புரட்டாசி மாதத்தில் தடைகள் ,துன்பங்கள் , தாமதங்கள் நீங்கி வாழ்வில் வெற்றி அடைய, நல் முறையில் வாழ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • “இறைவா!!! நீயே அனைத்தும்”
    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
    சித்தன் அருள் - 1441 , 1179 - குருநாதர் அகத்தியபெருமான் உத்தரவு!
    வாக்கு சுருக்கம் :-
    இவ் புரட்டாசி மாதத்தில்
    1.இராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு
    2.கங்கை, காவேரி, தாமிரபரணி, நர்மதா கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும்.
    3.கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிப்பது, ஏதாவது அவர்களுக்கு உணவளித்து வந்தால் அவ் ஆன்மாக்கள் அமைதி பெறும் . இயலாதவர்களுக்கு அன்னத்தையும் வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்னம் மற்றும் நீர் வழங்கிடுதல் வேண்டும்.
    4.குருநாதர் வாக்கின்படி புரட்டாசி பௌர்ணமி மறுநாள் பிரதமை திதி ஆரம்பிக்கும் தேய்பிறையில் தொடங்கி , மஹாளய அமாவாசை முடிந்து அடுத்து வரும் வளர்பிறையில் திரிதியை - மூன்றாம் பிறை வரை 18 நாட்கள், குருநாதர் சொல்லிய இராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். தான தர்மங்களைச் செய்யவேண்டும். இப்படி முடித்த பின்னர் மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும்.
    5.எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றலாகாது என்பேன் அப்பனே. இதனால் பெரும் துன்பங்களும் நோய்களும் கஷ்டங்களும் வந்து சேருமப்பா.
    6.காக்கும் கடவுள் பெருமான் விஷ்ணு இவ் ஆன்மாக்களை முக்தி பெற செய்வார்கள். நம் உடலில் சேராத படி நம் முன்னோர்களுக்கு முக்தியை அளிக்க பெருமான் உதவி செய்வர்.எனவே புரட்டாசி மதம் முழுவதும் பெருமாளை நல்படியாக வணங்கி வர வேண்டும்.
    7.புரட்டாசி விரதம் இருக்கும் முறை : - உண்ணாமல் இருப்பது விரதம் இல்லை. முதலில் வாய் பேசாமல் இருத்தலே முதல் வகையான(விரதம்). இதனால் இல்லத்திலே இருந்து கொண்டு சரியாகவே அதிகமாக பேசலாகாது . ( மௌனத்தை கடைபிடிக்க வேண்டும்). கோபமும் கொள்ளக்கூடாது. அதனுடனே காமத்தை விட்டு ஒழிக்க வேண்டும். இதுதான் விரதம். மற்றவை எல்லாம் விரதம் ஆகாது.
    8.முன்னோர்கள் அணுக்களை, வாயில்லா ஜீவராசிகள் அதிகப்படியாக ஈர்த்துக் கொள்ளும். ஜீவராசிகளை கொன்று சமைத்து அசைவம் , மாமிசம் உண்டால் அணுக்கள் எளிதில் மனித உடலில் ஒட்டிக் கொள்ளும். வாழ்நாள் முழுவதும் அசைவம் , மாமிசம் சாப்பிடக்கூடாது.
    9.புரட்டாசி மாதம் நீங்கள் குருநாதர் கூறியவற்றை அப்படியே கடைப்பிடித்து வந்தால் இறைவனை குருநாதர் உங்களுக்கு காட்டுவார்கள் என்று உரைத்துள்ளார்கள்.
    10.புரட்டாசி அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி, அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்.
    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

ความคิดเห็น • 3