செட்டிநாட்டு ஆச்சிமார்களின் செல்லத் தாலாட்டு --- Nagarathar Thalattu (Lyrics in Comments Section)
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ก.ค. 2024
- To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn
கடவுள் கொடுக்கும் வரம் குழந்தை. அக்குழந்தையின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லித் தாலாட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்.
பாராட்டு என்பது குழந்தைகளின் நம்பிக்கையையும், தைரியத்தையும், மனஉறுதியையும் ஊக்குவிக்கும். அவர்கள் பிறப்பிலிருந்தே பெற்றோர்களாகிய நாம் அவர்களது பெருமையை புரிந்துகொண்டு, அவர்களை பாராட்டிப் பழகுவோம்.
இதைக் கருத்தில் கொண்டு நல்ல அன்பான வார்த்தைகளைக் கோர்வையாகக் கோர்த்து செட்டிநாட்டு ஆச்சிமார்கள் பல தாலாட்டுகளை பாடியுள்ளார்கள்.
அதிலிருந்து எனது ஆயா (தாய்வழிப் பாட்டி), அம்மா, அத்தை (மாமியார்) அனைவரும் எங்கள் பிள்ளைகளுக்கு பாடிய பல இனிமையான தாலாட்டுகளை கோர்த்து ஒரு பூச்சரமாக தொடுத்துள்ளோம். கேட்டு மகிழுங்கள்.
Singer : Akila Natesan
Editor : Bharane Chidambaram
Description : Vishalakshi Meyyappan
Song Lyrics given in the public comments section considering the length of the lyrics. - เพลง
இந்த தாலாட்டை கேட்கும்போது எனக்கே தூக்கம் தூக்கமா வருது ஆச்சி
சிறப்பு ஆச்சி அருமை ஆச்சி
பேரன்புடன்
மு.ஆறு.மு. சாத்தப்பன்
கோனாபட்டு
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்!
பாடலும், குரலும், அருமை. பாடல் காதுக்கு இனிமை. படங்கள் கண்ணு க்கு குளுமை.❤❤❤❤
பாடலும் தெரியாமல் பாடவும் தெரியாத எங்களைப்போன்ற தாத்தா பாட்டிக்கு உங்கள் பாடல் ஒரு வரப்பிரசாதம் 🙏 எங்கள் பேத்தி “ நிலா” மிகவும் ரசிக்கிறாள் 👍
🎉
மிகவும் அற்புதமான பாடல்.. இந்த பாடல் கேட்க கேட்க..இனிமை
வார்த்தைகள்/ராகம்
இரண்டும். மிகவும்
வலிமை.அருமை.
விரைவில் பலிதமாகும்
என்பதில் ஒரு சிறிதும்
சந்தேகமில்லை..🙏💐💐💐💐💐😀😀...
நன்றி ஆச்சி.💞
❤
ஆச்சிமார்கள் அழகு தமிழில் பல்லாண்டு காலமாக பாடும் தாலாட்டு பாடலை இன்றே கேட்டேன். மிக மிக அருமை. குழந்தையை மட்டுமல்ல கேட்கும் அனைவரையும் தூங்க வைத்து விடும். பதிவேற்றி எங்கள் காதுகளுக்கும் இனிய சதேன் ஊற்றியவர்களுக்கு நன்றி
அகிலா பாடல்கள் மிக அருமை. இதைக் கேட்டு தான் எங்க பேரன் தூங்குறான் .அந்த அந்த வரிகள் எல்லாம் கேட்க கேட்க கேட்க அருமையா இருக்கு நன்றி. வாழ்த்துக்கள்.🎉 ❤
While listening to this song sleep comes automatically.. Both mom and baby will sleep ❤ very nice voice and song too
என் பையனுக்கு 3 வயது ஆகிறது அம்மா அவன் பிறந்தலிருந்தே இந்த பாட்ட கேட்டுத்த தூங்குவான்
Arumaiyana paadal amma ❤
I had been to my childhood.
Now i am 73 year old.
Very nicr
En paiyan intha song kettutu semaiya thuguran .. tq so much
4 month old baby .. semaiya thuguran same enakkum thukkam varuthu 😉
செல்ல தாலாட்டு
மிக மிக அற்புதம் ஆச்சி. இனிமை இனிமை
அருமை அருமை
அருமை
அருமை👌👌👌👌👌
அருமை 🙏
Super voice
மிக்க நன்றி
அருமை👌👌👌
Fantastic composition
.Very Good..Thank u
அருமை அருமை 👌👌🙏🙏
மிக்க நன்றி .
Super Achi my bethi like this thalattu
அருமை ஆச்சி
Im playing this lullaby for my son from 3months now he s 8months old if we play this song he knows that its sleeping time.. He ll quite and start to sleep thanks to achi
Arumai Amma, yedhir varum thalaimurraium ungalai vazhthum 🙏
அருமையான பாடல் வரிகள்
மிக அருமை
Very nice
மிகவும் அருமை
இனிமையான பாடல்
All songs are nice your voice is very nice my paren listen your songs daily and he sleep thank you so much
Arumai
Very nice 👌 to hear
Daily am playing this song for my 3 month old baby boy. He and myself also got addicted to this beautiful song. 😍😍😍
My Two sons daily hearing your this song and going to bed
ஜெய் ஸ்ரீ ராம்
👌 👌 👌 👌 அருமையான பதிவு 🌸🌸🌸💐💐💐💐
My son love this song thank u so much
உங்கள் பதிவுகளில் பாடலுடன் விளையாட்டு சாமான் மற்றும் அனைத்து புகைப்படங்கள் மிகவும் அருமை சூப்பர் 🙏
Aachi voice super 👌👏👏
Baby will hear this song,sure baby sleep well.
Amazing.
Super amma
எழிய தமிழில் கருதாழமிக்க நம் பாரம்பரிய தாலாட்டு பாடல்கள், கேட்கையில் மிக மிக சுகமாய் மெய் சிலிரிக்கிறது, பாடியதர்க்கும் பகிர்ந்ததர்க்கும் மிக்க நன்றி
11:51
Super....... Amma
Thank you so much
Arumai aachi👍👍
super very nice amma❤
Super Akila
Very super amma nice👍👏😊peaceful mind amma 🙏🙏🙏
Our 1 week old baby loves this song. Thank you so much.
Super song
Super ஆச்சி.. நன்றி 🙏
0 9
My baby is 8 months old . She is sleeping well because of your singing . Thank you so much, Akila Aachi .. 😇😇
Arumai arumai
Beautiful ❤️ my girl love this song 😍.
Thank you very much. Heart touching voice ma
Very nice 👏🏻👏🏻👏🏻
அம்மா பாடல் அருமையாக உள்ளது ஏழை இந்துக்களுக்கு உதவி செய்து கண்ணனுக்கு காணிக்கை செலுத்தும் வகையில் உள்ளது உங்கள் பாடல்.
P
@@palaniappans8496 ikkiiiij😊8ii😊ujuuii😊
Pppppa
My 8 months old boy baby loves this song
❤❤q❤❤
Super.
அகிலா நடேசன் அவர்களுக்கு வணக்கம்.தங்கள்இனிமையானநீண்ட தாலாட்டுஅனைவரையம் குழந்தையாக மாற வைக்கும்தாலாட்டுமிகமிக அருமை.
Ĺl0
அருமை பெருமைகளை கூறி தாலட்டும் பாங்கு மிகவும் சிறப்பு இப்படி ஒரு அழகான தாலாட்டு இது வரை கேட்டதில்லை சிறப்பு. நன்றி நன்றி நன்றி மேலும் இது போன்ற நற் பாடல்கள் பதிவிடவும்...
Very nice
Superb
Super
Super👌
Wonderfull song 100% perfect maching to my baby girl
Thank you so so much 🙏🙏🙏 I've recollected some of the forgotten lines. Superb . Thanks a lot ❤️
ண் மணி😅டஞ்😮😮😮
Very nice❤
செட்டிநாட்டு ஆச்சிமார்களின் செல்லத் தாலாட்டு:
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
பொங்குமாங் கடலாடி பூமி எங்கும் சுத்தி வந்து
செம்பா நதியாடி தேவர்க்கெல்லாம் பூசை செய்து
ஷண்முக வள்ளியம்மை சரஸ்வதி அம்மன் தந்த தவபொருளோ
அஞ்சருவி ஆடி ஆலயங்கள் சுத்தி வந்து
பஞ்சருவி ஆடி பாலகனே நீ பிறந்தாய்
சீரங்கம் ஆடி திருப்பார் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரை கடலாடி
சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
முக்குளமும் ஆடி
முத்திபெற்று வந்த கண்ணோ
திங்கள்தனைப் பணிந்து திருக்கேசுரம் ஆடி
தைப்பூசம் ஆடி
தவம் பெற்று வந்த கண்ணோ!
வாடிய நாளெல்லாம் வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்த கண்ணோ!
ஏழுகடல் நீந்தி
எடுத்து வந்த தாமரைப் பூ
பத்து கடல் நீந்தி
பறிச்சு வந்த
தாமரைப் பூ
அனைச்சு மனமகிழ
அள்ளி வந்த தாமரைப் பூ
கொஞ்சி மனமகிழ
கொண்டுவந்த தாமரைப் பூ
பூவாய் உதித்தவனோ
புண்ணியத்தால் வந்தவனோ
அரும்பாய் உதித்தவனோ
அருந்தவத்தால் வந்தவனோ
காணிக்கை கொடுத்து
கடைத்தெருவே போகையிலே
மாணிக்கம் என்று சொல்லி
மடிப்பிச்சை தந்தாரோ
வைகை பெருகி வர
வார்ந்த மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே(கண்ணே)நீ
ஒட்டி வந்த கட்டி முத்தோ
பெருகி வந்த தண்ணியிலே நீ
பின்னணைந்த சந்தனமோ
சந்தணமோ என் பொருளோ நீ
சாமி தந்த தவப்பயனோ
கொட்டி வைத்த முத்தோ நீ
குவிந்த நவ ரத்தினமோ
கட்டிக் கரும்போ நீ
காணிக்கை ஆணி முத்தோ
முத்தில் ஒரு முத்தோ நீ
முதிர விளைந்த முத்தோ
தேற விளைந்த முத்தோ நீ
தில்லைக் குகந்த முத்தோ
ஆயிரம் முத்திலே நீ
ஆராய்ந்தெடுத்த முத்தோ
தொண்ணூறு முத்திலே நீ
துணிந்தெடுத்த ஆணி முத்தோ!
ஆணிப்பெரு முத்தோ நீ
அய்யாக்கள் ஆண்ட முத்தோ
பாண்டி பெருமுத்தோ நீ
பாட்டன்மார் ஆண்ட முத்தோ
முத்தானோ முத்தோ நீ
மூவாக்கள் ஆண்ட முத்தோ!
முத்தோ பவழமோ நீ
முன் கைக்கு பொன் காப்போ!
கோர்த்த நல் முத்தோ நீ
குறத்தி கையில் தாழ் வடமோ!
ராரிக்கோ ராரி மெத்தை என் கண்ணா ராமருக்கோ பஞ்சு மெத்தை
பஞ்சு மெத்தை மீதேறி கண்ணே பஞ்சாங்கம் பாக்கையில
வயது நூறுன்னு சொல்லி வாசிச்சார் பஞ்சாங்கம்
உனக்கு எழுத்து நூறுன்னு சொல்லி எழுதினார் பஞ்சாங்கம்
குற்றால நாதரும் குழல்வாய் மொழி அம்மனும்
வற்றாத வெந்நீரும் மாற தல இடியும்
மண்டலங்கள் தோரி வயலாசி போகுதுன்னு
தன் குண்டலங்கள் காதிலிட்டு குற்றாலநாதர் குலுங்க நடந்தாரம்
கரும்பு கல கலங்க
கல்லாறு தண்ணி வர
கல்லாத்து தண்ணியில
நின்னாடும் பம்பரமோ
பம்பரமோ எம்பொருளோ
பரமசிவர் தந்த கண்ணோ
எம்பொருளோ பம்பரமோ
ஈஸ்வரியாள் தந்த கண்ணோ
காசியில பட்டெடுத்து
கப்பலுல தொட்டி கட்டி
தொட்டி வருஞ்சு கட்டி
துரை மகனை போட்டாட்டி
தொட்டிக்கும் கீழே
துணையிருப்பார் சொக்கலிங்கம்
கட்டிலுக்கும் கீழே
காத்திருப்பாள் மீனாட்சி
இரும்பால ஊரணியாம்
இருபுரமும் தாமரையாம்
தாமரையில் நூலெடுத்து
தனிப்பசுவில் நெய்யுருக்கி
வாழலையும் மா விளக்கும்
வச்செடுத்த குஞ்சலரோ
தேங்காயும் மாவிளக்கும்
சேர்த்தெடுத்த குஞ்சலரோ
குஞ்சலரோ அஞ்சலரோ
ஆடும் சிதம்பரமோ
தில்லைச்சிதம்பரமோ
திருச்செந்தூர் வேலவரோ
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
Nice lyrics n addicting voice😌👍👌👌👌
Song👌👌
🤣
O
👌👌👌🥰
Thank you aachi...our daughter Amrutha Lakshna's favourite song
Nice
Awesome voice❤
Super singing. Even elders feel sleepy on listening to ds lullaby .
Very nice.
இனிமை அருமை
Thanks for this song. Singing this song for my baby to make her sleep calmly.. your voice is so amazing
🤩🤩
Zaà
Absolutely r
Right
Superb voice
Help’s baby to sleep 💤
Heart warming voice 🎤🎶🥰😍😇
❤💤🥰😇😍😴
Awesome 👌
Very nice achi😍😘😘😘😘😘
I like this 🎵
Playing this song for my baby per day 5 times, what a voice...Thanks amma😍
Very nice voice.
I too have sang some of these words to my children from my grand mother.
Now waiting for my grandchild to be in my arms in a month.
The words are so clear & I’m able to recollect all my old memories.
Thanks a lot dear
God bless you
Very melodious, spiritual, soothing, we play everyday to make my grand daughter to sleep. The images are reminding our tradition and the fun of our childhood days. Thanks achi.
👍👍
👍👍👍
🤗🙏
Songs super
❤
Plz put lyrics
இந்த பாட்டுடிய lyrics pls
Go for sleep,naan 12 ku thaan yanthirippan
This
Sorry
.
And
Durai u sleep
❤7😅
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
நாழிச்சிறு சலங்கை
நல்ல பவுன் பொற்சலங்கை
உழக்குச்சிறு சலங்கை
ஒசத்தியுள்ள பொற்சலங்கை
ஆருக்கு இடுவமுன்னு
தேடித்திரிகையிலே
எனக்கிடுங்கள் என்று சொல்லி
எதிர் கொண்டு வந்தவனோ!
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தானாக வந்தவனோ!
மாசில்லா முத்தோ
மணி வயிரத்தோளானோ!
கல்விக்களஞ்சியமோ
கற்றோர்க்கு தாயகமோ!
செல்வ திருவிளக்கோ
செம்பொன் சுடரொளியோ!
தூண்டா மணிவிளக்கோ
சோதி சுடரொளியோ!
கண்ணில் உறுமணியோ
கலிதீர்த்த பெட்டகமோ!
பொன்னில் உறுமணியோ
பூவிலுறும் வாசனையோ!
கொடிக்கால் மருக்கொழுந்தோ
கோதை கையில் பூச்சரமோ!
செங்கழனி மாலை சிவன் கை பூமாலை
நற்பவள மாலையின்னு ராமர் உன்னை தந்தாரோ
கொடிபவள மாலையின்னு குழந்தை உன்னை தந்தாரோ
எங்களுக்கு செங்கழனி எல்லையில பூத்தாளோ
மாதாவுக்கு மல்லிகப்பூ மனம் குளிர பூத்தாளோ
கோயிலுக்கு கொத்தரளி குலமரிஞ்சு பூத்தாளோ
மாலையின்னு தந்தாக்கா வாடியில போகுமுன்னு
மடலோட சந்தனமும் கண்ணாவாளும் உன்னை மதழயுமா தந்தாரோ
துருனாரா தந்தாக்கா பூசியில போகுமுன்னு
குடத்தோட சந்தனமும் கண்ணாவாளும் உன்னை குழந்தையுமா தந்தாரோ
வம்பாங் கனியானான் என் கண்ணா வளரும் பொறையானான்
செந்தாமரையானான் என் கண்ணா சிலபேர்க் இனியவனாம்
அடியார்க் இனியவனாம் தம்பி ஆச பாசம் உள்ளவனாம்
சிறியார் மனதாசை என் கண்ணா தீர்க்கும் புலன்திரனோ
சிறியானை நான் காண சிறு குரலை நான் கேட்க
எத்தனையோ கோடி தவம் செய்தோம் இதுவரைக்கும்
வம்புன்ன செம்பகமாம் வாடா மரகதமாம் வாசமுள்ள ரோசாவாம்
அன்புடனே கொஞ்ச வந்த அமிர்தமுள்ள பாலகனோ
பச்சை மரகதமாம் பசுங்கிளியே தாராவாம்
இச்சையுடன் எங்களுக்கு வந்துதித்த தெள்ளமுதம்
தங்கம் பிறந்து தங்கம் தவந்து விளையாடையில
தங்க வளை பொன்காப்பு தண்டை இட்டார் தாய்மாமர்
தாதி குலவையிட தாய்மாமர் முத்தமிட
புலவர் கவிபாட பொய்யுறக்கம் கொண்டானோ
அம்மானார் அம்மானார் ஆயிரம் பேர் அம்மானார்
பூ சட்டைக்காரரெல்லாம் இந்த பிள்ளையோட அம்மானார்
பவன் சட்டைக்காரரெல்லாம் இந்த பாலனோட அம்மானார்
செம்பொன் எழுத்தாணி
சேரகுருத்தோலை
பச்சை பணையோலை
பசும்பொன்
எழுத்தாணி
இச்சையுடன் கைபிடிக்க
கண்ணாவானும் எழுத பிறந்தானோ
பொன்னால் எழுத்தாணி
பூவால பஞ்சு மெத்தை
எந்நாளும் செல்வமுன்னு
எடுத்தாழ வந்தானோ
பரட்டை புளியமரம் பந்தடிக்கும் நந்தவனம்
நந்தவனம் கண் திறந்து நாலுவகை பூவெடுத்து
பூவெடுத்து பூசை செய்யும் என் தங்கமே நீ புண்ணியவார் பேரனோ
மலரெடுத்து பூசை செய்யும் என் தங்கமே நீ மகராசா பேரனோ
அரும்பெடுத்து பூசை செய்யும் என் தங்கமே நீ அர்ஜுனனார் பேரனோ
யார் அடித்தார் ஏன் அழுதாய் என் தங்கமே நீ அடிச்சாரை சொல்லி அழு
அத்தை அடித்தாளோ அரளி பூ செண்டாலே
மாமன் அடித்தானோ மல்லிகப்பூ செண்டாலே
யாரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை
தம்பி தானாய் அழுகின்றான் தவத்தி மொறண்டாலே..................
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
சூப்பர் அருமை
பாட்டு லிரிக்ஸ் போட்டால்தான் அடுத்த தலை முறைக்குஉதவும் நன்றிகள்
@@yogalakshmisubramanian3134 Lyrics is already in comment section...... Please check.
@@niraiisaikudam5674 but it is not the same one, kindly post the actual lyrics that matches the singer.
@@flutenggr.creationsvallisu1037 please browse the comment section. There are two comments with lyrics. They are in order to learn. Thank you.
My son is 50 days old and replies after listening to this lullaby ..
அருமை
அருமை அருமை
Super voice
Super
சூப்பர்