கிருஷ்ணகிரி மாவட்டத்தில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ค. 2024
  • #கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கி உள்ளதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    ............................................
    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டி உள்ளது. இந்த நிலையில் இந்த கடும் வெப்பத்தின் காரணமாக மாவட்டம் முழுவதும் அதிக அளவிலான வெப்ப காற்று வீசி வந்தது ,
    கடும் வெப்பத்தினால் நீ நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்பட்டது.
    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில சுட்டெரித்து வந்த நிலையில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதை தொடர்ந்து கன மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், குருபரப்பள்ளி, நாரலப்பள்ளி, வேப்பனப்பள்ளி, ஆலப்பட்டி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கன மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஒடியது - இதனால் வாகன ஒட்டிகள், அன்றாட பணிக்கு சென்ற பணியாளர்கள் சீரமப்பட்டுள்ளனர். இருப்பினும் கடும் வெப்பத்திற்கு இடையே பகல் நேரத்தில் இந்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.
    குறிப்பாக இந்த மழையால் அணைகள் மட்டுமின்றி ஏரி குளம் போன்ற நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து துவங்கி உள்ளதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ความคิดเห็น •