திருவாசகம்/திருப்பெருந்துறையில் அருளியது/சென்னிப்பத்து/சிவவிளைவு | Talent Talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • தேவ தேவன்மெய்ச் சேவகன்
    தென்பெ ருந்துறை நாயகன்
    மூவ ராலும் அறியொணாமுத லாய
    ஆனந்த மூர்த்தியான்
    யாவ ராயினும் அன்பரன்றி அறியொ
    ணாமலர்ச் சோதியான்
    தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
    மன்னிச் சுடருமே. 1
    அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய
    ஆனந்த வெள்ளத்தான்
    சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ
    ருந்துறைச் சேவகன்
    மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம்
    வைத்த அழகன்தன்
    வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி
    மன்னி மலருமே. 2
    நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன்
    நம்பணி கொண்டவன்
    தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய
    சேவகன் நாயகன்
    மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங்
    கொண்டெம் பணிகொள்வான்
    பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
    மன்னிப் பொலியுமே. 3
    பத்தர் சூழப் பராபரன் பாரில்
    வந்துபார்ப் பானெனச்
    சித்தர் சூழச் சிவபிரான் தில்லை
    மூதூர் நடஞ்செய்வான்
    எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங்
    கொண்டெம் பணிகொள்வான்
    வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம்
    சென்னி மன்னி மலருமே. 4
    மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்தி
    டா வகை நல்கினான்
    வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ
    ருந்துறை மேவினான்
    காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு
    கொள்ளென்று காட்டிய
    சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
    மன்னித் திகழுமே. 5
    சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவி
    னை கெடுத் துய்யலாம்
    பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர்
    கொய்து சேர்த்தலும்
    முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு
    றத்தெமை வைத்திடும்
    அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
    மன்னி மலருமே. 6
    பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேர
    ருள்தந் தருளினான்
    அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு
    ழாம்புக விட்டுநல்
    உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன்
    உண்மைப் பெருக்கமாம்
    திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி
    மன்னித் திகழுமே. 7
    புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய்த
    னையொழி வித்திடும்
    எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு
    டையப்பன் என்றென்று
    தொழுத கையின ராகித் தூமலர்க் கண்கள்
    நீர்மல்குந் தொண்டர்க்கு
    வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
    மன்னி மலருமே. 8
    வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி
    னைப்பகை மாய்த்திடும்
    உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்த
    னாய் நின்ற எம்பிரான்
    அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட்
    கின்பந் தழைந்திடுஞ்
    செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
    மன்னித் திகழுமே. 9
    முத்த னைமுதற் சோதியைமுக்கண்
    அப்பனை முதல் வித்தினைச்
    சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்
    பாடித் திரிதரும்
    பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்
    தீரப் பணிமினோ
    சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி
    மன்னித் திகழுமே. 10

ความคิดเห็น • 3

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 16 วันที่ผ่านมา +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @shanthig2231
    @shanthig2231 16 วันที่ผ่านมา +2

    Sithame pugundhemmai aatkondu theevinai keduthayyalaam 🙏🙏🙏

  • @krishnamurthijayaram1798
    @krishnamurthijayaram1798 15 วันที่ผ่านมา +2

    Paraparan malar sevadigal nam chenni manni malarume.🎉