13 July 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பாக 13-07-2024 அன்று கீழத் தெருவில் மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை கிளை தலைவர் ஜெஹபர் அலி அவர்கள் தலைமையில் கிளை பொருளாளர் அஹமது ஃபயித் அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதலாவதாக TNTJ பேச்சாளர் மல்லவி அப்துல் ரஷீத் MISc அவர்கள் நபி வழியை! இளைஞர்களை சீரழிக்கும் போதை என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக TNTJ மாநில செயலாளர் செங்கை ஃபைசல் அவர்கள் இபுறாகிம் (அலை) அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக, கிளை பேச்சாளர் முஹம்மது பஹீஜ் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர். எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழணைத்தும். அல்ஹம்துலில்லாஹ்...