிரிகள் மடி நோயினை ஏற்படுத்தும் பொதுவான நுண்ணுயிரிகளாகும்.
மடி நோயினை உண்டாக்கும் பூஞ்சைகளாவன, டிரைக்கோஸ்போரான் ஸ்பீசிஸ், அஸ்பெர்ஜில்லஸ் ஃப்யூமிகேட்டஸ், அஸ்பெர்ஜில்லஸ் மிடுலஸ் மற்றும் கேன்டிடா ஸ்பீசிஸ் போன்றவையாகும்.
பண்ணையின் சுகாதாரமற்ற நிலை, மடியில் அடி படுதல், முழுவதுமாக பால் கறக்காமை, மடிக்காம்பில் ஏற்படும் காயங்கள் போன்றவை மடி நோய் ஏற்பட உதவி புரிகின்றன.
மருத்துவ அறிகுறிகள்
மாடுகளின் மடிப்பகுதி வீங்கி,கடினமாக காணப்படுதல்
மடி வீங்கி, சூடாக காணப்படுதல். இது தவிர மடிப்பகுதியினைத் தொடும்போது வலி ஏற்படுதல்
மாடுகளின் மடியைத் தொடும்போது வலி ஏற்படுவதால், அவை மடியைத் தொட விடாமல் உதைத்தல்
மடிக்காம்புப் பகுதி சிவந்து காணப்படுதல்
இரத்தம் கலந்த பால்
பால் மஞ்சள் அல்லது பழுப்பு நிற திரவம் போன்று கட்டிகளுடன் காணப்படுதல்
பால் உற்பத்தி குறைதல்
நோய்த்தடுப்பு முறை
கன்று ஈன்றவுடன் மாடுகள் மென்மையான படுக்கை பொருட்கள் இட்ட கொட்டகையில் பராமரிக்கப்பட வேண்டும்.
அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளின் கொட்டகையில் சிமெண்ட் கான்கிரீட்டினால் ஆன தரையினை அமைக்கக்கூடாது. மாடுகளின் கொட்டகையில் வைக்கோல், மரத்தூள்கள், மணல் கொண்டு தரைப்பகுதியில் படுக்கை அமைக்கவேண்டும். மணல் மூலம் படுக்கை அமைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் மணலில் குறைவான அளவே நுண்ணுயிரிகள் இருக்கும்.
மாடுகளின் மடிக்காம்பிலிருந்து நன்றாக பாலைக் கறந்த பின்பே மடியில் மருந்துகளைச் செலுத்தவேண்டும்
மாடுகளின் கொட்டகை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
பால் கறப்பதற்கு முன்பாக மாடுகளின் மடிப்பகுதி மற்றும் பால் கறப்பவரின் கைகளை 4% பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவ வேண்டும்.
பால் கறப்பவரின் கை விரல்களில் நகங்கள் இருக்கக்கூடாது.
ஒவ்வொரு முறை பால் கறந்த பின்பும் பால் கறவை இயந்திரம், அதன் மடிக்காம்பு பம்பு, பாத்திரங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.
Informative
Good information.... 😊
👍
Thanks for this information❤