திக்குவாய் குணமாக செவித்திறன் சிறக்க சென்று வர வேண்டிய ஸ்தலம் |
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
- #WeeklyAstrology #TamilNewsLive #TamilLatestNews
திக்குவாய் குணமாக செவித்திறன் சிறக்க சென்று வர வேண்டிய ஸ்தலம் | Thirukolakka
#temple #Thirukolakka #திக்குவாய் #செவித்திறன்
#TamilNews #TamilLatestNews #CurrentAffairTamilNadu #TamilNewsLive
அருள்மிகு ஓசை நாயகி உடனுறை தாளபுரீசுவரர் திருக்கோயில்
NCN015-Thirukolakka Shiva Temple
இறைவர் திருப்பெயர்:சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்.
இறைவியார் திருப்பெயர்:தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
தல மரம்: கொன்றை
தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம். சூரிய புட்கரணி
வழிபட்டோர்: அகத்தியர், கண்வர் முதலியோர்.
பதிகம்:திருஞானசம்பந்தர் - 1,சுந்தரர் - 1.
திருத்தலச் சிறப்பு:
*ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல் தலம்.
*இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள்.
*திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது.
*வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.
*• சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.
எப்படிப் போவது:
சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருகோலக்கா என்ற சிவஸ்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கப்படுகிறது.
ஆலய முகவரி:
அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோவில்
திருக்கோலக்கா.சீர்காழி அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609110
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.