472 Kalvaari Anbai Naan Dhyaanikkaiyil | Lyrical Version | கல்வாரி அன்பை நான் | TPM Tamil Song
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
- TPM songs with Lyrics
TPM tamil song 472 lyrics 👇
Lyrics:
பல்லவி
கல்வாரி அன்பை நான் தியானிக்கையில்
கல்மனமும் என்னில் உருகிடுதே
நல் நேசர் இயேசுவே உம்முடன் யான்
சிலுவையில் அறைந்திட ஒப்புவித்தேன்
சரணங்கள்
1. என் பாவ சாபமும் ரோகங்களும்
நின் திரு மேனியில் ஏற்றிடவோ
கொலை மரமாம் அந்த சிலுவை தனில்
கொலை செய்யப்பட்டோராய் தொங்கினீரே! - கல்வாரி
2. கள்வரின் மத்தியில் அறையப்பட்டும்
முள்முடி சூடியே, துயரப்பட்டீர்!
முகந்தனில் உமிழ்ந்துமே அடிக்கப்பட்டீர்
மூன்றாணி மீதினில் ஜீவனீந்தீர்! - கல்வாரி
3. பதினாயிரம் பேரில் சிறந்த நேசர்
பாதகனைப் போல ஆக்கப்பட்டீர்!
தழும்புகள் தோன்றவே காயப்பட்டீர்
அழகையும் இழந்தீரே எனக்காகவோ! - கல்வாரி
4. விலையேறப் பெற்ற உம் திரு இரத்தத்தை
விலா வினின்று நீர் வடித்தீரல்லோ!
விலையேறப்பெற்ற நல்சபை ஆக்கவே
தலையானீர் ஜீவனை ஈந்ததாலோ! - கல்வாரி
5. குருசதில் பலியானீர் முற்றிலுமாய்
குரு இயேசுநாதா நீர் எனக்காகவோ?
குருசதில் மரித்து நான் பிழைத்திடுவேன்
குருவே உம் சாயலை அடைந்திடுவேன் - கல்வாரி
#tpmsongs #tpmconvention #thepentecostalmission #tamilchristiansong
Praise the lord to Jesus Christ ✋🧕🏻✋🏻🧕🏻
My favourite song ❤
jesus love towards us cannot be expressed in words,we have to realise the value of his love and live a life pleasing to him❤❤😢😢
Sorry pa....🥺