திக்குவாய் குணமாக செவித்திறன் சிறக்க சென்று வர வேண்டிய ஸ்தலம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #WeeklyAstrology #TamilNewsLive #TamilLatestNews
    திக்குவாய் குணமாக செவித்திறன் சிறக்க சென்று வர வேண்டிய ஸ்தலம் | Thirukolakka
    #temple #Thirukolakka #திக்குவாய் #செவித்திறன்
    #TamilNews #TamilLatestNews #CurrentAffairTamilNadu #TamilNewsLive
    அருள்மிகு ஓசை நாயகி உடனுறை தாளபுரீசுவரர் திருக்கோயில்
    NCN015-Thirukolakka Shiva Temple
    இறைவர் திருப்பெயர்:சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்.
    இறைவியார் திருப்பெயர்:தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
    தல மரம்: கொன்றை
    தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம். சூரிய புட்கரணி
    வழிபட்டோர்: அகத்தியர், கண்வர் முதலியோர்.
    பதிகம்:திருஞானசம்பந்தர் - 1,சுந்தரர் - 1.
    திருத்தலச் சிறப்பு:
    *ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல் தலம்.
    *இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள்.
    *திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது.
    *வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.
    *• சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.
    எப்படிப் போவது:
    சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருகோலக்கா என்ற சிவஸ்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கப்படுகிறது.
    ஆலய முகவரி:
    அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோவில்
    திருக்கோலக்கா.சீர்காழி அஞ்சல்
    சீர்காழி வட்டம்
    நாகப்பட்டினம் மாவட்டம்
    PIN - 609110
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ความคิดเห็น •